Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீங்களே கற்பனை செய்வதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது

அதேநேரம் தமிழநெற்றை நான் ஒருபோதும் குறைகூறவில்லை

அதேநேரம் தமிழ்நெற்றில் வந்ததெல்லாம் நடந்துவிடவில்லை

எதிலுமே முழுமையான விபரம் பின்னர் என்றுதான் இருக்கின்றது

இதன் அர்த்தம் என்ன...........????

தமிழ்நெட்டை குறைகூறவில்லை என்றால்.. பிறகேன் அந்தச் செய்தியை நம்பிய பிற உறவுகளோடு முரண்பட்டீர்கள்..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டை குறைகூறவில்லை என்றால்.. பிறகேன் அந்தச் செய்தியை நம்பிய பிற உறவுகளோடு முரண்பட்டீர்கள்..??! :rolleyes:

கொஞ்சம் பொறுங்கள் என்பது முரண்பாடா????

அடேங்கப்பா..........

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள் என்பது முரண்பாடா????

அடேங்கப்பா..........

இதில் கொஞ்சம் பொறுங்கள் என்பதை மட்டுமா சொல்லி இருக்கிறீர்ங்கள்..??!

ஏன் நாம் இவ்வாறு அவசரப்படுகின்றோம்

செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை

எங்கிருந்து வந்தது என்றும் தெரியவில்லை

எத்தனை கரும்புலிகள் என்றும் தெரியவில்லை

ஆனால் அஞ்சலி செலுத்துகின்றீர்கள்

எதுவுமே புரியவில்லை

என் இனம் எதைத்தேடி எங்கு சென்றுகொண்டிருக்கிறது.................

..?????????????

தற்செயலாக இச்செய்து தவறு அல்லது இல்லை என்று தெரியவந்தால் எவருக்கு எதற்காக அஞ்சலி செலுத்தினீர்கள்

ஏன் அவர்களைக்கொன்றீர்கள்...............????????????????

தமிழ்நெட்.. செய்தி வெளியிடும் போதே விடுதலைப்புலிகளை மேற்கோள் காட்டி விட்டிருந்தது..! அப்படி இருக்கும் போது.. ஏன் மேற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகளும் இங்கு முன்வைக்கப்பட்டன..??! அதன் அடிப்படையில்.. பின்னர் இச்செய்தி நம்பிக்கைக்குரிய ஒன்றல்ல என்பது போல ஆக்கப்பட்டது ஏன்..??! இதுவிடயமாகத்தான் நான் இங்கு கருத்துப் பகிர்வு செய்கிறேன். மற்றும்படி.. உங்களோடு கருத்துமுரண்பாடு காண வேண்டும் என்றில்லை. அப்படியான ஒரு நிலை வரக்கூடாது. நட்போடு.. இதை இத்தோடு முடித்துக் கொள்வோம்.

நன்றி..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு) கடற்புலிகளின் தாக்குதலில் டோறா மூழ்கடிப்பு - இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவு

திகதி: 20.01.2009 // தமிழீழம் // [வன்னியன்]

சிறீலங்கா கடற்படையின் ரோந்து அணி மீது நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோறா அதிவேகத் தாக்குதல் கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 மணியளவில் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா

Edited by kuddipaiyan26

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறா மூழ்கடிப்பு: 15 கடற்படையினர் பலி

[செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2009, 09:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகளுக்கும் எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் , இருவருக்கும் எனது வீர வணக்கங்கள். மண்ணுக்காய் தங்கள் உயிரை மாய்த்த வீர வேங்கைகளுக்கு தலை வணங்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.