Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம்: கருணாநிதி வழமையான பல்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா?

பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன்.

கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?

பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.

கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?

பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான். இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள். போர் நிறுத்தத்திற்கு உடனே அமர்ந்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை இந்தியாவே முன்னின்று நடத்துகிறதா? அல்லது வேறு நாடுகளுடைய முயற்சியால் நடைபெறுகிறதா? அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நடைபெறுவதா? என்பது பற்றி இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் போர் நிறுத்தத்திற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை எதுவும் இப்பொழுது இல்லை.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் பற்றி...

பதில்: அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த முடிவை நிறைவேற்றினால், இந்தியாவிலே அரசியல் நிலைமை பல சிக்கல்களுக்கு ஆளாகும். ஆகவே அந்த முடிவை ஒத்திவையுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது, நான் முதலமைச்சரிடம் பேசினேன். அவர் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் தரமாட்டேன் என்று உறுதிமொழி அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறாரே?

பதில்: மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன் என்று சொன்னேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரபாகரன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: அதற்கு இந்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எப்படி கருத்து சொல்ல முடியும்!

கேள்வி: சிறிலங்காவின் தூதுக்குழு சார்பாக பசில் ராஜபக்ச கூறிய கருத்துகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதா? எதிர்த்தரப்பான இலங்கை தமிழ் அமைப்புகளும், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை முழுமையாக மத்திய அரசு நம்பக்கூடாது. எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்: இன்றைக்குத்தான் வந்து சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதை நம்முடைய மத்திய அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகலுக்கு 28 ஆம் நாள் கெடு கொடுத்திருந்தீர்களே, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

கருணாநிதி சரிந்துகொண்டிருந்த தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், தன்னை விட வேறுயாரும் ஈழத்தமிழர் விடையத்தில் அரசியல் இலாபம் பெற்றுவிடக்கூடாது என்பதற்கும், ஈழத் தமிழர் பிரச்சினையில் தன்னை எதிர்த்து அறிக்கை விட்டவார்களையே தனக்கு சார்பாக அறிக்கை விட வைப்பதற்கும், தனது எதிர் கட்சிகளை சிதறடிக்கவும் 'ஈழத் தமிழர் பிரச்சினை' என்ற துடுப்புசீட்டை மாறுபடியும் பயன்படுத்தியுள்ளார்.

இதில் வெற்றியடைந்துவிட்டார். இனி அடுத்தமுறை தனக்கு நெருக்கடி வரும்போது மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சினை தூசு தட்டுவார்.இந்த முறை நன்மை எனில் ஈழத் தமிழர் பிரச்சினை இளைஞர்களிடமும் பள்ளிமாணவர்களிடமும் கொண்டுசெல்லப்பட்டிருக்குது.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்கு வேதனை தரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டேன் முதலமைச்சர் மு.கருணாநிதி

வீரகேசரி நாளேடு 10/27/2008 10:48:46 AM - இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசின் தீர்மானம் மத்திய அரசுக்கு வேதனை தருவதாக அமையாது என முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்துவதற்கென இந்தியாவிற்கு சென்ற, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார்.

இது தொடர்பில் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சரை நேற்றுமாலை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். இதன்பின்னர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நோர்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் நடைபெறாது.

அதுபற்றிய பேச்சும் எழவில்லை. இலங்கைப் பிரச்சினை 40 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டம். இதனை நான்கு நாட்களில் முடித்துவிட முடியாது. போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பதாகும். போர் நிறுத்தத்தை இந்தியா முன்னின்றோ, வேறு நாடுகளோ அல்லது அமைப்புக்களோ நடத்துமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. போர் நிறுத்தங்களுக்கான வழிமுறைகள் ஆராயப்பட்டுள்ளன. அதை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

அனைத்துக்கட்சி குழுவில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய எம்.பி.க்கள் இராஜினாமா என்ற முடிவை நிறைவேற்றினால் மத்திய அரசு பல சிக்கல்களுக்கு ஆளாகும். எனவே, இந்த முடிவை ஒத்திவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசுக்கு வேதனை, சிக்கல்களை உள்ளாக்கும் வகையில் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

நிச்சயம் அப்படி ஒரு நிலையை உருவாக்க மாட்÷டன் என அவரிடம் உறுதியளித்துள்ளேன்

ஒருவகையில் கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும்.

