Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தப் பகுதியிலிருந்து ஈழத்தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்: ஐ.நா.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு: யுத்தப்பகுதியில் இருக்கும் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்றும் பணியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.முல்லைதீவு பகுதியில் இலங்கை ராணுவம் எதிர்பட்ட அனைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழர்கள் அங்கிருந்து சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர்.

அப்படி வெளியேறுபவர்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.

இதையடுத்து யுத்தப்பகுதியில் தமிழர்களை காக்க வேண்டும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை யுத்தப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்து செல்ல ஐ.நா. முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொது செயலர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

யுத்த களத்தில் மரண பயத்தில் சிக்கி தவிக்கும் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் உயிரை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

போரில் காயமடைந்த மற்றும் நோயால் அவதிப்படும் மக்களை விரைவாக மீட்பதற்காக சிறப்பு வாகனங்களை அமர்த்த ஐ.நா. திட்டமிட்டு இருக்கிறது. அவர்கள் வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாகனங்கள் விரைவில் யுத்த எல்லையை கடக்கும்.

எங்களின் முயற்சிக்கு இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அப்பாவி தமிழர்கள் மற்றும் போர் முனையில் சேவை செய்து வரும் தொண்டு நிறுவன ஊழியர்களின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட கூடாது என இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

http://www.isaiminnel.com/news/?p=127#more-127

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த களத்தில் மரண பயத்தில் சிக்கி தவிக்கும் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் உயிரை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஆக, ஐநாவும் யுத்தத்தை நிறுத்தித் தமிழ் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குவதை விட்டு விட்டு, யுத்தத்தைத் தூண்டுகின்றதோ??

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் இந்தசெயல்பாட்டை பார்க்கும்போது எங்களுக்கு ஏதோ சாதகமாகத்தான் படுகின்றது.

ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் எமது மக்களை கேடயமாக பாவிக்கிறதாலை தான் எமது போராளிகளும் பல இடங்களிலை பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது, மக்கள் இல்லாத இடத்திலை இரண்டு படைகள்தான் மோதவேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தூயவன் இந்தசெயல்பாட்டை பார்க்கும்போது எங்களுக்கு ஏதோ சாதகமாகத்தான் படுகின்றது.

ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் எமது மக்களை கேடயமாக பாவிக்கிறதாலை தான் எமது போராளிகளும் பல இடங்களிலை பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது, மக்கள் இல்லாத இடத்திலை இரண்டு படைகள்தான் மோதவேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மக்களை பிடித்துக்கொண்டு வந்து இராணுவத்தின் கையில் கொடுத்து விடுவார்கள் போலுள்ளது.

உலகம் தலைவருடன் மோதல் நடப்பதாக எண்ணுகிறது

அது தமிழனுடன் நடக்கிறதென்பதனை புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைக்க அனைவரும்முன்வந்து வீதியிறங்கி போராடுவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள் நுணாவிலான், பொஸ்னியாவில் நடந்தது தெரியும் தானே

அய்ரோப்பிய யூனியனின் அம்மையார் போர் நிறுத்தமொன்றை கோராது புலிகள் சிறுவர்களை போராளிகளாக சேர்ப்பதை கைவிட

வேண்டும் என்றே ஊளையிட்டிருந்தார்.

எப்படி ஐ. நா வை தமிழ்மக்களை காப்பாற்ற உலகத்தமிழர் பாடுபட்டு ஒரு முடிவு வந்ததோ அதே போன்று மிகுதியையும் வழி நடத்த நாம் ஆலோசனை வழங்கவேண்டும்.

விடுவிக்கப்பட்ட மக்கள் ஐ நா வின் முகாம்களில் ஐ நா வின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு போர் முடிய மக்கள் விரும்பும் இடங்களில் குடியிருக்க வைக்கும் படி நாங்கள் ஐ நா விற்கு வழிகாட்ட வேண்டும்..

இதற்கு காரணத்தை சரியாக விளக்கவேண்டும்.. ஏற்கனவே இராணுவ பாதுகாப்பிற்குள் சென்ற மக்களை கொன்று, பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி மண்ணுக்குள் புதைத்துள்ளது. என்பதை புரியவைத்தல் வேண்டும்..

புலிகளின் முதுகில் குத்த படும் இறுதி ஆயுதாமாக இது இருக்க வேண்டும்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.