Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் எங்கே போனது?

Featured Replies

காதல் எங்கே போனது?

88160692wr1.png

தீஷ் - ரேகா இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குடும்ப நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தை இப்போது ரேகாவிடம் வளர்கிறது. இருவரும் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள்.

''என் தலையெழுத்துடி, உன்னைப் போய் கல்யாணம் செய்துகொண்டேன் பார்'' - இப்படி ஆரம்பித்தது ஆரம்பக் கசப்பு. ''ஓடி ஓடி வந்து காதலிச்சுட்டு, இப்படிப் பேசுறீங்களே!'' - ரேகாவுக்கு அதிர்ச்சி!

காதல் எங்கே போனது? ஆசை ஆசையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரிவது எதனால்?

லியோ புஸ்காக்லியா (Leo puscaglia) என்கிற மனநல மருத்துவர், காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 'காதல் என்பது-நம்பிக்கை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், அக்கறையும் பகிர்வும்கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. காதல்-சந்தோஷம், மனஅழகு, உண்மை, கண்ணீர் போன்ற உணர்வுகளாக வெளிப்படும்' என்றார்.

ஒவ்வொரு கணமும் அந்த உணர்வு தொடர வேண்டும். உளப்பூர்வமான திருப்தி (gratifying) ஏற்படுவதனால்தான் காதலை, காதலர்கள் விரும்பி ஏற்கிறார்கள். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்னைகள் தோன்றும். இன்றைய அவசர உலகில் பலவற்றைக் கடந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் மீறி காதல் வேண்டும்.

காதலர்களாக இருக்கிற பலர்-கல்யாணத்துக்குப் பிறகு தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர். வாழ்வின் எல்லாத் துளியிலும் இருக்க வேண்டிய உணர்வு, ஏனோ பின்னுக்குத் தள்ளப்படுவதுதான் பிரச்னை.

கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

காதலும் பிசினஸ்தான். எமோஷனல் பிசினஸ். தொடர்ந்து ஒழுங்காக, முறையாகத் தொடர வேண்டும். அப்போதுதான் லாபம் பார்க்க முடியும்.

காதலர்கள்-தங்களுக்குள் பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக் கூடாது. குறை-நிறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கறார் பேர்வழிகள் காதலிக்கவே கூடாது. காதலன் உயர் அதிகாரியும் அல்ல; காதலி அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவளும் அல்ல.

தான் ஒரு காதலன் என்கிற நினைப்பு மாறி, தான் ஓர் ஆண் என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் சிக்கல் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.

காதலுக்கு ஒவ்வொரு நிமிஷமும் போஷாக்கு தேவை. இல்லையெனில் காதலர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்... காதல் சவலைப் பிள்ளையாகிவிடும்

நன்றி ஆனந்தவிகடன்

ஓ..அப்படியோ வசபண்ணா..ணா..இணைப்புக்கு நன்றி..றி.. :( இப்ப பாருங்கோ புதுசா பார்க்காக என்னத்த பார்த்தாலும் ஆசை வருமென்ன..கொஞ்ச நாள் போக இன்னொன்டை பார்கையில அது நன்னா இருக்கும்..ம்..என்ன நான் சொல்லுறது சரியோ..?? :D

அப்படி தான் காதலும் இப்ப...(பிறகு என்ன தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்)...இப்படியான காதல் எல்லாம்..ம் கல்யாணம் ஆகினா..அம்முட்டு தான்...பாருங்கோ..!! :(

இப்ப நான் என்ன சொல்ல வாறன் எண்டா..டா..

இப்பத்தையான் காதல் எல்லாம் தொப்பி வியாபாரியும் கொரங்கும்..ம் போல தான் கொஞ்சம் அசந்து தூங்கினா இன்னொரு..கொரங்கு தொப்பியை போட்டு கொள்ளும்..பிறகு எங்களுக்கு..அதை வெற நான் சொல்லனுமா என்ன உங்களுக்கே விளங்கும் தானே..னே.. :o

அதுக்காக..க காதலிக்க வேண்டாம் எண்டும் சொல்லல்ல...காதலியுங்கோ ஆனா அது தான் வாழ்க்கை எண்டு நினைத்திடாதையுங்கோ என்ன..ன..ஏன் சொல்லுறன் எண்டா வானத்தில முகில்கள் நிலையா தங்கிறதில்ல பாருங்கோ அதை மாதிரி..தான்..ன்..

