Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்மஸ் புதவருட கொண்டாட்டங்கள் தேவைதானா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் பலவாறு கஸ்ரப்பட்டுக்கொண'டிருக்கின்றார்கள் மக்கள் உயிரைக்கையில் பிடித்தவாறு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக மக்கள் வாழ்க்கைநடத்துகின்றார்கள். கிறிஸமஸ் கோவிலுக்குக்கூட செல்லமுடியாதநிலையில் எத்தனை லட்சம் மக்கள் அல்லட்படுகின்றார்கள். இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது ஆனால் இந்தமக்களுக்கு ஒவ்வொருநாளும் பலபேரைபறிகொடுப்பதென்பது ?

சரி புலத்திலிருக்கும் உறவுகள் நாங்கள் என்ன இங்கதான இருக்கிறம் அந்தமாதிரி என்யோய் பன்னவமென்டு தயவுசெய்து இருக்காதீர்கள். அது நமது மக்களுக்கும் எமக்கும் செய்யும் துரோகம். நாம் எல்லோரும் தமிழர்கள் அங்கயென்டாலும் சரி இங்கயென்டாலும்சரி ( காகம் எந்தக்குளத்தில குளித்தாலும் கறுப்பு கறுப்புத்தான் ) அங்கே மக்கள் வேதனையுடன் யேசுபாலகனைவரவேற்றால் நாம் குதுர்கலத்துடன் வரவேற்பது சரியா ? எனவே நாம் அனைவரும் தற்போதைக்கு மனச்சாட்சியுள்ள மனிதர்களென்டால் ஏலமானவரைஆடம்பரங்களைத்தவிர்

Edited by புஸ்பாவிஜி

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வாண்டு இவற்றை முற்றாகத் தவிர்த்திருப்பதோடு நெருங்கிய நண்பர்களிடமும் இவற்றைத் தவிர்த்து அநாவசிய செலவுகளை மீதப்படுத்தி.. தாயகத்துக்கு பங்களிக்கக் கேட்டுள்ளேன்.

கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களாக கிடைப்பவை என்னிடம் ஓரளவு கிடக்கின்றன. அவற்றையும் தாயகத்தில் உறவுகளுக்காக கையளிக்க சிலரை தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர்கள் நிதி உதவிதான் அனுப்புகிறார்கள். பொருட்கள் கடினமாம். இருப்பினும் அவர்கள் உதவ முன்வந்தால்..அவர்களிடம் கொடுப்பேன்..! இன்றேல்.. செஞ்சிலுவையிடம்.. அல்லது ஏலவே மாதா மாதம் பங்களித்து வரும் ஒக்ஸ்பாம் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்..!

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. உண்மையில் தாயகத்தின் மீது அக்கறையுள்ளவர்களும்.. இவ்வாறு அல்லது இதைவிட பலமடங்கு அதிகமாகவோ உதவ வாய்ப்பிருக்கு என்பதற்கே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் புதவருட கொண்டாட்டங்கள் தேவைதானா

இந்த காலகட்டத்தில் நிச்சயம் தேவையற்றது

நான் கடந்த இரு வருடங்களாக எந்த பண்டிகைகளையும், பிறந்த நாட் வைபவம் போன்றவற்றையும் தவிர்த்து வருகின்றேன். எனது வேர்கள் முளைவிட்ட இடமெல்லாம் இரத்தமும் கண்ணீரும் சிந்தப் பட்டுகொண்டு இருக்கையில் இவை கொண்டாடுவது சரியென எனக்கு படவில்லை

ஆனால் என்னிடம் எப்போதுமே ஒரு கேள்வி தொக்கி நிற்கும். நான் இவற்றை கொண்டாடாவிடினும், சினிமா பார்ப்பது, அழகிய இடங்களை பார்பது (உதாரணத்திற்கு நயாகரா நீர்வீழ்ச்சி). அனைத்து வகையான இசையினையும் கேட்பது மற்றும் அதற்காக செலவழிப்பது, உறவினர்களின் திருமண வைபவங்களுக்கு போவது (இப்போதெல்லாம் அவை வைபவங்கள் அல்ல... பெரும் செலவில் நடாத்தப் படும் கேளிக்கை நிகழ்வுகள்) போன்றனவற்றை நான் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். இவை சரியா தவறா என கேள்விக்குள் நான் போகவில்லை. ஆயினும் பண்டிகைகளை கொண்டாடாமல் மட்டுமே விடுவது மாத்திரம் எந்த ரீதியில் சரியானதென தெரியவில்லை

ஆமாம், ஆடம்பர செலவு செய்து கொண்டாடுவது தேவையற்றது தான். அந்தக் காசை ஊருக்கு அனுப்பினால் அங்குள்ள சனத்துக்கு பயனுள்ளதாக அமையும். எம் நண்பர்கள் சிலர் நாளாந்த வாழ்க்கையிலேயே சிக்கனமாக வாழ்கிறார்கள். சேமித்த பணத்தை ஊரிலுள்ள உறவினருக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புக்றார்கள்.

