Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசெது ஆவர்கள் ஆசிரியராகப் பணியாற்றுபவர். எனவே இதன் மூலம் பலருடனான தொடர்பு இயல்பாகவே இருக்கும். இதனை குதர்க்க் கண்கொண்டு நான் பார்க்கப் போவதில்லை.

இவரது திரை முயற்சி தொடர்பபான கருத்துகளில்தான் விவாதம் இங்கு நடைபெறுகிறது.

புபுலம் பெயர் திரைமுயற்சியில் கனடாவிலிருந்து "தமிழிச்சி" எனம் படம் பலருது கவனத்தைப் பெற்றிருந்தது.

குறும்படங்களில் பல கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக "பேரன் பேத்தி' (பிரான்சு).

புலம்பெயர்வாழழ்வு என்பது அனுபவப் பொக்கிசம். இலகுவில் கிடைக்க முடியாதது. இவை படைப்புகளால் உலகின் கவத்தைப்பெறும் என்பதில் அசைக்க முடியாத கருத்துடையவன் நான்.

இந்தியாவில் கோடிகளால் கடட்டியெழுப்பப்படும் கனவுலகச் சினிமாவிலிருந்து விலகி அன்று சத்தியஜித் ரே இன்று அடுர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் காணப்படவில்லையா?

கருத்துகளால் எண்ணம் வலுவடைந்து சிறப்பாக செயல் வருமல்லவா!

பத்தோடு பதினொன்றாவதில் என்னதான் இருக்கிறது!!

:lol:

  • Replies 61
  • Views 10.1k
  • Created
  • Last Reply

சுழியன் அண்ணா உங்களுக்கு கி.செ.துரையை நன்றாக தெரிந்திருக்கிறது. இங்கு விமர்சிக்கப்படுவதுபோல அவர் குமாரதுரை குழுவுடன் தொடர்புள்ளவரா?

இங்கு விமர்சிப்பவர்களுக்காக படமெடுத்தால் படமெடுப்பவர் ஓட்டாண்டியாகவேண்டியதுதான். ஒரு படத்தை வியாபாரரீதியாக எடுத்தால் மட்டும் படத்தயாரிப்பாளர் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முடியும். படம் வெற்றியடைவதற்கு இலங்கைத்தமிழரும்(புலம்பெயர்) அவசியம். அதற்காகதான் ஒவ்வொருவரும் விடுதலையை ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்கின்றார்கள். மற்றபடி அவர்கள் வியாபாரிகள் அதற்குமேல் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.

முழுக்க முழுக்க எம்மவர் பிரச்சனையை வைத்து படமெடுத்து விமர்சன ரீதியில் வேண்டுமானால் அவர்கள் பாராட்டை பெறமுடியும் . ஆனால் பெற்றுக்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய யார் துணை போவார்கள் இந்த விமர்சகர்கள் அதற்கும் தயாரா?

எங்கள் தாயகத்திலே எதிரியால் ஆக்கிரமிக்கப்படும் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு எங்களது போராளிகள் தங்களது உயிரையும் இரத்தத்தையும் விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.விலைமதி

குழந்தைகள் முதலில் கிறுக்கும்

அவை கிறுக்கல்

அது ஓவியமல்ல.....ஆனால் அதையும் ஓவியத்தின் மனதோடு ரசிப்போர் இருக்கிறார்கள்.

அவற்றை பார்த்து வெறுத்தோ அல்லது அவர்களாக புரிந்து கற்றுக் கொண்டோ

ஒரு நாள் , ஒரு சில ஓவியர்கள் முன் வருவார்கள். உருவாவார்கள்.

இலங்கை தமிழ் படங்கள் வெற்றி பெறாததற்கு

இந்திய சினிமாதான் காரணம் என நினைத்திருந்தேன்.

இங்கே கருத்துகளை வைப்போர் போன்றவர்களே

அன்றும் அங்கு இருந்திருப்பார்கள்?

நம்மவரே அதற்கும் காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். :lol:

குப்பைகளாவது வரட்டும்

அது நல்லவை வர ஒரு நாள் உதவும்.

இங்கு அதை எதிர்த்து கருத்து வைப்போராவது

ஒரு நல்ல படத்தை உருவாக்காமலா இருப்பார்கள்? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பாரதிராஜா தெரிவித்த கருத்தைப் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். அவரது கருத்து தசாவதாரம் தொடர்பானது. ஆனால் இக்கருத்தை ஆசிரியர் கிசெது அவர்களது முயற்சிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!

பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை. கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

.......

http://thatstamil.oneindia.in/movies/speci...savatharam.html

கிசெது அவர்களுக்கு அவருக்குப்பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றியதான விளக்கத்தைத் தருமாறு அன்புடன் வினவினால் என்ன?

'ஏமாறாதே...... ஏமாற்றாதே...!!!!!

இன்று பாரதிராஜா தெரிவித்த கருத்தைப் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். அவரது கருத்து தசாவதாரம் தொடர்பானது. ஆனால் இக்கருத்தை ஆசிரியர் கிசெது அவர்களது முயற்சிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!

பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை. கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

.......

http://thatstamil.oneindia.in/movies/speci...savatharam.html

கிசெது அவர்களுக்கு அவருக்குப்பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றியதான விளக்கத்தைத் தருமாறு அன்புடன் வினவினால் என்ன?

'ஏமாறாதே...... ஏமாற்றாதே...!!!!!

உங்க கிசெது வின் "இளம் புயல்" திரைப்படம் எப்படியிருக்குமோவென்று வந்த பின்னால்த் தான் தெரியும். ஆனால் அவரை வைச்சு இப்போ நீங்க காட்டற படம் அப்பப்பாபாபாபாபாபா....................

முன்பு கூடுதலாக உணவு விடுதிகளில் ஒரு அறிவிப்புப்பலகை தொங்கும், அதில் "நிறைவிருந்தால் நண்பர்களிடம் கூறுங்கள்; குறையிருந்தால் எங்களிடம் கூறுங்கள்" என்று எழுதியிருப்பார்கள். நீங்கள் உண்மையான விமர்சகராக இருந்திருந்தால் அவரின் முதல்ப் படத்தை பார்த்தபின் அவரிடமே சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் இங்கே வந்து நீங்களும் காட்டுவது............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-நிறை இருந்தால் நண்பர்களிட்் கூறுங்கள். குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள்- மிக நல்ல கூற்று.

நீங்கள் கி.செ.துரையின் முதல் படமான பூக்கள் பார்த்ததில்லையா?

இளம் புயல் அவரது இரண்டாவது படம் நீங்கள் அறிவீர்களா?

புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

பூக்கள் வந்தபோது குறைகளை அவர்களிடம் மட்டுமே பலரும் கூறினார்கள்.

ஆளனால் இளம் புயல் வந்து தமிழ்நாட்டவராலேயே குட்டுப்பட்ட பின் நண்பர்களிடம் கூற என்ன நிறை இருக்க முடியும்.

இப்போது துரையை விட்டுவிடுங்கள். அவர் பிழைத்துப் போகட்டும்.

ஆனால் புலம்பெயர்ந்தோரின் சினிமா என்பது என்ன. கோடம்பாக்கத்திற்கு போட்டியா அல்லது அதற்கு மாற்றா?

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள்.

தமிழ்நாட்டிற்கும் - ஈழத்திற்கும் அப்படித்தானே உள்ளது.

தமிழ்நாட்டு இலக்கியம் - ஈழத்து இலக்கியம் வேறுபாடு இல்லையா?

அப்ப சினிமாவில் மட்டும் தமிழ்நாட்டை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்.

நாம் புதிதாக சிந்திக்க கூடாதா?

நிச்சயம் நமது சினிமா வேறாகத்தான் இருக்க முடியும்.

அது கி.செ.யின் மசாலாவாக இருக்க முடியாது.

அவரை ஒதுக்கி தள்ளுங்கள்.

அவர் கோடம்பாக்கத்துடன் மாரடிக்கட்டும்.

நாம் தமிழ் என்னும் பொதுப்பரப்பில்

ஏடுகளில் இருந்த இலக்கியத்தை அச்சுப்பதிப்பாக்கிய ஈழத்தரவரான சி.வை.தாமோதரம் பிள்ளளையை முன்னுதாரணமாக கொள்வோம்.

தமிழ்நாட் இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட ஈழத்திலக்கியத்தை நம்முன்ளோர் முன்வைத்தார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.

இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தலித்திலக்கியத்தின் முன்னோடியாக ஈழத்தின் சாதிய எதிர்ப்பு போராட்டமும், இலக்கியமும் 1965களியே எழுச்சி பெற்று விட்டதை மனதில் கொள்வோம்.

உலகத்திற்கே வழிகாட்டியான விடுதலைப்போராட்டம் ஈழத்திலேயே நடத்தப்படுகின்றது எனப் பெருமை கொள்வோம்.

