Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர்

[21 - February - 2009]

தன்னைக் கடவுளாக நினைத்து ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் கிரிகெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இவர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை, அனுபவங்கள், எதிர்காலத்திட்டம் குறித்தும் சச்சின் அளித்த பேட்டி;

கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயல் வருத்தமளிப்பதாக உள்ளது. சிலர் நீங்கள்தான் கடவுள் எனக்கூறி காலைத் தொட்டுவணங்குகிறார்கள். ரசிகர்களின் இந்தச் செயல் எனக்கு அதிருப்தியும் வேதனையும் அழிக்கிறது. இது மாதிரியான செயல்களை ரசிகர்கள் தவிர்ப்பது நல்லது.

ஓய்வுக்குப்பின் உங்களது திட்டம் என்ன?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. ஆனால் கிரிக்கெட்டுடன் உள்ள எனது உறவு தொடரும். தற்போதைய எனது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் தான் இருக்கும்.

அடிக்கடி உங்கள் மீது விமர்சனம் எழுவது பற்றி உங்கள் கருத்து?

என்மீது அடிக்கடி எழும் விமர்சனங்களை பற்றி கவலையில்லை. விளையாடும் போது இதுமாதிரி விமர்சனங்களை வெளியிடும் பத்திரிகைகளின் பார்வையில் இருந்து விலகிக்கொள்ளவே நினைப்பேன்.

நீங்கள் விசேஷமானவர் என்பதை உணர்கிறீர்களா?

சாதாரண மனிதரைவிட, தனிச்சிறப்பு உடையவனாக திகழ்வதே பெருமையாகக் கருதுகிறேன். இதன் மூலம் பல சமயங்களில் இக்கட்டிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளமுடிகிறது. உதாரணமாக 1994 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சிட்னியில் அப்போது நானும் மற்ற இரண்டு வீரர்களும் வெளியில் சென்றிருந்தோம். ஆனால் நாங்கள் வருவதற்குள் ஹோட்டலில் தங்கியிருந்த ஒட்டு மொத்த அணியும் எங்களது பேக் மற்றும் உடமைகளுடன் கிளம்பி விமானநிலையம் சென்றுவிட்டது. அச்சமயம் அவர்களைத் தொடர்பு கொள்கையில் "மொபைல்போனும்' இல்லை. ஆனால் நாங்கள் சிட்னியிலிருந்து மெல்போர்ண் செல்லவேண்டும். எங்களிடம் டிக்கட், பாஸ்போர்ட் எதுவுமில்லை. இருப்பினும் விமானநிலையம் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் நடந்ததை விளக்கினேன். என்னை நன்கு தெரிந்து கொண்ட அந்த நபர் பாஸ்போர்ட், டிக்கட் எதுவும் இல்லாமலேயே மூன்று "போர்டிங் பாஸ்' கொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்தார். அப்போது தான் நினைத்தேன், நான் விசேஷமானவன் என்று.

எந்த ஒரு விளையாட்டையும் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் இருந்த அனுபவம் உண்டா?

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி முழுவதும் அவ்வாறிருந்தேன். எனது குடும்பத்தினருடன் கடல் மட்டத்திலிருந்து 7000 அடிக்கு மேல் இயற்கை வாசஸ்தலமான முசூரியில் பொழுதைக் கழித்தேன். பனி மலைகளுக்கு மத்தியில் நீண்ட தூரம் "" ரிலாக்சாக' நடந்தேன். அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

* சமீபத்தில் நீங்கள் பெருமைப்பட்ட விடயம் என்ன? இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

* சக வீரர்களுடன் குறும்புச் செயலலில் ஈடுபடுவதுண்டா? சக வீரர்களுடன் குறும்புகளில் ஈடுபடுவேன்.

கடந்த காலங்களில் ரசிகர்கள் இரத்தத்தினால் கடிதம் எழுதி தனக்கு அனுப்புவர் என சச்சின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ""ரசிகர்களில் ஒரு சிலர், இரத்தத்தால் கடிதம் எழுதி எனக்கு அனுப்புவர். அவர்களது செயல் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அது மாதிரியான செயல்கள் தற்போது நடப்பதில்லை' என்றார்.

http://www.thinakkural.com/news/2009/2/21/...s_page68392.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர்

முடியுமாயின் குண்டம்மா ஜெயலலிதாவுக்கு சொல்லிப்பாருங்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமாயின் குண்டம்மா ஜெயலலிதாவுக்கு சொல்லிப்பாருங்கள் :lol:

அவரை கண்டவுடன் சிலசமயம் சச்சினும் குண்டம்மா காலில் விழுந்தாலும் விழுவார் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.