Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை பேட்டி கண்ட நெல்லை பேராசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதைப் பிளக்கும் குண்டு ஓசைகளுக்கு நடுவில் ஈழத்தில் துணிச்சலாகத் தங்கியிருந்து, பிரபாகரனின் மனைவி மதிவதனி உள்பட பலருக்கு சிறப்புத்தமிழ் கற்றுத் தந்து திரும்பியிருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது அந்த அனுபவங்களைக் கேட்டு அசந்து போனோம் நாம்.

அந்த `தில்'லான பேராசிரியரின் பெயர் மு.செ.குமாரசாமி. தற்போது 70 வயது. நெல்லை மாவட்டம் ராயகிரியைப் பிறப்பிடமாய்க் கொண்ட வித்வான் அருணாசலம் பிள்ளை இவருக்கு பெரியப்பா முறை. முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்கள் எல்லாம் அருணாசலம் பிள்ளையின் மாணவர்கள்தான். அருணாசலம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால், குமாரசாமியும் அங்கேயே தனது படிப்பை முடித்திருக்கிறார். அதன்பின் திராவிட இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு குமாரசாமி என்ற தனது பெயரை `அறிவரசு' என மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்து ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த அறிவரசு, பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் தங்கி வாழ ஆரம்பித்திருக்கிறார். பழ.நெடுமாறனுடன் இவருக்கு நெருக்கம் அதிகம் என்பதால், 1983-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அலை தீவிரமாக வீசியபோது நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோருடன் பேராசிரியர் அறிவரசு பல்வேறு இடங்களுக்குச் சென்று புலிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார். இதனால் புலிகளின் கவனம் இவர்மேல் திரும்ப, அதன்பின் நடந்ததுதான் அவரது ஈழப்பயணம்.

அதுபற்றி மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் கடையம் சென்று பேராசிரியர் அறிவரசுவை அவரது வீட்டில் சந்தித்தோம். மிகவும் எச்சரிக்கையுடன் நம்மிடம் உரையாடினார் அவர்.

``1994-ம் ஆண்டு நான் ஓய்வு பெற்ற பிறகு, விடுதலை மற்றும் தென்செய்தி போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். எனது எழுத்தைப் படித்துப் பார்த்த கொழும்பு நண்பர் ஒருவர் (பெயர் வேண்டாம்) என்னைச் சந்தித்து, `உங்களுக்கு இலங்கையில் ஒரு வேலை இருக்கிறது. வர முடியுமா?' என்று கேட்டார். நான் சம்மதித்தேன். கடந்த 2006 மார்ச் மாதம்பக்கா பாஸ்போர்ட், விசாவுடன் கொழும்புக்கு விமானமேறினேன். அங்கு போன பின்னர்தான் அந்த நண்பர், `கிளிநொச்சியில் தமிழாசிரியர் பணி' என்றார். அப்போது ஈழத்தில் சண்டை எதுவுமின்றி அமைதி நிலவிய நேரம். எனவே நானும் ஒப்புக் கொண்டேன்.

புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சிக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்குள்ள நிதி மேலாண்மை கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தக் கல்லூரியைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். உடைந்த ஓட்டுக் கூரை மற்றும் மணல் தரையுடன் ஏதோ 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடம் போல இருந்தது அது.

அங்கே நாற்பது மாணவ, மாணவியர் நிதி மேலாண்மையும், முப்பது பேர் தமிழும் படித்து வந்தார்கள். கல்லூரிப் பொறுப்பாளர் (அவரும் புலிதான்) என்னிடம், `அய்யா....இங்கு அட்வான்ஸ் லெவல் (ப்ளஸ் டூ) முடித்த முப்பது பேரையும் தமிழில் வல்லுனர்களாக்கி தமிழ் ஆசிரியர்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு' என்றார். `இங்கு பேராசிரியர்கள் வேறு யாருமில்லையா?' என்று கேட்டபோது, `யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களை வரவழைப்பது சிரமம்' என்றார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஈழத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிங்கள அரசால் நடத்தப்படுபவைதான். ஆனால், தமிழாசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டால் புது ஆசிரியர்களை சிங்கள அரசு நியமிப்பதில்லை. எனவே, எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்கள் கிடையாது. மொழியை அழித்தால் இனத்தை அழித்து விடலாம் என்பதற்காக சிங்கள அரசு செய்யும் கபடவேலை அது. அதைப் புரிந்து கொண்ட புலிகள், தமிழைக் காப்பாற்றுவதில் உறுதியாயிருக்கிறார்கள். அதற்காக `தனித் தமிழ் இயக்கம்' ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே என்னைத் தமிழ் கற்பிக்க அவர்கள் அழைத்திருந்தார்கள்

