Jump to content

வல்லமை தாராயோ..!!


Recommended Posts

வல்லமை தாராயோ..!!

vallamaithaaraayostillsov8.jpg

எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்)..இன்று இங்கே உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம் யாதேனில்..(சா..தமிழை வளர்க்க தானே சில பேர் இருக்கீனம் பிறகு நாம என்னதிற்கு) :D ..சரி..இனி நான் நேரடியாக விசயதிற்குள்ள இறங்கிறன்..

சில கிழமைக்கு முன்னம் நண்பரின்ட வீட்ட போன போது அவரின்ட தங்கச்சி படம் பார்த்து கொண்டிருந்தா..அதுவும் எங்கன்ட பார்த்தீபன் மாமாவின்ட படம்..உடன நான் கேட்டன் என்னடப்பா இப்ப பொண்ணுகளுக்கு பார்த்தீபன் மாமா மாதிரி ஆட்களையும் பிடிக்குமோ எண்டு..

அவா..சொன்னா சா..சா நன்ன படமா போகுது நீங்களும் கொண்டு போய் பாருங்கோ எண்டு..சரி எண்டு நானும் அவாவிட்ட அந்த கள்ள இறுவட்டை எடுத்து கொண்டு வந்துட்டன்..ஆனா எனக்கு இந்த பார்த்தீபன் மாமாவின்ட படத்தை பார்க்கிறது எண்டா பிடிக்காது...ஆனா அன்னைக்கு நேரம் இருந்தது வெளியாள குளிராகவும் இருந்தபடியா பார்போம் எண்டு பார்க்க தொடங்கினேன்.. :D

நடிப்பு -

பார்த்தீபன்

சாயாசிங்

கருணாஸ்

ஆனந்தராஜ்

இசை -

பரத்வாஜ்.

கொஞ்ச நேரம் படத்தை பார்த்து போட்டு நூப்போம் என்பது தான் நம்ம யோசனை ஆனா படம் பார்க்க தொடங்கினவுடன மிச்சத்தையும் பார்போம் என்கின்ற அளவிற்கு படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்..(என்னை பொறுத்தளவிள)..இப்படி கதைகள் ஒன்னும் புதுசில்ல தான் தமிழ் சினிமாவிற்கு ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.. :lol:

அப்ப மேலோட்டமா நான் கதையை சொல்லுறன் கேளுங்கோ..அதாவது திருமணம் ஆன பின்பும் காதலை மறக்க முடியாமல் அந்த காதலின் கற்பனையில் வாழ துடிக்கும் அந்த பெண்ணின் ஏக்கம் தான் இந்த "வல்லமை தாரயோ" எண்ட படத்தின் முக்கிய கரு என கூறலாம்..

அதாவது இந்த கதாநாயகின் அத்தை மகன் தான் சேகர்..(இந்த சேகர் கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கிறார் சிறிகாந்)..இவர்கள் தங்களை அறியாத பருவத்தில் இருந்தே ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பை வைக்கிறார்கள் எண்டு சொல்லலாம்..

இந்த இளம் சிட்டுகள் வாலிபம் அடைக்கிறார்கள்..பட கதாநாயகி வேலையில் விடுமுறை எடுத்து கொண்டு தன் ஊருக்கு வருகிறா ஒரு காதுகுத்து சடங்கிற்கு..(அப்போதும் அவள் மனதில் அந்த சேகர் தான்)..ஆனால் காலங்களின் மாறுதலில் இரு வீட்டாருக்கும் குடும்ப பகை ஏற்பட்டு விடுகிறது..ஆனால் இவள் அவனை தான் இன்னும் காதலிக்கிறாள் அவனும் இவளை தான்.. :(

ஆனால் இவளின் தகப்பனார் ஊருக்கு வரும் இவளை வலுகட்டாயமாக திருமணத்தை செய்து வைக்கிறார்..வேற யாருக்குமல்ல பார்த்திபனுக்கு தான்..அதன் பின் தொடங்கிறது..வினை..இருவரும் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள்.ஆனால் இவளோ திருமணம் ஆன பின்னும் இன்னும் தன் காதலன் நினைவில் காலத்தை ஒட்ட நினைக்கிறாள்.

இவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமல் தடுமாறுகிறார் பார்தீபன்..ஏன் எனில் இவளின் காதல் சமாச்சாரத்தை பற்றி அவருக்கு தெரியாது..ஆனால் இவளோ தன் கணவனை ஒரு மூன்றாம் தர மனிதராக பார்ப்பது விலகுவது என்று நன்றாகவே நடித்திருக்கா அவ் கதாநாயகி..ஆனால் அதுகெல்லாம் விட்டு கொடுத்து அவளின் மனம் நோகாமல் நடக்க வேண்டும் என்று நடக்கிறார் பார்தீபன்..(ரொம்ப ஓவர்).. :lol:

அதை விட சுவாரசியம் என்னவெண்டால் இருவரும் ஒரே வேலை ஸ்தலத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் வேலை பார்ப்ப்வர்கள்..இது அவளுக்கு தெரியாது ஏதோ பார்தீபன் தன் பின்னால் வருகிறார் என்று கதாநாயகி உணர்ச்சிவசபடுவது எல்லாம் சுவாரசியாமாக எடுத்திருக்கிறார்கள்..(படத்த

