Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையும் கானமும்!!

Featured Replies

  • தொடங்கியவர்

வறுமையும் நோயும் வந்துற்றாலும்

கொடுமையின் கொடுங் கோலுடைக்க

கொதிப்பிளம்பாய் பொங்கியெழும்

கூட்டத்தின் தாகங்கள் கூவாமல் போய்விடுமோ?

இன்று மூண்ட நெருப்பா இது

நின்று நிதானித்து வளர்ர்ந்த பயிரல்லவா?

வீண் கதையும் குழப்பமும் ஏன்?

சாண் சறுக்கினாலும் முழமேறும் காலம்வரும்!!

http://www.esnips.com/doc/58331a72-057a-4b...anthira-Thaagam

Edited by sOliyAn

  • Replies 99
  • Views 10k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சஞ்சலம் ஏன் மனமே

பார்த்ததும் செவியேற்றதும்

உன்னிலை குலைத்தாலும்

சஞ்சலம் ஏன் மனமே?

வஞ்சகர் சொற்களும்

விஞ்சிடும் குதர்க்கமும்

உன் வழிதனைத் தளர்த்திடும்

சஞ்சலம் துற மனமே!!

http://www.esnips.com/doc/8cabc984-3386-42...athai-Nampaathe

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ...............சாண் ஏறினாலும் முழம் சறுக்கும் நம்பிக்கையே வாழ்கை .

எதிகாலத்தை நானும் நீங்களும் நம்புவோம்.

  • தொடங்கியவர்

பிறப்பிலும் இறப்பிலும்

அழுகையில் அடைக்கலமாகும் மனிதா

சிறக்க நினைத்து சிரித்திரு

சிரிக்க நினைத்து சிறந்திரு!!

உன்னை அறிவாய்

உன்னிலை தெரிவாய்

உன்னலம் துறப்பாய்

உன்னதம் பெறுவாய்!!

http://www.esnips.com/doc/202a4ac2-3e4e-4a...Pirakkum-Pothum

Edited by sOliyAn

அழுகையில் ஆடைக்கலமாகும் மனிதா

சிறக்க நினைத்து சிரித்திரு

சிரிக்க நினைத்து சிறந்திரு!!

எனக்கு மிகவும் பிடித்த பாடல் சந்திரபாபுவின் மனதை வருடும் குரலில். :D

  • தொடங்கியவர்

ஆரம்பித்த பின்னே தயக்கமென்ன

எடுத்துவைத்த அடியில் தடுமாற்றம் யாதோ

தொடுத்த குறியில் தளம்பல் முறையோ

தொடரட்டும் எங்கள் நோக்கத்தின் உழைப்பு!

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் இருபக்கம்

சத்தியம் இறுதியில் வென்றதே சரித்திரம்

நம்பிக்கை ஒன்றுதான் வாழ்க்கையின் ஏற்றமே

நம்பிக் கை தூக்கினால் வெற்றியின் தோற்றமே!!

http://www.esnips.com/doc/e63305b8-68b1-44...ntha-Pin-Maname

எதிர்காலம் எமதென்று நம்புவோம் சகோதரி!

சிறப்பாக வாழ முயற்சிப்போம் மல்லிகை வாசம்.. களிப்போடு வாழுவோம்!! :D

Edited by sOliyAn

நம்பிக்கை ஒன்றுதான் வாழ்க்கையின் ஏற்றமே

நம்பிக் கை தூக்கினால் வெற்றியின் தோற்றமே!!

எதிர்காலம் எமதென்று நம்புவோம் சகோதரி!

சிறப்பாக வாழ முயற்சிப்போம் மல்லிகை வாசம்.. களிப்போடு வாழுவோம்!! :D

ஆமாம், அத்துடன் புதிய நல்ல சிந்தனையுடன், நாளைப்பொழுதை தொடங்குவோம். :D

  • தொடங்கியவர்

நிச்சயமாக! மனம் மகிழ்வாக இருந்தால் நாள் மகிழ்வாக அமையும்!!

