Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம்-விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய மயிரை நக்கும் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் 2006 ஆம் ஆண்டளவில் நெடுக்கால் போவன் என்ற பெயரில் புலிகளை விமரிசித்து பல கருத்துகளை பதிந்த நபர் வேறெருவாரா?

எனக்குக் கூட தனிமடலில் புலிகள் வேறு தமிழ்மக்கள் வேறு என்பதை 100% ஏற்றுக்கொள்வதாக எழுதினீர்களே? அப்போது என்ன போதையில் இருந்தீர்களா?

இல்லை நான் முன்பு தவாறாக நடந்துகொண்டேன் தற்போது திருந்திவிட்டேன் என்றால் நீங்கள் முன்னால் துரோகியா?

குற்றச்சாட்டு 1 க்குப் பதில்...

2006ம் ஆண்டு மாவிலாறை மையமாக வைத்து அரசு போரை ஆரம்பித்த போது.. ஒரு அங்குலம் நிலத்தையும் எதிரிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தான் சொன்னார்கள். ஆனால் இறுதியில்.. மாவிலாற்றுக்குள் இராணுவம் நுழைந்து கொண்டது. பொதுமக்களும் பெருமளவில் இடம்பெயந்து அவல நிலை உருவானது... அதற்குப் பதிலடியாக..

2006ம் ஆண்டு மூதூர் வரை கைப்பற்றியவர்கள்.. பின்னர் திடீரென்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதாகச் சொல்லி ஒரு தலைப்பட்சமாக தீர்மானித்து வெளியேறினார்கள். ஆனால் இன்று அந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிச்சு அரச படைகள் வெளியேறுமா..???! ஒப்பந்தமே இல்லை என்று ஆகிப்போச்சுது. அன்று யாருக்காக அந்த மதிப்பளிப்பைச் செய்தார்கள்...??! அது தொடர்பில் அப்போதே கேள்விகளை எழுப்பினோம்..??! ஏன் பின்வாங்கினார்கள்... மாவிலாறில் இருந்து படையை விலக்கக் கோரி நிற்பந்திக்க அதை ஏன் பாவிக்கக் கூடாது என்று அன்று கேள்வி எழுப்பினோம். இன்று வரையும் அதற்கு எமக்கு விடை தெரியவே இல்லை..??! ஆனால் அன்று தொடங்கிய விட்டுக்கொடுப்புக்கள் இன்றும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

தெந்தமிழீழத்தில் மக்கள் அவலத்துக்குள் விழுந்த போது அதற்காகக் குரல் கொடுக்க இன்று போல் அன்று புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக முன்வரவில்லை. மாறாக அன்றைய சூழ்நிலையில்.. அறிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பெரும் வெற்றிச் செய்திக்காக அதீத நம்பிக்கையோடு காத்திருந்தனர். அறிக்கைகளும் அப்படித்தான் விடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த வேளையில் அந்த மக்களின் அவலத்தைப் பேசினோம். இப்போதும் வன்னியில் உள்ள மக்களின் அவலத்தைப் பேசுகின்றோம். அதேவேளை சிங்கள இராணுவத்துக்கு உலகமே உதவிக்கரம் நீண்டும் போது தமிழர்களின் இராணுவத்துக்கு போராட்ட சக்திக்கு உதவிக்கரம் நீண்ட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து விடுதலைப்புலிகளுக்கான உதவிக்கரம் நீள வேண்டும் எங்கிறோம்.

அப்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளின் தன்மைக்கும் நடந்த நிகழ்வுகளுக்கும் இடையே மாறுபாடு இருந்தது எனவே கேள்வி எழுப்ப வேண்டி ஏற்பட்டது. ஆனால் இன்று அப்படியல்ல. இன்று அவர்களும் நிதானமாகவே அறிக்கை விடுகின்றனர். மக்களை தவறாக வழிநடத்த நினைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் சில செயற்பாடுகளையும் மக்களின் நலன் வேண்டி விமர்சிக்க உரிமை உண்டு என்ற ரீதியில் அன்று கருத்து வெளியிட்டோம். அன்று வந்த அறிக்கைகள் அப்படி.. விமர்சிக்க வைத்தன..!

குற்றச்சாட்டு 2..