Link to comment
Share on other sites

இந்தப்படம் நான் ப்போது வெளிவரும் என்று, காத்திருந்து, காத்திருந்து பார்த்த படம். இந்தப் படத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், விமர்சனங்களையும் வாசித்து, எதிர்பார்ப்போடு இருந்தேன். ஆனால் நன்றாக ஏமாற்றிப் போட்டார்கள். ஏற்கனவே விமர்சனங்களைப் படித்தபடியால், படம் பார்த்தபோது, கதை ஓரளவு விளங்கியது. விமர்சனங்கள் இல்லாமல் பார்த்திருந்தால் கதை விளங்கியிருக்கவே மாட்டாது. கிராமமாக இருந்தாலும் அப்பாவை மகள் கட்டிப்பிடித்து விளையாடும் பாசங் கொண்ட மகளுக்கு ஒரு உயிரைப் பணயம் வைத்துத் திருமணம் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. வேற்று மாப்பிள்ளையாக இருந்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இது சின்னவயதிலை இருந்தே முடிவு செய்யப்பட்ட ஒன்று. சிறீக்காந்தை விட்டுவிட்டு, வேறு மாப்பிள்ளையை அவவின்ர அப்பா ஏன் திருமணம் செய்து வைக்கிறார் என்பதற்குச் சரியான (தெளிவான) காரணம் காட்டவில்லை. அதோடு சிறீக்காந் அவவை வீடியோ எடுப்பதற்காக ஸ்பெசலா கமராக்காரரை செட் பண்ணிவிடுகிறாராம், கிராமத்திலை இருக்கிற அம்மா மூலம் அவவுக்கு அவர் கிப்ட் கொடுத்துவிடுகிறாராம். இரண்டு பேரும் நகரங்களிலை (அவ சென்னையிலும், அவர் பெங்களூரிலும்) வேலை செய்பவர்கள். அவ செல்போன் வேறு வைத்திருக்கிறார். இவ்வளவு அக்கறையோடு செய்பவர், அவவிற்குச் சொல்லாமல், அவர் எங்கோ வேலை விசயமாக வெளியிலை போய்விட்டாராம். கிராமத்திலை இருக்கிற அம்மா மூலம்தான் அந்த விசயம் அவவிற்குத் தெரியவருகிறதாம். இவ போன் செய்கிற நேரமெல்லாம் அவர் பதில் பேசவில்லையாம். செல்போன் வைத்திருப்பவர்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு வேண்டுமென்றால் ஓவ் செய்து வைத்திருப்பார்கள். இப்படியா நாட்கணக்கில் ஓவ் செய்து வைத்திருப்பார்கள்??? அப்பிடியே ஓவ் செய்திருந்தாலும் வொய்ஸ் மெசேஜ் கூடவா இல்லாமல் இருக்கும்???

அடுத்தது, பார்த்திபனும், அவவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் தெரியாதாம். ஒரே கட்டிடத்தில், வேறு வேறு கம்பனிகளில் வேலை செய்தாலே, லிப்டில் செல்லும்போது, கன்டீன், பார்க்கிங் அல்லது கீழ்த்தளம் இப்பிடி எத்தனையோ இடங்களில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் இருக்கும். ஒருவரையொருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும்கூடப் பார்த்த பரிச்சயம் இருக்கும். ஆனால், இவர்கள் ஒரே கம்பனியில் மட்டும் இல்லாது ஒரே தளத்திலும் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் பார்த்ததுகூட இல்லையாம். இப்பிடிக் காதிலை பூ சுத்துற விசயங்கள் நிறைய.

இதிலை மிகவும் மோசமானது என்னவென்றால், முதலிரவுக்கு அந்த அறைக்குள்ளை இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து படுப்பதற்கு வசதியாக, சோடிக்கப்பட்ட ஒரு கட்டில், சோடிக்கப்படாத ஒரு கட்டில் என்று பிரித்துப் போட்டிருக்கிறார்கள். :huh: முதலிரவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு, இவர்கள் பிரிந்துதான் படுக்கப்போகிறார்கள் என்று ஏற்கனவே தெரியும்போல. அதுதான் இரண்டு கட்டில் போட்டிருக்கிறார்கள். :lol: வடிவேல் இல்லாத குறையை இப்பிடியான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் படத்திற்கு ஈடு செய்துவிட்டார்கள். ^_^^_^

சரி, ஜம்மு கேட்ட கேள்விக்கு வருகிறேன்.....

நான் பார்த்தீபனாக இருந்திருந்தால், அவவின்ர திமிருக்குக் கன்னத்திலை ஒரு அறை அறைந்திருப்பேன். அவவின் அப்பா, கட்டாயப்படுத்திச் செய்தாலும், திருமணம் முடிந்து, கடத்தப்பட்ட சிறீக்காந்தின் தங்கை விடுவிக்கப்பட்டபின்போ அல்லது சென்னை வந்தபின்போ அவருக்கு விளக்கத்தை அளித்து விலகியிருக்கலாம். ஆனால், அவ பார்த்தீபனின் வீட்டிலேயே இருந்து கொண்டு திமிராக நடந்தது மிகவும் பிழை. இப்படிப்பட்டவர்களை அறைவதில் எந்தப் பிழையும் இல்லை. :icon_idea:

அவவின் நிலையில், நடந்தது அனைத்தையும் பார்த்தீபனுக்கு விளக்கிவிட்டு விலகியிருப்பேன். இடையில் வந்த காதல் என்றால் மறந்துவிட்டுப் புதிய பாதையில் போகலாம். ஆனால், விபரம் தெரியாத நாளிலிருந்தே ஒருவரையாருவர் நிச்சயமாக நினைத்து வந்த காதல் இது. சுலபத்தில் மறந்துவிடக்கூடியது அல்ல. அதுமட்டுமின்றி, சிறீக்காந்தைத் தவிர வேறொருவரை நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை. இந்தப் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கு

Link to comment
Share on other sites

அடடா..தமிழ் அச்சு அக்கா படத்தை பற்றிய தங்களின் பார்வை மிகவும் நன்னாக இருக்கு :huh: ...நான் இந்த படம் பற்றி முதலே அறிந்திருக்கவில்லை திடிரென பார்த்த போது வழமையான தமிழ் சினிமாவிலும் இருந்து சற்று ஆறுதல் என்று சொல்ல கூடிய ஒரு திரைபடம் எண்டு சொல்லலாம்.. ^_^

ம்ம்..நிச்சயமாக படம் கொஞ்சம் விளங்கிறது கஷ்டமா தான் இருக்கு..(வழமையாகவே பார்த்திபன் நடிக்கிற படங்களை விளங்குறது கொஞ்சம் கடினம் தானே)..