சினிமா மட்டும் கோடம்பாக்கம் சாயலில் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

கருத்துக்களை எழுதுங்கள்.

விவாதங்களை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி சாந்தி.

துரையார் தன்ர கதையைச் சினிமாவோடு மட்டும் தொடர்புபடுத்தி வைத்துக்கொள்வதுதான் நல்லது. தேவையில்லாமல் ஈழப்போராட்டத்தை இழுத்துவிடுகிறார். காக்கா பிடிப்பதற்கு போராட்டம்தான் இவருக்குக் கிடைத்ததா?

தமிழகத் திரையுலகத்தின் பாதிப்பு ஈழப்போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தது என்பதைத்தான் அவர் சொல்ல வந்தாரென்றால், நறுக்குத் தெறித்தாற்போல் அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவரின் பேச்சு அப்படியில்லை.

அடுத்தது, நாங்கள் தமிழகத்திலிருந்துதான் ஈழத்துக்குப் போனோம் என்ற கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு புதுசா ஏதாவது ஒரு பட்டம் குடுங்கப்பா. (அதுக்காக சோழனுக்கும் குடுக்க வேணுமெண்டதில்லை ;-))

ஏற்கனவே 'இங்கிருந்து பிழைப்புத் தேடிப்போன உங்களுக்கு எதுக்குத் தனிநாடு?' எண்டு தமிழகத்தார் நையாண்டி பண்ணிக் கொண்டிருக்கிறாங்கள். அதுக்குள்ள இராஜஇராஜ சோழன் படையாட்கள்தான் வல்வெட்டித்துறையார் எண்டுறார். சோழன் படையாட்கள் வல்வெட்டித்துறைக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் வரலாற்றில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இலங்கையின் மத்தியில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். எதுக்கும் விவரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

நிற்க,

துரையாருக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த கருத்தை அவர் மேடையில சொல்லிறார்.

"நீங்களெல்லாம் தமிழகத்துக்கு வந்திடுங்கோ. எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம். ஈழத்தில சண்டை சச்சரவுகள் தேவையில்லை'. இதை எம்மேல் கொண்ட அன்புமிகுதியால் சொல்வதாக துரையர் சொல்கிறார். நானும் அப்படித்தான் நம்புகிறேன்.

ஆனால் இதைக் கேட்கும்போது,

"இலங்கையிலிருக்கும் ஏனையவர்கள் எல்லாம் பெளத்தராக மாறிவிடுவதே இனப்பிரச்சினைக்கு சுலபமான தீர்வு" என்று பிரபல பன்னாட்டு அறிவுசீவியொருத்தர் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தது ஞாபகம் வந்தது.

கடைசியாக காவடிக்கு...

நீர் உந்தத் தேவையில்லாத கதைகளை நிப்பாட்டும்.

தேசியத் தலைவரே பாரதிராசாவின்ர கையப்பிடிச்சு, 'அண்ணை எங்கட மக்களின்ர வாழ்க்கையை நீங்கள்தான் படமாக்க வேணும்' எண்டு கேட்டுக்கொண்ட பிறகு அதை நக்கலடிச்சு நீர் கதைக்கிறது சரியில்லை.

விட்டு விடும். (நல்லவன் எண்டு நான் பேர் வைச்சது கொஞ்சம் ஓவர்தான்).

போராட்டத்தையே அவங்களப் பாத்துத் தொடங்கீட்டமாம், எங்களுக்கான சினிமாவை அவங்களை மாதிரி எடுத்தா என்ன வந்தது?

இப்ப எங்கள் முன்னாலுள்ள நோக்கம், தமிழ்ச்சினிமாவைப் பார்த்தே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாறதுதான்.

என்னுடைய தெரிவு விஜயகாந்த் பாணி சண்டைகள்.

உங்கள் தெரிவென்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புபுலம் பெயர் திரைமுயற்சியில் கனடாவிலிருந்து "தமிழிச்சி" எனம் படம் பலருது கவனத்தைப் பெற்றிருந்தது.

குறும்படங்களில் பல கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக "பேரன் பேத்தி' (பிரான்சு).

புலம்பெயர்வாழழ்வு என்பது அனுபவப் பொக்கிசம். இலகுவில் கிடைக்க முடியாதது. இவை படைப்புகளால் உலகின் கவத்தைப்பெறும் என்பதில் அசைக்க முடியாத கருத்துடையவன் நான்.:icon_mrgreen:

தங்களது இக்கருத்தில் நானும் உடன்படுகிறேன் சுழியன்.

