Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை வான் விழிப்புணர்வு!

Featured Replies

wvanyh4.jpg

நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவரா?

சட்ட விரோத நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபடாதவரா?

உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று வாழ்பவரா?

நீங்கள் எப்படியானவராக இருந்தாலும்

வெள்ளை வான் அனர்த்தம் உங்களுக்கும் ஏற்படலாம்!

நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது உங்கள் கதவுகள் தட்டப்படலாம்.

வீதியில் உங்கள் பாதையை வெள்ளைவான் ஒன்று மறிக்கலாம்.

அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா?

1) திகிலடையாதீர்கள்

நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் இது இடம்பெறும் போது திகைப்படைந்து செயலிளந்து நிற்காதீர்கள்.

உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமான இறுதி கணங்களை பயத்தை நீக்கி புத்திசாதுரியத்துடன் பயன்படுத்துங்கள்.

உங்களை கடத்த வந்தவர்கள் நன்கு திட்டமிட்டு வருவதால் நிச்சயம் உங்களை விட்டு விட்டு செல்லப்போவதில்லை.

எனவே கெஞ்சி மண்றாடுவது, போக மறுப்பது என்பன உங்களுக்கு ஒரு போதும் உதவாது.

2) ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள்

நீங்கள் அவர்களுடன் வரத்தயாராக இருப்பதாக கூறி அவர்கள் உங்களை பலவந்தப்படுத்துவதை தவிருங்கள்.

உங்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களை அடையாளம் காணக்கூடிய கேள்விகளை கேளுங்கள்.

உதாரணமாக "நீங்கள் யார்?", "எந்த பொலிஸ் பிரிவு?", "உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்?"

அருகில் இருப்பவர்கள் யாரையாவது கூவி அழைத்து உங்கள் கடத்தலை சாட்சிப்படுத்துங்கள்.

அவர்களிடம் முடிந்தஅளவு விபரங்களை கூறிவிடுங்கள் (உதராணமாக உங்கள் பெயர், தொலைபேசி எண் போன்றவை)

நீங்கள் கடத்தப்படுபவருக்கு அருகில் நிற்பவராக இருந்தால், உடனடியாக பின்வருவனவற்றை அவதானித்து நினைவில் கொள்ளுங்கள்.

அ) கடத்தும் வாகன இலக்கம், நிறம்.

ஆ) வந்த ஆட்களின் எண்ணிக்கை, அவர்களின் முகம், தோற்றம்.

இ) அவர்களின் ஆடைகள் (சாதாரண அல்லது சீருடை)

உ) சென்ற திசை, நேரம்

3) கடத்தலின் பின்னரான நடவடிக்கைகள்.

சேகரித்த தகவல்களை ஒரு கடிதத்தில் குறித்துக்கொண்டு.

அ) சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குரிய காவல் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்.

ஆ) பா.உ. இராதா கிருஸ்ணன் அல்லது பொதுமக்கள் கண்காணிப்பு குழுவுக்கு எழுத்து மூலம் தெரிவிங்கள்.

இ) செஞ்சிலுவை சங்கத்திற்க்கு முறைப்பாடு செய்யுங்கள்.

உ) புலனாய்வுப்பிரிவு அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கடத்தப்பட்டிருந்தால் 72 மணித்தியாலத்தின் பின்னர் உங்களுக்கு அறியத்தருவார்கள்.

ஊ) 3 நாட்களின் பின்னரும் எதுவித தகவலும் கிடைக்காவிட்டால் ஒரு சட்டதரணியூடாகவோ (கட்டணங்கள் பற்றி முதலிலேயே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்) அல்லது வேறு தெரிந்தவர்கள் ஊடாக நீண்ட..... தேடுதலை தொடருங்கள்... !?

கடந்த ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இதுவரை 172 பேர் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இதில் கொழும்பில் மட்டும் 109 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

(வேறு ஆலோசனைகள் அணுகவேண்டிய அமைப்புகள் மற்றும் அவற்றின் தொலைபேசி இலக்கங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உ) புலனாய்வுப்பிரிவு அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கடத்தப்பட்டிருந்தால் 72 மணித்தியாலத்தின் பின்னர் உங்களுக்கு அறியத்தருவார்கள்.

பார்டா! அறியத் தருவார்களாம்.

ஆனால் கைது செய்யப்பட்டால், கடத்தப்பட்டால் என்பதற்கிடையில் நிறைய வேறுபாடு உண்டு சாணக்கியன்

  • தொடங்கியவர்

அறிவித்தல் என்பது,

1) பார்க்க அனுமதிப்பது.

2) தொலைபேசியில் பேச அனுமதிப்பது என்று பொருள்படும்...

மாறாக வீட்டிற்கே வந்து பற்றுச்சீட்டு தருவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். இது கூட நீங்கள் பகீரத பிரயத்தனம் மேற் கொண்டால் மட்டுமே. முதல் 3 நாட்களுக்குள் அறியக்கிடைக்காதவர்கள் நிலை இதுவரை தெரியமலேயே உள்ளது.