சரியாக சொன்னியள் ஏன் இவாவை வேறொரு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்கிறார்கள் எண்டு தெளிவான காரணம் கொடுக்கபடவில்லை..(இப்படி பல இடங்களிள் சறுக்கல்கள் தான் தாங்கள் சொல்வதை போல்)..இவ்வாறன இடங்களிள் கூடுதலான கவனம் செலுத்தி இருக்கலாம் எண்டு தோணுகிறது :lol: .ஆனா தமிழ் அச்சு அக்கா ஏனைய தமிழ் சினிமாக்களோடு ஓப்பிடும் போது "வல்லமை தாராயோ" ஆறுதல் எண்டு தான் சொல்ல வேண்டும் இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..??

நீங்க சொன்னா பிறகு தான் அந்த முதலிரவு காச்சி பத்தி நானும் யோசித்தன்..(சும்மா சொல்ல கூடாது நன்னா தான் படம் பார்த்திருக்கிறியள்) :icon_idea: ..அது செம காமேடி தான் அதை விட பகிடி என்னவெண்டா பார்தீபன் முதலிரவு முழுக்க முளிச்சிருந்து படுத்திருக்கும் அவாவை ஓவியம் வரைவாராம்..(ஆமா இதை நாம நம்மனும் என்ன)...அநியாயதிற்கு நல்லவங்களா இருக்கிறாங்க..

நீங்க வடிவேல் எண்டு சொல்ல தான் ஞாபகம் வருது கருணாஸின் நகைசுவைகள் பிழை இல்லாமல் இருக்கிறது.ஏன் எனின் வடிவேலின் ஒரே மாதிரியான நகைசுவைகளை பார்த்து..பார்த்து அலுத்து விட்டது எண்டு கூறலாம்.தங்களுக்கு எப்படியோ..?? :rolleyes:

அப்படி போடுங்கோ...கன்னத்தில அறையிறதோ உதையலாம் போல இருக்கு படம் பார்கக்க..தானும் கஷ்பட்டு மற்றவனையும் அல்லவா கஷ்டபடுத்துறா இவா..இந்த விடயத்தில் நானும் உங்களை போல தான் செய்வேன் தமிழ் அச்சு அக்கா..

மற்றது...

விபரம் தெரிந்த நாளில் இருந்து வரும் காதலை மறக்க முடியாதோ..??..ஏன்..??..வாழ்க்கையில் வரும் சில சுவாரசியாம அத்தியாங்களாக பார்க்க முடியாதோ..?? :icon_idea:

நன்றி தமிழ் அச்சு அக்கா தெளிவான உங்கள் பார்வையும் அத்துடன் தாங்கள் அந்த பாத்திரமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பியள் என்பதனை மிகவும் சுவாரசியமால கூறினியள்... அது சரி தாங்கள் இறுதியாக பார்த்த தமிழ் படங்களிள் தங்களை கவர்ந்தது அல்லது பார்க்க கூடிய மாதிரி ஏதாவது படங்கள் உள்ளதோ..?? ^_^

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜமுனா

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.

நான் பாத்திபனாய் இருந்தா கதற கதற!!!

விட்டுட்டு போயிருப்பன். :icon_idea:

சாயாசிங்கா இருந்தா இந்தகேனையனுடன்[பாத்திபன்] மீண்டும் சேர்ந்துவாழாமல் வேறுதிருமணம் செய்வேன் :icon_idea:

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

இந்தவிமர்சனத்தையும் பாருங்க :rolleyes:

http://www.rediff.com/movies/2008/jun/27ssvd.htm

Link to comment
Share on other sites

விபரம் தெரிந்த நாளில் இருந்து வரும் காதலை மறக்க முடியாதோ..??..ஏன்..??..வாழ்க்கையில் வரும் சில சுவாரசியாம அத்தியாங்களாக பார்க்க முடியாதோ..??

ஜம்மு, அது அவ்வளவு சுலபமில்லை. உங்கள் அப்பா, அம்மாவை அல்லது தங்கச்சியை மறந்து உங்களால் வாழமுடியுமா? இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாமன் முறையும் அப்படித்தானே??? ஒருவேளை, அந்த மாமனை (மச்சானை) முதலே பிடிக்காமல் இருந்திருந்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்திருந்தாலோ அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால், இதில் அப்படியில்லையே. பெற்றோர் முதற்கொண்டு அனைவரும் ஊக்கப்படுத்திய காதல் அல்லவா இது. அதுமட்டுமின்றி, அவர்களும் தீவிரமாகக் காதலித்தாற்கான சைகைகளைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

இது மெளனராகத்தின் பாதிப்பில்தான் எடுக்கப்பட்டது என்பது சரி. ஆனால், மெளனராகத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள். முதலாவதாக, பெண் பார்க்க வந்தபோதே, ரேவதி மோகனிடம் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்து விட்டார். அடுத்ததாக, ரேவதியை யாரும் மிரட்டித் திருமணம் செய்து வைக்கவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தைக் கருத்திற்கொண்டு, தனக்கு விருப்பமில்லாதபோதும், திருமணம் செய்யச் சம்மதிக்கிறார். இதில், அவர் மோகனிடம் கோபப்படுவதற்கு நியாயம் உள்ளது. காரணம், ரேவதிக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் மோகன் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அதோடு, ரேவதி படித்துக் கொண்டிருக்கும் பெண். தனியாக வாழமுடியாத சூழ்நிலை. ஆனால் வல்லமை தாராயோவில், சாயாசிங் ஒரு நல்ல கம்பனியில் வேலை செய்யும் பெண். ஏற்கனவே தனியாக இருந்துதான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.

