Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

nadpumj2.jpg

நட்பு

நாளொரு பொழுதாய்

நடைமுறை உலகை

நானும் அவளும்

காணப் புறப்பட்டோம்.

நல்ல நண்பர்களாய்…

ஒரு நாள்…

நிலவை ரசிக்க நினைத்தோம்.

ஆனால்..

இரவுவரை தனித்திருக்கும்

தைரியம் நமக்கிருக்கவில்லை.

நிலவு வரும் வரை நாமிருக்க

நம் கலாச்சார கண்களும்

நம்மை விட்டுவைக்கவில்லை.

இன்னொரு நாள்…

கடற்கரை சென்று

காலாற நடந்து

காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…

நம் கைகளைக் கோர்த்தபடி

காலடி பதித்து

அலை நுரை ரசிக்க முடியவில்லை.

அவள் தடுமாறி

அலைக்குள் விழுந்த போதும்

என்னால் அவளை

அணைக்க முடியவில்லை.

கடலோ அவளை நனைத்துப் போனது.

மூழ்கப் போனவளை

மீட்டு வந்தது கண்டும்

எங்களுக்குள் ஊடல் என்று

ஊர் சொன்னது.

அலை கூட அப்போது

நுரை நுரையாய் சிரித்தது.

காற்றும் ஏதோ

கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.

மழை நாளொன்றில்..

ஒரு குடைக்குள் எங்களால்

நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க

எங்களில் ஒருவர்

மழையில்

நனைய வேண்டியதாயிற்று.

அப்போதெல்லாம்

நட்பு அழுதது.

ஊரோ

துளித்துளியாய் சிரித்தது.

எத்தனையை சுமந்து

நட்பைக் காத்த போதும்

அவன் வாசல்ப் படி வரைக்குமே

என்னால் பயணிக்க முடிகிறது

நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி

நட்சத்திரங்களை எண்ணியபோது

அருந்ததி வெள்ளி காட்டுவதாய்

சொன்னார்கள்

அவள் காலில்

முள் எடுத்த போது

மெட்டி மாட்டுவதாய்

சொன்னார்;கள்.

இத்தனைக்குப் பின்னும்

எங்கள் நட்பு

செத்துப் போகவில்லை.

உள்ளமும் கெட்டுப் போகவில்லை.

ஆனால்

எனக்கு

மணமகள் பார்த்த போதும்

அவளுக்கு

மணமகன் பார்த்த போதும்

சில வாய்கள் சொன்னதை

எங்கள் செவிகள் கேட்டபோது

ஆறாம் அறிவு

கொஞ்சம் சிந்தித்தது

நட்பை ஏற்காத உலகில்

என்றும் நண்பர்களாய்

வாழ நினைத்ததால்..

அவளுக்கு

இப்போது வாய்க்கட்டு

எனக்கு

இப்போது கால்க்கட்டு

நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது

எனக்கும் அவளுக்கும் இடையில்

எப்போதும்... :lol:

நன்றி. இந்திரன்

http://nilavision.blogspot.com/

Edited by வெண்ணிலா

nadpumj2.jpg

மழை நாளொன்றில்..

ஒரு குடைக்குள் எங்களால்

நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க

எங்களில் ஒருவர்

மழையில்

நனைய வேண்டியதாயிற்று.

ஆகா, யதார்த்தம் என்ன மாதிரி அழகு தமிழ் கவிதையாக மாறியதோ!! :lol:

நல்ல கவிதை வெண்ணிலா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு கவிதை. சமூகமும் நட்பும் எவ்வாறு இருக்கின்றது என்பதை எடுத்து சொல்கிறது கவிதை. வாழ்த்துக்கள் வெண்ணிலா .

இது நீங்கள் எழுதியதா? (இந்திரன் என்று போட்டிருக்குது அதான் கேட்டேன் ) :lol:

கவிதையை வாசித்து முடித்த பின் எழுகின்ற கேள்விகளை

முன் வைக்க விரும்பிகின்றேன்...

//

நிலவை ரசிக்க நினைத்தோம்.

ஆனால்..

இரவுவரை தனித்திருக்கும்

தைரியம் நமக்கிருக்கவில்லை.

