Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்

Featured Replies

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர்.

கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் மஹிந்தனி அமாசா ஹபுவாராச்சி பம்பலப்பிட்டி லிண்ட்சே மகளிர் பாடசாலையின் சஜினி அஞ்சனா சேனாதீர மற்றும் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த அபேசிங்ககே தோன மனீசா சுபிபி ஆகியோரே இவ்வாறு முதனிலை வகிக்கின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 265000 மாணவ மாணவியரில் 30000 மாணவ மாணவியர் பிரபல பாடசாலைகளில் அனுமதி அல்லது புலமைப்பரிசில் பணத்தினைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

நன்றி தமிழ் வின்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

பசுபதனுக்கு மேலும் பல வெற்றிகளை பெற நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பசுபதனுக்கு மேலும் பல வெற்றிகளை பெற நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் பசுபதன். :lol:

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அடையாதோர்.. கவலைப்படத் தேவையில்லை. நன்கு முயற்சி செய்தால் சித்தியடைந்தவர்களைக் காட்டினும் பிற்காலத்தில் முன்னிலைக்கு வரலாம்.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அயன்ஸ்ரைன் கூட.. சாதாரண தரப் பரீட்சையில் குண்டடிச்சவர் தான்..! :lol:

Edited by nedukkalapoovan

நானும் இந்த புலமை பரீட்சையில் சித்தியடையவில்லை ஆனால் பல்கலைகளகத்தில் நான் தான் முதலிடம் ஆகவே சித்தியடையாதவர்கள் கவலைகொள்ள வேண்டாம் :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

தர்மலிங்கம் பசுபதனுக்கு எனது வாழ்த்துக்கள் . :lol:

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் நீங்கள் முதலாமிடத்துக்கு வந்ததையிட்டு நான் பெருமை கொள்கின்றேன் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்ியாக இருக்கு

வாழ்த்துக்கள் பசுபதன். :lol:

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அடையாதோர்.. கவலைப்படத் தேவையில்லை. நன்கு முயற்சி செய்தால் சித்தியடைந்தவர்களைக் காட்டினும் பிற்காலத்தில் முன்னிலைக்கு வரலாம்.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அயன்ஸ்ரைன் கூட.. சாதாரண தரப் பரீட்சையில் குண்டடிச்சவர் தான்..! :D

உதை முதலே சொல்லியிருக்கலாமே அனியாயமாய் ஒரு ஈழத்து விஞ்ஞானியை உலகம் இழந்து விட்டது :lol:

தர்மலிங்கம் பசுபதனுக்கும், சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மாணவர்கள் புள்ளிகள் எதனையும் பெறவில்லை

நடைபெற்று முடிந்த 5 ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த முறை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 3 மாணவர்கள் அதிகூடுதலாக 183 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

இந்தமுறை பரீட்சையில் சித்தியெய்திய 32 ஆயிரம் மாணவர்கள் புதிய பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசுபதனுக்கு வாழ்த்துக்கள், சித்தியடைந்தோருக்கும் வாழ்த்துக்கள் :D

உதை முதலே சொல்லியிருக்கலாமே அனியாயமாய் ஒரு ஈழத்து விஞ்ஞானியை உலகம் இழந்து விட்டது :lol:

ஒரு சின்ன திருத்தம், ரெண்டுபேரை இழந்துவிட்டது :unsure::lol:

நானும் இந்த புலமை பரீட்சையில் சித்தியடையவில்லை ஆனால் பல்கலைகளகத்தில் நான் தான் முதலிடம் ஆகவே சித்தியடையாதவர்கள் கவலைகொள்ள வேண்டாம் :):wub: :wub:

எதப்பற்றி சொல்லுறீங்கள்?

University of Paraphrasing இல Bachelor / Master of Copy & Paste செய்யுறதப்பற்றியா? உது செய்ய பல்கலைக்கழகம் எல்லாம் போய் மினக்கட வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்ியாக இருக்கு

உதை முதலே சொல்லியிருக்கலாமே அனியாயமாய் ஒரு ஈழத்து விஞ்ஞானியை உலகம் இழந்து விட்டது :)

நான் இப்பரீட்சையில் மொத்தப்புள்ளியாக 148 புள்ளிகள் எடுத்திருந்தேன். ஆனாலும் தோல்வியடைந்தேன். எனது ஆண்டில் வெற்றிக்கான மொத்தப் புள்ளி 150 ஆக இருந்தது. அப்போது கவலைப்பட்ட எனக்கு ஆறுதல் சொன்னவர்கள் அயன்ஸ்ரைனையே உதாரணம் காட்டினர். ஆனாலும் என்னால் அயன்ஸ்ரைனின் கால் தூசிக்கு சமனாகக் கூட அறிவியலில் சாதிக்க முடியவில்லை..! இருந்தாலும் எல்லோரும் என்னைப் போல மக்குகளாக இருக்கமாட்டார்கள் என்பதால்.. தோல்வி கண்ட மாணவர்களின் உள உறுதிக்காக அயன்சைரனை கொண்டு வந்தேன். :wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.