Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் நிபந்தனை பிணையில் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்ய இராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மாயாண்டி அவர்கள் இன்று உத்தரவிட்டார்.

மதுரை நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

www.tamilwin.com

எனக்கு ஒரு விடயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதாவது சீமானையும் அமீரையும் பொலிசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது தமிழ்நாட்டு பொலீசார். தமிழ் நாட்டு பொலீசை தமிழ் நாட்டு அரசாங்கமே கட்டுப்படுத்துகின்றது. அப்படி எனில் தமிழ் நாட்டு அரசாங்கமா இவர்களை கைது செய்ய உத்தரவிட்டது? அதாவது நேரே கேட்டால் கலைஞர் கருணாநிதியா இவ்வாறு செய்ய உத்தரவிட்டார்? இவர் தானே இந்த எதிர்ப்பலையை ஏற்படுத்தியவர்? ஏன் இவ்வாறு பின் செய்தார்? ஒன்றுமே புரியவில்லை? யாராவது இதுபற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த விள‌க்கம் இது..

இருவரும் புலிகளை ஆதரித்தோ அல்லது நாடு பிளவுபடும் என்றோ பேசியதாக நினைவு. இவர்களைக் கைது செய்யாவிட்டால் செல்வி ஜெயலலிதா அவர்கள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட ஆரம்பித்துவிடுவார். அத்தோடு மாநில அரசைக் கலைக்கவும் சொல்லி கூக்குரல் இடுவார்.

இதையெல்லாம் கருதியே இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் தனக்கு சட்ட பிரச்சனை வராமல் தான் இவர்களை உள்ளே போட்டு எடுத்துள்ளார். ஜெயலலிதாவே தன்னால் தான் இவர்கள் உள்ளே போடப்பட்டுள்ளார்கள் என கலைஞர் சொல்ல வைத்துள்ளார் என்றால் பாருங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதாவது சீமானையும் அமீரையும் பொலிசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது தமிழ்நாட்டு பொலீசார். தமிழ் நாட்டு பொலீசை தமிழ் நாட்டு அரசாங்கமே கட்டுப்படுத்துகின்றது. அப்படி எனில் தமிழ் நாட்டு அரசாங்கமா இவர்களை கைது செய்ய உத்தரவிட்டது? அதாவது நேரே கேட்டால் கலைஞர் கருணாநிதியா இவ்வாறு செய்ய உத்தரவிட்டார்? இவர் தானே இந்த எதிர்ப்பலையை ஏற்படுத்தியவர்? ஏன் இவ்வாறு பின் செய்தார்? ஒன்றுமே புரியவில்லை? யாராவது இதுபற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்களேன்.

அண்ணோய் .. இதை தான் சொல்லுரது பிள்ளையயும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது என்று.. :):D

குடி காறன் போதைல உலருவான் அரசியல் வாதிகள் குடிக்காமலே உலருவாங்கள்.. :lol:

இதெல்லாம் அரசியலில சகயம் அண்ணா.. :lol::lol:

அண்ணோய் .. இதை தான் சொல்லுரது பிள்ளையயும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது என்று.. :D:(

குடி காறன் போதைல உலருவான் அரசியல் வாதிகள் குடிக்காமலே உலருவாங்கள்.. :lol:

இதெல்லாம் அரசியலில சகயம் அண்ணா.. :lol::)

சகயம் .. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையன் தானே விட்டு விடுங்கோ......................சகஜம்

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் சீமான், அமீருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் 19ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப் பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சீமான், அமீர் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. மனுவை 31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற வக்கீல் சந்திரசேகரன் மற்றும் வக்கீல்கள் ராமசாமி, ஆர்வலன், நம்புநாயகம் ஆகியோர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகி, சீமான், அமீருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொடா சட்டத்தின் கீழ் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தொடர்பான வழக்கில், 'தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது சட்ட விரோத செயலோ, பயங்கரவாத செயலோ ஆகாது. நேரடியாக ஆயுத உதவிகளைக் கொடுப்பதுதான் பயங்கரவாதம்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளதை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைத் தொடர்ந்து, இயக்குநர்கள் சீமான், அமீருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி மாயாண்டி உத்தரவிட்டார். மதுரை ஜேஎம்&1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் கையெழுத்திட வேண்டும். சம்மன் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இருவருக்கும் தலா 2 பேர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

ராமேஸ்வரம் கோர்ட்டில் உத்தரவாதம் கொடுத்த பின், இருவரும் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்.

thanks dinakaran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.