Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முக்கிய தலைவர்கள் களத்தில் அவர்களுக்கு ஆயுதஇ ஆட்பலமும் பற்றாக்குறை - உதயநாணயக்கார

Featured Replies

வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்கு பாரியளவில் முகங்கொடுத்துள்ளது. வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போது பெருமளவிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ள அதேசமயம் பாரியளவிலான ஆயுதங்கள் மற்றும் அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் போன்றன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பின்னணியின் பிரகாரம் புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட புலிகளின் அனைத்து சிரேஷ்ட தலைவர்களும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டுவரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்பிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தி உண்மையானதோ இல்லையோ என்பது தெரியாது. இருப்பினும், விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் களத்தில் இறங்குவது என்பது ஒன்றும் ஆச்சரியபடத்தக்க செய்தியல்ல. ஏனெனில் தேசியத்தலைவர் திரு. பிரபாகரன் உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் போர் முனைக்குச் செல்வதற்கு தயங்கியவர்கள் இல்லை. யார் எப்போது எங்கே போவது என்பதை அவர்களது இராணுவ மூலோபாயத்திற்கு ஏற்ப தீர்மானிக்கிறார்கள்.

அப்படியானால் அவர்களது கதையை முடிக்க வேண்டியது தானே, ஏதோ நாம் இப்போது இவரிடம் கதை கேட்ட மாதிரி. இது எனக்கு வடிவேலு "WINNER" படத்தில் கட்டதுரைக்கு மிரட்டல் விட்டதைப் போல் உள்ளது :):D:(:(:(

அப்படியானால் அவர்களது கதையை முடிக்க வேண்டியது தானே, ஏதோ நாம் இப்போது இவரிடம் கதை கேட்ட மாதிரி. இது எனக்கு வடிவேலு "WINNER" படத்தில் கட்டதுரைக்கு மிரட்டல் விட்டதைப் போல் உள்ளது :):D:(:(:(

உசிப் பேத்தி உநிப் பேத்தியே அலுவலை முடிச்சசுப் nபோட்டாங்கள்...நாங்கள் இப்பவும் படம் காட்டிக் கொண்டு திரியிறம்......

உசிப் பேத்தி உநிப் பேத்தியே அலுவலை முடிச்சசுப் nபோட்டாங்கள்...நாங்கள் இப்பவும் படம் காட்டிக் கொண்டு திரியிறம்......

:)

எதற்காகக் கவலைப்படுகிறார் உதயநாணயக்கார? ஆயுதக் கொடுப்பனவுக்குத்தான் அரசாங்கம் இருக்கிறதே. அதற்குக் குறைவு வராது.

அதாவது எமது போராட்டதின் கதை முடிந்து விட்டது, இனி ஒன்றும் மிச்சமில்லை சிங்களவனுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான் என்கிறீர்களா ??? அல்லது அது தான் உங்களது விருப்பம் போல் உள்ளது

அதாவது எமது போராட்டதின் கதை முடிந்து விட்டது, இனி ஒன்றும் மிச்சமில்லை சிங்களவனுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான் என்கிறீர்களா ??? அல்லது அது தான் உங்களது விருப்பம் போல் உள்ளது

போராட்டம் முடியவில்லை தற்போது நாம் புலிகளை அழித்தால் தமிழ்த்தேசியம் அழிந்து விடும் என்று யுத்தம் செய்யும் அரசுடன் வேறு வழியில் போராட வேண்டும் அதுக்கு சரியான தலமையை புலிகள் உருவாக்கிவிட வேண்டும் .

என்னுடைய கருத்து என்னவென்றால் நாணயக்கார ஏன் இப்படி அர்த்தமற்ற அறிக்கைகளை விடுகிரார் என்பது தான் கேள்வி, ஏதோ கூற வேன்டும் என்பதற்காக கூர வேண்டும் என்பதற்காக கூறுவது போல் அல்லவா இருக்கிரது. இயலாமையை மூடி மறைக்கிறார். DEFENCE.LK இவர்கள் முன்னேறும் வேகத்தை பார்த்தால் இப்போது 53KM பரப்பா அல்லது 530KM பரப்பா என்று கேக்க வேண்டியுள்ளது :):D:(

நிறை குடம் தளம்பாது அல்லவா

என்னுடைய கருத்து என்னவென்றால் நாணயக்கார ஏன் இப்படி அர்த்தமற்ற அறிக்கைகளை விடுகிரார் என்பது தான் கேள்வி, ஏதோ கூற வேன்டும் என்பதற்காக கூர வேண்டும் என்பதற்காக கூறுவது போல் அல்லவா இருக்கிரது. இயலாமையை மூடி மறைக்கிறார். DEFENCE.LK இவர்கள் முன்னேறும் வேகத்தை பார்த்தால் இப்போது 53KM பரப்பா அல்லது 530KM பரப்பா என்று கேக்க வேண்டியுள்ளது :):D:(

நிறை குடம் தளம்பாது அல்லவா

கா கோ போ ............

இன்னும் எத்தனை நாளுக்கு? இப்ப பிரச்சனை ஆர்மி வெல்லுவது புலிகள் தோற்பது இல்லை நாளுக்கு நாளுகு இறக்கும் தமிழ் மக்கள் பற்றியதே...

இன்னும் எத்தனை நாளுக்கு? இப்ப பிரச்சனை ஆர்மி வெல்லுவது புலிகள் தோற்பது இல்லை நாளுக்கு நாளுகு இறக்கும் தமிழ் மக்கள் பற்றியதே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.