Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கன்பெராவில் மாபெரும் கண்டன நிகழ்வு

Featured Replies

tamil.jpg

ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும்.

செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்துக்கள் கொம்புஸ், செவன்கில் ஆகியவற்றுடன் ஒபனில் இருந்தும் காலை 6 மணிக்கு வெளிக்கிடுகிறது.

கன்பராவில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பாராளுமன்றத்தின் முன்பாக சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஒன்றுகூடலும், மாலை 2.30 முதல் மாலை 4.30 மணிவரை இந்திய உயர்ஸ்தானிகத்தின் முன்பாக , இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி செய்வதையும் கண்டித்து ஒன்று கூடலும் நடைபெறவுள்ளது.

  • தொடங்கியவர்

நீங்க பேருந்திலா கந்தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க பேருந்திலா கந்தப்பு?

வேலையில் ஒரு மாதிரிச் சொல்லி விடுமுறை கேட்டுவிட்டேன். நான் பேருந்தில் தான் செல்கிறேன்.

அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும் அங்குள்ள தமிழ்தேசிய ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!இங்கே ஐரோப்பாவில் எல்லாரும் நித்திரை கொண்டு கொண்டிருக்கினம்.கடைசி நேரத்தில தான் எழும்பி கடைசி பஸ்சை பிடிக்க ஓடுவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும் அங்குள்ள தமிழ்தேசிய ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!இங்கே ஐரோப்பாவில் எல்லாரும் நித்திரை கொண்டு கொண்டிருக்கினம்.கடைசி நேரத்தில தான் எழும்பி கடைசி பஸ்சை பிடிக்க ஓடுவினம்.

அட சரியாத்தான் நித்திரையால் எழுப்பி விட்டு இருக்கிறியள், நாங்களும் செய்தால் என்ன, உந்த UNO நிறுவனங்களின் வெளியேற்றத்தையும் இணைத்து கொள்ளலாம். :icon_mrgreen::o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

தகவலுக்கு நன்றி.

செவன்கில்லில் இருந்து போதிய அளவு மக்கள் வராதமையால் அங்கிருந்து பேரூந்து புறப்படாது என்று சொன்னார்கள். ஓபன், கோம்புஷ் ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே புறப்படும்.

  • தொடங்கியவர்

நான் வருவேன்..பேருந்தில் அல்ல..

சுந்துவும் ஜம்முவும் வருகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியன் பத்திரிகையில் வந்த ஆக்கம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=44282

தமிழ்சிட்னி இணையத்தளத்தில்

http://www.tamilsydney.com/content/view/1425/37/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாபெரும் கண்ட நிகழ்வோ அது சரி ஒரு பஸ் வண்டியில 50 பேர் அடுத்த பஸ் வண்டியில 40 பேர் பிறகு மெல்பனில இருந்து ஒரு 10 பேர் வந்திருக்கமாட்டீனம் இது மாபெரும் கண்டன நிகழ்வோ.சரி கேட்கிறன்

இப்படி ஒரு கண்டன நிகழ்வு இப்ப வைக்க வேண்டாம் என கூறிய பின்னும்.(படம் காட்ட வெளிகிட்டவைக்கு நான் என்ன சொல்லுறன் என்று விளங்கும்).

அவன் வன்னிக்கு காசு சேர்த்திட்டானே நாங்களும் ஏதாச்சும் செய்ய வேண்டும் பண்ண வேண்டும் என்றிட்டு படம் காட்ட வெளிகிட்டவை கடசியில என்ன நடந்தது?

நீங்களே உங்களை டமிழ் தேசியவாதிகள் என்று பட்டம் மற்றும் மகுடம் சூட்டி கொள்ளும் உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.எத்தனையோ பேர் மாவீரராகி வளர்ச்சி அடைந்து நிற்கும் இந்த தேசிய போராட்டத்தை உங்களின் நலனிற்காக அங்கால இங்கால அசைக்காம அதை நேரான வழியில் நடைமுறைபடுத்துங்கோ.

அவன் ஒருத்தன் காசு சேர்த்திட்டான் நாங்களும் எங்களின்ட பனம்கொட்டை மூஞ்சிகளை காட்ட வேண்டும் என்றிட்டு போஸ் கொடுக்கிறதை நிற்பாட்டி ஏலும் என்றா உதவுங்கோ இல்லாட்டிக்கு கோயில் வழிய தெப்பையை போட்டு கொண்டு உட்காருங்கோ..

