Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழனியில் பட்டாசைக் கடித்த மாடு படுகாயம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழனி: பழனியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் வாயில் சிக்கிய வெடி வெடித்ததில் மாட்டின் வாய் கிழிந்து படுகாயம் அடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவர் வையாபுரி குளத்தில் தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். குளத்துக்கு அருகில் இவரது மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர வெடிசத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து மாட்டின் அலறல் சத்தமும் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் மாடு இருந்து திசை நோக்கி ஓடினார். அப்போது மாட்டின் வாய்பகுதி கிழிந்து ரத்தம் சொட்டியது. மாடு வலியால் துடிதுடித்து. மாட்டின் தாடைப்பகுதி மற்றும் நாக்கு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து மாட்டை மருத்துவமனைக்கு பழனியப்பன் கொண்டு சென்றார்.

குண்டு வெடித்துவிட்டதாக பழனி முழுவதும் தகவல் பரவியது. இதனால் வெடிகுண்டு பீதி பரவியது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு வெடித்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு அல்லது வெங்காய வெடி மாட்டின் வாயில் சிக்கி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

நல்ல காலம் , பழனியில் புலிகளுக்காக குண்டு கடத்தியவர் ( மாடு) கைது எண்டு கியூ பிரிவு பொலிஸ் அறிக்கை விடல

  • கருத்துக்கள உறவுகள்

கியூ பிரிவு இன்னும் புலிகள் வந்த தடயங்களை தேடுகின்றனவாம். :lol::unsure:

இந்த மாட்டிற்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவதிற்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவிக்கும் வேளையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்களையும் உடனடியாக கண்டு பிடித்து அறிக்கையை விரைந்து சமர்பிக்கும் படி பொலிசாரிடம் கேட்டு கொள்கிறேன்.. :D

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..!! :rolleyes:

பின்ன..மாடு எண்டா சும்மா..வா..வா...மனிசனை விட மாடு எவ்வளவோ மேல்..உம்பா..உம்பா...இந்த தகவலை விரைந்து யாழ்களத்திற்கு வழங்கிய தமிழ்சிறி அண்ணாவை..வை பாராட்ட தமிழில் வார்த்தைக்கள் முட்டுது..உம்பா..உம்பா இப்போதைக்கு இது காணும்... :o

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா மாடு கத்தினா பார்க்க பல பேர் மனிசன் கத்தினா.." :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா மாடு கத்தினா பார்க்க பல பேர் மனிசன் கத்தினா.."

அப்ப நான் வரட்டா!!

மிகச்சரி ஈழத்தமிழர்கள் எத்தனையோ பேர் கொல்லப்பட்டுகொண்டிருக்கிறா

வெடி வெடிக்க நெருப்பு வேண்டுமே ? உந்த மாட்டுக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருக்குமோ ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தற் போது கிடத்த தகவலின் படி

பொய் பிரிவு [கியு] போலிஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர் :D

இதுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லையென்றும் அறிவித்துள்ளனர் :o

இதனால் இந்த விசயத்தை டெல்லிக்கு தெரிய படுத்த தேவையில்லை எனவும் அறிவித்துள்ளனர் :rolleyes:

முதல்வர் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வாய் கிளிந்த மாட்டுக்கு தெரிவித்துள்ளார் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.