இன்னொரு வேடிக்கையான விசயம் என்னவென்றால், விவாகரத்து பெறுவதற்காக, பார்த்தீபன் கொடுமைக்காரனாகக் கோர்ட்டில் சித்தரிக்கப்படுகிறார். கணவன், மனைவி இருவரும் சம்மதித்தால், ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்துபின் இலகுவாக விவாகரத்து பெற்றுவிடலாம். இவர் விவாகரத்து கையில் வரும்வரை, பார்த்தீபன் வீட்டில்தான் தங்கியிருக்கிறார். சென்னை வந்தவுடனேயே, இவர் தான் முதலில் தங்கியிருந்த வீட்டிற்குப் போயிருக்கலாம்தானே.... ஏன் தொடர்ந்தும் பார்த்தீபன் வீட்டிலேயே இருந்தார்????

மொத்தத்திலை இந்தப் படம் காதிலை பூ சுற்றிற விசயம்தான். இதிலை, இந்தப் படத்தின் இயக்குநர் (மதுமிதா) நியூயோர்க்கில் உள்ள பிரபல சினிமாப் பல்கலைக்கழகத்தில் படித்தவராம். பல அவார்டுகள் வாங்கியிருக்கிறார், ஹோலிவூட்டில் வேறு வேலை செய்திருக்கிறாராம். நம்பமுடியவில்லை.

ஜம்மு, மற்ற தமிழ்ப்படங்களில் மசாலா இருந்தாலும் ஒருசில நல்ல விடயங்களாவது இருக்கும். அல்லது எடுக்கப்பட்ட விதங்கள் நேர்த்தியாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். அந்தப் படத்தில் எனக்கு எந்தவிசயமும் உறுத்தவில்லை. நான் தியேட்டருக்குச் சென்று பார்ப்பது அரிது. இதனை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்று சென்று பார்த்த படமிது. அதற்குப் பிறகும் எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்த படம். அதுவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைதானே?? இதில் திருமணம். அதில் நிச்சயதார்த்தம். ஆனால் எவ்வளவு நேர்த்தியாகப் படம் எடுத்திருந்தார்கள். ரீக்கடையில் வேலை செய்யும் சிறுவன் முதற்கொண்டு பெற்றோர்வரை அனைத்துக் கதாபாத்திரங்களும் நன்றாகப் படைக்கப்பட்டிருந்தார்கள்.

அதில், எனக்கு மிகவும் பிடித்த சில விடயங்கள். ஜெயம் ரவியின் நண்பர்களின் மனைவிகள், அவர், ஜெனிலியாவோடு இருப்பதைப் பார்த்ததும் நிச்சயமானதற்குப் பின், அவர் இப்படிச் செய்வது பிழை என்று வாதாடுவார்கள். அதற்கு அவரது நண்பர்கள், எங்கட பிரண்ட் அவனின் வாழ்நாளில் முதன்முதலாக இதைத்தான் ஆசைப்பட்டிருக்கிறான். அதற்காக நாங்கள் எப்பிடியாவது இருவரையும் சேர்த்து வைப்போம் என்று கூறுவார்கள். அந்த நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றது, ஜெனிலியா வீட்டை விட்டுப் போகும்போது, பிரகாஷ்ராஜிடம், பேசும்போது, எங்கள் வீட்டில் நானும் அப்பாவும்தான் என்றாலும் நிறைய ஆட்களோடு இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இங்கே நிறையப் பேர் இருந்தும், தனிமையாக உணர்கிறேன் என்று கூறுவார். இப்படி அந்தப் படத்தில் சிறப்பம்சங்கள் நிறைய.

அடுத்ததாக, 'தாம் தூம்' இற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கே தியேட்டிரில் வெளியிட்டால், தியேட்டரில்தான் சென்று பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

உதை தான் சொல்லுறது "ஜெனரேசன் கப்".மெளனராகமும் இதுவும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது ஆனால் டைரக்ஷன் பாக்கியராஜ் இதில் மதுமிதா மற்றும்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்று தொடக்கம் இன்று வரை அரைத்த மாவை அரைப்பது தான் வழக்கம் வித்தியாசமாக அரைத்தால் அது எடுபடுவதிற்கு சில வருடங்கள் எடுக்கும் நாங்கள் மெளனராகத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தது போல் இப்பத்தைய இளைய சமுதாயம் (ஜம்முவை போல் சிலர்) வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

ஜம்மு இன்னும் 20 வருடங்களிற்கு பிறகு இப்படியான ஒரு கதையை வேறு யாராலும் எடுத்திருந்தால் "வல்லமை தாரயோ" படத்தை பார்க்கவில்லையோ என்று அடுத்த இளம் சமுதாயத்தை கேட்பார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

ஜமுனா

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.

நான் பாத்திபனாய் இருந்தா கதற கதற!!!

