Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்.குடன் போர் நிறுத்தம் ரத்து? -எல்லையில் படைகளை குவிக்க இந்தியா முடிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகம்மத், அந் நாட்டு அரசின் பாதுகாப்பில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் அல் கொய்தாவுக்கு தொடர்பிருப்பது தெளிவாகி வருவதையடுத்து பாகிஸ்தான் மீது சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி பாகிஸ்தானுடன் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு காலவரையின்றி ரத்து செய்துவிட்டது.

மேலும் பாகிஸ்தானுடான போர் நிறுத்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் ரத்து என்றால் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியா படைகளை குவிக்கும், தாக்குதலுக்கும் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் கடந்த 5 ஆண்டுகளாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் இதே போல இந்தியா படைகளைக் குவித்தது நினைவுகூறத்தக்கது. 'ஆபரேசன் பராக்கிரம்' என்ற பெயரில் அந்தப் படை குவிப்பு பாகி்ஸ்தானுக்கு பெரும் நெருக்கடி தந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர பாகிஸ்தானுடனான ரயில், விமான போக்குவரத்துகளை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இப்படிப்பட்ட திட்டங்கள் ஏதும் இல்லை என வெளியுறவத்துறை மறுத்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கியானி ஆகியோர் இந்தத் தாக்குதலில் தங்கள் நாட்டுக்குத் தொடர்பில்லை என்று கூறினாலும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஐஎஸ்ஐயின் பல்வேறு அதிகாரிகளும் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதும், அந் நாட்டு ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் தீவிரவாதிகள், அல் கொய்தாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள்?

ஞாயிறு, 30 நவம்பர் 2008( 15:46 IST )

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் படையினர் சுமார் 1 லட்சம் பேரை இந்திய எல்லைக்கு மாற்றுவது குறித்து பாகிஸ்தான் யோசித்து வருகிறது.

இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்த்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க உள்ளோம் என்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் துவக்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போது, இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிறிது பதற்றம் நிலவுவதாகவும் ஒரு உய‌ர் அ‌திகா‌ரி கூ‌றினா‌ர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் எல்லைகளில் இருக்கும் அனைத்து படைகளும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தவும் திட்டமிட்டு வரு‌கிறோ‌ம் எ‌ன்று‌ம், தாலிபான்களுக்கு எதிரான போரில் சுமார் 90,000 முதல் ஒரு லட்சம் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று‌ம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அனுப்பப்பட்டு அங்கு தாலிபான் மற்றும் அல் கய்டா பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எங்களுக்கு மிக முக்கியம் அல்ல என்று ஒரு உயர் அதிகாரி கூறினார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது

http://tamil.webdunia.com/newsworld/news/i...081130021_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பொறுப்பற்றதனமாக நடக்கக்கூடாது, அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவ்வாறு இல்ங்கை விவகாரத்தில் ஈடுபடுவது போல் நடந்துகொண்டால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகும் ஏற்கனவே இந்தியா தனது இறையாண்மைக்குட்பட்ட பகுதியான அருணாச்சல் பிரதேசத்தில் பெரும் பகுதியை சீனாவிடம் இழந்து விட்டு நிற்கின்றது,

இந்தியாவின் ஸ்திரமற்ற தன்மையையே உலகம் விரும்புகிறது ஏன்னெனில் உலக நாட்டு வல்லரசுகள் எல்லாம் பொருளாதார ரீதியாக மோசமான அடியைச்சந்தித்த போதும் இந்தியாவும், சீனாவுமே நன்றாகச்செயல்படுகிறது.

ஏற்கனவே சீனாவில் அமெரிக்காவின் வயித்தெரிச்சல் தலையீட்டின் மூலம் 700000 வேலை வாய்ப்பிழப்பு ஏற்பட்டு விட்டது.

இந்தியாவிக்கு வேறு மாதிரி குளிசை குடுக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது பேதிக்குளிசை போல எல்லோ இருக்கு, நிலமை கடுமையாகத்தான் இருக்கு.

பொது மக்களை குறி வைக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்குள் இந்தியாவையும் பங்காளியாக்கும் மேற்குலகின் திட்டம் ஒருவேளை அம்பலமாகலாம்...

இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா பாணத்தாலும், உயிர் இளப்புக்களாலும் சிரமப்பட்டு வரும் வேளையில் மத்திய கிழக்கின் உருவ ஒற்றுமையும், பழக்க வழக்கங்களும் குறைந்த ஊதிய ஆள்பலமும் கொண்ட இந்தியாவை தங்களின் சார்பான போரை தொடுக்க பயன் படுத்தும் செயல்பாடுகளை அமெரிக்கா செய்வது போல தோண்றுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் துவக்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போது, இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிறிது பதற்றம் நிலவுவதாகவும் ஒரு உய‌ர் அ‌திகா‌ரி கூ‌றினா‌ர்.