சிங்களத்திரைப்படங்கள் விருதுப்படங்களாக வெற்றி பெறும் தகைமை மிக்கனமாய் இருப்பதற்கு யதார்த்தம் சினிமா மொழியில் சொல்லப்படுவதால்தான். சிங்களப்படங்கள் தரத்தில் வேண்டாம் புலம்பெயர் வாழ்வில் பதியப்பட திரைக்கதைகள் நிறையவே உள்ளன. அவை பதிவு செய்யப்பட கி.செல்லத்துரை அவர்களிடம் உள்ள வளம் பயன்பட்டால் சிறந்த படைப்பை செய்ய முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

ஈழத்திலிருந்து வெளியான பல குறுப்படங்கள் சில நீளத்திரைக்காவியங்கள் என எம்மவர்களின் தயரிப்புக்கள் கோடம்பாக்கமே வியக்கம் அளவுக்கு குறைந்த வளங்களுடனும் நெருக்கடிக்குள்ளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆவணப்படத்துக்கும் திரைப்படத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நாங்கள் குறும்படங்களைப்பற்றிக் கதைக்கிறோம்)

இந்தத்திரைப்படங்கள் எல்லாம் கையைச்சுட்டுக் கொள்ளாமல் காலத்தை வென்ற படைப்புக்கள். ஆனால் இந்தப்படங்களை பார்க்கவோ ஆதரவு கொடுக்கவோ மாட்டாதவர்கள் மசாலாவே கையைச்சுட்டுக்கொள்ளாமல் காசை அள்ளித்தரும் என்று கதைவிடுகிறார்கள்.

புலத்தில் தயாரான "பேரன்பேர்த்தி , எதமட்டும் , மனுசி , மனமுள் , பிஞ்சுமனம் என பல குறும்படங்கள் வெளிவந்துள்ளன இவையெல்லாம் யாரின் கண்ணிலும் படவில்லைப்போலும். இந்தப்படங்களை எடுத்தவர்களிடம் போதிய பணவளம் இருப்பின் இவர்கள் உலகத்தரத்துக்கு நிகரான சினிமாக்களை தருவார்்கள். இதை உரியவர்கள் புரிந்த கொள்ள வேண்டும்.

என்ரை கவலையெல்லாம் இந்தத் தமிழ் சினிமாவைப் பார்த்து எங்கடை பிள்ளையள் போராட்டத்தை நடத்த இல்லை எண்டது தான். அப்படிச் செய்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைச்சிருக்கும்.

உந்த ரசினிகாந்தும் விசயகாந்தும் பிடிக்கிற சண்டையளைப் பாத்தியளே. அடக் கடவுளே என்ன மாதிரிப் பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கள்.

ஒரு படத்pலை நாலு பக்கமும் நிண்டு ஆக்கள் சுடுகினம். விசயகாந்த் தான் போட்டிருந்த சங்கிலியைக் கழட்டிப் பிடிக்கிறார். சன்னமெல்லாம் அந்தச் சங்கிலியிலை பட்டுத் தெறிக்குது. அங்கடை போராளிகளுக்கும் விசயகாந் மாதிரி ஒவ்வொரு சங்கிலி வாங்கிப் போட்டு விட்டால் இழப்பே இருக்காது.

இது மாதிரி எக்கச் சக்கமான விசயங்கள் தமிழ் சினிமாவுக்குள்ளை இருக்குது.

கி.செ.துரை மாதிரயான ஆக்கள் எல்லாத் தமிழ்ப் படத்தையும் இருந்து பாத்து உதுமாதிரியான விசயங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால் அல்லது 'எம்மவர் படைப்புகளிலை' படைச்சுக் காட்டினால் போராட்டத்துக்கு உதவியா இருக்கும். :icon_mrgreen::lol::lol:

-நிறை இருந்தால் நண்பர்களிட்் கூறுங்கள். குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள்- மிக நல்ல கூற்று.

நீங்கள் கி.செ.துரையின் முதல் படமான பூக்கள் பார்த்ததில்லையா?

இளம் புயல் அவரது இரண்டாவது படம் நீங்கள் அறிவீர்களா?

புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

பூக்கள் வந்தபோது குறைகளை அவர்களிடம் மட்டுமே பலரும் கூறினார்கள்.

ஆளனால் இளம் புயல் வந்து தமிழ்நாட்டவராலேயே குட்டுப்பட்ட பின் நண்பர்களிடம் கூற என்ன நிறை இருக்க முடியும்.

