Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசிய ஊடகங்கள்

Featured Replies

என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க .....

உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும்.

ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கதைத்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் "எம்மவர்கள் இன்றும், தமிழ், ஈழம், .... என்று தமிழ் இணைய ஊடகங்களையும், tamil, eelam... என ஆங்கில ஊடகங்களையும் இயக்குபவர்களாக இருக்கிறார்களே ஒழிய, ஏன் ....

* srilankatourism. ...

* srilankan...

* srilanka....

* lanka....

* srilankanews....

* srilankacricket....

* ....

நடத்தினால் என்ன?" என்று கேட்டார்.

இப்பெயர்களில் ஆங்கிலத்தில், பிறமொழிகளில் இணையத்தளங்களை ஆரம்பித்து, கனக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை .... உதாரணத்திற்கு "tamilnet" போன்றவற்றில் வரும் இனவழிப்பு சம்பந்தமான செய்திகளை படங்களுடனோ, இலங்கையின் நடைபெறும் ஆட்கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையோ, .... போட்டால் .... நாளை, இத்தலைப்புகளில் இலங்கை தொடர்பாக இத்தலைப்புகளில் செய்தி சேகரிக்க வேண்டியவர்களாகட்டும், உல்லாசப் பயணீகளாகட்டும், இலங்கையின் சமய நடவடிக்கைகள் தொடர்பாகவோ, பொருளாதாரம் சம்பந்தமாகவோ, ... வெளிநாட்டவர்கள் உட்பட யாராவது தேட முற்படும் போது இத்தகவல்களையும் பார்க்க நேரிடும்.

இம்முயற்சி மூலம், புலம்பெயர் தேசத்தில் ஒரு சிலருக்காவது இவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தினாலேயே. இம்முயற்சி பயனளித்துள்ளதாக கருத வேண்டும். நிச்சயமாக இப்படியான சில முயற்சிகள் சில தாக்கங்களை கொண்டு வரும்.

இவ்விடுமுறை தினங்களில் சிறிய நேரத்தை "youtube" இல் செலவழித்து, எமது சம்பந்தமான செய்திகளை தேடியபோது, எம்மவர்களை விட சிங்களவன் பெரும் நேரத்தை இதில் செலவழிக்கிறான் என தெரிகிறது. அதுவும் புத்திசாலித்தனமாக!!! எம் சம்பந்தமான செய்திகளை இன்றைய உலக பயங்கரவாத பூச்சாண்டியுடன் இணைத்து செய்தி ஆக்கிக் கொண்டிருக்கிறான். நாமுன் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது????

கூட அறுத்துப் போட்டன் போலக் கிடக்கு. ஏதோ கேட்டதை, மனதில் தோன்றியதை ... உங்களுடன் ....

யோசிக்கவேண்டிய + கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம் நெல்லையன்.

  • கருத்துக்கள உறவுகள்

, ஏன் ....

* srilankatourism. ...

* srilankan...

* srilanka....

* lanka....

* srilankanews....

* srilankacricket....

* ....

நடத்தினால் என்ன?" என்று கேட்டார்.

இப்பெயர்களில் ஆங்கிலத்தில், பிறமொழிகளில் இணையத்தளங்களை ஆரம்பித்து, கனக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை .... உதாரணத்திற்கு "tamilnet" போன்றவற்றில் வரும் இனவழிப்பு சம்பந்தமான செய்திகளை படங்களுடனோ, இலங்கையின் நடைபெறும் ஆட்கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையோ, .... போட்டால் .... நாளை, இத்தலைப்புகளில் இலங்கை தொடர்பாக இத்தலைப்புகளில் செய்தி சேகரிக்க வேண்டியவர்களாகட்டும், உல்லாசப் பயணீகளாகட்டும், இலங்கையின் சமய நடவடிக்கைகள் தொடர்பாகவோ, பொருளாதாரம் சம்பந்தமாகவோ, ... வெளிநாட்டவர்கள் உட்பட யாராவது தேட முற்படும் போது இத்தகவல்களையும் பார்க்க நேரிடும்.

தமிழ் ஈழ மக்களை தனது வாசகர்களாக கொண்ட ஊடகங்கள், தமது வாசகர்கள் தம்மை சரியாக அடையாளம் காணத்தக்கவாறு தமிழ் ஈழம் என்ற பெயர் தாங்கி அமைந்திருக்கின்றன.

சிறி லங்கா பற்றிய தகவல்களில் ஆர்வமுள்ளவர்களை வாசகர்களாக கொள்ள விரும்பும் ஊடகங்கள், சிறி லங்கா என்ற பெயர் தாங்கி வரும்போது தமது வாசகர்கள் தம்மை சரியாக அடையாளம் காண உதவ முடியும்.