மாணவர்கள் முப்பது பேருக்கான பாடத்திட்டத்தை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்' என்று பொறுப்பாளர் கூறிவிட்டதால் நானும் இரண்டு ஆண்டுகளுக்கான சிலபஸை வகுத்து பாடங்களை நடத்தத் தொடங்கினேன். அப்போது போர் நிறுத்தம் அமலில் இருந்ததால், முதலாண்டு எந்தப் பிரச்னையுமில்லாமல் போனது. நான் தமிழ் சொல்லிக்கொடுத்த விதம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் ஊர்மக்களும் கூட சிறுசிறு குழுக்களாய்ப் பிரிந்து என்னிடம் பிழையின்றி தமிழ் எழுத கற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். நான் ஈழம் போய்ச் சேர்ந்த மூன்றாவது மாதத்தில் ஒருநாள் தலைவரைப் (பிரபாகரனை) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது அவரிடம் விரிவாய் பேச முடியவில்லை.

நான் தலைவரைப் பார்த்து விட்டு வந்த சில நாட்களிலேயே கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலைப் பொறுப்பாளர் செல்வி என்னைச் சந்தித்து `நாளை முதல் ஒரு முக்கிய பிரமுகர் உங்களிடம் தமிழ் கற்க வருகிறார்!' என்று சொன்னார். மறுநாள் நான் செஞ்சோலைக்குப் போனேன். அங்கே பதினைந்து பேர் கொண்ட மகளிர் குழு ஒன்று எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பதினைந்து பேரில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் ஒருவர். பெண்களோடு பெண்களாய் சாதாரணமாய் அமர்ந்திருந்த மதிவதனி, யாழ் பல்கலைக் கழகத்தில் படித்தவர்தான். ஆனால், தமிழைப் பிழையின்றி எழுத வேண்டுமென்பதற்காகவே என்னிடம் பாடம் படிக்க வந்திருந்தார். நான் பாடம் நடத்தும்போது மதிவதனி மிகக் கவனமாகப் பாடம் கேட்பார். இலக்கியத்திலிருந்து எதையாவது எழுதச் சொன்னால் வேகவேகமாய் எழுதி முதல் ஆளாய் என்னிடம் காட்ட வருவார். ஒரு சின்னக் குழந்தையின் ஆர்வம் அவரிடம் இருந்தது. மூன்று மாத காலம் அவர் என்னிடம் படித்தார்'' என்ற பேராசிரியர் அறிவரசு, சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.

``2007 ஜூலை மாதத்திற்குப் பின், ஈழத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. ராஜபக்ஷே அதிபரானதும் தன்னிச்சையாய் போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்றார். அதன்பின் இலங்கை விமானங்களின் குண்டுவீச்சுகள் தொடங்கின. பள்ளியில் நான் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது திடீரென, `அய்யா....வண்டு சுத்துது!' (ஆளில்லா வேவு விமானம்) என்று மாணவ, மாணவிகள் கத்துவார்கள். அந்த வேவு விமானம் வந்துபோன பத்து நிமிட நேரத்தில் போர் விமானங்கள் வந்து குண்டு வீசும். அவ்வளவுதான். அனைவரும் பதுங்கு குழிக்குள் ஓடி பதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். இதற்காகவே பள்ளிகளில் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். சில நேரம் பள்ளிகளும் குண்டு வீச்சுக்கு இரையாகும். இதனால் தமிழர்கள் புலம்பெயர்வது போல் பள்ளிகளும் புலம் பெயரும் அவலம் அங்கே தொடங்கியது.