ஆனாலும், பண்டிகை காலங்களில் எனக்கு ஒரு கேள்வி எழுவதுண்டு. ஆடம்பரமாக ஒரு செலவும் செய்யாமல், வெறும் வாழ்த்து சொன்னால் பிழையா? எனக்கு அது பிழையில்லை என்று தோன்றுகின்றது. கள உறவுகளே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆடம்பரம் தேவையில்லை.

ஆனால் குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி வாழ்த்துகளை பரிமாறி கொள்வது தவறில்லை என்பது என் கருத்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடம்பரம் தேவையில்லை.

ஆனால் குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி வாழ்த்துகளை பரிமாறி கொள்வது தவறில்லை என்பது என் கருத்து...

தூயா நான் வாழத்துதெரிவிக்கவேண்டாம் என்ற சொல்லவில்லை. ஒரு நிமிடமாவது இந்த மனிதர்களை நினைத்து கிறிஸமஸ் கொண்டாட்டங்களையும் அதனோடு இனைத்த திருப்பலியையும் ஒப்புக்கொடுங்கள் என்று தான் சொன்னேன். ஆண்டவனிடம் மன்றாடுவதற்கு மதம் ஒரு தடையில்லையென்பது என்னோடகருத்து இப்போது இந்துசகோதரங்களும் கிஸ்மஸ்திருப்பலியில் பங்குபெறுகிறார்கள் நேற்றுஇரவு நான் கோவிலுக்கு சென்றனான் அங்கே இந்துக்கள் தான் அதிகமாகவந்திருந்தார்கள் பார்க்க சந்தோசமாய் இருந்தது. அவர்களுக்காகவும் ஆன்டவனிடம் வேண்டுவதில் தப்பில்லையே தூயா. கடவிளின் துனையும் அவர்களுக்கு அவசியம் என்பது என்கருத்து

குறிப்பு

இதுகொண்ணடாடுவது இல்லை கொண்டாடாமல் ஆடம்பரங்களை குறைப்பது அவரவர் சொந்த விருப்புவெறுப்பு மேலே கூறப்பட்டது அனைத்தும் என்னோடகருத்தேதவிர கட்டளையல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25_12_2008_102_003.jpg

உலகெலாம் சமாதானத்தை கொண்டு வர

உதித்தவர் ஏசு பிரான்

அவரது எண்ணங்கள் மறந்து போனாலும்

அவர் பிறப்பை மட்டும் இன்னும் மறக்காமலிருக்கிறது உலகம்

இறைவனையே

காட்டிக் கொடுக்க

ஒருவன் பிறந்திருந்த போது

இன்றும்

அப்படியானவர்கள் இல்லாமலா போவார்கள்?

மனிதனும் தெய்வமாகலாம்

என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள் மட்டுமா?

இல்லை?

மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவன்

நேர்மையாக வாழ சொன்ன போது

உலகம் கசையால் அடித்து

சிலுவையில் அறைந்து கொன்றது

மரணத்தின் பின்புதான் வாழ்வு மலர்ந்தது

யூதாசுகளுக்கு அன்று மட்டுமே வாழ்வு

ஏசு போன்றவர்களுக்கு மறைந்தும் வாழ்வு

இதுவே

ஏசுவின் பிறப்பு உலகுக்கு தரும் சேதி

உலகில் போர் என்பதும்

துயரம் என்பதும் இன்று நேற்று தொடர்வதல்ல...?

துயரம் தோய்ந்த மக்கள்?

அடிமைகளாக வாழ்ந்த மக்கள்?

விடுதலை பெற்று வாழ்கிறார்கள்.

நத்தார் பண்டிகை

ஆடம்பர பண்டிகை அல்ல

அது சமாதானத்தின் பெருநாள்

யேசு

பிறக்க இடமின்றி

மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார்.

அவரைக் கொல்ல

தேடியவர்கள்

அவர் பிறந்த காலத்தில் பிறந்த

குழந்தைகளை எல்லாம் கொன்றனர்.

சத்தியம் வெல்லும்

இன்றைய நத்தார் தினத்தில்

பாதிக்கப்பட்டிருக்கும்

உறவுகளுக்காக

சற்று நேரம் பிராத்தியுங்கள்

அவர்களுக்காக

சிறிதாக ஏதாவது செய்யுங்கள்

அதுவே ஏசுவின் பெயரில்

நாம் செய்யும் நற் பணி

அனைவருக்கும்

நத்தார் வாழ்த்துகள்

பிறக்க இடமுண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.