மாறுது மாறுது யாழ் களமும் மாறுதாமே :icon_mrgreen:

காலம் மாறுது கருத்தும் மாறுது

கோலமும் மாறுது மனிதனும் மாறு(கி)றான்

ஏ மாற்றமே! ஏமாற்றமாக வராதே!!

http://www.esnips.com/doc/514f0c46-cf97-4f...Kaalam-Maaruthu

  • தொடங்கியவர்

ஏய் மனிதா!

தினமொரு கதைபேசி

மனம்தனை மறைத்து

முரண்படு கோலம்ஏனோ?

உடலால் வளர்ந்தாய்

உளத்தால் ஏன் மலிந்தாய்

போலிப் போர்வையைக் களைந்தெறி

வேலிகள் வேண்டாம் வலிகளும் வேண்டாம்!!

http://www.esnips.com/doc/0aa438c0-e853-4a...d/Etho-Manithan

  • தொடங்கியவர்

என்னென்று உன்னை அழைப்பேன்

ஆயிரம் சொற்களுள் எதனை தெரிவேன்

வார்த்தையுள் அடங்கும் ஜீவனா நீ

அர்த்தங்கள் பற்பல உன் அசைவினில்!

பொன்னாய் பூவாய் பொக்கிசமாய் நீயிருக்க

பொன்னையும் பொருளையும் உனக்காக கேட்க

புல்லனா நான்.. உன் கலங்களின் தொகுப்பினுள்

சுவாசம் மறந்த புலவன் நான்!!

http://www.esnips.com/doc/49a63608-c676-4a...enrum-Poovenrum

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பாடல்.ரொம்ப நாட்களுக்குப் பின் கேட்க கிடைத்தது.

தொடரட்டும் உங்கள் சேவை.

  • தொடங்கியவர்

அருமையான ஒரு பாடல்.ரொம்ப நாட்களுக்குப் பின் கேட்க கிடைத்தது.

தொடரட்டும் உங்கள் சேவை.

தொடரட்டும் உங்கள் பார்வை! :o

  • தொடங்கியவர்

மனம் வருந்தி மதிகெட் டென்னபலன்

கணம் உறைந்து கலங்குதலு மென்னசெயல்

எதிரும் புதிரும் எல்லைகளா யிருப்பதை

எண்ணிப் பார் நம்பிக்கை தெரியும்?

துன்பத்தின் முடிவில்தானே இன்பம்

தோல்வியின் இறுதிதானே வெற்றி

நம்பிக்கை கொண்டே நிமிர்த்திடு நெஞ்சம்

இருளின் முடிவில் பொழுது புலரும்!!

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

  • தொடங்கியவர்

வசதியும் வாய்ப்புமுள்ளவன்

வாய் கிழிய கத்தட்டும்

அல்லலுள் அனலாக எழுந்தீர்களே

அனைத்திற்காகவும் உங்களை இழந்தீர்களே

ஓடி ஓடி உழைத்தீர்களே

கூடி வாழவென விளைந்தீர்களே

நாளை நமதென உங்கள் கரங்களில்

உலகம் இனிதாய் சுழலட்டும்!!

http://www.esnips.com/doc/2c2f7277-0282-49...2d/Ungal-Kaikal

  • தொடங்கியவர்

சாதிகள் இல்லையங்கே

அடிமைகள் இல்லையங்கே

பேதங்கள் பிரிவுகள் விருப்புகள் வெறுப்புகள்

மொத்தமாய் மறைந்த இடம்!

ஆடும்வரை ஆடிய ஆட்டமும் இல்லை

கூடும்வரை கூடிய கூட்டமும் இல்லை

அமைதி தவளும் அற்புதச் சோலையது

மனிதன் மனிதனாய் முடியும் பூமியது!!

http://www.esnips.com/doc/e2434075-224a-4b...m-Ulaavum-Idame

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன் ........