பொலிசாரல் எங்கே, எதற்காக என்று கூறிவிட்டு அழைத்து செல்வதே கைது.

சீருடை தரிக்காதவர்களால், தங்கள் உண்மையான அடையாளங்களை வழங்காமல், தவறான தகவல்களை கூறிவிட்டு, எங்கே என்று தெரியாமல் அழைத்து சென்று மறைத்து வைப்பது கடத்தலாகும். பின்னர் நீண்ட நாட்களின் பின் அவர்களை வெளிப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போது அது கைதாக மாறுகிறது.

பெரும்பாலன சந்தர்ப்பங்களில் இவர்கள் தாங்கள் ஒரு குறித்த பிரதேச பொலிசார், நாளை விட்டுவிடுவோம், அங்கே வந்து பாருங்கள் என்று கூறிவிட்டே அழைத்து செல்கின்றனர். பின்னர் அவர்கள்கள் கூறியபடி போய் கேட்டால் நாங்கள் அப்படியாரையும் கைது செய்யவில்லை. வேணும் என்றால் கூட்டை போய் பாருங்கள் என்று காட்டுவார்கள். அதற்குள் திருடர்களும், போதைக்கு அடிமையானவர்களும் மட்டுமே இருப்பர்.

இதுதான் தற்போதைய நடைமுறை!

Edited by சாணக்கியன்

சாணக்கியன்!

திகிலடையாதீர்கள் என முதலிலேயே கூறிவிட்டீர்கள். ஆனாலும் சூழ்நிலைக்குள் அகப்படாதிருக்கும் வரை, உங்களது விழிப்புணர்வு யாப்பு சரியாகச் செயற்படும். சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டால் சாதாரண மனிதர்கள் தப்பித்துக் கொள்வதற்குக் கெஞ்சி மன்றாடத்தான் செய்வார்கள். தராக்கி சிவராம் போன்றவர்கள்தான் இவ்வாறு எதிர்த்துக் கேள்வியெழுப்பி போராடி உயிரிழந்தவர்கள். அவர்களைப் போன்று எல்லோரும் மாறினால்தான் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன்!

தராக்கி சிவராம் போன்றவர்கள்தான் இவ்வாறு எதிர்த்துக் கேள்வியெழுப்பி போராடி உயிரிழந்தவர்கள். அவர்களைப் போன்று எல்லோரும் மாறினால்தான் உண்டு.

அவர் போரடி இறந்ததை நீங்கள் பத்தீங்களோ? என்று நான் கேட்கமாட்டன்.. யாராவது அறிவுகூடினதுகள் கேக்கும்...

அவர் போரடி இறந்ததை நீங்கள் பத்தீங்களோ? என்று நான் கேட்கமாட்டன்.. யாராவது அறிவுகூடினதுகள் கேக்கும்...

பிடித்துச் செல்லும்போது பார்த்தவர்கள் தெரிவித்த கருத்து. அது செய்தியாக வெளிவந்துமிருந்தது.

  • தொடங்கியவர்

1

அ) முக்கியமாக முரண்டுபிடித்தல், தப்பியோட முயலுதல் என்பவற்றை தவிருங்கள். அதுவே உங்களிற்கு எமனாக அமையும். ஏனெனில்,

1) நீங்கள் அப்பாவியாக இருக்குமிடத்து திட்டமிட்டு வருபவர்களிடம் இருந்து உங்களால் இலகுவில் தப்பிக்க முடியாது!

2) தமிழ்பட கதாநாயகன் போல நீங்கள் தப்பித்தாலும், அவர்கள் கோட்டையில் நீண்டநாள் மறைந்து வாழ முடியாது!

3) இது உங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆபத்தாகவும் அமையும்.

4) இந்த ஒரு செயலே அவர்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்த போதுமானதாகவும், நீங்கள் நிரந்தரமாகவே காணமற் போவதற்கும் காரணமாக அமையலாம்.

5) முதல் 3 நாட்களும் உங்கள் உயிர்வாழும் உரிமை கடத்தியவர்களின் கருணையிலேயே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6) ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்கும் கேள்விகளுக்கு பதட்டமடையாமல் புத்திசாலித்தனமாக ஒரே பதில்களை கூறுங்கள்.

7) இறுதியா எந்த ஒரு வேதனையான கட்டத்திலும் நீங்கள் விடுதலையாகும் நம்பிக்கையை தவறவிடாதீர்கள்!

(இவை எனது தனிப்பட்ட கருத்து)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5) முதல் 3 நாட்களும் உங்கள் உயிர்வாழும் உரிமை கடத்தியவர்களின் கருணையிலேயே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(இவை எனது தனிப்பட்ட கருத்து)

3நாளைக்காவது வைச்சிருப்பாங்கள் எண்டு நினைக்கிறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்
215dm2008072506di3.gif

இந்த அறிவுரைகள் இதை செய்யுறவங்களால் கூட இப்பிடி சொல்லமுடியாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.