சிறி லங்கா பற்றியோ தமிழ் ஈழம் பற்றியோ ஆர்வமில்லாதவர்களை இந்த ஊடகங்கள் தம்மை நோக்கி கவரப் போவதில்லை. உதாரணமாக மனித உரிமைகள் பற்றி பொதுவாக ஆர்வமுள்ள ஒருவர் இந்த ஊடகங்களை குறிப்பிட்டு தேடுவதிலும் பார்க்க, மனித உரிமைகள் பற்றிய தலைப்பிலான ஊடகங்களை தேடும் சாத்தியமே அதிகம். ஒடுக்கப்பட்ட இனங்கள், விடுதலைப்போராட்டங்கள் பற்றிய தகவல்களில் ஆர்வமுள்ளவர்கள், அந்த தலைப்புகளை கொண்ட ஊடகங்களையே பெரும்பாலும் தேடுவர்.

தென்னாசியா வெளிநாட்டு உறவுகள் பற்றிய கொள்கை வகுப்பாளர்கள் அந்த தலைப்புகளை கொண்ட ஊடகங்களை தேடும் சாத்தியம், சிறிலங்கா அல்லது தமிழ் ஈழம் என்ற தலைப்பிலான ஊடகங்களை தேடும் சாத்தயத்திலும் அதிகம். இத்தகைய கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்கா, ஈழத்தமிழர் பற்றிய தமது நாட்டு கொள்கைளில் செலுத்தும் ஆதிக்கம், சிறிலங்கா பற்றி தகவல்களை தேடும் சாதாரண பொதுமக்கள் செலுத்தும் ஆதிக்கத்திலும் பார்க்க அதிகமானது.

ஆகவே, ஊடகங்களை ஆரம்பிக்க முதல் ஏன் இந்த ஊடகங்களை ஆரம்பிக்க இருக்கிறோம்? யாரை இலக்கு வைத்து இவற்றை ஆரம்பிக்க போகிறோம்?இந்த ஊடகங்களை ஆரம்பிப்பதற்கான நோக்கத்தை எவ்வாறு அடைய போகின்றோம்? இந்த நோக்கத்தை அடைவதற்கான காலக்கெடு எது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டு ஆரம்பிப்பது நல்லது. தமிழ் நெற் ஆரம்பிக்கப்பட்ட போது இவ்வாறாக பல கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்நெற் தன்னை தெளிவாக அடையாளம் காட்டிக்கொண்டு ஆரம்பித்ததானால் இன்று அது ஈழத்தமிழரின் அடையாளம் காணப்பட்ட குரலாக செயற்பட முடிகிறது.

ஆனால் நெல்லையன் குறிப்பிட்டது போல சிறிலங்கா பற்றிய மறுபக்கத்தை சொல்ல போதிய ஊடகங்கள் இல்லாத குறை தீர்க்கப்பட வேண்டிய தேவை ஒன்று உள்ளது. வள்ளுவர் சொன்னது போல

" எண்ணித் துணிக கருமம்

துணிந்த பின் எண்ணுவம் என்ப திழுக்கு. "

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெல்லையன். யூ ரியூப் என வரும் போது தான் நானும் எனது சிறு ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். உலகில் எல்லா இன மக்களும் ஏதோ விதத்தில் தமக்கு வேண்டிய எல்லா வித செய்திகளையும் இலகுவாக பார்க்கிறார்கள். அந்த வகையில் எமது பிரசாரம் யூரியூப்பின் மூலம் தாராளமாக வழங்கப்படுகிறது. அதே போல் சிங்களவர்களும் செய்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் தமிழர்கள் இணைக்கும் செய்திகளுக்கு பதில் அளிப்பவர்கள் மிக அதிகமானவர்கள் சிங்களவர்கள், துரோக கும்பல்களும் தான். இவர்கள் அச்செய்தியின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்கிறார்கள். எம்மில் ஒரு சிலர் மட்டும் சிங்களவர்களின் புழுகு மூட்டைகளுக்கு பதிலளிக்கிறார்கள். அதுவும் ஒரு சில சிங்களவர்களால் எள்ளி நகையாடப்படுகிறது. எவ்வளவோ மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தும் சாதாரணமாக ஒரு உண்மையை எழுத ஏனோ மறுக்கிறார்கள் என விளங்கவில்லை.?

  • தொடங்கியவர்

சில வருடங்களுக்கு முன், ஓர் இணையம்(lankasri) இவ்வாறு வந்தது. ஆனால் இன்று அவ்விணையம் தனித்தமிழ், விளம்பர, வியாபார இணையமாகி விட்டது.

இவ்விணையம் வந்தவுடன் யாழிலேயே, சிறிலங்கா அரசின் அனுதாபிகள் தாங்க முடியாமல் தவித்து கருத்தெழுதியது ஞாபகம் இருக்கிறது.

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.