Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க:

Featured Replies

அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க:

http://www.globaltamilnews.net/tamil_news....=2083&cat=1

ஐக்கிய அமெரிக்க இராச்சிய இராணுவப் படையினரைக் காட்டிலும் இலங்கைப் படைத்தரப்பு வலுவானதென சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகளைவிட விடுதலைப் புலிகளுடனான இராணுவ முன்நகர்வுகளில் எமது படையினர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 7 முனைகளில் இராணுவப் படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசப் படையினரின் முன்னேற்றத்தை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அமெரிக்காவிற்கு சாதகமான பலன் கிட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்இ எமது இராணுவப் படையினர் மிகவும் திறமையான முறையில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தை பலவீனமடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒர் யுத்த தேவதை எனவும்இ புலிகளை தோற்கடிப்பது பகல் கனவு எனவும் சில சக்திகள் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்இ இந்த மாயையை இலங்கை இராணுவம் தவிடுபொடியாக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது கட்டுப்பாட்டு பிரதேச சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி யுத்தத்தை முன்னெடுக்க முனைவதாகவும்இ படையினர் சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்தி புலிகளை வீழ்த்தி வருதாகவும் அமைச்சர் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - சம்பிக்க ரணவக்க :

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு வன்முறைகளின் மூலம் தீர்வு காண முடியாதெனவும்இ சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமே நிலையான தீர்வினை எட்ட முடியும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும்இ அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் ஏனைய சமூகங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத மற்றும் மதவாதக் கொள்கைகள் பயங்கரவாத அமைப்புக்களை வலுப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவேஇ வன்முறைகளைக் களைந்துஇ பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்படுவோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடன் இணைந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்காத அனைவரும்இ வரலாற்றில் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவதனை தவிர்க்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் பயங்கரவாத பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சிவிலியன்களை மீட்பதற்காகவே அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுப்பதாகவும்இ அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அப்கானிஸ்தானில பில்லாடனின் படைகளை அழிக்க அமெரிக்காவுக்கு பதிலாக சிறிலங்கப்படைகளை அனுப்பலாம் என்று சொல்கிறாரோ சம்பிக்க

அடுத்த ஆசிய வல்லரசு சரத் பொன்ஸ். சிங்களமாம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காப் படையினர் அமெரிக்கப் படையினரை விட திறமையானவர்கள் - சம்பிக்க

புதன், 12 நவம்பர் 2008, 14:39 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்]

வன்னி நோக்கி முன்னேறிவரும் சிறீலங்காப் படைகள், அமெரிக்கப் படையினரை விட திறமையானவர்கள் என சிறீலங்கா சுற்றாடல் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கப்படைகள் ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகளுடன் போரடிவருகின்ற போதிலும், இலங்கைப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகன யுத்தத்தை திறமையாகச் செயற்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா தலிபான் கொரில்லாப் போராளிகளை ஒழிப்பதற்கு ஒதுக்கியிருக்கும் 350 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வெற்றியளிக்கவில்லை. ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களைக் கொண்டே விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக இலங்கை அரசாங்கப் படைகள் தோல்வியடைச் செய்துவருகின்றனர்.

பிரபாகரன் அழிக்கமுடியாத கடவுள் என சிலர் தெரிவித்தபோதும், அதனை எமது படையினர் பொய்யாக்கி வருகின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தாலும், பூநகரி நோக்கிப் படையினர் இலகுவாக முன்னேறிவருகின்றனர் சம்பிக்க மேலும் கூறியுள்ளார்.

pathivu

ஹி.... ஹி.....

இலங்கை ராணுவம் சர்வதேசத்தில் உள்ள அனைத்து இராணுவங்களை விடவும் திறமையானது..ஒத்துக்கொள்கிறோம

்.. இல்லையென்றால் அந்த சின்ன நிலப்பரப்பில் 30 000க்கு மேற்பட்ட இராணுவம் தப்பியோடிக்கிறார்களே.. அந்த 30000 பேரும்.. சாலச்சிறந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகல் கனவு பலிக்காது ...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.