நான் பணியாற்றிய கல்லூரி வளாகத்தில் திடீரென ஓர் ஓரமாய் 1500 பேர் இருந்து படிப்பார்கள். கேட்டால் `பக்கத்து ஊர்ப் பள்ளியில் குண்டு போட்டு விட்டார்கள். அதனால்தான் பள்ளி இடம் பெயர்ந்துள்ளது' என்பார்கள். எனக்குக் கண்ணீர் வரும். என் தமிழ்ச்சாதிக்கு நிம்மதியான கல்வி கூட கிடைக்கவில்லையே என்று ஆத்திரம் ஆத்திரமாய் வரும். ஒருமுறை விமானக் குண்டுவீச்சில் மதிவதனியின் தோழியான செல்வி பலியானது எனது நெஞ்சைப் பதற வைத்த சம்பவம். நான் ஈழத்திலிருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் குண்டு வீசி கொல்லப்பட்டார்.

27.11.07-ம் தேதி மாவீரர் வாரம் தொடங்கியது. மக்கள் அனைவரும் சாரைசாரையாக மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றினார். அவர் வானொலி நிலையத்திலிருந்துதான் உரையாற்றுகிறார் என்று எண்ணிய சிங்கள விமானப்படை, வானொலி நிலையத்தின்மீது குண்டு வீசியது. அதில் நிலைய பொறுப்பாளர் இசைவெளி செம்பியன் பலியானார். வானொலி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.

அங்கே போர் தீவிரம் அடைந்தநிலையில் புலிகள் என்னிடம், `அண்ணா இங்கு நிலைமை சரியில்லை. உங்கள் உயிர் முக்கியம். நீங்கள் தமிழகம் செல்லுங்கள். தமிழ் ஈழம் கிடைக்கும் போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம்' என்று சொல்லி என்னை அனுப்ப ஆயத்தமானார்கள். நான் மறுபடியும் தலைவரைப் பார்க்க வேண்டுமென்று சொன்னேன். `சரி' என்ற பொறுப்பாளர், கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் திடீரென என்னை தலைவரிடம் அழைத்துச் சென்றார். பலத்த சோதனைக்குப் பின்னர் ஓர் அறையினுள் நான் அனுமதிக்கப்பட்டேன்.

என்ன ஆச்சரியம்? தலைவர் கூப்பிய கரங்களுடன் வாசல் வரை வந்து, எனக்கு வணக்கம் சொல்லி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். ஏறத்தாழ ஒரு மணி நேரம், அவருடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. `நீங்கள் ஈழம் வந்து எவ்வளவு நாளாகிறது?' என்று கேட்டார். `இரண்டு ஆண்டுகள்' என்றதும் அவரே ஆச்சரியப்பட்டுப் போனார். நான் தமிழ்ப்பேராசிரியர் என்பதால் போர் பற்றி எதுவும் பேசாமல் தமிழ் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசினார். சுதந்திர ஈழத்தில் தமிழ் வளர்க்கவும், காக்கவும் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாய்ச் சொன்னார். `தமிழ் ஈழம் எப்போது மலரும்?' என்று நான் கேட்டதற்கு, `அது உலகச் சூழலைப் பொறுத்தது!' என்று மட்டும் ஒரே வரியில் பதிலளித்தார்.

இந்தத் தலைவன் இருக்கும் காலத்திலேயே தனி ஈழம் மலர்ந்தால்தான் உண்டு என்கிற எண்ணமே அவரைச் சந்தித்து விட்டு வரும்போது எனக்கு ஏற்பட்டது. இப்போது கிளிநொச்சி வீழ்ந்ததைக் கேட்டு என் உள்ளம் துடித்துப் போனது. என்னிடம் படித்த மாணவியர் பலர் ஆசிரியைகளாய் நியமிக்கப்பட்ட செய்தியை எனக்குக் கடிதம் மூலம் அவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்

