Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

Featured Replies

கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

[ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 04:02 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

இவை தொடர்பாக தெரியவருவதாவது:

கிழக்கு கள நிலைமைகளில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையுடனும் தமது உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவராக இருப்பார் என்ற எண்ணத்துடனும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பிள்ளையான், பதவியைப்பெற்றவுடன் தனது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தனக்கு ஏகபோக அதிகாரம் அளிக்கப்பட்டு அது தொடர்பான நிதி விவகாரங்களையும் தானே கையாளப்போவதாக அரசுக்கு அறிவித்திருக்கிறார்.

இது சிறிலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் பாரிய அடியாகிவிட்டது.

அதேவேளை, சிறிலங்கா அரசின் இன்னொரு மிக முக்கியமான கோரிக்கைக்கு பிள்ளையான் மறுப்பு தெரிவித்தமை அரசுக்கு பிள்ளையான் மீது கடும் சீற்றத்தை உண்டு பண்ணியுள்ளது.

அதாவது, சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிக்கு பிள்ளையான் குழுவில் உள்ள இருநூறு பேரை அரசு கோரியிருந்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த பிள்ளையான், கிழக்கு அபிவிருத்திக்காகவே தனது குழு முழுமையாக செயற்படுமே தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடவோ வடக்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே மாட்டாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டார்.

இது விடயத்தை நேரடியாகக் கையாண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபாய ராஜபக்சவுக்கு பிள்ளையானின் நடவடிக்கைகள் சந்தேகத்தை உண்டு பண்ணின. இதை அடுத்து, விடுதலைப் புலிகளின் கையாளாக பிள்ளையான் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அரசு தரப்புக்கு ஏற்பட்டது.

"புலிகளுக்கு பாடம் கற்பிக்க கருணாவைப் பிரித்து, பின்னர் கருணாவுக்குப் பாடம் புகட்ட பிள்ளையானைப் பிரித்து காரியங்களை ஒப்பேற்றிவிட, தற்போது அரசுக்கே பிள்ளையான் ஆட்டம் காட்டுகிறாரோ? இவருக்கு பாடம் கற்பிக்க திரும்பவும் கருணாவை கூப்பிடுகிறேன் பார்" என்று சீறிய கோத்தாபாய ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கையே கருணாவை மீள அழைத்த நாடகம்.

தற்போது, நாடு திரும்பியுள்ள கருணாவை வைத்து, இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிக்கு ஆட்களை திரட்டுவதே அரசின் பிரதான நோக்கமாகவுள்ளது.

அம்பாறை மற்றும் கிழக்கின் இதர பகுதிகளில் உள்ள கருணாவின் குழுவினரை ஆழ ஊடுருவும் அணிக்கு திரட்டும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு கருணாவுக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கில் வாகரைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை முன்னர் படையினர் இடிக்கும்போது கருணா, அது விடயத்தில் மௌனம் சாதித்தமை முதல் பலவிடயங்கள், தாம் என்ன சொன்னாலும் செய்வார் என்ற நம்பிக்கையை கருணா மீது சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது.

ஆகவே, தற்போது தாம் மேற்கொண்டுள்ள இந்த ஆழ ஊடுருவும் அணிக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைக்கும் கருணா நிச்சயம் உதவுவார் என்று அரச திடமாக நம்புகிறது.

அரசின் இந்த திட்டத்தின்படி, மன்னார் பகுதியில் கருணாவை நிலைநிறுத்தி அங்கிருந்து அவரை செயற்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதினம்

ஆழ ஊடுருவும் அணியில் கருணா குளு இணைந்தால் பாரிய சிக்கல் தோன்றும் இந்த வகையில் பிள்ளையானுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

:) வரட்டும் பார்க்கலாம் காட்டுக்குள் புலியா அல்லது குள்ளநரியா என்று?