//

சேர்ந்து தான் நிலவை ரசிக்கவேண்டியதில்லையே... (அது சரி இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ரசிக்கப் போறியள் நிலவை...? )

//

கடற்கரை சென்று

காலாற நடந்து

காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…

நம் கைகளைக் கோர்த்தபடி

காலடி பதித்து

அலை நுரை ரசிக்க முடியவில்லை.

//

கைகளைக் கோர்த்தபடி தான் ரசிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே...

//

மூழ்கப் போனவளை

மீட்டு வந்தது கண்டும்

எங்களுக்குள் ஊடல் என்று

ஊர் சொன்னது.

//

மேலுள்ளது இப்படி வருமென நினைக்கிறேன்...

//எங்களுக்குள் ஊடல் என்று // ---- எங்களுக்குள் காதல் என்று (ஊடல் வேறு ....)

இன்னும் எங்கட சனத்தை எத்தனை நாளைக்கு இப்படியே நினைக்கப் போறியள்? சனம் எவ்வளவோ மாறிட்டது...

Edited by kavi_ruban

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவுக்கு

மிகவும் எழிய நடையிலும் சிறந்த வரிகளாலும் அமைக்கப்பட்ட ஓர் நல்ல கவிதை மலர். வாழ்த்துக்கள்

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரனின் கவிதைகள் அநேகமானவை என்னைக் கவர்ந்தவை. இந்நட்புக்கவிதையும் மிகவும் நன்று.

இணைப்புக்கு நன்றிகள் வெண்ணிலா

  • தொடங்கியவர்

ஆகா, யதார்த்தம் என்ன மாதிரி அழகு தமிழ் கவிதையாக மாறியதோ!! :(

நல்ல கவிதை வெண்ணிலா...

:rolleyes::( ம்ம் மல்லிகை வாசம் எனக்கும் இந்த அழகுதமிழ் தான் ரொம்ப பிடிச்சிருந்திச்சு :o

நல்ல ஒரு கவிதை. சமூகமும் நட்பும் எவ்வாறு இருக்கின்றது என்பதை எடுத்து சொல்கிறது கவிதை. வாழ்த்துக்கள் வெண்ணிலா .

இது நீங்கள் எழுதியதா? (இந்திரன் என்று போட்டிருக்குது அதான் கேட்டேன் ) :o

இந்திரன் எழுதி இருக்கிறார். இந்த நிலாவுக்கு பிடித்திருந்திச்சு. இணைச்சேன் அவ்வளவுதான் :)

கவிதையை வாசித்து முடித்த பின் எழுகின்ற கேள்விகளை

முன் வைக்க விரும்பிகின்றேன்...

கவிரூபன் எப்ப தான் கேள்விகள் கேட்காமல் விட்டிருக்கிறியள்? கேளுங்கோ

சேர்ந்து தான் நிலவை ரசிக்கவேண்டியதில்லையே... (அது சரி இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ரசிக்கப் போறியள் நிலவை...? )

சேர்ந்து ரசிப்பதில் ஒரு சுகம் எல்லோ தெரியாதோ? இதெல்லாம் ஒரு கேள்வியெண்டு...... நிலா வரேக்கை இரவாகிடும் எல்லோ இரவில் தனிய நின்று ரசிக்கலாமோ பயம் இருக்காதோ... அச்சோ இந்த ரூபனுக்கு என்னாச்சோ

ஆ நிலா தேயும் வரை ரசிக்கலாம் என்றுதான்

கைகளைக் கோர்த்தபடி தான் ரசிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே...

கைகளை கோர்க்காதபடியால் தான் அலை இழுத்துக்கொண்டு போயிட்டு எல்லோ. என்ன நீங்கள் ஆ :)

மேலுள்ளது இப்படி வருமென நினைக்கிறேன்...

//எங்களுக்குள் ஊடல் என்று // ---- எங்களுக்குள் காதல் என்று (ஊடல் வேறு ....)

நீங்கள் அப்படி நினைத்திருக்கிறியள்.

கவிதை எழுதிய இந்திரன் இப்படி நினைச்சிருக்கலாம் எல்லோ ஊடல் அதாவது ஒரு நெருக்கம் என்று :lol:

இன்னும் எங்கட சனத்தை எத்தனை நாளைக்கு இப்படியே நினைக்கப் போறியள்? சனம் எவ்வளவோ மாறிட்டது...

சரி சரி சரி கோவிக்காதீங்க. உங்களை மனித வர்க்கத்தினுள்ளேயே அடக்குகின்றேன் :wub:

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.