Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)

Featured Replies

கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)

[ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 03:54.30 PM GMT +05:30 ]

பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன। தாகம் தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது। எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்। எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா। அனுபவித்தால் தான் தெரியும்।

கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?

நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது। போகட்டும்।

இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?

இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்। ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। ஏன் இடைநிறுத்தினீர்கள்?

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்। நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்।

காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது। அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம்। அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,

ஓர் ஈழத்தமிழன்

thanks

tamilwin

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

உவர பற்றி நான் ஏதாவது எழுதினா யாழ் நிர்வாகம். அதை உடன நீக்கினம் ..

அப்ப நான் இந்த முறை ஒண்டும் எழுத வில்ல .. பேசாம போறேன் :D:D

உவர பற்றி நான் ஏதாவது எழுதினா யாழ் நிர்வாகம். அதை உடன நீக்கினம் ..

அப்ப நான் இந்த முறை ஒண்டும் எழுத வில்ல .. பேசாம போறேன் :D:D

ஏனெனில், புலிகளினதும் தமிழ் மக்களினதும் தியாகங்கள் இழப்புகள் வீணாக போய்விடக் கூடாது என்று யாழ் நிர்வாகம் நினைப்பதால்

திருமங்கலம் தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திறுங்காள்...நல்ல செய்தி நமக்கு காத்திருக்கிறது..............

  • தொடங்கியவர்

ஏனெனில், புலிகளினதும் தமிழ் மக்களினதும் தியாகங்கள் இழப்புகள் வீணாக போய்விடக் கூடாது என்று யாழ் நிர்வாகம் நினைப்பதால்

வீண்போகக் கூடாது என்பது சரி !!!!

ஆனால் இப்போ நிலமை என்ன? குறிப்பாக இந்திய காங்கிரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இரகசிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றுள்ளது. அது தமிழ்மக்களின் ஒரே

குரலான புலிகளை அழிப்பது. இதனை சமீபத்தில் இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்தால் புரியும்.

இப்போது இந்திய அரசு என்றுசொல்லும்போது திமுகவும் சேர்ந்ததுதான். எனவே சும்மா பேச்சளவில் இன உணர்வு இருந்தால் போதாது. எல்லாம் இழந்துவிட்டபின்பு அழுது கண்ணீர் கவிதை படிக்க எங்களால் முடியாது

ஆனால் இப்போ நிலமை என்ன? குறிப்பாக இந்திய காங்கிரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இரகசிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றுள்ளது. அது தமிழ்மக்களின் ஒரே

குரலான புலிகளை அழிப்பது. இதனை சமீபத்தில் இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்தால் புரியும்.

இப்போது இந்திய அரசு என்றுசொல்லும்போது திமுகவும் சேர்ந்ததுதான். எனவே சும்மா பேச்சளவில் இன உணர்வு இருந்தால் போதாது. எல்லாம் இழந்துவிட்டபின்பு அழுது கண்ணீர் கவிதை படிக்க எங்களால் முடியாது

அப்ப என்ன செய்யலாம் என்றியள்? எல்லாம் முடியும் முன் எல்லோரையும் திட்டி தீர்த்து இன்னும் இன்னும் எதிரிகளை கூட்டுவோம் என்கின்றீர்களா?

காங்கிரஸ் கட்சிக்கும் இலங்கைக்கும் இடையில் கூட்டு என்பதில் தெரிகின்றது எமது உலக அரசியல் அறிவு. இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் தான் உடன்பாடு. அது காங்கிரஸ் இருந்தால் என்ன பா.ஜ. க இருந்தால் என்ன பெரும் வேறுபாடு இருக்காது.. இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பது அரசியல் வாதிகள் அல்ல. யாரு வந்தாலும் அமெரிக்க சார்பு நிலையை தான் இந்திய ஆளும் வர்க்கம் எடுக்கும். பயங்கரவாததிற்கெதிரான போராட்டம் என்று எம்மை அழிப்பதற்கு காரணம் சொல்லும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)

இப்படி கடிதம் எழுதினால் கலைஞருக்கு எப்படி விழங்கும்? கவிதை நயத்துடன் (NOT நயன்தாரா) எழுதுங்கப்பா.......... :blink::wub:

  • தொடங்கியவர்

காங்கிரஸ் கட்சிக்கும் இலங்கைக்கும் இடையில் கூட்டு என்பதில் தெரிகின்றது எமது உலக அரசியல் அறிவு. இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் தான் உடன்பாடு. nizhali

தற்போது ஆட்சியிலிருப்பது காங்கிரசு கட்சியும் அதன் கூட்டாளிகளும்.

பா ஜ கவுடன் ஒப்பிடும் போது காங்கிரசு கட்சில்தான் தமிழர்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இந்திய வெளியுறவு கொள்கை எங்கே போனது.

அரசு கவுளுகின்ற நிலைவரும் போது எல்லாம் மாறும்.

சீக்கய சமுகம் கர்நாட கசமுகம் போன்றவர்களிடம் இருக்கிற ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை.

தற்போது தமிழ்மக்கள் ஒன்றுபட்டு போராடும் வேளையில் எதற்காக தயங்க வேண்டும்.

குட்டக் குட்ட குனிபவன் மடையனா? குட்டுறவன் மடையனா?

Edited by suryaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.