இப்போது துரையை விட்டுவிடுங்கள். அவர் பிழைத்துப் போகட்டும்.

ஆனால் புலம்பெயர்ந்தோரின் சினிமா என்பது என்ன. கோடம்பாக்கத்திற்கு போட்டியா அல்லது அதற்கு மாற்றா?

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள்.

தமிழ்நாட்டிற்கும் - ஈழத்திற்கும் அப்படித்தானே உள்ளது.

தமிழ்நாட்டு இலக்கியம் - ஈழத்து இலக்கியம் வேறுபாடு இல்லையா?

அப்ப சினிமாவில் மட்டும் தமிழ்நாட்டை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்.

நாம் புதிதாக சிந்திக்க கூடாதா?

நிச்சயம் நமது சினிமா வேறாகத்தான் இருக்க முடியும்.

அது கி.செ.யின் மசாலாவாக இருக்க முடியாது.

அவரை ஒதுக்கி தள்ளுங்கள்.

அவர் கோடம்பாக்கத்துடன் மாரடிக்கட்டும்.

நாம் தமிழ் என்னும் பொதுப்பரப்பில்

ஏடுகளில் இருந்த இலக்கியத்தை அச்சுப்பதிப்பாக்கிய ஈழத்தரவரான சி.வை.தாமோதரம் பிள்ளளையை முன்னுதாரணமாக கொள்வோம்.

தமிழ்நாட் இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட ஈழத்திலக்கியத்தை நம்முன்ளோர் முன்வைத்தார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.

இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தலித்திலக்கியத்தின் முன்னோடியாக ஈழத்தின் சாதிய எதிர்ப்பு போராட்டமும், இலக்கியமும் 1965களியே எழுச்சி பெற்று விட்டதை மனதில் கொள்வோம்.

உலகத்திற்கே வழிகாட்டியான விடுதலைப்போராட்டம் ஈழத்திலேயே நடத்தப்படுகின்றது எனப் பெருமை கொள்வோம்.

சினிமா மட்டும் கோடம்பாக்கம் சாயலில் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

கருத்துக்களை எழுதுங்கள்.

விவாதங்களை தொடருங்கள்.

உண்மையான விமர்சனங்களையும், விவாதங்களையும் நான் ஒருபோதும் புறந்தள்ளியது கிடையாது. அது போல் தங்கள் தனிப்பட்ட சுய விளம்பரங்களுக்காக தனிநபர்களைத் தாக்கிக் கருத்து வைப்பவர்களுக்கு நான் ஜால்ரா அடித்ததும் கிடையாது. ஏற்கனவே நான் துரை அவர்களின் "பூக்கள்" படத்தை பார்க்கவில்லை என்பதை பதிவு செய்துள்ளேன். அதை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்.. அதுபோல் "இளம்புயல்" அவரது இரண்டாவது படமென்பதையும், ஏன் அவரையுமே இப்பதிவின் மூலம் தான் அறிந்து கொண்டேன். அதுபோல் "இளம்புயல்" ஒலித்தட்டு வெளியீட்டு விழா தான் தமிழகத்தில் நடந்தது. திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. வெளிவராத படத்தை எப்படி விமர்சிக்க முடியும்?? .படத்தின் கதைப் போக்கை கேள்விப்பட்டு அது பற்றி இயக்குனர் அமீர் சொன்னதைத் தான் நீங்கள் ஏதோ பெரிய விமர்சனம் என்று கருதுகின்றீர்கள். அமீர் பருத்தி வீரன் திரைப்படத்தின் இயக்குனரே தவிர தயாரிப்பாளரல்ல. அதுபோல் அமீருக்கு பருத்திவீரன் 2வதோ 3வதோ படமுமல்ல. அவர் பாலசந்தரிடம் பல வருடங்கள் பயிற்சி பெற்று வெளிவந்து, பலவருடங்களாக திரைப்படங்களை இயக்குகின்றார்.