:)

தயா,

ஆப்கானிஸ்த்தானுக்கும், பாக்கிஸ்த்தானுக்கும் இடையேயான மலைப்பகுதி ஒருபோதுமே பாக்கிஸ்த்தானினதோ அல்லது ஆப்கானிஸ்த்தானினதோ கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. வஜிரிஸ்த்தான் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வாழும் பழங்குடிகள் எல்லைக்கோட்டின் இருபக்கமும் இருக்கிறார்கள். இவர்களின் உதவியுடந்தான் தலிபானும் அல் கொய்தாவும் எல்லைக்கு அப்பாலும், உள்ளேயும் செயற்பட முடிகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தை அடுத்து வேண்டா வெறுப்பாக முன்னர் ஒருதடவை முஷாரப் தனது படைகளை அங்கு அனுப்பி நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். ஆனால் பழங்குடிகளினதும் தலிபானினதும் கடுமையான எதிர்த்தாக்குதலில் சின்னாபினமாகைப்போன முஷாரப்பின் படைகள் பின்னர் பெருந்தொகைப் பணம் கொடுத்து பழங்குடிகளுடன் சமரசம் செய்துகொண்டனர். அதன் பின்னும் கூட பாக்கிஸ்த்தான் தனது அதிகாரத்தை அங்கு நிலைநாட்ட முடியவில்லை. ஒருகாலத்தில் இதே முஷாரப்பினாலும், பின்னைய நாட்களில் அவரது ராணுவத் தளபதிகளாலும் நன்கு பராமரித்து வளர்க்கப்பட்ட இந்த தீவிரவாதிகளை அடக்குவதென்பது பாக்கிஸ்த்தானினால் முடியாது போகவே அமெரிக்கா எல்லை தாண்டி விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இப்பகுதி மேல் அவ்வப்போது நடத்தி வருகிறது

மிகவும் அடிப்படைவாத இஸ்லாமியத்தைப் பின்பற்றும் இம்மக்கள் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள், சிறு குற்றங்களுக்காக தலையெடுத்தல், கை கால்களை எடுத்தல் போன்ற மிருகத்தனமான செயல்களை செய்துவருகிறார்கள்.

வரலாற்றில் இந்தப்பகுதியும், அதன் மக்களும் எந்தவொரு ராணுவத்தாலுமே வெற்றிகொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாம் உலகப் போரில் ஒரு சாதாரண பத்திரிகையாளராக இங்கு கடமையாற்றிய பிரபல இங்கிலாந்து பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் இப்பகுதியில் நடந்த மோதல் ஒன்று பற்றி எழுதும்போது தமக்குள் எப்போதுமே மோதிக்கொள்ளும் இந்தப் பழங்குடி மக்கள், வேற்றினத்தான் தம்மீது போர் தொடுத்தால் சேர்ந்தே மூர்க்கமாகப் போரிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.அப்போது நேச நாட்டுப் படைகளும், பின்னர் ஆக்கிரமிப்புச் சோவியத் படைகளும் இப்பகுதியில் நடந்த மோதல்களில் கடுமையான இழப்புகளைச் சந்தித்தது மட்டுமல்லாமல், இப்பகுதியை விட்டுத் தோல்வியுடன் வெளியேறியதே வரலாறு.

ஆக பாக்கிஸ்த்தான் சொல்லும், "எல்லைக்கோட்டில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் "என்பது வெறும் பம்மாத்து மட்டுமே !!

  • கருத்துக்கள உறவுகள்

:) மும்பாயில் நடந்தது தீவிரவாதம் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அது நடப்பதற்கான காரணம் என்ன ? இந்தியாவின் மாநிலங்களில் சிறுபான்மையின முஸ்லீம்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 1992 இல் அத்வாணியும் தொண்டர்களும் அயோத்யாவுக்கு யத ராத்திரை சென்று பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்து வீழ்த்தி பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் 2000 அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று போட்டதை நாம் மறந்து விட்டோம். பின்னர் குஜாரத்தில் மோடியின் அரசாங்கம் வெளிப்படையாகவே மதவாதம் பேசி ஆயிரக்கணக்கில் முஸ்ல்லிம்களைக் கொன்றதை ம்றந்து விட்டோம். கடந்த 15 - 20 வருடங்களாக காஷ்மீரில் இந்திய ஆக்கிமிப்புக்குள் அகப்பட்டுச் சாகும் முஸ்லீம்களை நாம் மறந்து விட்டோம், அல்லது "ரோஜா" படத்தை உண்மை என்று நம்பி இருந்து விட்டோம். இவையெல்லாந்தான் முஸ்லீம் தீவிரவாதத்தை அங்கு உருவாக்கியது.

