Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளெல்லாம் நவராத்திரி.... யாழ்களத்திலே

Featured Replies

சரஸ்வதி துதி

வெள்ளைத் தாமரையில்

வெண்ணிற உடை உடுத்து

வீணை தனை மீட்டிடும்

வாணியே... கலை மகளே..!

வெள்ளை உள்ளத்துடன்

எளிய தமிழ் கவிதைகளை

எழுதிட நீ உதவிடம்மா...

********

நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே...

நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே

இனிய தமிழ் கவிகள், கதைகள்

புதுமைக் கருத்துக்கள், செய்திகள்

மனம் மகிழவைக்கும் நகைச்சுவை

கண்ணுக்கினிய காணொளிகள்

இவை வழங்கும் யாழ் களம்

நான் பயிலும் பல்கலைக்கழகம்.

நாளும் நாம் எழுதும் படைப்புகள்

நவதானியமாய் விதைக்கப்பட,

இவை வழங்கும் படைப்பாளிகள்

தாமே அழகிய கொலுக்களாக,

வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில்

அழியாது என்றும் இவரிருக்க.

உள்ளத்தில் உள்ள ஆணவத்தை

அழிப்பதே மகிஷாசுர ஷம்காரம்.

கருத்துக் களமும் போர்க்களமாகி

சொற்களால் போர் நடந்திடினும்

அறியாமை என்ற அரக்கனை அழித்து

புதிய நல்ல சிந்தனைகளை

எங்கள் விவாதம் அளித்திடும்.

எனவே,

நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே

நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே

*********

யாழ் உறவுகளுக்கு எனது இனிய நவராத்திரி வாழ்த்துக்கள். கலை மகளின் கருணையுடன் உங்கள் நல்ல ஆக்கங்கள் தொடரட்டும் :)

Edited by Mallikai Vaasam

மிக்க நன்றி....கலைமகள் துணை உங்களுக்கும் கிடைக்கட்டும்

Edited by தூயா

மிக்க நன்றி....கலைமகள் துணை உங்களுக்கும் கிடைக்கட்

டும்.

டும்.

திருத்திவிட்டேன். :)

திருத்திவிட்டேன். :)

:D

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற கவி தந்த உங்களுக்கு நன்றி .........

  • தொடங்கியவர்

நன்றி தூயா, விகடகவி, நிலாமதி அக்கா... :)

ம்ம்..தளபதியே..யே..!!.. :)

நாளேள்ளாம் நவராத்திரி எண்டு..டு கலைமகளை கவியால் யாழிற்கு அழைத்த விதம்..ம் அழகு அதற்கு முதற்கண் என்னுடைய வாழ்த்துகள்..ள்.. :lol:

எங்க முனி மாமு அந்த பொற்கிழி உடன எடுத்து கொண்டு வாங்கோ..நம் தளபதிக்கு பரிசளிப்போம்..ம்..!!.. :lol:

அது இருகட்டும்..(இப்ப நம்ம விசயதிற்கு வாரன்)..

சங்கீத வாணி விணா வாணி

பிரமஸ்வ ரூபிணி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதாரி ஸ்யாமள வதனி

துர்க்கா சரஸ்வதி லஷ்மி நமோஸ்துதே...

இப்படி தான் எண்ட அம்மா ஒவ்வொரு முறை சரஸ்வதி பூசைக்கும் படிக்கிறதை கேட்டிருக்கிறன்..இப்ப எண்ட சந்தேகம் என்னவெண்டா..டா.. :o

இதில என்ன சொல்லீனம் எண்டு தான்..ன்..(அம்மாட்ட கேட்டிடுவன் பிறகு ஏச்சு விழும்)..இங்க கேட்டா ஏச்சு விழாது அது தான் பயப்பிடாமா கேட்கிறன் பாருங்கோ..கோ.. :o

மூன்று பேரையும் கும்பிடீனம் இந்த பாட்டில என்டு விளங்குது ஆனா அதை ஏன் கொழப்பி அடித்து கும்பிடீனம் எண்டு தான் நேக்கு விளங்கள்ள..ள.. :wub:

வேண்டும் எண்டா நான் ஒரு பாட்டை இயற்றவோ..வோ..(இந்தாங்கோ கேளுங்கோ)..

ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலையுதிர் காலம்

சற்று தொலைவிலே

வீணையின் சப்தம்

கேட்டேன்

அங்கே

உன்

பக்தன்

ஆனேன்

சரஸ்வதியே...!! :lol:

இந்த பாட்டிற்கு யாரும் ஏசாட்டி..டி மற்ற இரண்டு பேருக்கும் நான் பாட்டு எழுதுறன் என்ன தளபதியே..யே..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு கரங்களை உடையவளும், வெண்தாமரை மலரில் வீற்றிருப்பவளும்,ஜடாமகுடத்த

  • தொடங்கியவர்

ம்ம்..தளபதியே..யே..!!.. :lol:

எங்க முனி மாமு அந்த பொற்கிழி உடன எடுத்து கொண்டு வாங்கோ..நம் தளபதிக்கு பரிசளிப்போம்..ம்..!!.. :lol:

பொற்கிழியுள் டொலர் இருந்தால் சரி... :)

சங்கீத வாணி விணா வாணி

பிரமஸ்வ ரூபிணி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதாரி ஸ்யாமள வதனி

துர்க்கா சரஸ்வதி லஷ்மி நமோஸ்துதே...

எனக்கும் விளங்கவில்லை... சங்கீதம், வீணை ஒலியில் இருப்பவள் என்பது மட்டும் புரிகிறது :o

ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலையுதிர் காலம்

சற்று தொலைவிலே

வீணையின் சப்தம்

கேட்டேன்

அங்கே

உன்

பக்தன்

ஆனேன்

சரஸ்வதியே...!! :wub:

இந்த பாட்டிற்கு யாரும் ஏசாட்டி..டி மற்ற இரண்டு பேருக்கும் நான் பாட்டு எழுதுறன் என்ன தளபதியே..யே..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

:(:D தொடருங்கள் உங்கள் கற்பனையை... :lol:

நன்றி ஜமுனா, சுவி :o

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அரச சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி மல்லிகை வாசத்திற்கு பொற்கிழிகள் வழங்குவதா?? :o:lol:

கூடாது புட்டும் சம்பலும் வழங்குவோம் என்ன அரசரே சாப்பிட்டு உடம்மை தேத்தட்டும் என்ன முனிவர் சொல்வது சரிதானே அரசரே சாப்பிட்டால் தான் நாளைக்கு சண்டைக்கு போய் திரும்பி ஓடி வருவார் :wub::lol::wub:

  • தொடங்கியவர்

சம்பலா? :huh: தளபதி பதவியும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்... :wub:

  • தொடங்கியவர்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத்து உட்பொருளாவா

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலை

கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்

கோதகன்ற தொழிலுடைத்தாகி

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலுடை உற்றாள்

இன்பமே வடிவாகிடப் பெற்றாள்.

-பாரதியார்

இன்று விஜயதசமி தினம். கள உறவுகளுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்! :icon_mrgreen:

Edited by Mallikai Vaasam

ஒ..கப்பி விஜதசமி ஜஸ்மின் அண்ணா..ணா கொஞ்சம் தாமதமா போயிட்டுது ஆனா என்ன தாமதமா சொன்னாலும்..ம் சொல்லிட்டன்..ன். :icon_mrgreen:

இது எப்படி இருக்கு..கு..!! :icon_mrgreen:

மற்றது விஜதசமி அன்னைக்கு தானே அரிசியில..ல ஏடு தொடக்கிறவை அச்சோ நான் நிற்காம போயிட்டன் பரவால்ல இன்னைக்கு தொடக்கிவிடுங்கோ ஜம்முபேபிக்கு..ஏட்டை..டை.. :icon_mrgreen:

அதுக்கு பெறகு ஜம்மு பேபி என்னாம எழுதும்..ம் பாருங்கோ..(வலை மாமா வரமட்டும்).. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.