அவர் தனது அரசியல் கதிரைக்கு பலம் சேர்த்தாரோ இல்லையோ ? எமது மக்களின் கஸ்டங்களையும் அங்கு அவர்கள் படும் இன்னல்களையும் இந்தியாவின் பாமரமக்களிற்கு கொண்டு சென்று சேர்திருக்கின்றார். அதுபோதும் எமக்கு . மக்கள் சக்திதான் எமது பலம். அதை நாம் இனி தேடிப்போகவேண்டிய தேவை இல்லை அது எம்மை தேடியே வரும். இனி எந்த ஒரு அரசியல்வாதியாலும் ஏமாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்கு வேதனை தரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டேன் முதலமைச்சர் மு.கருணாநிதி

:lol: முதல் அறிக்கை விடும் பொழுது கண்ணாடி போட மறந்து போனார் போல........ :lol:

Edited by putthan

வைகோ சீமான் அமீர் உள்ளேதான் சென்றிருக்கின்றார்கள். மறைந்து போய்விடவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சனநாயகம்" நம்புங்கோ மக்களே!

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே நினைச்சென் இப்படி தான் நடக்கும் என்று..

இதெல்லாம் ஒரு நாடகம் யா.. அவர் டெல்லில இருந்து வருவார் வந்து கருணாநிதியோட ஒரு பட்டி மன்றம் வைப்பார். வைச்சா பிறக்கு கருணாநிதி சொல்லுவார் மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதொ அது தான் எங்கள் முடிவும் என்று.. இது காலம் காலமா நடந்துட்டு வார நாடகம் :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பா அந்தாளை திட்டுறீங்க? அதெல்லாம் இருக்கட்டும்... நான் ஒருதடவை 'புதிய கூட்டணியை நோக்கியே' (வேறொண்டும் தப்பா சொல்லலை) என்டு சொன்னதுக்கு எத்தினைபேர் கடிச்சு குதறினீங்க? ஈழத்துக்கு ஆதரவாய் ஏதாவது சொய்தா தூக்கிப்பிடிப்பீங்க.. எதிரா ஏதாவது நடந்த மாதி தெரிஞ்சா தூக்கிப்போட்டு மிதிப்பீங்க... இப்படியான கருத்துக்கள வீரர்களை விட அந்த அரசியல்வாதி எவ்வளவோ மேல்!!!! :lol::)

தீர்மானம்: 3

இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த தீர்மானம் மத்திய அரசை , ஒரு நல்ல முடிவை நோக்கி நகர்த்தும் போல் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகின்றது .

நன்றி கலைஞரே .

இந்த தீர்மானம் ஒரு புதிய கூட்டணியை நோக்கி தீர்வை நோக்கி செல்கின்றது.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்கு பாதகம் வரக்கூடாதென்று (தமது பதவிக்கு பாதகம் வரக்கூடாதென்று என்பதுதான் உண்மை) தம்மைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களையே.. காவிரி.. ஒகேனகல்.. என்று கைவிட்டவர்கள்.. நம்மை...???! யோசிக்க வேண்டியவர்கள் நாங்கள்.

ஆனால் தமிழக மக்களிடம் இருக்கின்ற ஈழத்தமிழர் தொடர்பான எழுச்சி உணர்வை மேலோங்கச் செய்வதை நாம் நிறுத்தக் கூடாது. அது ஒரு நாள் இந்த ஏமாற்றுவாதிகளை ஓரங்கட்டி மக்கள் பலத்தை நிரூபித்தித்து ஈழத்தமிழனின் விடிவுக்கு உதவும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் தமிழக மக்களிடம் இருக்கின்ற ஈழத்தமிழர் தொடர்பான எழுச்சி உணர்வை மேலோங்கச் செய்வதை நாம் நிறுத்தக் கூடாது. அது ஒரு நாள் இந்த ஏமாற்றுவாதிகளை ஓரங்கட்டி மக்கள் பலத்தை நிரூபித்தித்து ஈழத்தமிழனின் விடிவுக்கு உதவும்..! :lol:

