Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே தற்போது விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அப்படி பணிக்குத் திரும்பாதவர்கள் மீது இராணுவ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளா

http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccbvj0Q3e

பொதுக்கூட்டத்திலா இந்த அறிக்கையை விட்டார்?... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி தீபன் பற்றி கொஞ்சம் ராஜபக்ச குடும்பம் அறிந்திருக்கும் என நம்பலாமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தருணத்தில் மக்கள் அனைவரும் மிக கவனமாக தங்களது பாதுகாப்பை உறுதி

செய்து கொள்ள வேண்டும்

தேவையற்ற இழப்பை தடுப்பதற்காக

விடுப்பில் சென்றுள்ள இராணுவமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அவர்கள் கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் குறிவைத்துத்தானே தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் இனிமல் என்ன புதுசா :icon_idea: ? ஆனால் கிளிநொச்சியிலையோ அல்லது முல்லைத்தீவிலையோ இராணுவம் கால் வைக்க நினைத்தால் கொலம்புல உள்ள சவச்சாலைகள் நிறையும் என்பதே உண்மை .

விடுப்பில் சென்றுள்ள இராணுவமா??

விடுப்பில் என்றால் விடுமுறையில் சென்றுள்ள ராணுவத்தையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். அல்லது பயத்தில் ஓடிய ராணுவத்தைத்தான் அவர்கள் பாசையில் அப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை

ஆகவே தற்போது விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்

இராணுவத்துக்கு ஏற்ப்பட்ட ஆளணி பற்றாக்குறையாலும் சொல்லி இருக்கலாம்....!!

  • கருத்துக்கள உறவுகள்

quote name='தூயா' date='Jul 27 2008, 10:12 AM' post='432233']

விடுப்பில் சென்றுள்ள இராணுவமா??

விடுப்பில் சென்ற ராணுவம் எல்லாம் பாஸ்போட்

முடிக்கிறாங்க

பார்த்ததில்ல கொழும்பில பாஸ்போட் வழங்கும் காரியாலயத்தில் முன்பு :):icon_idea:

தயவு செய்து நம்பிக்கைகளை குறைக்கவோ அல்லது கவலைகளின் வெளிப்பாடக உணாச்சி வசப்பட்டு பயந்தோ கருத்துக்களை எழுதாதீர்கள் தயவு செய்து நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் எழுதுங்கள்.

உண்மையிலே எம்மில் பலபேருக்கு நம்பிக்கை குறைந்து செல்வது யாவரும் அறிந்ததே ! அது சில சந்தர்ப்ப வசத்தாலும் கிடைக்கபெறுகின்ற தகவல்களின் ஆதிக்கம் எமது மனதில் இருந்த நம்பிக்கைகளை தகர்த்து விட்டது தான் ! ஏன் எனில் சமாதான காலத்தில் எமது தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற புலம்பெயர் ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகள் தந்த அறிவு

1.போர்நிறுத்தம் சிங்கள அரசினால் முடிவுக்கு கொண்டு வரப்படுமானால் சர்வ தேசம் எங்களை உடனடியாகவே அங்கீகரித்துவிடும்

2.நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குமாக இருந்தால் புலிகளால் வாரக்கணக்கிலேயே தமிழீழ மண் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு விடும்

3. புலிகள் அதீத பலத்துடன் இருக்கிறார்கள் ஆகவே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்ற முடியாது .

இது போன்ற பல நம்பிக்கை ஊட்டல்களிற்கு பதிலாக அதீத கருத்துக்கள் விதைக்கபட்டுள்ளன என்பது தான் மறுத்திட முடியாத மிக வேதனையான விடயம்.

ஏன் எனில் 2006 இல் முகமாலையில் தொடங்கிய போரிற்கு பின்பு சம்புர் வாகரை மட்டக்களப்பு என்று எம்மை விட்டு போய்க் கொண்டிருந்த பொழுது வன்னியில் உள்ளே நுழைய முடியாது என்று எழுதி தீர்த்த பத்திரிகைகள் ஏற்றிய அறிவு ஊட்டத்தில் அப்படியே ஏற்றுக் கொண்ட மக்களிற்கு மன்னாரிலும் மணலாறிலும் பின்பு மடு தேவாலயம் பின்பு விடத்தல் தீவு இப்பொழுது துணுக்காய் எனும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது தான்.

அதற்கிடையில் வான்வழித் தாக்குதலில் இழந்த அருமைச் சொத்து தமிழ்ச்செல்வன் அண்ணன் பின்பு அதனை தொடாந்து வந்த சிங்கள அரசின் கொட்டம் பின்பு அதன் இயற்கையாக இழந்த களநாயகன் பால்ராஐ; அண்ணன் ஆகியோரது இழப்புகள் ஏற்படுத்திய தாக்கம் விரைவில் மாறிடமுடியாத விடயம் நாம் நினத்தவற்றிற்கு எதிர் மாறக நடக்கிறதே!என்ற பெரும் வலி.