புலி பதுங்குவது பாயத்தான் பயத்தால் அல்ல அது அவனுக்கே தெரியும்

முனிவரின் சாபங்கள் அந்த கருநாய்கு

புத்தியுள்ள மனிதரெல்லால் வெற்றி கொள்வதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ ஊடுருவும் அணியில் கருணா குளு இணைந்தால் பாரிய சிக்கல் தோன்றும் இந்த வகையில் பிள்ளையானுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்

தமிழனின் விதியைப்பாருங்கள்

யாருக்கெல்லாம் நன்றி சொல்லவேண்டியுள்ளது என்று....................

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

மேலும் கடத்தல்கள், கப்பங்கேட்டல், கொலை என்பன அதிகரிக்கும். கருணா இப்போது இதுக்கு தான் லாயக்கு.

அது உண்மையாகவே பிள்ளையாந்தானா?...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. பிள்ளையான் அரசின் கைய்யிலுள்ள ஒரு பொம்மை. அது அரசு ஆட்டும் ஆட்டத்துக்கெல்லாம் ஆடக்கூடியது, ஆடவேண்டியது. அப்படியிருக்கும்போது அது அரசையும் மீறி தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதையோ அல்லது தனது கூலிப்பட்டாளத்தை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் கொலைப்படைக்கு கொடுக்க முடியாது என்பதையோ எப்படி நம்புவது?

புலிகளால் தனக்கு எப்போதும் ஆபத்து வரலாம் என்று 24 மணிநேரமும் ராணுவத்தின் பாதுகாப்பிலிருக்கும் இந்த பொம்மைக்கு முதுகெலும்பு இல்லையென்பதை இந்தச் செய்தியை எழுதியவர் எப்படி சிந்திக்க மறந்தார்? கிழக்கில் இளம்பெண்களை பாடசாலை உடையுடன் கடத்திக்கொண்டு சென்று தமது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இந்தக் கூலிப்படையா மக்களுக்காக சேவை செய்ய விரும்புகிறது ? இதை நாங்கள் நம்ப வேண்டும் ?!!!!!

கருணா என்கிற துரோகிக்கும் அவனால் வளர்க்கப்பட்ட அரச கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையானுக்கும் இடையில் சிக்கல் இருந்தாலும் கூட இந்த ரெண்டுமே தமிழ்மக்களுக்காக நண்மை செய்வதை எண்ணிப்பார்க்க முடியாத பிறவிகள்.துரோகத்தனமும், பணத்தாசையும் இவற்றின் ரத்தத்தில் ஊறியவை.

பிள்ளையானை முதலமைச்சராக்கியதன் நோக்கம் அரசு தனது கிழக்கின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பிற்கு அரசியல் அந்தஸ்த்தும் செயல் வடிவமும் கொடுப்பதற்கே ! அதாவது தன்னைத் தமிழன் என்று காட்டிக்கொள்ளும் ஒரு கோடரிக்காம்பைப் பாவித்தே தமிழரின் நிலங்களைச் சூரையாடுவது. ஏனென்றால் கிழக்கின் காணி மீதான அதிகாரம் அரசின் கைகளில்தான் இருக்கும் என்ற அரசின் முடிவிலிருந்து இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோலக் கருணாவைத் திருப்பி அழைத்ததன் நோக்கம் மன்னாரிலும் மணலாற்றிலும் முன்னேற்றம் குறைவாகக் காணப்படுவதாக அர்சு கருதுவதால் அவனைக் கொண்டு ஏதாவது மந்திரம் மாயம் செய்யலாமா என்று பார்ப்பது. கருணா புலிகளுடன் இருக்கும்போதுதான் அவனுக்கு மரியாதையும், புகழும் வந்து சேர்ந்தன என்பதை அரசு மறந்துவிட்டது. என்று அவன் தமிழர்க்கும், தலமைக்கு துரோகமிழைத்து காட்டிக்கொடுத்தானோ அன்றே அவன் சாதாரண மனிதப்பிறவியிலும் கேவலமானவனாக, பலமிழந்தவனாக, கோழையாக மாறிவிட்டான் என்பதை அவன் லண்டனில் இருந்த சிறை அநுபவங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.