தாவூத் இப்ரகீமும் அவனது தோழர்களும் பாக்கிஸ்த்தானின் கருவிகளாக இருக்கலாம். அதனால் அம்மக்களின் போராட்டம் பயங்கரவாதமாகி விடாது.உரிமை கேட்டு ஓலமிடும் அம்மக்களின் சோகத்தை வெறும் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும் இந்தியா சித்தரிக்கிறது. அதை முழு உலகும் நம்பிக்கொண்டிருக்கிறது. இங்கு பலமானவன் சொல்வதை நம்பும் உலகம் பலவீனமானவன் சொல்வதை கேட்பதில்லை.

எமது நிலையும் அதுதான். உலகிலேயே மிகவும் கொடூரமான தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று எம்மை சிங்களம் கூறுகிறது. அதனால் எமது உரிமைக்கான போராட்டம் இல்லையென்று ஆகிவிடாது. அதுபோலத்தான் இந்தியாவில் இன்று நடப்பதும்.

அப்பாவிகள் எப்பக்கத்தில் கொல்லப்பட்டாலும் அதைக் கண்டிக்க வேண்டும். அவன் இந்துவானால் என்ன முஸ்லீமானால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வளர்ச்சியை , தாங்கி கொள்ளாத நாடுகள் , பாகிஸ்தான் மூலம் இந்தியாவை போருக்குள் இழுக்கவே விரும்பும் .

இந்தியாவை அப்படியான போருக்குள் திணித்து , தகுந்த சந்தர்ப்பத்தில் சீனாவையும் , இந்தியாவுடன் மோதவிட்டு , இந்தியாவை பலவீனமாக்க முனையலாம் .

இனிவரும் காலங்கள் இந்தியாவுக்கு சோதனை மிக்க காலங்களாக அமையுமோ ? என்று அச்சப்பட வேண்டியுள்ளது .

ஈராக்கில் , நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர் பார்க்கப் பட்ட புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் , இன்னும் மூன்றாண்டுகள் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இருக்கும் என்று கூறிவிட்ட நிலையில் , மேற்குலகு போர் இல்லாத உலகை , விரும்பவில்லை போல் தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வளர்ச்சியை , தாங்கி கொள்ளாத நாடுகள் , பாகிஸ்தான் மூலம் இந்தியாவை போருக்குள் இழுக்கவே விரும்பும் .

இந்தியாவை அப்படியான போருக்குள் திணித்து , தகுந்த சந்தர்ப்பத்தில் சீனாவையும் , இந்தியாவுடன் மோதவிட்டு , இந்தியாவை பலவீனமாக்க முனையலாம் .

இனிவரும் காலங்கள் இந்தியாவுக்கு சோதனை மிக்க காலங்களாக அமையுமோ ? என்று அச்சப்பட வேண்டியுள்ளது .

ஈராக்கில் , நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர் பார்க்கப் பட்ட புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் , இன்னும் மூன்றாண்டுகள் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இருக்கும் என்று கூறிவிட்ட நிலையில் , மேற்குலகு போர் இல்லாத உலகை , விரும்பவில்லை போல் தெரிகின்றது .

இந்தியாவின் வளர்ச்சியை இ தாங்கி கொள்ளாத நாடுகள் இ பாகிஸ்தான் மூலம் இந்தியாவை போருக்குள் இழுக்கவே விரும்பும் .

இந்தியாவை அப்படியான போருக்குள் திணித்து இ தகுந்த சந்தர்ப்பத்தில் சீனாவையும் இ இந்தியாவுடன் மோதவிட்டு இ இந்தியாவை பலவீனமாக்க முனையலாம் .

உண்மைதான்

அடுத்த வல்லரசுகளாக இவையே கணிக்கப்பட்டுள்ள நிலையில்

இந்தியா முக்கியமுடிவுகளை எடுக்கவேண்டிய நேரமிது

எமது பிரச்சினை உட்பட..........

இக்கட்டான இந்திய நிலையில் இலங்கை எப்படி செயற்படுகிறது என்பதை இந்தியாவுக்கு புரிந்து கொள்ள நல்ல சந்தர்பம் வாய்க்கலாம்...

ஆனால் இந்தியா புரிந்து கொள்ளுமா என்பது சந்தேகமே...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சகல துறைகளிலும் வல்லரசாக முன்னேறி வருகின்றது. சிலவேளை அமெரிக்கா போன்று ட்ரோனர்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தவும் சந்தர்ப்பம் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டான இந்திய நிலையில் இலங்கை எப்படி செயற்படுகிறது என்பதை இந்தியாவுக்கு புரிந்து கொள்ள நல்ல சந்தர்பம் வாய்க்கலாம்...

ஆனால் இந்தியா புரிந்து கொள்ளுமா என்பது சந்தேகமே...

இது என்ன கதை. நாங்கள் தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்போம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.