விட்டுட்டு போயிருப்பன். சாயாசிங்கா இருந்தா இந்தகேனையனுடன்[பாத்திபன்] மீண்டும் சேர்ந்துவாழாமல் வேறுதிருமணம் செய்வேன்

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

இந்தவிமர்சனத்தையும் பாருங்க

http://www.rediff.com/movies/2008/jun/27ssvd.htm

அட..ராஜாத்தி ராஜா வாங்கோன்னா வாங்கோ... :lol: (பராக்..பராக்)..சரியோ..நான் பகிடிக்கு பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ என்ன..ஒ விமர்சனம் நன்னா இருக்கோ..ஒன்னு சொல்லட்டோ எப்பவுமே விமர்சிக்கிறது தான் லோகத்தில சரியான இலகுவான வேலை பாருங்கோ..நான் சொல்லுறது சரி தானே.. :o

அப்படி சொல்லுங்கோ ஆனா நான் நினைக்கல அவா கதறுவா எண்டு அப்படி ஒரு கதாபாத்திரம் அந்த படத்தில அந்த நாயகிக்கு...ம்ம் இன்னொருத்தரை நினைத்து கொண்டு இன்னொருவர் கூட வாழுறது என்னால நினைத்து கூட பார்க்க ஏலாது.. :rolleyes:

ம்ம்..சரியா சொன்னியள் பார்த்தீபன் சரியான கே** தான் இப்படி யாரும் இருப்பாங்களா..??..யாருக்கு தெரியும் இப்படியும் சிலர் இருக்க கூடும் :lol: ..நான் மெளனராகம் படம் பார்க்கவில்லை நீங்கள் சொன்னா பிறகு அதையும் ஒருக்கா பார்கனும் போல இருக்கு நேரம் கிடைக்கும் போது எடுத்து பார்த்து விட்டு சொல்லுறன் என்ன..ம்ம் தாங்கள் இட்ட இணைப்பையும் வாசித்தேன் நன்றி அண்ணா இணைப்பிற்கும் தங்களின் எண்ணங்களிற்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு, அது அவ்வளவு சுலபமில்லை. உங்கள் அப்பா, அம்மாவை அல்லது தங்கச்சியை மறந்து உங்களால் வாழமுடியுமா? இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாமன் முறையும் அப்படித்தானே??? ஒருவேளை, அந்த மாமனை (மச்சானை) முதலே பிடிக்காமல் இருந்திருந்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்திருந்தாலோ அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால், இதில் அப்படியில்லையே. பெற்றோர் முதற்கொண்டு அனைவரும் ஊக்கப்படுத்திய காதல் அல்லவா இது. அதுமட்டுமின்றி, அவர்களும் தீவிரமாகக் காதலித்தாற்கான சைகைகளைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

ம்ம்..தாங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியாக தான் தெரிகிறது :lol: ..ஆனால் ஒருவனை நினைத்திட்டோம் அவன் இல்லாட்டி இருக்க ஏலாது எண்டு இல்லை தானே..(எதிர்பாரத விபத்தில் அவர் சிக்கி மரணித்திருந்தால்)..என்ன செய்வது வாழ்க்கையை கொண்டு செல்ல தானே வேண்டும்..அதையே நினைத்து கொண்டு இருக்க ஏலாது தானே..?? :o

நான் மெளனராகம் படம் பார்க்கவில்லை தமிழ் அச்சு அக்கா தங்களின் கருத்தில் இருந்து அந்த கதையினை ஒரளவு உள்வாங்க கூடியதாக இருக்கிறது..ஆனால் நீங்கள் சொல்வது போல் இரண்டு கதைகளுக்குமிடையில் பல வேறுபாடுகள் உண்டு.மற்றது இந்த "வல்லமை தாராயோ" கதையில் பிற்பாதி அதாவது படமுடியும் தருவாயில் அந்த நாயகியின் "ஈகோ" பிரச்சினையை வடிவாக சுட்டி காட்டி இருந்தார்கள் :unsure: ,இப்படி பலர் இருக்கீனம் உண்மையிலே ஆனால் எல்லாரும் பார்தீபன் போல் விட்டு கொடுப்பார்களோ என்பது தான் சந்தேகம்..

ம்ம்..விவாகரத்து பெற்ற பின் பார்தீபன் வீட்டில் இருப்பது அதை விட வேடிக்கை என்னவெண்டால் பார்தீபனை மறுகல்யாணம் கட்டும்படி இவா சொல்வது..இப்படி அடுக்கி கொண்டு போகலாம்..ம்ம் காதில பூ சுத்தின விடயங்கள் படத்தில் ஏராளம் தான் அது போக நீங்கள் கூறுகின்றீர்கள் மதுமிதா கோலிவுட்டில் கூட வேலை பார்த்தவர் என்று அப்படி எண்டால் இந்த கதை தூசு தான்.. :rolleyes:

ஓமொம் நீங்கள் சொல்வதும் சரி தான் தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு நல்ல விடயங்களையும் சேர்கிறவை தான் இல்லை எண்டு சொல்லல்ல,ஆனா என்ன படம் பார்க்கும் போது விசரா இருக்கும் அதாவது தேவையற்ற பாடல்கள் மற்றது வழமை போலவே கதை நகர்வதால் அடுத்தது என்ன நடக்கும் என்பதனை ஊகித்து கொள்ள கூடியதாக இருப்பதால் படம் பார்ப்பதில் சளிப்பு என்னை பொறுத்தளவிள் அப்படி பார்க்கும் போது இந்த படம் சளிப்பிள்ளாத பயணம் என் பார்வையில் என்று சொல்லலாம். :lol:

