Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள்

வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள்

இந்தியா ஈழத்தமிழர்களின் குரல் வளையை நசிக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க எம் போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் என்றும் பின் நிற்கத் தவறுவதில்லை.

நாளைய தமிழ் நாட்டுத் தமிழர்கள் தனி நாடு கேட்கக் கூடாது என்பதற்காக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடியோடு நசுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு. தமிழ் நாட்டில் (இந்தியாவில்) தமிழன் இல்லாது இருந்தால் ஈழத்தமிழர்க்கு இன்றைய அவலம் இந்தியாவால் திணிக்கப்பட்டிருக்காது.

எமது அடிமைத்தனத்தை உறுதிப்படுத்த நித்தமும் சாகின்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியத் தமிழர்கள் ஆறுதலாக இல்லாவிட்டாலும் இடைஞ்சலாவது கொடுக்காமலிருக்கலாம். தம் இனத்தையே அழிக்கும் வார்த்தைகளையாவது கூறாதிருக்கலாம்.

எமக்குக் கிடைக்காத நல்வாழ்வு ஏன் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும்?

எமக்கு இல்லாத தைரியம் ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

எமக்கு இல்லாத சுயஉரிமை ஏன் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும்?

ஆரியத்துவம் நிறைந்த வட இந்தியரிடம் நாம் நேரடியாகவும் மறைமுகவாகவும் அடிமைப்பட்டு வாழ்வது போல ஏன் ஈழத்தமிழர்களால் அடிமையாக வாழ முடியாது?

எமக்கு இல்லாத தன்மானம் ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

எம்மவர் பலரிடம் இல்லாத தமிழ்ப்பற்று ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

எம்மவர் பலர் தமிழை விட வடமொழிக்கே அதிகம் காவடி பிடிப்பது போல ஏன் ஈழத்தமிழர்களால் காவடி பிடிக்க முடியாது?

எமக்கு இல்லாத சுயமரியாதை ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

எமக்கு இல்லாத சுதந்திரத் தனிநாடு ஏன் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும்?

எமக்கு இல்லாத வீரம் ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

எமக்கு இல்லாத செயல்வீரம் ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்?

ஏன் இன்னமும் ஈழத் தமிழர்கள் எம் போல வார்த்தைகளால் மாத்திரம் வீரதாபங்கள் பேசாமல் செயலுக்கே அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றனர்?

ஈழத்தமிழர்கள் தன் உறவுகளின் இழப்புக்களையெல்லாம் தன்னிழப்பாக நினைக்கின்ற இளகிய மனம் அவர்களுக்கு எவ்வாறு வந்தது? எம்மவர்களின் கல்மனம் ஏன் ஈழத்தமிழர்களிடம் இல்லாமல் போனது?

ஈழத் தமிழர்களே உங்களை அழித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு தம்மால் இயன்ற ஆதரவு வழங்க இங்கே பல இந்தியத் தமிழர்கள் துடியாய் துடிக்கிறார்கள். எமக்கு இல்லாத சுயஉரிமையும் சுயமரியாதையும் உங்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வயிற்றெரிச்சல் அவர்களை உங்களுக்கேதிராக எதுவும் செய்ய வைக்கும். எமக்கு இல்லாத தன்மானம் ஏன் ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவர்கள் தங்களை வார்த்தைகளால் துன்புறுத்தி இன்புற தயங்க மாட்டார்கள்.

ஈழத்தில் இறுதியாக ஒரு தன்மானத் தமிழன் எஞ்சினாலும் சுய உரிமைக்கான போர் ஓயப்போவது இல்லை என்ற உண்மை இங்கே ஒரு சிலருக்குத் தான் தெரியும். எதிர் காலத்தில் நாங்கள் மேலும் வடஇந்திய மேலாதிக்கத்தில் அவமரியாதைகளைச் சந்தித்தாலும் நீங்களாவது தப்பிப்பிழைத்து சுயஉரிமையுடனும் சுயமரியாதையுடனும் வாழுங்கள்.

நன்றி: உணர்வுகள்

  • கருத்துக்கள உறவுகள்

:D இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒன்றெதான் பதில்!

ஏனென்றால் நாங்கள் ஈழத் தமிழர்கள். பிரபாகரன் என்ற ஒப்பற்ற தமிழனால் வழிநடத்தப்படும் தமிழர்கள் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒன்றெதான் பதில்!

ஏனென்றால் நாங்கள் ஈழத் தமிழர்கள். பிரபாகரன் என்ற ஒப்பற்ற தமிழனால் வழிநடத்தப்படும் தமிழர்கள் !

எங்கடா கன காலமாய் காணோமே என்று பார்த்தேன். வந்தோனையே ஆரம்பிச்சாச்சு இந்திய தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் சிண்டு முடியிற வேலையை.நுணாவிலான் நான் உம்மை சொல்லவில்லை.