ஒருவரின் திரைப்படமோ அல்லது அவர் நடாத்திய ஒரு நிகழ்ச்சி பற்றியோ விமர்சனம் செய்ய விரும்பினால் அவ்விடயத்தைப் பற்றி விமர்சிப்பது நாகரீகம். அதைவிடுத்து அவர் யாருக்கு படிப்பிச்சவர், அவரது பின்புலம் என்ன?? முன்புலமென்ன?? என்று தேவையில்லாமல் ஒருவர் மீது கரி பூச விளைவதை எவரும் விமர்சனம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்தது ஆறுமுகநாவலரிலிருந்து பல எம் மண்ணைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் தான் படித்துப் பட்டம் பெற்றார்கள். இதை நீங்கள் மறந்து விட்டீர்களோ?? இன்று நாம் பாடும் தேவாரம், திருவாசகமெல்லாம் இந்தியாவில் படைக்கப் பட்டவை தான். அப்ப நாங்கள் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு எமக்காக புதிதாக வேறு படைப்போமா?? முன்பு இலங்கை வானொலியில் ஈழத்துப் பாடல்கள் என்று ஒரு நிகழச்சியே போனது. எத்தனை அருமையான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ஆனால் நாங்கள் மேடயைமைத்து அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினோமா?? அல்லது இந்தியப் பாடகர்களை இலங்கைக்கு அழைத்து அவர்கள் பாட வாய் பிளந்து பார்த்து நின்றோமா??

வன்னிக்குக் கூட இயக்குனர் மகேந்திரனையும், இயக்குனர் பாரதிராசாவையும் அழைத்து அவர்கள் மூலம் தான் திரைப்படம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகள் நடந்தது. ஏன் "ஆணிவேர்" திரைப்படத்தை இயக்கிய ஜான் கூட இயக்குனர் மகேந்திரனின் மகனே. நிலைமைகள் இப்படியிருக்க தற்போதய நிலையில் எங்களால் இலங்கைத் தமிழ்ப்படத்துறையில் தனித்து நின்று சாதிக்க முடியுமென்று சவால் விட முடியுமா?? எப்போது முடியும்? நாமும் முறையாக பயிற்சி பெற்று திறைமைகளை வளர்த்து விட்டால், நாமும் பின் சாதிக்கலாம். ஆனால் இலகுவாகவும் இயல்பாகவும் பயிற்சி பெறுவதென்றால் தமிழ்நாட்டுச் சினிமாவில் தான் பயிற்சிகளைப் பெற முடியும். சிறிது காலம் அவர்கள் பாணியிலேயே படங்களை வழங்கிவிட்டு, பின் நமக்காக இன்னொரு பாணியை அமைத்துக் கொள்ளலாம்.

எமக்கான முறை வேறு என்பவர்கள் சினிமாவில் அல்ல, தொலைக்காட்சியில் என்ன சாதித்தீர்கள்?? இன்றும் இந்தியத் தொலைக்காட்சிகளை நம்பித் தானே எமது தொலைக் காட்சிகளை நடாத்துகின்றோம்.

நீங்கள் தமிழ்நாட்டுச் சினமாவைப் பற்றி படித்தீர்களோ தெரியாது ஆனால் நான் நிறையவே படித்துள்ளேன். ஆரம்ப காலங்கில் தமிழ்நாட்டுச் சினிமாவை இயக்கியவர்கள் பலர் வட இந்தியாவையும் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமே பல திரைப்படங்கள் வெளிவந்தன. பல வருடங்களாக அவர்களிடம் பயிற்சி பெற்ற பின்னரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சாதிக்கத் தொடங்கி இன்று இந்தியாவில் அதிக படங்கள் தயாரிக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. அதுபோல் இன்று இந்தியத் திரைப்படங்களின் பல துறைகளிலும் தமிழ் நாட்டவரே பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் இன்றும் குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக் கொண்டு, ஏதோ சந்திரனுக்கு ராக்கட் விட்டவன் போல பீலா விட்டே பழகிவிட்டோம். அதனால் அடுத்தவன் எவனாவது எதையாவது செய்ய வெளிக்கிட்டால் விடுவோமா என்ன ??

அடுத்தவர் செய்வதை தவறென்று விமர்சிக்க வருபவர்கள் சரியான வழியையும் செய்து காட்டினால், அதை வரவேற்கலாம். அதை விட்டுவிட்டு சும்மா வாய்ச்சவடாலேயே பிலிம் காட்டலாமென்றால், அதுதான் நமக்குரிய சினிமாவோ??? :icon_mrgreen::lol:

Edited by Vasampu

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெனிஸ் பாடலை பிரதியெடுத்து கே சி... துரை தனது மகனின் கண்டுபிடிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளவதால் விரைவில் சட்டசிக்கலுக்கு உட்ப்படுத்தப்படபோறார்.

டெனிஸ் பாடல் : http://www.youtube.com/watch?v=CbfGg9o9J9w

சி.. துரையின் படத்தில் உள்ள பாடல்.:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.