ம்ம்..சந்தோஷ் சுப்பிரமணியம் நானும் பார்த்தனான் நல்லதொரு படம் நான் நினைக்கிறன் தெலுங்கில் வந்ததை தான் தமிழில் மறுபடி எடுத்தார்கள் எண்டு தெலுங்கில் சித்தார்தின் நடிப்பில் இருந்த துடிப்பு தமிழில் ஜெயம் ரவியின்ட இல்லை தெலுங்கு படத்தை பார்தீர்கள் எண்டால் புரிந்து கொள்வீர்கள்..ஆனால் படம் கடசி வரை நல்லா தான் போச்சுது நல்லதொரு படம்..மற்றது இந்த படத்தில் ஜெனிலியா சொல்வா எனக்கு நடித்து பழக்கமில்லை வாழ்க்கையில் எண்டு அது எவ்வளவு தூரம் உண்மை ஏன் எனில் பலர் நடிக்கிறார்கள் மற்றவர்களுக்காக... :lol:

ஒ.."தாம் தூம்" படமோ இங்கே திரையிடும் போது பார்த்து விட்டு சொல்கிறேன் அதுக்கு முன் இந்த மாத முடிவில் குசேலன் திரைபடம் அதையும் பார்க்க வேண்டும்..நன்றி தமிழ் அச்சு அக்கா தங்களின் எண்ணங்களுக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உதை தான் சொல்லுறது "ஜெனரேசன் கப்".மெளனராகமும் இதுவும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது ஆனால் டைரக்ஷன் பாக்கியராஜ் இதில் மதுமிதா மற்றும்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்று தொடக்கம் இன்று வரை அரைத்த மாவை அரைப்பது தான் வழக்கம் வித்தியாசமாக அரைத்தால் அது எடுபடுவதிற்கு சில வருடங்கள் எடுக்கும் நாங்கள் மெளனராகத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தது போல் இப்பத்தைய இளைய சமுதாயம் (ஜம்முவை போல் சிலர்) வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

ஜம்மு இன்னும் 20 வருடங்களிற்கு பிறகு இப்படியான ஒரு கதையை வேறு யாராலும் எடுத்திருந்தால் "வல்லமை தாரயோ" படத்தை பார்க்கவில்லையோ என்று அடுத்த இளம் சமுதாயத்தை கேட்பார்கள். :lol:

ஓ..மாம்ஸ் நீங்க மெளனராகம் பார்த்தனியளோ..?? :o ..எப்பவுமே அரைத்த மாவை அரைக்கும் போது தான் பாருங்கோ புது எண்ணங்கள் தோணும் அப்படி பார்க்க போனால் அரைத்து கொண்டிருக்க வேண்டும் என்ன நான் சொல்லுறது சரி தானே மாம்ஸ்..ஒம் நீங்கள் சொல்வது சரி தான் ஏனேனில் குணா படம் வந்த காலபகுதியில் அது தோல்வி படமாக திகழ்ந்ததாம் எண்டு அறிந்தேன்..(யாருக்கும் தெரியுமோ??) :rolleyes: ..ஆனால் நல்லதொரு படம் அது ஆனால் அன்றைய காலகட்டத்து ரசணை அவ்வாறு இல்லாததால் தோல்வியுற்றதோ தெரியவில்லை.. :unsure:

ஆனால் இப்போது பல படங்கள் அந்த சாடையில் வந்து வெற்றி பெற்றுள்ளது அப்படி பார்குமிடத்தில் நீங்கள் சொல்வதும் சரி போல தான் இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முவின் விமர்சனத்திற்கு பிறகு திருட்டு விசிடியில் (நண்பனின் வீட்டில் இருந்து திருடியது) படம் பார்த்தேன். ..

ம் பார்க்கலாம் . . தற்போதைய இளம் சமுதாயத்தை சற்று விழிப்புணர்வாக்கும். .

பார்த்தீபனின் படங்கள் எப்போதுமே வித்தியாசமானவையாகத்தான் இருக்கும். .

ஆண்கள் எப்போதுமே இப்படித்தான் பார்த்தீபனைப்போலத்தான் காதல் தோல்வி என்றாலும் சிறிது நாட்களிற்கு அந்த நினைவிலேயே வாழ்வார்கள். (மனச்சாட்சி உள்ளவன் எவன் என்றாலும் இல்லையென்று சொல்லட்டும் பார்க்கலாம் )

பெண்களிற்கு சற்று ஈகோ இருக்கும். இருக்கவேணும் . . அதுதான் வாழ்க்கை. . .

Link to comment
Share on other sites

ஜம்முவின் விமர்சனத்திற்கு பிறகு திருட்டு விசிடியில் (நண்பனின் வீட்டில் இருந்து திருடியது) படம் பார்த்தேன். ..

ம் பார்க்கலாம் . . தற்போதைய இளம் சமுதாயத்தை சற்று விழிப்புணர்வாக்கும். .

பார்த்தீபனின் படங்கள் எப்போதுமே வித்தியாசமானவையாகத்தான் இருக்கும். .

ஆண்கள் எப்போதுமே இப்படித்தான் பார்த்தீபனைப்போலத்தான் காதல் தோல்வி என்றாலும் சிறிது நாட்களிற்கு அந்த நினைவிலேயே வாழ்வார்கள். (மனச்சாட்சி உள்ளவன் எவன் என்றாலும் இல்லையென்று சொல்லட்டும் பார்க்கலாம் )

பெண்களிற்கு சற்று ஈகோ இருக்கும். இருக்கவேணும் . . அதுதான் வாழ்க்கை. . .

