Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்

Featured Replies

சிறு பிள்ளைகள் மற்றும் பார்க்கும் மக்களுக்கு: இந்த படங்கள் உங்கள் மனதினை ஆழமாக பாதிக்கலாம்

வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர்.

சுதந்திரபுரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கி.மனோன்மணி (வயது 60)

ந.ஜெயசாந்தி (வயது 38)

மு.அங்கமுத்து (வயது 58)

ஆகியோர் கொல்லப்படடவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு வயது குழந்தையான சுசீலா

யோ.கவிந்தவி (வயது 09)

யோ.விதுஸ்ணவி (வயது 13)

ந.டயோலா (வயது 15)

த.யோகா (வயது 19)

கி.இராசமணி (வயது 65)

இ.இராஜேஸ்வரி (வயது 39)

பொ.கிருஸ்ணமூர்த்தி (வயது 32)

மா.சாந்தகுமார் (வயது 25)

விஜயலட்சுமி (வயது 46)

க.மல்லிகாதேவி (வயது 48)

இராஜசிறீ (வயது 28)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தளன் பகுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இத்தாக்குதலின் போது ஒரு கொட்டகைக்குள் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகள் செயலிழந்து விட்ட காரணத்தினால் மரங்களின் கீழும் தெருவோர காப்பகழிகளிலுமே காயமடைந்தோருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

நிவாதேயினி (வயது 10)

த.தமிழன்பன் (வயது 05)

த.செல்வானந்த் (வயது 12)

செ.தனஞ்சியன் (வயது 47)

த.நகுலேஸ்வரி (வயது 42)

செ.தயாபரன் (வயது 37)

த.சுமதி

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா வான்படை தாக்குதல்

இதேவேளை, சிறிலங்கா வன்படை நேற்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கொட்டகைகளை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

காயமடைந்தோரில்

சடையன் வரதராசா (வயது 23)

கணேசன் சுதாகரன் (வயது 25)

இராமன் இராசன் (வயது 32)

தயாபரன் பாலசுமதி (வயது 35)

சிவநேசன் (வயது 36)

ஆகியோரினது விபரங்கள் கிடைத்துள்ளன.

நல்லடக்கம்

இதேவேளை, சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 தமிழர்களின் உடலங்கள் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 12 உடலங்கள் உரிய உறவினர்கள் எவரும் இல்லாத நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சிறு பிள்ளைகள் மற்றும் பார்க்கும் மக்களுக்கு: இந்த படங்கள் உங்கள் மனதினை ஆழமாக பாதிக்கலாம்

vann20.jpg

vann21.jpg

vann22.jpg

vann23.jpg

vann24.jpg

vann25.jpg

vann26.jpg

vann27.jpg

vann28.jpg

vann29.jpg

நன்றி தமிழ்வின்

Edited by தேசம்

என்ன கொடுமையிது, தட்டிக்கேக்கத்தான்னும் யாரும் இல்லையா??? சர்வதேசமே இன்னமும் ஏன் கண் மூடி மௌனியாக இருக்கின்றய்??? இனியும் எங்கள் உறவுகள் இழக்கும் வரை பார்த்திருக்கப்போகின்றாயா? எதுவைய்யா தீவிரவாதத்திற்கான போர்? எது தீவிரவாதம்? உங்கள் குடும்பத்தில் இழக்கும்போது அதன் வலிகள் உணரும், விடுதலைப்புலிகள் என்ன உங்களுக்கு எதிராகவா போராடுகின்றனர்? இங்கு செத்துமடிந்து கொண்டிருக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமையாவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே போராடுகின்றார்கள். அவர்கள் மேலா இப்படி கொலைப்பழி? இனியும் நீ சிங்களத்தை நம்புவாயாக இருந்தால், எம் சமாதிகளில் வந்து "நாங்கள் மனித நேயம் மிக்கவர்கள்" என்று எழுதிச்செல். ஐ.நா மனித நேயத்தை மதிப்பவர்கள் என்று எழுதிச்செல் ஏனென்றால் நாம் இதுவரையும் காணாததை இறந்தபின்னராவது அறிவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.

சிங்களம் வன்னியில் கொலையும் கொழும்பில் கிரிகெட்டுமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்: கொலைகளால் மட்டுமே கொலையத் தடுக்கமுடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.

சிங்களம் வன்னியில் கொலையும் கொழும்பில் கிரிகெட்டுமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்: கொலைகளால் மட்டுமே கொலையத் தடுக்கமுடியும்!

அதுதான் வழி

அதுதான் வழி

அதைத் தானே காலம் காலமாய் முயன்று பார்த்தாயிட்டு... என்ன பிரயோசனம் கிடைத்தது? இவ் மக்களை கொல்லும் எதிரி பல நூற்றுக் கணக்கான மைல்களுக்கப்பால் அல்ல இருக்கின்றான்... அவன் இருப்பது ஒரு சில மைல்களுக்கப்பால்

யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.

சிங்களம் வன்னியில் கொலையும் கொழும்பில் கிரிகெட்டுமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்: கொலைகளால் மட்டுமே கொலையத் தடுக்கமுடியும்!

இப்போதுள்ள நிலையில் இப்படியான வழிகள் ஒட்டுமொத்த இனத்தையே சிங்களம் துடைத்தளிக்கவும் வழிகோலும். மக்கள் இராணுவத்தின் பிடிக்குள்ளும் எஞ்சிய மக்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர். இராணுவம் கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்டதாக உள்ளது, படுகொலைகள் தொடர்பாக இந்திய மற்றும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டு எல்லையை சிங்களம் புரிந்து விட்டது, அவர்களால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று நம்பிக்கை பெற்றுவிட்டது. இந்த நம்பி்ககையாலே இன்று சிங்களம் தினம் 50, 100 என்று தமிழர்களை கொல்லும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த எண்ணிக்கையில் மேலும் சுழியங்களை போட பதில் கொலைகளை சிங்களம் தற்போது எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.