Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி சிறிலங்கா இராணுவத்தின் கனவு

Featured Replies

'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர் எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் இந்நம்பிக்கையானது அவரின் தனிப்பட்ட மதிப்பீடாகவோ அன்றி ஊகமாகவோ கொள்வதற்கில்லை. சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் மதிப்பீடும் அது என்றே கொள்ளமுடியும். அண்மையில் இதனைச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அண்மையில் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் 'விடுதலைப் புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைப் பதுங்கு குழிகளிலேயே கொண்டாடுவர்" என்றார். இதற்கு அவர் தெரிவித்துள்ள காரணமானது வன்னியில் புலிகளுக்கென பிரதேசம் எதுவும் அப்பொழுது, இருக்கப்போவதில்லை என்பதாகும்.

சிறிலங்காப் படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வரும் இக்கருத்துக்கள் - சிறிலங்காவில் பெரும்பான்மையோர் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டதாகவும் மாற்றம் கண்டுள்ளது. அதாவது, சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சியை விரைவில் கைப்பற்றிவிடும் என்ற உணர்வை ஏற்படுத்துமளவிற்குச் சென்றுள்ளது.

இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். ஒருபுறத்தில் சிறிலங்கா இராணுவம் வடக்கில் மேற்கு கரையோரமாக வெள்ளாங்குளத்திற்கு வடக்காகவும் உட்புறமாக மல்லாவியின் தெற்கு வரையிலும் முன்னேறியிருப்பது காரணமாகியிருக்கலாம்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வலிந்து தாக்குதல்கள் மேற்கொள்ளாததோடு-படிப்படியாகப் பின்வாங்கிச் சென்றமையும், மற்றொரு காரணமாக இருக்கலாம்.

அதாவது, புலிகள் வலிந்து தாக்குதல்களைச் செய்யும் பலத்தை இழந்துவிட்டதாக இராணுவத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் மீதான நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

இத்தகையதொரு நிலையில் நான்கு மாதத்திற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற பிரச்சாரம் நம்பப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் ஏற்றதொன்றாக மாறியிருப்பதென்பது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் முன்னேறி வரும் சிங்கள இராணுவம் அகலக்கால் பதிக்கும் ஒவ்வொரு அங்குல நிலமும் மீட்கப்பட வேண்டியது என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. புலிகளின் பின்வாங்கல் தந்திரோபாயத்தின் அர்த்தத்தை தமிழ் மக்களும் சிங்கள வல்வழைப்பு இராணுவமும் சிறிலங்கா அரசும் கண்டுணரும் நாட்கள் வெகு தொலைவிலில்லை. அத்துமீறி வந்த சிங்கள இராணுவத்தினரில் பலர் உயிருடன் திரும்புவது என்பதும் இனி இங்கு கேள்விக்கிடமே. எஞ்சியோரை வெளியேற்றுவதென்பது சில மட்டுப்படுத்தப்பட்ட மரண அடித் தாக்குதல்கள் மூலம் தமிழீழத்தின் கட்டுமானத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் செய்யப்படலாம். இது ஒருவகையில் உடலைக் காயப்படுத்தாமல் உயிர்நாடியில் அடித்துக் கொல்வது போன்றது.

இங்கு நாம் நீண்ட நாட்களுக்கு பொறுத்திருக்கமுடியாத ஒருவிடயம் என்னவெனில் இராணுவத்தால் வல்வழைப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்ந்த எமது உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் சீர்குலைவுகளும் வாழ்வாதாரக் குறைபாடுகளுமே. இம்மக்களை இந்நிலையிலிருந்து கூடிய விரைவில் மீட்டெடுப்பதும் அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் மீண்டும் குடியேற்றுவதற்கு ஆவன செய்வதும் அனைத்து தமிழ் மக்களதும் இன்றைய தலையாய கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் கனவு கனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. புலிகளின் உளவு படை காலம் இது. திட்டங்கள் தீட்டும் காலம் இது. மெல்லென பாயும் தண்ணி கல்லையும் உருகி பாயும். புலிகள் இராணுவ ரீதியாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவார்கள். இது புலிகளின் 30 வருட வரலாறு சொல்கின்றது. அரசின் தற்போதைய தமிழர் நிலப்பறிப்புகள் என்றும் நிரந்தரமானவை அல்ல. அரசின் புதுமையான ஆயுதங்கள் நிச்சயமாக புலிகள் வசமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அனேக சிங்கள படைகளின் புதைகுழி வன்னி மண். வீரம் செறிந்த மண்.

இராணுவத்தின் இதுவரை கால வெற்றிகளும் கேலிக்குள்ளாகும் நிலை வரும்.

மகிந்தவின்ர பட்டாளங்களக்க விரைவில் பாடை கட்ட வேண்டிப்வரப் பொகுது .

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கிளிநொச்சியையோ அல்லது முல்லைத்தீவையோ ராணுவம் கைப்பற்றுவதென்றால் புலிகள் எங்கே போவார்கள்? இது நடக்கக் கூடிய காரியமில்லை.கிளிநொச்சியிலும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.