அட...அப்ப பரவால்ல நான் விமர்சனம் பண்ணி நீங்களாவது படத்தை பார்த்திருக்கிறியள் மாஸ்டர் :( ..என்ன தான் சொன்னாலும் கள்ள சீடியில பார்க்கிற சுகமே தனி தான் என்ன "மாஸ்டர்"..உண்மை தான் பார்த்தீபன் மாமாவின் படங்கள் வித்தியாசமானவை மற்றது சில படங்களிள் என்ன நடக்கிறது எண்டே விளங்காது அப்படியும் அவர் படம் எடுத்திருக்கிறார் எரிச்சலா இருக்கும். :huh:

ஓ..உங்களுக்கும் படம் பிழை இல்லாமல் இருந்ததோ..??..இன்றைய இளைஞர்களை இந்த படம் விழிபுணர்வாக்கும் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாது ஏன் எண்டால் இன்றைய தலைமுறையினருக்கு நல்லது எது கெட்டது எது என தெரிந்து கொண்டே பிழை விடுகிறார்கள்..(இதை பற்றிய தங்களின் கருத்து என்ன??).. :mellow:

நான் நினைக்கல "மாஸ்டர்" ஆண்கள் காதலில தோற்றால் சில நாட்களுக்கு அந்த நினைவில வாழுவார்கள் எண்டு..சிலர் இருக்க கூடும் ஆனா இப்ப எல்லாம் ஒரு பஸ்சை விட்டா இன்னொரு பஸ் எண்ட மாதிரி தான்,நீங்கள் இவ்வளவு உறுதியா அடித்து கூறுவதை பார்த்தா மாஸ்டர் உங்களுக்கு ஏதாச்சும் அநுபவமோ..??.. :( (நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன)..

என்னது பெண்களுக்கு ஈகோ இருக்க வேண்டுமோ..(அதுவும் ஒரு வகையில் சரி தான்)..அப்போது தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்ன..கெஞ்சுறதிலையும் ஒரு சுகம் இருக்கு தான்..நான் சொல்லுறது சரி தானே..நன்றி மாஸ்டர் தங்களின் எண்ணங்களுக்கு..அடுத்தது குசேலன் படம் தான் என்ன.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முவின் விமர்சனத்தை வாசித்துப்பார்த்தேன். படம் பார்க்கணும் போலிருக்கு

நாளைக்கு பார்த்துட்டு எழுதட்டுமோ கருத்தை . தம்பி ஜம்மு நீங்கள் முடிவை சொல்லாமல் போய்விட்டியளே.,ம்ம் நாங்க பார்த்து தெரிஞ்சுக்குறம் சரியோ

Link to comment
Share on other sites

இளைய தலைமுறை பிழைவிடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம். அவர்களிற்கு தெரியும் அது பிழை என்று ஆனால் வெளி உலகத்தின் மத்தியில் அவர்களின் பெயர் வரவேண்டும் என்பதற்காக அதை திரும்ப திரும்ப செய்கின்றார்கள். கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றொம்

நான் பொய் சொல்லமாட்டேன் ஜம்மு. . எனது முதல்காதல்தான் எனக்கு கவிதையை தந்தது. அந்த காதல் இன்றும் என்னுள் இருக்கின்றது. . ஆனால் வலி இல்லை சுகம். . எனது மனைவிக்கும் தெரியும். . . முதல் காதல் நினைவிலேயே 4 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றேன். . . எங்கிருந்தாலும் அவள் இன்பமாக வாழவேண்டும் என்றே இன்றும் நினைப்பேன். . என்ன இழந்தது அல்லது நான் பிரிந்தது நன்மைக்கே என்றும் எண்ணிக்கொள்வேன். .

குசேலன் படம் ஏற்கனவே மலையாளப்படம் பார்ததுவிட்டேன். குசேலன் படம் ஓடுகின்ற அன்று நல்ல ஆங்கிலப்படம் ஓன்று பார்க்கலாம் என்று இருக்கின்றேன். . அன்றுதான் விடுமுறை. . பார்ப்போம். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட விமர்சனம் நல்லாருக்கே...

படத்தை முழுசா பார்த்துட்டு என்னோட விமர்சனத்தை சொல்லுரேன்....

ஆமா என்ன இந்த முறை ஜம்மு பஞ்ச் மிஸ்ஸிங்....

அதனால சங்கத்தில இருந்து ஒரு பஞ்ச்.

கண்ணா காதலுங்கிறது வாழ்க்கைல ஒரு பகுதி மட்டும்தான் ...காதலே வாழ்க்கை இல்லை....

Link to comment
Share on other sites

ஜம்முவின் விமர்சனத்தை வாசித்துப்பார்த்தேன். படம் பார்க்கணும் போலிருக்கு

நாளைக்கு பார்த்துட்டு எழுதட்டுமோ கருத்தை . தம்பி ஜம்மு நீங்கள் முடிவை சொல்லாமல் போய்விட்டியளே.,ம்ம் நாங்க பார்த்து தெரிஞ்சுக்குறம் சரியோ

ஒ..அப்படியா நி"ல்"லா அக்கா..ம்ம் படத்தை நேரம் கிடைக்கும் போது பாருங்கோ என்ன :lol: ..தாரளமாக பார்த்து விட்டு தங்களின் கருத்தையும் முன்வையுங்கோ அக்கா..அத்துடன் அந்த நிலையில் தாங்கள் இருந்திருந்தீர்கள் எண்டால் நீங்கள் என்ன செய்திருப்பியள் என்பதனையும் எங்களுடம் பரிமாறலாமே..?? :unsure:

