Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை வெள்ளை வான் குழுவினரால் கடத்தல்

Featured Replies

பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை வெள்ளை வான் குழுவினரால் கடத்தல்

[வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 10:31 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபர் எனக் கருதப்படுபவரின் தந்தை கடத்தப்பட்டுள்ளார் என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள் கொழும்பு கிராண்ட்பாசில் அப்போதைய அரச தலைவர் ரணசிங்க பிரேமதாச மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலை நடத்தியவர் அரச தலைவரின் வீட்டில் பணிபுரிந்த ஒருவரே என்றும் சம்பவம் இடம்பெற்ற அன்று ஈருருளியில் வந்த சந்தேக நபர் கிராண்ட்பாசில் மே நாள் பேரணியில் வந்து கொண்டிருந்த அரச தலைவரின் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாவும் அப்போது நடைபெற்ற காவல்துறை விசாரணைகள் தெரிவித்திருந்தன.

இச்சம்பவத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர் என்று கருதப்படும் சந்தேக நபரான பாபு என்பவரின் தந்தையே கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

ரம்புக்கனவில் உள்ள கோயிலொன்றின் பூசாரியாகிய இவருக்கு வயது 70 ஆகும்.

காவல்துறை அதிகாரிகள் என்று தம்மை அடையாளம் காட்டி இந்த முதியவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும் இவரை விடுதலை செய்வதற்காக இரண்டு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

புதினம்

என்னது?

பிரமேமதாஸாவின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட பாபு என்பவர் கரவெட்டி மத்தொனியை சேர்ந்தவர் என்று தானே கேள்விப்பட்டு இருகேன்.

இவரின் தந்தையார் பலவருடங்களுக்கு முன் இறந்து விட்டார் தாயும் தற்போது சில மாதங்களுக்கு முன் இற்ந்து விட்டார் ஆனால் எப்படி இல்லை மாறி செய்தி வருது?

சில நேரம் குண்டு தாக்குதலில் சமந்தப் பட்டவர்களின் யாரவது ஒருவரின் தந்தையோ?

அறிந்தவரைக்கும் தாய் தந்தை இல்லை. . சகோதரனோ சகோதரி மட்டும்தான் தாயகத்தில் இருந்தததாக ஞாபகம். . .

இது வேறு யாரோ ஒருவர்தான்.

சந்தேக நபர் கிராண்ட்பாசில் மே நாள் பேரணியில் வந்து கொண்டிருந்த அரச தலைவரின் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாவும்

என்ன இது புதுக்கதையாக இருக்கிறது. பேரணியில் பங்கேற்று நடந்து வந்து கொண்டிருந்தபோதே பிரேமதாச தாக்குதலுக்கு இலக்கானார்.

அறிந்தவரைக்கும் தாய் தந்தை இல்லை. . சகோதரனோ சகோதரி மட்டும்தான் தாயகத்தில் இருந்தததாக ஞாபகம். . .

இது வேறு யாரோ ஒருவர்தான்.

பரனீ சொல்வது போல் அவருக்கு ஒரு சகோதரி( பாப்பா அக்கா)( தற்போது வன்னியில்) ய இரு இரு சகோதரகள்( ஜேர்மனியில்) இருக்கிறார்கள்..............

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வசிக்கும் இடங்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்வதனை தவிர்க்கலாமே ...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை என்ன துப்புதுலக்குதலே நடக்குது :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.