அதெல்லாம் சரி நெடுக்ஸ்... தமிழ்நாட்டிலை இருந்து பெரிசு பெரிசா எதிர்காக்கிறம். அவன் இப்பிடி செய்யோணும் அப்பிடி செய்யோணும் எண்டு.... 300க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை வெறியர்களால் படுகொலை செய்யப்படும்போது புலம்பெயர்ந்து வாழும் மோதாவிகள் ஏதாவது செய்தார்களா? கடைசி கண்டன அறிக்கையாவது விட்டார்களா? (அப்படி அறிக்கை விட்டிருந்தாலாவது சந்தோசம்)

உண்மையில் சாணக்கியன் தான் தமிழ்நாட்டில் நடைபெறும் மின் வெட்டை பாவப்பட்ட ஈழத் தமிழரை வைத்து சமாளித்து விட்டார்........

பாவம் சீமானும் அமீரும் வைக்கோவும் தான் உணர்ச்சிவசப்பாட்டு மாட்டுப்பட்டு விட்டார்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி நெடுக்ஸ்... தமிழ்நாட்டிலை இருந்து பெரிசு பெரிசா எதிர்காக்கிறம். அவன் இப்பிடி செய்யோணும் அப்பிடி செய்யோணும் எண்டு.... 300க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை வெறியர்களால் படுகொலை செய்யப்படும்போது புலம்பெயர்ந்து வாழும் மோதாவிகள் ஏதாவது செய்தார்களா? கடைசி கண்டன அறிக்கையாவது விட்டார்களா? (அப்படி அறிக்கை விட்டிருந்தாலாவது சந்தோசம்)

கண்டன அறிக்கை விட்டு அவர்களைப் போல எம்மையும் ஏமாற்றுவாதிகள் என்று அந்த மீனவர்கள் நினைக்க வைக்கச் சொல்லுறீங்களா. ஈழத்தமிழனின் இன்றைய நிலையில் அவனால் அந்த மீனவர்களுக்காக அழ முடியுமே தவிர.. அவர்களைக் காப்பாற்ற இராஜதந்திர ரீதியிலோ.. அல்லது படைப்பல ரீதியிலோ வலிமை வரவில்லை. அதுதான் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்களே.. தமிழீழம் அமைவதுதான் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும் தொழிலுரிமைக்கும் அவசியம் என்று. அதுவே அவர்களுக்கு நிரந்தரத் தீர்வைத்தரும் என்று. இதை விட வேறு எதை யதார்த்தமாகச் சொல்ல முடியும்.! :lol:

உண்மையில் சாணக்கியன் தான் தமிழ்நாட்டில் நடைபெறும் மின் வெட்டை பாவப்பட்ட ஈழத் தமிழரை வைத்து சமாளித்து விட்டார்........

பாவம் சீமானும் அமீரும் வைக்கோவும் தான் உணர்ச்சிவசப்பாட்டு மாட்டுப்பட்டு விட்டார்கள்...........

தமிழக மக்களின் உணர்வுகள் வேறு.. அங்குள்ள சில பெரிய அரசியல்வாதிகளின் நிலை வேறு. வைகோ.. அமீர்..சீமான்.. சாதாரண மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து நிற்கின்றனர். அவர்கள் அரசியலை விட ஈழத்தமிழர் நலனை அதிகம் முன்னிறுத்துகின்றனர். ஈழத்தமிழர் நலன் பற்றிய அறிவூட்டலை.. அறிதலை இன்னும் இன்னும் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகவே இருக்கிறது. அதுதான் இறுதியில் பெரிய அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்கும்.. ஈழத்தமிழன் நலனில் சிறிதளவேணும் அரசியல் கடந்து செயற்பட வைக்கும்.. அல்லது தியாக மனப்பான்மையோடு செயற்படத்தூண்டும்.

இவ்வாறான ஏமாற்றங்களைக் கண்டு நாமும் சோர்ந்துவிடக் கூடாது... தமிழக மக்களும் சோராக் கூடாது.. தமிழுணர்வாளர்களும் சோரக்கூடாது. நாம் சோர்ந்தால்.. அது எதிரிக்கும் அவனை இயக்க வைத்துக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளுக்குமே பேருதவியாக அமைந்துவிடும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.