இதன் விளைவு தான் எமது மக்கள் மனரீதியாக இன்றுபடுகின்ற இனம் புரியாத வலி ! ஏன் எனில் மனித மனம் எப்பொழுதுமே தான் நினைப்பதை மட்டுமே நடக்க வேண்டும் அல்லது வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்ற அவாவக் கொண்டது இது எங்களிற்கும் பொருந்தும்.

எம்மில் எத்தனை பேருக்கு நமது சொந்த வாழ்வில் நினத்ததெல்லாம் நடந்திருக்கின்றது அல்லது வெற்றி பெருக்கின்றோம் அனைத்து விடயத்தலும் ! எம்மில் தனிப்பட்ட வாழ்கையிலும் எத்தனை சறுக்கல்கள் இழப்புக்கள் நம்பிக்கை துரோகங்கள் படு தோல்விகள் அனதை;தையும் தாண்டி நாம் சில இடங்களில் வென்றிடவில்லையா ? அல்லது

நாம் நினத்த காரியங்கள் ஈடேற எத்தனை காலங்கள் காத்து கிடந்திருக்கின்றோம் ! நினை;த சில விடயங்களை பெற்றிட முடியவலி;ல்லையா ?

நமது தனிப்பட்ட வாழ்விலே இந்த சோதனைகள்! தோல்விகள்! துரோகங்கள்! பின்பு வெற்றிகள் ! என்று மாறும் பொழுது நாம் ஓரு உலகில் ஓரு சிறந்த இனமாக வாழ்ந்து வருகின்ற ! இது வரை விடிவு கிட்டாமல் போராடுகின்ற இனத்திற்கு எவ்வளவு சோதனைகள் ! துரோகங்கள் ! தோல்விகள் அல்லது பின்னடைவுகள் ! பின்பு வெற்றிகள் ! என்பது நான் சொல்லித் தான் புரியவேண்டு;ம் என்றில்லை.

அதாவது தயவு செய்து நம்பிக்கை இழந்து மற்றவர்களையும் நம்பிக்கை இழக்க வைத்து அதனால் ஓரு பாரிய அழிவை ஏற்படுத்துவதைவி;ட நாமும் நம்பிக்கை கொண்டு மற்றவர்களையும் நம்பிக்கை கொள்ள வைப்போமாக !

தனிப்பட்ட ரீதியில் ஓவ்வொரும் நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பபொழுது கொட்மடித்து உள்ளே நூழையும் சிங்கள வெறிக் கூட்டங்கள் எம்மவர்களை கொன்று வெளியிடும் நிழல்படங்களை தருகின்ற தாக்கம் ! சொல்லிமுடிந்திடவில்லை என்றாலும் ! என்றோ ஓரு நாள் அது மிக அண்மையில் வரக்கூடிய நாட்களாக இருக்கலாம் அல்லது சிறிது நாள் சென்று நடக்க போகின்றதாக கூட இருக்கலாம்

உள்ளே நுளையும் சிங்கள வெறியர்கள் எம்மவர்களால் எங்கள் சகோதரங்களால் உங்கள் பிள்ளைகளால் சின்னாபின்ப்பட்ட உடலங்கள் ஆயரக்கணக்கில் இருக்க அதனை ஏற்க சிங்கள அரசு மறுத்து வன்னி மண்ணில் தகனம் செய்யப்படப் போகும் நாள் வன்னி மண் விடுவிக்கப்பட்டு கைப்பற்றிய வாகனங்களி; எம் சகோதரர்கள் வெற்றி உலா வர நேர்வே திரும் சமாதானம் பேச வர புலிக் கொடி வெற்றி மிதப்பில் காற்றில் பட்டொளி வீசி;ட நாம்மெல்லாம் தகர்ந்த நம்பிக்கைகள் தகர்ந்திட புது வேகத்துடன் நெஞ்சை நிமிhத்த போகும் நாளை மனக் கண்ணில் நிலை நிறுத்துங்கள் எவ்பொழுதோ நடந்தே தான் ஆகும் .

தயவு செய்து கடவுள் இருக்றாரா ? இல்லையா ? என்ற கேள்வியை விடுத்து ஆலயங்களில் கிடைக்கப் போகும் வெற்றிக்காக பிரார்த்தனைகள் செய்யுங்கள் !

நான் கனவு சம்பந்தமாக அல்லது போராளிகள் களத்தில் சாகும் பொழுது நம்பிக்கை பற்றி எழுதுவதாக சில பேர் பேசலாம் ! பரவாயில்லை ! ஏன் எனில் எம் கண் முன்னே நம் னண்ணால் தற்பொழுது காண்கின்ற " மன நிலைப் " படங்கள் நாம் நினைக்கின்ற வெற்றி பட நிலைப்பட நிலைகளின் கொடுக்கின்ற வெற்றிகளின் பொழுதும் இவர்களும் பங்கெடுக்கப் போகிறார்கள்.

ஏன் எனில் மனதிற்கு இவ்வளவு சக்தி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.