எப்பவுமே ஜம்மு பேபிக்கு ஆரம்பம் மட்டும் தான் முடிவில்லை விளங்கிச்சோ ஆனபடியா முடிவை பார்க்க வேண்டியது நீங்க..(கொஞ்சம் ஓவரா போயிட்டமோ).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

இளைய தலைமுறை பிழைவிடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம். அவர்களிற்கு தெரியும் அது பிழை என்று ஆனால் வெளி உலகத்தின் மத்தியில் அவர்களின் பெயர் வரவேண்டும் என்பதற்காக அதை திரும்ப திரும்ப செய்கின்றார்கள். கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றொம்

நான் பொய் சொல்லமாட்டேன் ஜம்மு. . எனது முதல்காதல்தான் எனக்கு கவிதையை தந்தது. அந்த காதல் இன்றும் என்னுள் இருக்கின்றது. . ஆனால் வலி இல்லை சுகம். . எனது மனைவிக்கும் தெரியும். . . முதல் காதல் நினைவிலேயே 4 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றேன். . . எங்கிருந்தாலும் அவள் இன்பமாக வாழவேண்டும் என்றே இன்றும் நினைப்பேன். . என்ன இழந்தது அல்லது நான் பிரிந்தது நன்மைக்கே என்றும் எண்ணிக்கொள்வேன். .

குசேலன் படம் ஏற்கனவே மலையாளப்படம் பார்ததுவிட்டேன். குசேலன் படம் ஓடுகின்ற அன்று நல்ல ஆங்கிலப்படம் ஓன்று பார்க்கலாம் என்று இருக்கின்றேன். . அன்றுதான் விடுமுறை. . பார்ப்போம். . .

ம்ம்..மாஸ்டர் அவர்கள் இந்த தவறினை தெரிந்து கொண்டே விடுவதிற்கு சுற்றுபுற சூழல்களும் செல்வாக்கு செலுத்துகிறது எண்டு சொல்லலாம் :lol: ..ஆனால் அடிப்படையில் இந்த தவறை ஏன் விடுகிறார்கள் எண்டு பார்த்தால் அது அவர்களை சுற்றியுள்ள நண்பர் வட்டமே முதல் இடம் பெறும் என்பது என் கருத்து.. :rolleyes:

அடடா..உங்கள் முதல் காதல் தான் உங்களுக்கு கவிதையே தந்ததா..ம்ம் சில நினைவுகளை அசை போடும் போதும் ஒரு சுகம் ஆனால் அதை மீண்டும் அநுபவிக்க கூடாது எண்டும் மனம் சொல்லும் என்ன மாஸ்டர்..(இதுக்காக பிறகு என்னையும் தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்).. :wub:

ஓ..நீங்கள் மலையாளத்திள் பார்த்துவிட்டியளா..(எப்படி படம்)..ஆனால் தமிழில் ரஜனிக்காக பல காட்சிகள் சேர்க்கபட்டுள்ளது எண்டு கூறுகிறார்கள்..எது எப்படி இருந்தாலும் நான் முதல் காட்சி பார்த்து விடுவன் அப்ப தான் எனக்கு நிம்மதி.. :(

அப்ப நான் வரட்டா!!

அட விமர்சனம் நல்லாருக்கே...

படத்தை முழுசா பார்த்துட்டு என்னோட விமர்சனத்தை சொல்லுரேன்....

ஆமா என்ன இந்த முறை ஜம்மு பஞ்ச் மிஸ்ஸிங்....

அதனால சங்கத்தில இருந்து ஒரு பஞ்ச்.

கண்ணா காதலுங்கிறது வாழ்க்கைல ஒரு பகுதி மட்டும்தான் ...காதலே வாழ்க்கை இல்லை....

ஓ..விமர்சனம் நன்னா இருக்கோ.. :D (அப்பாடா நாமளும் அப்ப எனி யாரும் பெரிய மனிசரையும் விமர்சிக்க தொடங்கிட வேண்டும்)..ம்ம்..கறுப்பன் அண்ணா படத்தை பார்த்து விட்டு தங்களின் கருத்தையும் பகிருங்கோ என்ன..ஒ பஞ்சோ அதுவென்னவெண்டா நம்ம ரஜனி படம் வாறபடியால பஞ்சை நாம சொல்லாம இருக்கிறோம்.. :lol:

பரவால்லையே அந்த மாதிரி இருக்கு பஞ் கறுப்பன் அண்ணா..அப்ப நானும் ஒன்னு சொல்லட்டோ.."காதல் என்கிறது வெங்காயம் உரிக்க உரிக்க கண் கலங்கும்".. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்மு, காதலர்களின் தவிப்பை அழகாகச் சொல்லும் படம், "கண்ணும் கண்ணும்". பிரசன்னா, மற்றும் கேரளத்துப் புதுமுகம் நடித்த படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். :lol:

Link to comment
Share on other sites

யம்மு, காதலர்களின் தவிப்பை அழகாகச் சொல்லும் படம், "கண்ணும் கண்ணும்". பிரசன்னா, மற்றும் கேரளத்துப் புதுமுகம் நடித்த படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். :icon_mrgreen:

ஓ..அப்படியோ தமிழ் அச்சு அக்கா..கட்டாயம் பார்க்கிறன் அந்த படத்தை :lol: ..எனக்கு பிரசன்னாவின்ட படம் எண்டால் பிடிக்காது ஆனால் கிட்டடியில் பார்த்த ஒரு படத்தில..(அஞ்சாதே எண்டு நினைக்கிறன்)..அவரின் வில்லதனமான நடிப்பு நன்றாக இருந்தது..நீங்கள் பார்த்தனியளோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.