Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி சொல்லவா? நன்றி சொன்னால் பிரிப்பது போலா?

Featured Replies

Thindukal%20Porattam.JPG

இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது.

வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம்.

இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பது ஈழத்தில் தினமும் அல்லல் படும் உறவுகளுக்கு நிச்சயம் ஓர் இனிப்பான செய்தி தான்.

"எமக்கு யாருமே இல்லையா?" என்பதற்கு; "நாம் இருக்கின்றோம்" என தமிழகம் உரக்க சொல்லிக் கொண்டிருக்கின்றது. இப்போராட்டங்கள் எந்த அளவுக்கு அரசாங்கங்களின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதை குறிப்பிடும் அளவிற்கு எனக்கு அரசியம் ஞானம் இல்லை. ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு இது ஓர் பெரும் பலமே. "நாம் அநாதைகள் இல்லை" என்ற எண்ணம் எத்தனை பெரிது என்பது அவர்களால் மட்டுமே உணர முடியும் என்பது என் கருத்து.

அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என உட்காராமல் தாமே எழுச்சியில் பங்குபெறும் உறவுகளின் அன்பிற்கு ஈடேது. போராட்டங்களில் கலந்து கொள்ளும் உறவுகள் கைதாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் தொடரும் பங்களிப்புகள் கண்டு மலைத்து போகின்றேன். போரில் பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவது பெரிதல்ல. போரினால் பாதிக்கப்படாத உறவுகள் போராடுவது நிச்சயம் பெரிது தான்.

அங்கு அவர்கள் ஒன்றும் சொர்க்கத்தில் வாழவில்லையே. அரசியல்கட்சிகள், மின்சார பிரச்சனை, விலையேற்றம், மக்கள் தொகை, வேலை, இப்படி பல தலைவலிகள் அவர்களுக்கு இருந்தும்; ஈழத்தில் சாவது என் உறவடா, நான் அக்கிரமங்களை எதிர்த்து கேள்வி கேட்பேன் என வருவது என்பது இலகுவான காரியமா!!!

'நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்' என சொல்வதோடு நிற்காமல் எமக்காக குரல் குடுக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் எமக்கு தெரிந்த முறையில் நன்றி தெரிவிக்க வேண்டும். அண்மையில் கூட தமிழகத்தில் எமக்காய் குரல் குடுத்த மாணவர்களுக்கு, கனடாவில் இருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்திருந்தார்கள். இப்படியான நன்றி அறிவிப்புகள் நிச்சயம் வேண்டும்.

எமக்காக கைது, மழை என எதையும் பொருட்படுத்தாது நிற்கும் எம் தொப்புள் கொடி உறவுகளை 'நன்றி' எனும் ஒரு வார்த்தையில் பிரிக்கலாமா? 'அன்பான நன்றிகள்' என சொல்லலாமா?

உலகெங்கும் போராட்டங்கள், பேரணிகள், எழுத்துக்கள் என பல வழிகளிலும் ஈழத்தில் அல்லல்படும் உறவுகளுக்காக குரல் குடுக்கும் அத்தனை உறவுகளுக்கும் ஈழத்து மக்கள் சார்பாக நான் சொல்ல விரும்புவது 'அன்பான நன்றிகள்'

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல விரும்புவது 'அன்பான நன்றிகள்'

  • தொடங்கியவர்

நீங்களுமா?

[கொப்பிகட் புத்தா]

ஒரே நாட்டுக்குள்(?) ஒரு இனமே மற்ற இனம் பற்றி கவலைப்படாது இருக்கும்போது, நாட்டின் அரசே தனது மக்களை (?) கொல்லும் போது, இன்னோர் நாட்டில் இருக்கும் உறவுகள் குரல் கொடுத்தால் நன்றி சொல்லியாக வேண்டும். இது எனது கருத்து. (அது மட்டுமல்ல நெருங்கிய நண்பர்கள் ஏதாவது உதவி செய்தால் நாம் நன்றி சொல்வது இல்லையா? சிலர் சொல்வர், சிலர் மாட்டார்) அவர்களுக்கு எமது நன்றுயுணர்ச்சியை காட்டவேண்டும்.

கோடி முறை நன்றி சொல்லவேண்டும், நன்றி, நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படும் துன்பத்திற்கு , தமிழக உறவுகள் அனைத்து மட்டத்திலும் குரல் கொடுப்பது , ஆறுதலை தருகின்றது . இத்துடன் நிறுத்திவிடாதீர்கள் .

அன்பான நன்றி தமிழக உறவுகளே . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எமக்கு ..........இதயம் நெகிழ்ந்து போனோம் .

உணர்வை உணர வைத்த உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நன்றி மறப்பது நன்றன்று"

ஆகவே 'நன்றி சொல்வோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.