Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை நிறுத்த முடியாது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அரசு பதில்

Featured Replies

போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம் வந்து விட்டது.

இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

திமிர் பிடித்த மந்திக்கும் கூட்டங்களுக்கும் முறையாக் பாடம் எடுத்தால் , மேற்குலகை யும் பகைத்து , நடத்தும்; நாடகம் நிற்கும் .எதோ பின் பக்க ஆதரவுடன் மந்திகள் ஆர்ப்பரிக்கின்றன போலும் ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா போரை நிறுத்த முடியாது விட்ட குறை தொட்ட குறை எல்லாம் இருக்கு அந்த கணக்கு எல்லாம் சரிபார்த்து உங்களுக்கு தந்ததன் பின்பு நிப்பாட்டுவம்.

மகிந்த சமரசிங்க கொஞ்ச நாளா கூட கதைத்துட்டு திரிய மகிந்த விட்டிருக்கிறான் என்றால் சமரசிங்கவுக்கும் காலம் வந்திட்டுதோ ??? :(

சிங்களவன் துணிஞ்சவஞ்சவந்தான்.... எங்க முடிஞ்சா அய்ரோப்பிய யூனியன் பண்ணிப்பாக்கட்டும் பாப்பம்?

இருந்த ஜி.எஸ்.பி பிளசையே நிப்பாட்ட வழியில்லை யுத்தத்தை நிப்பாட்டபோயினாம்.... வெத்துவேட்டு பித்தலாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐ நா , உலகனாடுகளை அசட்டை பண்ணி சர்வாதிகாரி கிட்லர் போன்று நடந்தால் உலகம் அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்கப்பண்ணுவது புலம்பெயர் மக்களின் கடமை.. யப்பான் தொடக்கம் இலங்கைக்கு உதவி வழங்கி முட்டுக்கொடுக்கும் நாடுகளினால் தான் இலங்கை இவ்வளவு உசாராகவும், மற்றைய நாடுகளை மதிப்பதில்லை..

எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக புலம் பெயர்மக்கள் இலங்கைக்கு எதிராக அதிகூடிய நடவடிக்கைகள் எடுக்க ஊக்கம் கொடுக்க வேண்டும்..

முதலில் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுக்க நாம் தூண்டுதலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் இலங்கை போர்வெற்றியை வைத்து உலகை எமாற்றும் இலங்கைக்கு சாதகமாக்கும்.. உடன் செயல்படுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்களாகவே நிறுத்துவினம் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன தான் வெட்டி முறிஞ்சாலும் உலக நாடுகள்,தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அரசின் பக்கம் தான்.அவர்கள் இலங்கை அரசை கண்டித்தாலும் அதற்கு மேலால் புலிகளை கண்டிக்கின்றனர்.கடைசியாக வந்த மனித உரிமை ஆனைக் குழுவின் அறிக்கையை வாசித்துப் பாருங்கள்.

கெடு குடி சொல் கேளாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.