Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார்

Featured Replies

என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார்.

இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

இந்தியாவின் மும்பை நகரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பயங்கரவாத தாக்குதலை அரசாங்கம், ஜனாதிபதி, நாட்டு மக்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்த போது தமிழ்நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையே இன்று மும்பையிலும் நிலவுகின்றது.

பயங்கரவாதிகள் பல முனைகளிலும் நின்று கொண்டே தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பதுடன், பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம்.

சமாதானத்திற்கு எதிராக சர்வதேசம் முழுவதும் பயங்கரவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வைத்தியசாலைகள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு மனித அழிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். இதன் மூலமாக சாதாரண மக்களின் பொது வாழ்க்கையை மட்டுமல்லாது மக்கள் மத்தியில் பயம், பதற்றத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி பொருளாதாரத்தை சீர்குலைப்பதையும் நோக்காகவே கொண்டிருக்கின்றனர்.

பயங்கரவாதம் தொடர்பில் எமக்கு 25 வருடகால அனுபவம் இருக்கின்றது. பயங்கரவாதம் உலக நாடுகளில் வியாபித்துள்ளன. புலிகள் கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். என்பதனால் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒரு குரலாக இருப்போம்.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அர்ப்பணிப்பையும், உறுதியையும் காட்டியுள்ளார். ஒன்று திரண்டு செயற்படுவதற்கும் உறுதியளித்துள்ளார். தொடர்ச்சியான அமெரிக்க தலைமைத்துவம் பொதுவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது என்பதை நிச்சயமாக கூறுவோம்.

இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு மட்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுதல் என்பவற்றில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தார். எனினும் பிரபாகரனின் மாவீரர் உரை இந்தியாவிற்கு சமிக்ஞை கொடுப்பதாக அமைந்துள்ளது.எந்த சமிக்ஞையை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது. புலிகளை தடை செய்வது தொடர்பில் இந்திய நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. புலிகள் தமிழ்நாட்டிலிருந்து பொருட்களையும், தடை செய்யப்பட்ட பொருட்களையும் கடத்துகின்றனர். தமிழ் நாட்டை அதற்காகவே பயன்படுத்துகின்றனர். புலிகள் மீதான தடை தொடராவிடின் இந்திய மண்ணில் பிரச்சினை கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/

அதனை இந்தியா சொல்ல வேண்டும்.***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது மும்பையில் நடந்த தாக்குதல்கள் இந்தியாவை மிகவும் பாதித்துள்ளது.. இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் யார் சிறந்தவர் என்ற போட்டிதான் இந்தியக் கட்சிகளிடையே இருக்கும். எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குச் சிந்திக்க தற்போது நேரம் இருக்காது..

தற்போது மும்பையில் நடந்த தாக்குதல்கள் இந்தியாவை மிகவும் பாதித்துள்ளது.. இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் யார் சிறந்தவர் என்ற போட்டிதான் இந்தியக் கட்சிகளிடையே இருக்கும். எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குச் சிந்திக்க தற்போது நேரம் இருக்காது..

மகாராஸ்ரிராவை ஆள்வதும் காங்கிரஸ்தான்... ஆகவே காங்ரஸ் மீதான நம்பிக்கை ஈனம் ஏற்படுகிறது... பிஜேபி ( VHP, RSS ) போண்ற அமைப்புக்களுக்கு ஆதரவு பெருகிவரும் இந்த வேளையில் இந்த தாக்குதல் இன்னும் அவர்களை பலமாக்கும்...

பிஜேபி அடுத்த முறை ஆட்ச்சிக்கு வந்தால் கட்டாயம் "பொட்டா" போண்ற பயங்கர வாத தடுப்பு சட்டமும் வரும்... விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படாத பட்ச்சதில் அதன் ஆதரவாளர்கள் மீதும் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்தை அது தோற்று விக்கும்... ( ஜெயலலிதா இருக்கும் போது அதுக்கு குறை இருக்காது)

ஆனால் அது இலங்கை அரசுக்கு நன்மை கொடுக்குமா என்பதும் சந்தேகம்தான்....