நான் தனிமடலில்... விடுதலைப்புலிகள் வேறு தமிழ்மக்கள் வேறு என்று எழுதியதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள். நீங்கள் தவறாக எனது கருத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள் அல்ல என்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை. போராளிகள் (விடுதலைப்புலிகள்), பொதுமக்கள் என்ற பாகுபாடு இருக்கிறது. ஆனால் மனிதாபிமானம் என்று வரும் போது அந்தப் பாகுபாடும் இருக்காது. அரசாங்கம்.. இராணுவம்.. பொதுமக்கள் என்ற பாகுபாடு அங்கும் இருக்கிறது. விடுதலைப்புலிகளே தங்களை பொதுமக்கள் என்று சொல்லவில்லை. தனிமடலில் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உங்களுக்கு தெளிவாகவே கூறியிருந்தேன். அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அவர்களே தங்களைப் பொதுமக்கள் என்று இனங்காட்டிக் கொள்ளவில்லை. போராளிகள் என்றே இனங்காட்டிக் கொள்கின்றனர். அதுதான் உண்மையும் கூட. அவர்கள் ஒருபோதும் தம்மைப் பொதுமக்கள் என்று சொல்லகி கொள்ளவும் மாட்டார்கள். நீங்கள் இதில் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்காக குரல் கொடுத்தல் என்பது விடுதலைப்புலிகளுக்கு எதிரானது அல்ல. அப்படிச் செய்வது விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள் அல்ல என்றோ அல்லது அவர்கள் தமிழ்மக்களின் பிள்ளைகள் அல்ல என்றோ அல்லது அவர்கள் மட்டுமே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்றோ அர்த்தப்படுத்தாது. அப்படி அர்த்தப்படுத்த நினைப்பது கருத்துத் திரிபு மட்டுமன்றி உங்களை நீங்களே நடுநிலையாளன் என்று சொல்லிக் கொள்வதை ஒட்டுமொத்தமாக சிதறடித்துவிடும். :)

குற்றச்சாட்டு 3...

சம்பந்தப்பட்டவர்களும்.. மக்களும் மாறிவிட்ட நிலையில் நாம் 2 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த அதே கருத்தையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தில் இல்லை. விடுதலைப்புலிகள் சரி.. புலம்பெயர் தமிழர் சமூகம் சரி.. தமிழக தமிழ் சமூகம் சரி.. இன்று மனிதாபிமான அவலத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். போர்க்கள வெற்றிப்பிரதாப அபரிமிதமான அறிக்கைகள் வருவதில்லை. கள நிலவரத்துக்கு அமைய கருத்துக்கள் தெளிவாக வழங்கப்படுகின்றன.

ஆனால்.. அன்று ஒருவர் ஒரு அங்குலம் நிலமும் பறிபோக விடோம் என்று அறிக்கைவிட்டார் தான். இன்னொருவர்.. தமிழீழக் கட்டுமானங்களை சிறீலங்கா விமானப்படை தொட்டும் பார்க்க முடியாது என்றார்.. இன்னொருவர் வன்னிக்குள் படை நுழைய முனைந்தால் சவப்பெட்டிக்கள் தான் தென்னிலங்கைக்குப் போகும் என்று ஆளுக்காள் அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருந்தனர். அந்தச் சூழல்.. பொதுமக்களின் பாதிப்பும்.. கள நிலவரமும்.. வந்து கொண்டிருந்த அறிக்கைகளுக்கு மாறாக இருந்த சூழல். அதுவல்ல இன்றைய சூழல். இன்று நியாயத்தை.. மனிதப் பேரவலத்தை எல்லோரும் மதித்து அதற்கு முக்கியமளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. சங்கரி.. கருணா.. டக்கிளஸ் போல.. மக்கள் நலனில் அக்கறையற்ற.. போராட்ட நலனில் அக்கறையற்ற அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதல்ல.. நடுநிலைமை..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிளாலிக் கடற் பகுதியை இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கைப்பற்றிவிட முடியும் எனும் நம்பிக்கையில் உள்ள அரசோடு கைகோர்த்தால் வடக்கு மக்களுக்கும் பயனுள்ளதாக வரவு - செலவுத் திட்டத்தை மாற்றலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கீழ இப்பிடி ரெண்டு கருத்துக்கள் இருக்கிது.. அப்புறம்..

சாணக்கியனை யாழ் கள அறிஞர்கள் (?) எல்லாரும் அணிதிரண்டு போட்டுத்தாக்கின்றார்கள். இப்பிடித்தான் பனங்காய் அவர்கள் "மிஸ்டர் முரளி" எண்டு கருணா பற்றி டெய்லி மிரரில் வந்த கட்டுரையை யாழில கொண்டுவந்து ஒட்டி இருந்தார் எல்லாரும் வாசிச்சி மகிழ்வதற்கு. ஆனால் அதுகள்பற்றி எங்கட அரிஞர்மார் ஒண்டும் சொல்ல இல்லை. ஏன் எண்டால் பனங்காய் ஒரு வி.பு ஆதரவாளராம்.

அதாவது உண்மையை சொன்னால்.. எங்கட ஆக்களுக்கு அஜித் ஏதோ சொன்னார் எண்டு காதுவழியாக ஏதோ கதை வந்த உடன ரோசம் எல்லாம் பொங்கி வழிஞ்சு அவரி(னி)ண்ட படம் இனி பார்க்க மாட்டம் எண்டு சபதம் எடுத்திச்சீனமாம். புறக்கணிப்பு செய்திச்சீனமாம். ஆனால்...