பொதுவாகவே நான் உணர்ந்து கொண்டது ஒன்றுதான். தமிழ்நாட்டுத் தமிழர் என்றும் இந்தியர்களாகவே கருதப்படுவது கிடையாது. இந்தியர்கள் என சில தமிழர்கள் தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்கின்றார்களே தவிர ஏனைய இந்திய மாநிலத்தவர் தமிழ்நாட்டுத் தமிழரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இது தமிழ்நாட்டுத் தமிழரும் புரிந்து கொண்ட விடயமே.

  • கருத்துக்கள உறவுகள்

<_< மி-தமிழன்,

தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். கனகாலமாய் என்னைக் காணவில்லையா? நல்லது, களத்துக்கு வந்தால் என்னை காணலாம்.மற்றும்படி உம்மை வந்து சந்திக்கும் அளவிற்கு நீர் ஒன்றும் பெரிய ஆளில்லை !

அதெப்படி?, நுணாவிலான் இணைத்த ஆக்கத்தில இருக்கிறது சரி, நான் எழுதினது பிழையா? உம்முடைய தனிப்பட்ட கோப தாபங்களைக் கொண்டுவந்து களத்தில குப்பை கொட்ட வேண்டாம். இந்தக் கெட்டித்தனத்தில" நுணாவிலான் நான் உங்களைச் சொல்லவில்லை" எண்டு வழியல் வேற !!!!!!!!!!!!!

ஓம், நாந்தான் இந்தியத் தமிழனுக்கும், ஈழத் தமிழனுக்கும் சிண்டு முடியிறன், நீர் வந்து அவிழும் !!!!!!!!!

தனிப்பட்ட தாக்குதல் எனக்கும் நடத்தத் தெரியும். பிறகு அவ்வளவு நல்லா இருக்காது.

உம்முடைய சேட்டைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்.அதுதான் உமக்கும் நல்லது, எனக்கும் நல்லது. என்னைத் தெரியாமலேயே என்னுடன் இவ்வளவு கோபமாயிருக்கிறீர்? தெரிந்தால் வெட்டி விழுத்துவீர் போலத்தான் கிடக்கு !!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் குயில்-தமிழகம்

நூணவிலான் அவர்களின் கருத்துக்கு நன்றி!

அவர் சொன்னது 100 சதம் சரி!

தமிழினம் என்பதும் தமிழர் என்பதும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

தூய தமிழில் யாரோடு பேசினாலும் உடனே அவர்கள் கேட்கும் கேள்வி விடுதலைப்புலிகளின் வீரம் பற்றி கேட்பதாகவே இருக்கிறது.

நான் இருநாட்களுக்கு முன்பு ஒரு துணிக்கடைக்கு சென்றபோது, அங்கே இருந்த ஊழியர் (தமிழர்) இந்தியாவின் மட்டைப்பந்தாட்ட வெற்றி பேசிக்கொண்டு என்னிடம் அது தொடர்பில் மகிழ்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.

நான் அவரிடம், மிகுந்த கோபத்துடன் 2-இலட்சம் தமிழர்கள் சொந்த நாட்டில் அகதியாய் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, ஒண்ட குடிசையின்றி காட்டில் மழை காலத்தில் குழந்தைகளோடு அலைந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் மட்டைப்பந்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியன் என்ற பெயரில் நம் தமிழனை எவ்வளவு முட்டாள் ஆக்கி இருக்கிறான் என்பதற்கு இதுதான் சரியான எடுத்துக்காட்டு என்று கோபத்தோடு கூறினேன்.

இதை நூணவிலான் கேள்விகளாக கேட்டுள்ளார். ஒன்று நிச்சயம்

"தமிழீழம் பிறக்கும் நாளில், தமிழகத்தமிழர்கள் தங்களை தமிழர்களாக கருதுவார்கள்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவிலன் பதிவில் குறிப்பிட்டுள்ள பல கேள்விகளில் தமிழர்களின் பாரம்பரிய குணங்கள் இப்பொழுது ஈழத்தமிழர்களிடம் மட்டுமே வெளிப்படையாகக் காணப்படுகிறது. இதே குணங்கள், தமிழகத்தில் 'தேசியம்' என்ற மாயையில் அடகு வைத்து மழுங்கடிக்கபட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இவைகள் மீண்டு வருமாவென்பது காலத்தின் சுழற்சியிலும் அப்போதைய தேவையின் பொருட்டும் அதிசயங்கள் நிகலலாம். கழிசடைகள் எல்லா இனத்திலுமுண்டு. மற்றபடி ஈழத்தமிழர்களின் அத்தனை வேதனையையும் கண்டு மனங்குமுறும் பல நல்ல உள்ளங்கள் தமிழகத்தில் உண்டு. தமிழருக்கேயுரிய அறம், வீரம் ஆகியவற்றை இன்றளவும் கட்டிக்காத்து தனித்தன்மையுடன் திகழும் ஈழத்தமிழர்களை, நிச்சயம் தமிழுலகமே பெருமையுடன் பார்கிறதென்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது தமிழக டம்லர்களா சும்மா போங்கப்பா விசர கிளப்பாம

தோல் காட்டும் சினிமாவும் நாத்தம் புடிச்ச அரசியலும் இல்லாட்டி காக்கா கொத்தி இழுக்கும் அதுக்குள்ள தமிழர்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமை வேறு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.