Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளைமோர் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற ஆழ ஊடுவும் அணியினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி

Featured Replies

கிளைமோர் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற ஆழ ஊடுவும் அணியினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி

[செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 07:38 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்ட அரச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரை மக்கள் படையினர் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், ஆழ ஊடுருவும் அணியைச்சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, மாங்குளத்துக்கும் இளவன்குளத்துக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த அரச செயலக உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

தப்பிச் செல்ல முயற்சித்த ஆழ ஊடுருவும் அணியினர் மீது கடந்த வெள்ளிக்கிழமை மாலை மக்கள் படையினர் வழிமறித்து தாக்குதல நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில், ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம ஊடுருவும் படையை விட்டு வைப்பது ஆபத்தானது. அவர்கள் வெறுமனே தாக்குதல் நடத்த மட்டுமல்லாமல், உளவுத்தகவல் பெறவும் வரக்கூடும். ஆனால் 57ம் படையணி என்ற சிங்களத்தின் கொம்பை வன்னிக்குள் தனித்து உள்நுழையத் தலைவர் அனுமதித்ததின் பலனை விரைவில் சிங்களம் உணரக்கூடும். உணரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல்: சடலம் ஒன்று மக்கள் படையினால் மீட்பு

செவ்வாய், 29 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்]

சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரை கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் படையினர் வழிமறித்து தாக்கியதில் ஆழ ஊடுருவும் அணியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் கொல்லப்பட்ட படைச்சிப்பாயின் சடலமும் மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

sla_lrrp_dpu_trooper.jpg

கிளிநொச்சி மாவட்ட அரச செயல உத்தியோகத்தரான சாந்தலிங்கம் விமலகுமார் மீது கிளைமோர்த் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற ஆழ ஊடுருவும் அணியினர் மீதே மக்கள் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படம்: தமிழ்நெட்

மூலம்: பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் உடையில் சென்று தங்களின் சதித்திட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். புலிகள் என்று நினைத்து மக்களும் பெரிதாக அலட்டாமல் இருந்திருப்பார்கள்.

எனிவரும் காலங்களில் புலி உடையுடன் திரிந்தாலும் சந்தேகப்படும்படி நடமாடித் திரிந்தால் புலிகளுக்கு அறிவிக்க வேண்டியது கடமையாகும்.

கருணா துரோகக்கும்பல்களை இதற்கு பயன்படுத்துகின்றனரா ,மகிந்த கூட்டம், அவர்கள் தமிழில் பேசிக்கொண்டு புலிகளின் உடையுடன் திரிந்தால் சாதாரண மக்கள் அடையாளம் காண்பது கடினம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

வேலவன்,

இப்போது சிங்கள அரசுடன் பல தமிழ் ஒட்டுக்குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் கருணா குழு, பிள்ளையான் குழு, டக்கிளஸ் ஆயுததாரிக் குழு, வரதர் துணைக்குழு, புளொட் துணை ராணுவக்குழு என்று பல குழுக்கள். இதில் ஒன்றைச் சேர்ந்த கூலிப்படைத் துரோகியே கொல்லப்பட்டிருக்கலாம். சிங்களவரை விட தமிழ் ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்துவதன் நோக்கம், தமிழர்களுக்கு சந்தேகம் வராது தடுக்கவே. ஆனாலும் அவரின் நடத்தைகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும்.

மக்கள் எழுச்சி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.