ஊரில சனத்தை கடத்துற, கொலை செய்யுற கருணாவிண்ட செய்திகளை அவர்களால் புறக்கணிக்க முடிய இல்லை. சதா எந்தநேரமும் கருணா என்ன சொல்லுரார்.. என்ன செய்யுறார் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறீனம்.

வி.புலிகள் கூட கருணா வாயால என்ன வருகிது எண்டு இவ்வளவு ஆர்வம் காட்டி கருணாவின் அறிக்கைகளை காதுகொடுத்து கேட்பார்களா என்பதே சந்தேகம். யாழ் கள அறிஞர் பெருமக்களிண்ட (பெருமொக்குகளிண்ட) புத்திசாலித்தனம் விளங்க இல்லை.

அப்படி யாரும் பார்த்து எழுதுவதில்லை

தற்செயலாக அந்த நேரம் அவர் எழுதியது எமது கண்ணில் படாது விட்டிருக்கலாம்

அல்லது வேறு விடயமாக விவாதம் கனமாக இருந்திருக்கலாம்??????????

இங்கே அநேகமானபேர் தேச அபிமானிகள்தான்

ஆனால் அவர்களுடனும் நான் பலமுறை முரண்பட்டிருக்கிறேன்

முரண்படுவது எம்மை நாமே புடம்போட்டுக்கொள்ளவே தவிர

மற்றவனுக்கு வக்காலத்து வாங்க அல்ல

அறிஞர் பெருமக்களிண்ட (பெருமொக்குகளிண்ட) புத்திசாலித்தனம் விளங்க இல்லை.

முதலில் உம்மை அறிவாளியாக நீரே பிரகடனப்படுத்துவதை நிறுத்தலாமே??????

புலிகள் சிங்களஇராணுவத்தினரை கொல்லும் போதும், சிங்கள இராணுவம் புலிகளை கொல்லும் போதும் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். எனவே இரண்டு சந்தர்பங்களையும் கண்டிக்கத் தவறியதால் நான் நடுநிலை தவறியதை ஒத்துக்கொள்கிறேன்!

:):unsure::o:lol::lol::lol::lol:

நீங்கள் தமிழா? சிங்களமா? அல்லது தமிழ் பேசும் வேறினத்தவரா?

post of the day......... :lol:

அப்படி யாரும் பார்த்து எழுதுவதில்லை

தற்செயலாக அந்த நேரம் அவர் எழுதியது எமது கண்ணில் படாது விட்டிருக்கலாம்

அல்லது வேறு விடயமாக விவாதம் கனமாக இருந்திருக்கலாம்??????????

இங்கே அநேகமானபேர் தேச அபிமானிகள்தான்

ஆனால் அவர்களுடனும் நான் பலமுறை முரண்பட்டிருக்கிறேன்

முரண்படுவது எம்மை நாமே புடம்போட்டுக்கொள்ளவே தவிர

மற்றவனுக்கு வக்காலத்து வாங்க அல்ல

அறிஞர் பெருமக்களிண்ட (பெருமொக்குகளிண்ட) புத்திசாலித்தனம் விளங்க இல்லை.

முதலில் உம்மை அறிவாளியாக நீரே பிரகடனப்படுத்துவதை நிறுத்தலாமே??????

அட அட குகதாசன் அண்ணைக்கு ஏறிப்போச்சிது. ஹாஹா. ஐயோ நான் உங்கள சொல்ல இல்லை. கோவிக்காதிங்கோ. யாருக்கு சொன்னனான் எண்டு அவேயுக்கு விளங்கும். நாம ஒரு சாதாரண பொதுமக்கள் எண்டு ஏற்கனவே சொல்லி இருக்கிறம். உங்கள் அளவுக்கு நமக்கு அறிவு கிடையாது. தற்செயலாக அந்த நேரம் அவர் எழுதியது உங்கட கண்ணில படாது விட்டு இருக்கலாமோ? ஓம் அண்ணை இஞ்ச கருத்து எழுற எல்லாரும் கண்மண் தெரியாமல்தான் எழுதிறீனம். ஒரு முறை இருமுறை அப்படி நடந்தால் நீங்கள் சொல்லிறமாதிரி ஏற்றுக்கொள்ளலாம். இதுபல தடவைகள். இவர்களிற்கு கண் இருக்கிதா எண்டுறதே கேள்விக்குறி. மற்றது இஞ்ச கருத்து எழுதுற பலர் தேச அபிமாணிகள் எண்டு சொல்லுறீங்கள். உத யாரிட்ட சொல்லி அழுவுறது எண்டு தெரிய இல்லை. இஞ்ச எழுதப்படுற கருத்துக்களை வாசிக்க தேச அபிமாணிகளிண்ட கருத்துக்கள் மாதிரி தெரிய இல்லை. கவுண்டமணி, செந்திலிண்ட கருத்துக்கள் மாதிரி இருக்கிது. சரி கோவிக்காதிங்கோ என.

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களின் பார்வைக்கோளாறால் இருக்கலாம்...................???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.