Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரான ஊரும், விட்டு வெளியேறா நினைவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சமாய்

உள்நுழைந்து பார்க்கும் மழை.. மேலோடு தடவிப்போகும் நிலவு.. உள்ளே புகுந்து

அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று… ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து

நடக்கும் பூனை ஆனாலும்.. விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து

நித்திய கல்யாணி....

இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்..

என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது

அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்)

இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில்

இராணுவத்தினர் நிற்கின்ற புகைப்படம்.. மனசுக்குள் இனம்புரியாத நடுக்கத்தை

ஏற்படுத்தியது.. அந்த முற்றத்தை எனக்கு மறக்கமுடியாது.. இதற்கு முன்பும்

ஒரு நாள் நான் நடுக்கத்தோடும் படபடப்போடும் இந்த முற்றத்தில்

நின்றிருக்கிறேன்.. அது தமிழ்த்தினப்போட்டி முடிவுகளைத் தெரிந்து

கொள்வதற்காக.. கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தினப்போட்டி முடிவுகள்

மத்தியபிரிவு பேச்சுப்போட்டி..

மூன்றாம் இடம் செல்வன்.இ.அன்ரன் கிளி பற்றிமா றோ.க

இரண்டாம் இடம்.. செல்வி.அ.வாணி கிளி புனித திரேசா மகளிர் கல்லூரி..

முதலாம் இடம்.. செல்வன்.த.அகிலன் கிளி மத்திய கல்லூரி..

வினோதன் தான் முதலில் கத்த ஆரம்பித்தான். நண்பர்கள் கத்தினார்கள்.

ஆரவாரித்தார்கள். எனது நடுக்கம் களிகொண்டு ஆனந்தக்கூத்தாடியது.. நான்

எனக்கு நண்பர்கள் பட்டந்தெளிக்கிற அவள் அங்கே இருக்கிறாளா என்று தேடினேன்

நல்லவேளை இருந்தாள்... எப்போதையும் விட இன்றைக்கு அவள் அதிகம்

புன்னகைத்தாள். (என் வெற்றிக்குப்பரிசு) எனக்கு குழந்தைமையின் நினைவுகள்

அதிகமாக இருப்பதாக பெரியம்மா சொல்லுவாள்.. "சின்னப்பிள்ளையில

நடந்ததெல்லாம் நினைவில் வச்சிருக்கிறான்.." என்று அவா சொல்லும்போதெல்லாம்

எனக்கு பெருமையாகத் தோன்றும். இப்போது கட்டாயம் மறந்துதொலைத்து விடவேண்டிய

நினைவுகள் மறுபடியும் எனைக் கிளர்த்திக் கிளர்த்தி வெறியூட்டுகையில்..

சலனப்படுத்துகையில்.. கலவரப்படுத்துகையில்.. தூக்கத்தை துரத்தி பாயில்

என்கூடச்சேர்ந்து புரண்டுகொண்டிருக்கையில் என் நினைவுகளின் மீது வெறுப்பு

எழுந்து படிகிறது... எனக்கு இன்னமும் நினைவுகளில் இருக்கிறது அந்த மங்கலான

மாலைப்பொழுது.. மேகங்கள் கறுத்து மயங்கிக்கொண்டிருந்த அன்றைக்கு நாங்கள்

அக்கராயனுக்கு வந்தோம்.. எங்கள் ஊரைவிட்டுஅகதியாக இன்னொரு ஊருக்கு

அதைவிடவும் அக்கராயன் என்கிற பெயரையே எனது பதின்மூன்று வயதுவரைக்கும் நான்

கேட்டதே இல்லை அன்றைக்குத்தான் கேட்டேன்.. அங்கு தெரிந்தவர்கள் யாரும்

இல்லை உறவினர்கள் யாரும் இல்லை.. இருந்தும்.. போனோம்.. அந்த ஊர் எங்களைத்

தாங்கிக்கொள்ளுமென்ற நம்பிக்கைகள் மேலிட.. எல்லாவற்றையும் இழந்துவிட்டு..

ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றிய மூட்டையுடனும்.. மனசு நிறையப்பாரத்துடனும்.

அக்கராயன் எல்லாவற்றையும் உள்வாங்கியது எங்கள் சுமைகளை இறக்கிவைத்தது.

தன்னால் முடிந்த அளவு புன்னகையையும் எங்கள் முகத்தில் ஏற்றியது. எங்கள்

மனங்களில் இதுதான் எங்கள் ஊர் எனப் படிந்துகொண்டது.. வன்னியின் மனிதர்கள்

எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள் மாற்றங்களைச் சகித்துக்கொள்வதற்கு

அவர்களைப்போல வேறுயாராலும் முடியாது.. அவர்களைப்போல் பொறுமையாகவும்

யாரலும் இருக்கமுடியாது குரல்களற்றும் கூட.. அக்கராயனின் மக்கள்

கிளிநொச்சியில் இருந்து வந்தவர்களை வரவேற்றனர்.. தங்கள் வீட்டு

முற்றங்களில் அவர்கள் குடியிருக்க அனுமதித்தனர். கிட்டத்தட்ட ஏழுவருடங்கள்

கிளிநொச்சியைப் புலிகள் திரும்பக்கைப்பற்றும் வரையிலும் கிளிநொச்சியை

விட்டு வந்தமக்கள் திரும்பவேயில்லை.. வரலாற்றுச்சிறப்புவாய்ந்த யாழ்ப்பாண

இடப்பெயர்வில் வன்னிக்குள் வந்த எவரும், புலிகள் திரும்பவும்

யாழ்ப்பாணத்தை கைப்பற்றுமட்டும் காத்திருக்கவில்லை.. அவர்கள் திரும்பவும்

யாழ்ப்பாணத்துக்கே போய்விட்டார்கள்.. புலிகளை வன்னியிலேயே விட்டுவிட்டு..

ஆனால் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்.. புலிகள் திரும்பக்

கிளிநொச்சியைக் கைப்பற்றுமட்டும்.. துயருள் உழன்றார்கள்.. இதுதான் காலம்

முழுதும் நிகழ்கிறது இதோ இப்போது இரண்டாம்முறையாக. கிளிநொச்சியைவிட்டு

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிற்க

கவிக்கோ,

அருமையான பதிவு, கண்ணுக்குத் தெரியாத அடர்த்தியான சோகம். காவடிக்கு எழுதுகோல் எடுத்தால் கடியும் கூடவருமோ?

இடையிடையே நகைச்சுவையுடன் அகிலன் நன்றாக எழுதியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.