Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரியார் கருணாநிதிக்கு கடிதம்

Featured Replies

சங்கரியார் கருணாநிதிக்கு கடிதம்

இலங்கையில் இருந்து கலைஞருக்கு வந்த கடிதம்!

கொழும்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,’’ இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், "தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களை கொன்று அழிக்கும் இனப் படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் போராடுவது தவறானது; நியாயப் படுத்த முடியாதது’’என்றும் குறிப்பிட்டுள்ளார்.

thanks

nakkheeran

சங்கரியின் நரிக்குணத்தை பாருங்கள்

நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிரு

Edited by suryaa

என்ன செய்வது கட்டாகாலி நாய்களாகிவிட்டார்கள்.

இங்கை வந்து சிலர் சொல்லுவினம் எல்லாரையும் ஒரு குடையின் கீழ கொண்டு வர வேணும் எண்டு.... உந்த கும்பலுக்கு பிறந்ததை எந்த குடையுக்கை கொண்டு வரப்போறீயள்ள்....???

தமிழ்மக்களின் நிர்கதிக்கும், மக்கள் அழிவிற்கும் முழுக்காரணமும் இந்த ஆனந்த சங்கரியே காரணமாகும்..

இலங்கையரசிற்கும் ஆலோசனை

வெளி நாடுகள் எல்லாவற்றிற்கும் கடிதப்பிரச்சாரம்

தமிழ் நாட்டிற்கு நேரடியாக சென்று மூளைச்சலவை செய்துள்ளார் அத்துடன் கடிதமூலமும்.

எமது கைவிரலே எமது கண்களை குத்துகிறது.. ..

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இந்த கொடிய தாக்குதலில் இறந்த காயப்பட்ட தமிழ்மக்களை நினைத்து பதைபதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த சுயனலம் தனது கொழும்பு சொகுசு வாழ்விற்காக,பணம், பாதுகாப்பிற்காக நன்றிகடனாக எம்முழுத்தமிழினத்தையும் விற்று வயிறு கழுவி முதலைக்கண்ணீஎ வேறை.. வயிறு பத்தி எரிகிறது இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்தால்..

தமிழக முதலமைச்சருக்கு இங்கு ஒன்றும் அரசால் கொலைகள் நடைபெறவில்லை என சத்தான் வேதம் ஓதுகிறது...

இப்படியான தமிழர்களை வைத்து மகிந்த எதுவும் செய்வார்.. உலகிற்கு பூசி மொழுகி

கதை சொல்ல்வார்.. இன்னும் கொலைகள் விழும்.. எல்லா மீடியாக்கள் மூலம் தமிழகத்திற்கு உண்மை நிலையை ஆதரங்களுடன் தெரியப்படுத்தி ஆனந்த சங்கரிய்ன் கடிதத்தையும் பிரசுரித்து இவரின் போலியை தோலுரித்து காட்டுவதன் முலம் எதிர்காலத்தில் இவரின் தந்திரங்கள் எடுபடாமல் செய்து

முன்னர் இவரின் கதைகளுக்கு எடுபட்டதிற்கு வருந்த வைப்பதே அறிவுள்ள மக்கள் செயல்..

எனவே உடன் எல்லா தமிழக பத்திரிகைகள், ஊடகங்களுக்கும் உண்மை நிலை வீடியோக்கள், படங்கள், செய்திகளை எல்லவழிகளிலும் அனுப்புங்கள்.. கருணானிதியவ்ர்களும் பார்த்து இந்த சாத்தானை அடையாளம் காணட்டும்..னக்கீரன் தொடக்கம் குமுதம், ஆனந்தவிகடன். தொலைகாட்சிகள், பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் ஈமெயில் மூலம் நேற்றைய 300 ம்க்களின் கொலைகள் எல்லா செய்திகளையும் அனுப்புங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வாயில வருது எனக்கு.......

ஆனால் இந்தாளுக்காக எமது நேரத்தை செலவிடும் நேரமல்ல இது

தமிழிலுள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் திட்டினாலும் ஆறாது. இந்த செல்லக்காசின் கிலு கிலுப்பு இன்னும் தாங்கிக் கொண்டிருக்க வேண்டியுள்ளதே.

ஜானா

எவன்யா இந்த அறளை பெயர்ந்தவனிற்கு பேப்பர் பேனா கொடுக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தசங்கரியின் பார்வையில் இதனை ஆதரிக்காவிடினும் கருணாநிதி இலங்கை வருவது ஒரு சிறந்த முயற்சி

எங்கே என் பின்னால் அணிதிரளுங்கள் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்தால் அடுத்த நிமிடமே லட்ச்ச கணக்கில்

திரள மக்களா இல்லை. இதை கேட்ட மாத்திரத்தில் ராஜபக்ச மூத்திரம் போய் விடுவான்.

என்னெடா தம்பர் மனநலம் குன்றி விட்டதா என உறவுகள் எண்ணலாம்

எல்லால் தாயக நிலமையை எண்ணி மனம் புழுங்கியே இதனை எழுதுகிறேன்

யாராவது ஆறுதல் தரும் நம்பிக்கை தரும் செய்திகளை தாருங்கள்

தம்பர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளது போல, முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு வர வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண கருணாநிதி, ஜெயலலிதா, தமிழக தலைவர்கள் குழு வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளை சந்திக்கட்டும். அவர்கள் கூறும் தீர்வுகளைப் பரிசீலிக்க நாங்கள் தயார் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இதை ஏற்று கருணாநிதி இலங்கை வர வேண்டும் என அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும் தற்போது நடைபெறும் போர் குறித்தும் விடுதலைப் புலிகளும், அவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழகத்தை தவறாக வழி நடத்தி உண்மைகளை மறைக்கின்றனர்.

தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களை கொன்று அழிக்கும் இனப் படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் போராடுவது தவறானது; நியாயப்படுத்த முடியாதது.

இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அனந்தசங்கரி கூறியுள்ளார்

http://www.isaiminnel.com/news/?p=47#more-47

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.