Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு இந்தியா இலங்கையிடம் வேண்டுகோள்:

Featured Replies

பிரணாப் முகர்ஜி சிரிலங்காவுக்கு அறிவுரை - புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை மக்களை மீட்பதற்க்காக பயன்படுத்துங்கள்.

அவரது கருத்துக்களில் சில...

* புலிகளின் இந்த யுத்த நிறுத்த அழைப்பு, ஆயுதக்களைவுக்கான விருப்பமாகவும் இருக்கலாம்.

* இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிரிலங்கா சண்டையை இடைநிறுத்தலாம்.

* உடனடியாக மாட்டுப் பட்டிருக்கும் மக்களை "பாதுகாப்பான" வேறு இடத்திற்க்கு கொண்டு செல்வதற்க்கான திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசாங்கம் சிரி லங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொ(ல்)ள்கிறது.

"தமிழா, நீ சரணடை இல்லையெண்டால் செத்துப் போ" எண்ட ஒரே விடயத்த வேறு வேறு வாக்கியங்களில் சொல்லும் இந்தியாவின் கெட்டிதனத்துக்கு நிகர் இந்தியாவேதான்.

எல்லாம் அந்த "தேர்தல்" என்ற நாலு எழுத்து சொல்லு செய்யும் வேலை.

http://www.thaindian.com/newsportal/uncate..._100161059.html

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு இந்தியா இலங்கையிடம் வேண்டுகோள்:

தமிழீழ விடுதலைப் புலிகளினால் அண்மையில் விடுக்கப்பட்ட யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு இந்திய மத்திய அரசு இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ்ச் சிவிலியன்களை கருத்திற் கொண்டு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்பிலான சாத்தியப்பாடுகளை இலங்கை அரசாங்கம் ஆராய வேண்டுமென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்துவதன் மூலமே வன்னியில் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கியுள்ள சிவிலியன்களை பாதுகாப்பாக மீட்க முடியும் என இந்திய மத்திய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னிச் சிவிலியன்களின் நலனைக் கருத்திற் கொண்டே அவசர மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.

70,000த்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிவிலியன்கள் யுத்த பிரதேசத்தில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் பாரியளவு உணவு மற்றும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் முகர்ஜீ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த யோசனை குறித்து இலங்கை அரசாங்கம் சாதகமான வகையில் நோக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாகவேனும் யுத்தத்தை இடைநிறுத்தி சிவிலியன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய மத்திய அரசாங்கத்தின் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு ஓர் தளம்பல் நிலையில் காணப்படுவதாகவும், நாள்தோறும் மாறுபட்ட நிலைப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் காரணமாகவும், சர்வதேச ரீதியில் தங்களது நன்மதிப்பை பேணிக் கொள்வதற்காகவும் இந்திய மத்திய அரசு முதலைக் கண்ணீர் வடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய மத்திய அரசு இதுவரையில் காத்திரமான தீர்மானம் எதனையும் எடுக்காமை குறித்து அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6561&cat=

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரட்டை வேடம் செய்வதற்க்கு ஒரு அளவு கணக்கு வேணுமப்பா.

இந்தியாக்கு ஆர் 70000 எண்டு டாப் எடுத்துக்குடுத்தவை?

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்புப் போரை ம்ன்னெடுத்துவரும் சிங்களவனின் பேச்சை சர்வதேசம் நம்புவதற்குத் தயங்கும் நிலையில், இந்தியா சிங்களவனின் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. அதாவது சிங்களவன் இவ்வளவு நாளும் சொல்லி வந்த "வன்னியில் வெறும் 50,000 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள" என்பதைத்தான் இந்தியாவும் இப்போது சொல்கிறது. இது உண்மையில் வன்னியின் அகோரமான அவலங்களைக் குறைத்து மறைக்கும் நோக்காத்துடன் நடக்கும் இந்தியப் பிரச்சாரம். வன்னியில் சிங்களவனின் இன ழிப்புப் போருக்கு முகம் கொடுக்கும் தமிழரின் எண்ணிக்கை 470,000 என்று அரசாங்க அதிகாரிகளே புள்ளி விபரங்கள் வெளியிட்டுள்ள வேளையில் இந்த 70,000 என்பது எப்படிச் சாத்தியமாகும்? அப்படியானால் மிகுதி 400,000 பேரையும் கொன்றுவிட்டார்களா? அல்லது இனிமேல்த்தான் கொல்லப் போகிறார்களா?

சோனியா என்னும் அரக்கியின் ரத்தப் பசிக்கு வேட்டையாடப்படும் தமிழ் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 50 பேராவது அவளின் பசிக்குக் கிடைக்கவில்லையென்றால், ரெண்டாவது நாள் வட்டியுடன் சேர்த்து 150 பேர் கொல்லப்படுகிறார்கள். சிங்களவன் இந்தியா கொடுத்த ராணுவ உதவிகளை எப்படிப் பாவிப்பது என்று தெரியாமல் தடுமாறும் அளவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. கருணாநிதி சோனியாவின் சேலையைப் பிடிச்சுக்கொண்டு கிழட்டுக் கனவுகளில் திளைத்துக்கொண்டிருக்க, தமிழ் நாடு காங்கிரஸ் சோனியா புராணம் பாடிக் கொண்டிருக்க, உண்மையான தமிழ் உணர்வாளர்கள் சிறைகளை நிரப்புகிறார்கள்.

இன்னும் இந்தியா எமது தாய் நாடு, தந்தையர் நாடு என்று உளரிக்கொண்டிருக்கும் தமிழர்களே உணர்ந்து கொள்ளுங்கள். தமிழனின் முதல் எதிரி சிங்களவன் கிடையாது, அவன் வெறும் கருவி மட்டுமே. எமது முதலாவது எதிரி இந்தியாவும் அதன் இயக்கு பொருளான இந்துத்துவ பார்ப்பணியமும் தான்.

எங்கே உடனே வாருங்கள். "எப்படிப் பார்ப்பணர்களை விமர்சிக்கலாம்?" என்று வேட்டியை தோள்வரைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ! சீ...வெக்கம் கெட்ட ஜெண்மங்கள்.

இன்னும் இந்தியா எமது தாய் நாடு, தந்தையர் நாடு என்று உளரிக்கொண்டிருக்கும் தமிழர்களே உணர்ந்து கொள்ளுங்கள். தமிழனின் முதல் எதிரி சிங்களவன் கிடையாது, அவன் வெறும் கருவி மட்டுமே. எமது முதலாவது எதிரி இந்தியாவும் அதன் இயக்கு பொருளான இந்துத்துவ பார்ப்பணியமும் தான்.

எங்கே உடனே வாருங்கள். "எப்படிப் பார்ப்பணர்களை விமர்சிக்கலாம்?" என்று வேட்டியை தோள்வரைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ! சீ...வெக்கம் கெட்ட ஜெண்மங்கள்.

குரு நாதர் குறுக்கால போனவரை காணவில்லை ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

குரு நாதர் குறுக்கால போனவரை காணவில்லை ஏன்?

எதுக்கு அவரைத் தேடுகிறீர்கள் ? அவர் யாருடைய குருநாதர்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.