இந்த மனிதர்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ஆடும் ஆட்டம்

சமரசம் உலாவும் இடம் போகும் வரை ?

முடிந்தால் " வீடு வரை உறவு " பதியவும். போகுமிடம் உன் புண்ணியம்....

செய்த தான தர்மம் ......தான் வரும் .

  • தொடங்கியவர்

தாங்கள் கேட்ட பாடல்!

உறவுகள் என்பது வாழ்வா - அதன்

பிரிவுகள் பிறப்பது சாவா? :unsure:

http://www.esnips.com/doc/a5dcc9ed-add3-47...eeduvarai-Uravu

  • தொடங்கியவர்

ஆணவம் கொண்டவர்கள் இன்று

ஆண்டதென்ன கொண்ட தென்ன

வீணவம் கேட்டு கெட்டமை சரித்திரம்

தொடர்கதையாக தொடரு தன்றோ?

பெண்ணிலே தோன்றி பெண்ணிலே சார்ந்து

மண்ணுக்குள் போகும் மாந்தா!

உன் உழைப்புக்கும் செலவுக்கும்

அவள்தானே வரவு வைத்தாள்!!

http://www.esnips.com/doc/8d0f213b-e1e2-43...nnaiyin-Madiyil

  • தொடங்கியவர்

ஏய் மனமே!

ஏன் முறையற் றலைகிறாய்?

உன்னை நெறிப்படுத்தலில்

நான் தறிகெட்ட வனானேன்

உன் எல்லைகள் விரிவடைய

நான்தானே சரி வடைந்தேன்

உன் தொல்லைகள் முடிய

நானும் வையத்தில் வாழ்வேனோ?!

http://www.esnips.com/doc/a44c35c2-185e-4e...24ff7/Manam-Oru

  • தொடங்கியவர்

பறவைகளும் விலங்குகளும்

களிப்போடு வாழ்கையிலே

ஆறறிவு மனிதா

உனக்கென்ன கவலை!

சாதனைகள் படைத்து

போதனைகள் செய்பவனே

கவலை என்ன சொல்

வாழத் தெரியவில்லையா?!

http://www.esnips.com/doc/6599606a-c484-49...al-Sirippuvarum

சோழியன் அண்ணை,

உங்கள் பாடல்களை கொஞ்ச நாள் கழித்து வந்து கேட்கிறேன். தொடரட்டும் உங்கள் இசை வேள்வி... :unsure:

  • தொடங்கியவர்

சோழியன் அண்ணை,

உங்கள் பாடல்களை கொஞ்ச நாள் கழித்து வந்து கேட்கிறேன். தொடரட்டும் உங்கள் இசை வேள்வி... :)

:( கொஞ்ச கொஞ்ச நாள் இனிக்கும்.. அப்படியே ஆகட்டும்!! :(

  • கருத்துக்கள உறவுகள்

"தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வில் "..........அருமை ,தத்துவமான பாடல் நன்றி .............

"தென்றல் வரும் சேதி வரும் திருமண நாளும் வரும் " ........என்ற பாடல் கிடைக்குமா ?

  • தொடங்கியவர்

"தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வில் "..........அருமை ,தத்துவமான பாடல் நன்றி .............

"தென்றல் வரும் சேதி வரும் திருமண நாளும் வரும் " ........என்ற பாடல் கிடைக்குமா ?

யார் பாடியது.. என்ன படம்.. இப்படி ஏதாவது விபரங்களைத் தந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கலாம். மன்னிக்கவும்.. என்னிடம் கைவசம் இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் பாடியது.. என்ன படம்.. இப்படி ஏதாவது விபரங்களைத் தந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கலாம். மன்னிக்கவும்.. என்னிடம் கைவசம் இல்லை. :lol:

எங்கடை சோழியும் ரெக்கோடிங் பார் திறந்துட்டார் போலை கிடக்கு :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.