Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் தாக்குதல் 200 பலஸ்தீனர்கள் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45329348_006650336-1.jpg

பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர்.

கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை.

இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்பு விமானங்கள் வன்னிப் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாடசாலைச் சிறுவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

செய்தி ஆதாரம்:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/7800985.stm

ஈழத்தில் வன்னியில் இஸ்ரேலிய தயாரிப்பு விமானங்கள் நடத்திய தாக்குதல் பற்றிய விபரங்கள்..

27_12_08_puthu_01.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27844

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த காலத்தில் அமைதியாக இருந்த இடத்தில் வட்டியும் குட்டியுமாக சேர்த்து ஒரு நாளில் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலின் பலத்துக்கு முன் பலஸ்தீனியர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். லெபனான் அண்மையில் செய்த தாக்குதல் மாதிரி இஸ்ரேல் மக்கள் மீது செல் மழை பொழிந்ததன் மூலமே லெபனான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மக்கள் யாராக இருந்தாலும் தாக்குதல் நடத்துவது கண்டிக்க தக்கது. ஆனால் அத்தகைய தாக்குதல்கள் தான் தம்மக்களை காப்பாற்றும் என்றால் செய்ய தயங்கதேவையில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த காலத்தில் அமைதியாக இருந்த இடத்தில் வட்டியும் குட்டியுமாக சேர்த்து ஒரு நாளில் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலின் பலத்துக்கு முன் பலஸ்தீனியர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். லெபனான் அண்மையில் செய்த தாக்குதல் மாதிரி இஸ்ரேல் மக்கள் மீது செல் மழை பொழிந்ததன் மூலமே லெபனான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மக்கள் யாராக இருந்தாலும் தாக்குதல் நடத்துவது கண்டிக்க தக்கது. ஆனால் அத்தகைய தாக்குதல்கள் தான் தம்மக்களை காப்பாற்றும் என்றால் செய்ய தயங்கதேவையில்லை.

இறந்தோர் தொகை 200 ஐ தாண்டி விட்டது. இப்படி ஒரு தாக்குதல் இஸ்ரேலில் நடத்தப்பட்டிருப்பின்.. இப்போ.. அமெரிக்கா.. நேட்டோ வரிஞ்சு கட்டிக்கொண்டு அறிக்கை விட்டிருப்பினம்.

மும்பையில் 175 பேர் கொல்லப்பட்டதற்கு.. எத்தினை நாள் படம் காட்டிச்சினம். ஆனால்.. இது.. இன்னும் இரண்டு நாளில் மறக்கப்பட்டு விடும்.

மக்களைப் பாதுகாக்க இன்னொரு மக்கள் இனத்தைக் கொல்லலாம் என்றால் சிங்களவன் தன்னைப் பாதுகாக்க தமிழனை கொல்லலாம் என்று அர்த்தமா நுணாவிலான்..???! நாளை வன்னியில் இப்படி குண்டு போட்டு மக்களை வகைதொகையின்றிக் கொன்றால்.. நீங்கள் இவ்வாறு எழுதுவீர்களா..??!

கமாஸின் ரொக்கட்டுகளுக்கு உள்ள சக்தியும் எப் 16 ஏவும் ஏவுகணைகளும் ஒன்றா. இஸ்ரேல்.. பலஸ்தீன தேசத்தை உருவாக்கிவிட்ட பின்.. தனக்கு விருப்பமானவைதான் அதை ஆழனும் என்றது.. ஜனநாயகமா..??! :(^_^

அதிகாரமும் படைப்பலமும் உள்ளவன் மக்களை இலகுவாக அடித்துப் பணிய வைப்பதே இன்றைய உலகில் இராணுவ இயந்திரம் கொண்டு செய்யப்படும் அடக்குமுறை அரசியலாகும்..! இது ஜனநாயகம் என்ற போர்வை போர்த்தி நடத்தப்படுகிறது..! :rolleyes:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/7800985.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பாதுகாக்க இன்னொரு மக்கள் இனத்தைக் கொல்லலாம் என்றால் சிங்களவன் தன்னைப் பாதுகாக்க தமிழனை கொல்லலாம் என்று அர்த்தமா நுணாவிலான்..???! நாளை வன்னியில் இப்படி குண்டு போட்டு மக்களை வகைதொகையின்றிக் கொன்றால்.. நீங்கள் இவ்வாறு எழுதுவீர்களா..??!

எனது கருத்துக்கு பிழையான அர்த்தம் கற்பிக்க முயலுகிறீர்கள். நான் கூறிய கருத்து லெபனானின் மக்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த போது பதிலுக்கு லெபனானும் (அரசல்ல) இஸ்ரேல் மீது சரமாரியாக குண்டுகள் பொழிந்ததால் தான் அந்நாடு மீதான ஆக்கிரமிப்பும் , குண்டு மழையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டது என்பது தான் எனது கருத்து. இதற்காக மக்கள் மீது குண்டு மழை பொழிய வேண்டும் என்பதற்கு நான் எதிரானாவன். ஆனால் அங்கு நிகழ்தவற்றையே நான் எழுதினேன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்களுக்கு தடாவாம். அருமையான கருத்தாளர். மீண்டும் சந்திபோம் ஒரு அருமையான விவாதத்தில்,. நன்றி சகோதரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கலிகால உலகத்திலை இருக்கிறதை இல்லாட்டி தாறதை வாங்கிகொண்டு மிச்ச அலுவலை பாக்கிறதுதான் புத்திசாலித்தனம். ^_^

பொன்வாத்து முட்டைகதையள் நெடுகசரிவராது கண்டியளோ :o

ஒரேயடியாய் எல்லாம் வேணுமெண்டால் ???? அவையளுக்கும் சரிவராது எங்களுக்கும் சரிவராது :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.