Edited by தயா

காலம் பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் பயங்கரவாததுக்கு எதிராக தான் போராடுகிறம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது மும்பையில் நடந்த தாக்குதல்கள் இந்தியாவை மிகவும் பாதித்துள்ளது.. இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் யார் சிறந்தவர் என்ற போட்டிதான் இந்தியக் கட்சிகளிடையே இருக்கும். எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குச் சிந்திக்க தற்போது நேரம் இருக்காது..

மிகவும் உண்மையா விடயம் தான் மும்பாய் குன்டுவெடிப்பு இந்தியாவை மிகவும் பாதித்துள்ளது இந்த நேரத்தில் இந்தியா சிறிலங்காவைப்பற்றியோ இல்லை எமது பிரச்சனைகளைப்பற்றியோ தற்போதைக்கு எதுவுமே சிந்திக்காது தங்களுடைய பிரச்சனையைத்தான் முதலில் பார்ப்பார்கள்

அவர்களைப் பொறுத்தவரையில் அதாவது தலைமையை பொறுத்தவரையில் புலிகள் ஒரு பயங்கரவாதிகள் என்பதே அவர்களுடைய நினைப்பாக இருக்கிறது தமிழ்நாட்டினுடைய போராட்டங்களினால் சிறிதளவு மாற்றங்கள் வாறதுமாதிரி தென்பட்டது ஆனால் மும்பாயில் நடந்த பயங்கரவாத செயல் புலிகளையும் மனதளவில் எதிர்க்க சந்தர்ப்பம் தான் அதிகம் என்று நினைக்கிறன்

இந்தியாவில் நடந்தது ஒரு முற்றுமுழுதான பயங்கரவாதசெயல் இது மிகவும் கன்டிக்கத்தக்கது மக்களையே முற்றுமுழுதாக குறிவைக்கப்பட்ட தாக்குதல் இது இந்திய அரசாங்கத்தை குறிவைக்கப்பட்டதல்ல மாறாக இது மக்களை குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள் இதனால் யாருக்கு என்ன லாபம் வீனாக மக்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரச்சனேக்க கலைஞர், பிரதமரை சந்திக்க போவாரோ....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் பிரச்சனையை மத்தியில் ஒரு பிரச்சனையாகவே கருதுவதில்லை; இப்படியிருக்க மும்பைத் தாக்குதல்....மேலும் அவர்களின் எங்களைப்பற்றிய நினைப்புக்கு உரம் தான் சேர்த்திருக்கிறது.

'அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்" என்று சொல்லுவினம்"...அதேதான் எங்கட நிலமை.

எங்கட சனங்கள் படுற கஷ்டம்...குண்டுத்தாக்குதலோட , மழை வெள்ளமும் !!!!!!!!!!:)

அமெரிக்காவின் மீதான பயங்கரவாதத் தாக்குதலின்; பின் விடுதலை அமைப்புக்களைக் கூட பயங்கரவாத பட்டியலில் சேர்;த்து அவர்களை ஒடுக்க அழிக்க பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் பயங்கரவாத அரசுகளுக்கு ஆயுதம், இராணுவ உதவி புரிந்தது. இன்றைய நிலையில் இந்தியாவும் மும்பை தாக்குதலுக்குப் பின் தெற்காசியப் பிராந்தியத்தின் பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் எம்மை மேலும் சின்னபின்னப்படுத்த முயல்வார்கள் என நம்பலாம். எனினும் இந்தியாவின் அரசியல் கோமளித்தனங்கள் எல்லாவற்றையும் மாற்றக் கூடிய சக்தி கொண்டது. அத்துடன் தமிழக எழுச்சி தமிழக அரசியல்வாதிகள் ஒன்றினைவு எம்மீதான அத்தகைய செயலை மாற்றக் கூடிய வல்லமை உள்ளது என நம்பலாம். பொறுத்திருந்து பார்க்கலாம் சிங்குடனான கலைஞரின் சந்திப்பு எப்படி முடிகிறது என்று.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.