அதை விட்டிட்டு படம் காட்டாதையுங்கோ,ஏற்கனவே இங்கே ஒரு சாரால் விடுதலைபுலிகளின் பலம் குறைந்து கொண்டிருக்கிறது அவுஸ்ரெலியாவில் என்று புலம்புகிறார்கள்,அவையள் குளிர் காயிறதிற்கு செய்த மாதிரி இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த உங்களை என்ன சொல்லுறது.

சரி நிகழ்வை தான் ஒழுங்கு செய்தினீங்கள் மக்களுக்கு அந்த தகவலை சென்றடையவாது வழி சமைத்தீர்களா அதுவும் இல்லை இங்க சனதிற்கு இப்படி ஒன்று நடந்ததே என்று கூட தெரியாது இந்த இலட்சனத்தில நடத்தி இருக்கீனம் என்றா பாருங்கோவன்.

அவன் ஒருத்தன் காசு சேர்த்திட்டான் ஆனபடியா இந்த கிழமை நாமளும் என்னத்தையாவது வெட்டி கிழிக்க வேண்டும் என்று தானே.நீங்க உப்படி வெட்டி கிழிக்கிறதை விட வாயை மூடி கொண்டு இருந்தால் அது நீங்க தமிழ்தேசியதிற்கு செய்யிற மெத்தபெரிய உபகாரம்.

கோயிலில தெப்பை போடுறதுகளுக்கு நாங்கள் புலம்புறது விளங்குமோ.. :(

கோயிலில தெப்பை போடுறதுகளுக்கு நாங்கள் புலம்புறது விளங்குமோ.. :(

இப்படி..டி எல்லாம் நடக்குதோ மட்டி அண்ணா.ணா..??..அது சரி நீங்களும் பசு வண்டியில போனனியளோ மெல்பனில இருந்து..??. :(

இன்னொரு விசயம் தெரியுமோ இந்த கன்பரா கோயில் கும்பாபிசேகதிற்கு பஸ் வண்டி விட்டவை தானே கொஞ்ச நாளைக்கு முதல் அப்ப நான் போனனான் கன்பராவிற்கு,அது தான் இந்த முறை போகல்ல பாருங்கோ..!! :D:lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா.மாபெரும் கண்டனி என்று வைக்கிறது ஆனா ஒரு பிரிவு அதற்கு வராது.பிறகு இன்னொரு பிரிவு காசு சேர்க்கும் அதில ஏன் என் பெயரை வாசித்தவை என்று சண்டை.

இந்த இலட்சணத்தில் தானா நினைக்கவே வேதனையா இருக்கு. :(

  • கருத்துக்கள உறவுகள்

மட்டி அண்ணா உவ்வளவு நாளும் எங்க இருந்தனீங்கள்.நீங்கள் இப்படி எழுதினதில மிச்சம் மிச்சம் சந்தோஷம் ஆனால் உது உரைக்க வேண்டிய ஆட்களுக்கு உரைக்குமோ.

இதை நாங்கள் யாழில் கிறுக்கி உதுகளுக்கு எங்க உரைக்க போகுது மேடை போட்டு கூவினாலும் உரைக்காது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் படங்கள பாத்திட்டு யோசிச்சனான் சிட்னியில இருந்து ஆக்கள் வந்தும் உவளவு பேர் தானோ எண்டு. :) கான்பெரால இருக்கிற ஆக்கள் போயிருந்தாலே ஓரளவு பரவாயில. இப்பிடி நடக்கிறதால வேற இணையத்தளங்களில ஆஸ்திரேலியால புலிகளின் பலம் குறைந்திட்டுது எண்டு பிரச்சாரம் நடத்த வாய்ப்பா போயிடும். மட்டி சொல்றமாதிரி கன சனதித்கு இப்பிடி ஒரு விஷயம் நடகிறதே தெரியாது பாருங்கோ. நானே யாழ் மூலம்தான் அறிஞ்சன். இங்க எத்தின பேர் யாழ் பாக்கிரவயளோ தெரியாது. பலருக்கு குடுத்த கால அவகாசம் போதாது. சில நாட்கள் அவகசதில லீவு எடுக்கிறது எல்லாருக்கும் இலகு இல்ல. இனி வார காலங்களில இப்பிடி ஒரு நிகழ்வ எல்லாருடைய ஆதரவோடும் நடத்துவது தான் எங்கட பலத்த பறைசாட்டும். இல்லாதுவிடின் இப்பிடிப்பட்ட நிகழ்வ நடத்தாம விடுறது நல்லது எண்டு நினைகிரன். இது எண்ட தனிப்பட்ட கருத்து, யாரும் கோவிச்சுபோடதேங்கோ.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.