தமிழ் இணைத்த உறவு..உணர்வுபூர்வமான பெரியவர் வாழ்க

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கொழும்பினூடாக வன்னி சென்று மீண்டும் கொழும்பினூடாக இந்தியா வந்தாரென்பது நம்ப முடியாமல் உள்ளது. காரணம் அவர் விசா பெற்றே இலங்கை வந்திருப்பார். அப்படி அவருக்கு ஆண்டுக் கணக்காக இலங்கை அரசு விசா வழங்கியிருக்க முடியாது.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கொழுப்பினூடாக வன்னி சென்று மீண்டும் கொழும்பினூடாக இந்தியா வந்தாரென்பது நம்ப முடியாமல் உள்ளது. காரணம் அவர் விசா பெற்றே இலங்கை வந்திருப்பார். அப்படி அவருக்கு ஆண்டுக் கணக்காக இலங்கை அரசு விசா வழங்கியிருக்க முடியாது.

ஆனைக்கும் அடி சறுக்குமோ :unsure:

அண்ணை குத்திக்காட்டுறனெண்டு கொதிக்கவேண்டாம். :rolleyes:

அண்ணை கையாலை எழுதேக்கையே அறுபத்தெட்டு பிழை விடுறம்.

அதுவும் தமிழை வேறொரு பாசையாலை தட்டச்சுமூலம் உருவாக்கிறதோடை மட்டுமில்லாமல் கருத்தையும் சொல்லுறதெண்டால் எவ்வளவு கஸ்ரமண்ணை? :D

காசு வேண்டிக்கொண்டுஒருக்கா காலவரையற்ற விசா குடுத்தவை.. அதை நம்பி காசை கட்டி விசா எடுத்த சிற்றிசன்சிப் காரர், வீடு வாசலுக்கு பிரச்சினை இல்லை எண்டு மகிழ்ந்தவை.. பேந்து அந்த விசாவை கான்சலு பண்ணினாங்க.. இப்ப காசுமு் போய் விசாவும் போய் வீட வாசலும் போகப்போவுதெண்டு முழுசீனம்.. பெரியவருக்கு காலவரையற்ற விசா குடுத்திருப்பாங்களோ? :rolleyes:

Edited by sOliyAn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு,

கட்டுநாயக்கா தாக்குதலின் பின் வீழ்ந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாகச் சிறிலங்கா அரசு, இந்திய மக்களுக்கு விசாச் சலுகைகளை வழங்கியிருக்கின்றது.

சோழியான், தூயவன் உங்களிருவரின் கருத்துகளுக்கும் நன்றிகள்

ஆனைக்கும் அடி சறுக்குமோ :)

அண்ணை குத்திக்காட்டுறனெண்டு கொதிக்கவேண்டாம். :)

அண்ணை கையாலை எழுதேக்கையே அறுபத்தெட்டு பிழை விடுறம்.

அதுவும் தமிழை வேறொரு பாசையாலை தட்டச்சுமூலம் உருவாக்கிறதோடை மட்டுமில்லாமல் கருத்தையும் சொல்லுறதெண்டால் எவ்வளவு கஸ்ரமண்ணை? :lol:

கு.சா

அவசரத்திலை எழுதும் போது ஒரு தவறு நடந்ததை வைத்து எனக்கு பாடம் எடுக்கின்றீர்கள், நான் முன்பு நீங்கள் கையெழுத்தில் இணைத்த கீதையின் சில வரிகளில் அநேக தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டியதற்காக. கருத்தெழுதும் போது சில தவறுகள் ஏற்படுவதை விட நிரந்தரமாக ஒவ்வொரு கருத்துடனும் வரும் உங்கள் கையெழுத்தில் தொடர்ந்து தவறுகளை அனுமதிக்கலாமா என்பதனாலேயே அதைச் சுட்டடிக் காட்டி, அதனைச் சரியாக மாற்றி உங்களுக்கு தனிமடலிலும் அனுப்பி வைத்து அதனை ஒழுங்காக மாற்றவும் நான் உதவியிருந்தேன். ஆனால் அதனை எந்தளவில் நீங்கள் புரிந்துள்ளீர்கள் என்பது உங்கள் கருத்திலிருந்து தெரிகின்றது. இதற்காக உங்கஎளில் நான் ஏன் கோபிக்க போகின்றேன். உங்களில் அனுதாபம் தான் எனக்கு வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.