இப்ப காதலும்..கத்தரிக்காயும்,கத்த

  • கருத்துக்கள உறவுகள்

அட...அட...அட! இவர்கள் உன்னதமான காதலர்கள். காதலை மட்டும் காதலிக்கத் தெரிந்தவர்கள். அதனால்தான் கல்யாணம் இவர்கள் வாழ்வில் தடையாக வந்தபோது அந்தக் கல்யாணத்தையே உதறிவிட்டு மீண்டும் காதலிக்கச் சென்றுவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ காதலிப்பது எதற்காக? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காதலும்..காதலும்..

heart-large.jpg

'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை. அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்துணை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.

உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட. நீ அன்பு காட்டாவிட்டால் என்ன? நான் அன்பு காட்டுகிறேன், அக்கறை காட்டுகிறேன், காதலிக்கிறேன் இப்படித்தான் சொல்லும் அந்த பிரதிபலன் பார்க்காத காதல் உள்ளம். என் கண்ணின் இமைகளில் வைத்துத் தாங்கிக் கொள்வேனடி(டா) இவ்வாறாக உருக வைக்கும் காதல்.

ஆனால், தற்போதைய காதல்'கள்' (ஒரு சில காதல் தவிர்த்து) இப்படித்தான் உள்ளனவா? காதல் மாதம், மயிலிறகு மாதம் எல்லாம் சரிதான். காதல் காதலாக இருக்கிறதா இப்போது??

காதலின் அடிப்படையே பிறழ்ந்து போயிருக்கும் இக்காலத்தில் எங்கு போய்காதலைத் தேடுவது? கடற்கரையிலா? இல்லை பூங்காக்களிலா? அங்கெல்லாம் போனால் காதல் கிடைக்காது. கண்றாவிதான் கிடைக்கும். போதாக்குறைக்கு இந்த மீடியாக்கள் வேறு. உங்க காதலன்/காதலிக்கு என்ன பரிசு தரப்போறீங்கன்னு 'கொஞ்சும் தமிழ்'ல தொ(ல்)லைபேசுவாங்க. அப்புறம் இந்தக் கலர் உடைஅணியுங்க, இப்படி பேசுங்க உங்க 'அவங்க' கிட்டன்னு இலவசமா அறிவுரை வேறகிடைக்கும்.

அணியும் உடைகளின் நிறத்தில் தானா காதல் வாழ்கிறது. அப்படி என்றால், அதேகலரில் வருஷம் பூராவும் போட்டுட்டு இருக்கலாமே. ஏதோ அந்த ஒருநாள் மட்டும்தான் காதலை தூக்கி நிறுத்தப் போவதாகப் பேசிக்கொள்வார்கள் எல்லாரும். 'எங்கு காணினும் காதலடா' என்று கையில் ஒரு ரோஜாப்பூவை தூக்கிக் கொண்டு (அது ஏங்க ரோஜா? ஏன் வேற பூ கொடுத்தா ஒத்துக்க மாட்டாங்களா) தனக்கான ஜோடியைத் தேடிக் கிளம்பிடுவார்கள் பையன்களும் பொண்ணுங்களும். கேட்டால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தத்தான் இப்படி என்பார்கள். அந்த அன்பை ஒவ்வொரு நிமிஷமும் வெளிப்படுத்தணும். அதுக்குன்னு ஒரு தனிநாள் தேவை இல்லையே. அந்தநாளில் காதல்ங்கற பேர்ல செய்யும் அட்டகாசங்கள் இருக்கிறதே அப்பப்பா! தாங்காது.

பார்ப்பவர்களிடம், பேசுபவர்களிடம் எல்லாம் காதல் வராது. அது யாராவது ஒருத்தர் மேல வரும். அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. அந்த அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்.

இந்த நிமிஷம் கோபப்பட்டு அடுத்த நிமிடம் மெழுகாய் உருகிக் கரைவது தான்காதல். காத‌ல‌ர்க‌ள் சேர்ந்திருந்தாலும் ச‌ரி, பிரிந்தாலும் ச‌ரி.உண்மைக்காத‌ல் என்றும் உயிர்ப்புட‌ன் இருக்கும். காத‌லும் தாய்மையும்ஒன்றுதான். அடித்தாலும் அணைத்துக் கொள்ளும்.

காத‌ல‌ர்தின‌ம் என்று அந்த‌ ஒரு நாளில் ம‌ட்டும் காத‌லுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ராம‌ல், வாழும் ஒவ்வொரு நொடியும் காத‌லை உயிர்ப்பிக்க‌லாமே.

- சகாரா.

http://saharathendral-kathaigal.blogspot.c...og-post_14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.