Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவிற்கு படைத்துறை உதவி செய்யவில்லை, ஊடுருவலும் இல்லை – இந்தியா

Featured Replies

சிறீலங்காவிற்கு படைத்துறை உதவி செய்யவில்லை, ஊடுருவலும் இல்லை – இந்தியா

சிறீலங்காவிற்கு தமது அரசாங்கம் எந்தவொரு படைத்துறை உதவியும் புரியவில்லை என, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென் கரையோரம் உச்சிபுளியிலுள்ள கடற்படைத் தளத்தில் வான்காப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்த மேத்தா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கரையோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட படகுகள் பற்றி கருத்துரைத்த அவர், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் எதுவும் இல்லை எனவும், பொதுமக்கள் மட்டுமே படகுகளில் வந்து தஞ்சமடைவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள இந்திய கடற்பரப்பில் மட்டும் தமது தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கிய மேத்தா, கடல்தாண்டி செல்லக்கூடாது எனவும், இதன்மூலம் சிறீலங்கா கடற்படையினரது தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

வன்னியில் தாக்குதலை மேற்கொள்ளும் சிறீலங்கா படையினருக்கு இந்தியப் படையினர் நேரடியாகவும், இந்திய அரசாங்கம் வேறு பல்வேறு வழிகளிலும் படைத்துறை உதவிகள் புரிந்து வருகின்ற போதிலும், தேர்தலையொட்டி ஆளும் கொங்கிரஸ் கட்சியினர் கடற்படைத்தளபதி ஊடான பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளனர்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லாவே இல்ல. உண்மையாகவா மேத்தா.

  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.

அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:

இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.

இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.

இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:

இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.

யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன. அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.

அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:

இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும். ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.

அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார்.

நன்றி: தமிழ்வின.காம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote

ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:

யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை.

:(:(:lol::lol::lol::lol::(:lol:

முழங்காவில் பாடசாலையை அடையாளபடுத்தும் படத்தை இணைத்து அதன் வலது பக்கத்தில் இருக்கும் கூர்க்காவை யாராவது அடையாளப்படுத்தி இணைத்து விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"சிறீலங்காவிற்கு படைத்துறை உதவி செய்யவில்லைஇ ஊடுருவலும் இல்லை – இந்தியா"

தேர்தல் வருகுதெல்லே? அனி எத்தனை வார்த்தைகள் வரும். இந்திய மக்களை ஏமாற்றலாம்....... ஈழதமிழர் இனி எப்போதும் ஏமாற கூடாது. எதையும் மறந்துவிடாதீர்கள் தோழர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.