Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் பகிடி

Featured Replies

அப்படி எல்லாம் உயர்பதவிக்கு முகத்தார் ஒன்றும் ஆசைப்படுபவர் அல்ல என்று தெரிவித்துக் கொள்கின்றேன். :wink: :roll:

நீங்க என் முகம்ஸ் அங்கிளின் வாய்ஸா :P

அதுசரி அது என்ன உயர் பதவி :roll: :roll: :roll:

  • Replies 634
  • Views 54.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என் முகம்ஸ் அங்கிளின் வாய்ஸா :P

அதுசரி அது என்ன உயர் பதவி :roll: :roll: :roll:

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது :wink:

புலநாயிற்கு பிஏ என்று சொன்னீர்கள். அது தான் சொன்னேன்.

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது :wink:

புலநாயிற்கு பிஏ என்று சொன்னீர்கள். அது தான் சொன்னேன்.

புல நாயின் பீ ஏ எண்டா உயர் பதவியா அய்யோ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கிறீங்கப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புல நாயின் பீ ஏ எண்டா உயர் பதவியா அய்யோ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கிறீங்கப்பா :lol:

எனக்கில்லை. முகத்தாருக்கு அது உயர்பதவியாம். :wink:

அப்படி எல்லாம் உயர்பதவிக்கு முகத்தார் ஒன்றும் ஆசைப்படுபவர் அல்ல என்று தெரிவித்துக் கொள்கின்றேன்

அப்பிடி போடு தம்பி ...........பின்னை என்ன பொண்ணம்மாக்கு புருஷன் எண்டதை விட ஒரு உயர்பதவி தேவையோ........

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது

தம்பி நல்லாத்தான் பேசிறீர் அப்பு ஆனா சிலவேளைலை திரும்பி நிண்டு என்ரை பக்கமே கோல் அடிக்கிறமாதிரிக் கிடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு தம்பி ...........பின்னை என்ன பொண்ணம்மாக்கு புருஷன் எண்டதை விட ஒரு உயர்பதவி தேவையோ........

ஓமோம் முகத்தார்.

தினமும், உறுட்டுக்கட்டையாலும் சட்டிபானைகாலேயும் வாங்கின்ற அடியைப் போல வேறு சுகம் உண்டோ? :wink:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நல்லாத்தான் பேசிறீர் அப்பு ஆனா சிலவேளைலை திரும்பி நிண்டு என்ரை பக்கமே கோல் அடிக்கிறமாதிரிக் கிடக்குது

அரசியல் என்றால் இப்படிதானே. என்னுடைய பக்கம் ஏதும் பிரச்சனை வந்தால் அப்படியே மற்றவர்கள் பக்கம் திருப்பி விடுவது சகஜம் தானே.

இது எல்லாம் கண்டுக்கப்படாது.

ஓமோம் முகத்தார்.

தினமும், உறுட்டுக்கட்டையாலும் சட்டிபானைகாலேயும் வாங்கின்ற அடியைப் போல வேறு சுகம் உண்டோ? :wink:

வெளியிலை இருந்து பாக்கிற உங்களுக்கு அது அடி போலத்தான் தெரியும் ஆனா எனக்கு நோவுக்கு ஒத்தனம் குடுக்கிறமாதிரி கிடக்கு (சா.............இப்படி எத்தனை நாளுக்குத்தான் இவங்களுக்கெல்லாம் சொல்லி சமாளிக்கிறதோ கடவுளே.....)

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலை இருந்து பாக்கிற உங்களுக்கு அது அடி போலத்தான் தெரியும் ஆனா எனக்கு நோவுக்கு ஒத்தனம் குடுக்கிறமாதிரி கிடக்கு (சா.............இப்படி எத்தனை நாளுக்குத்தான் இவங்களுக்கெல்லாம் சொல்லி சமாளிக்கிறதோ கடவுளே.....)

நல்ல ஜடியா தான் முகத்தார்.

ஒத்தனம் கொடுக்கும் அளவிற்கு எப்படி நோ வந்தது? முதல் நாள் அடித்த அடியா அப்படி நொந்தது? :wink:

ஒரு நாள் முகத்தாரின் மகன் பள்ளிக்கூட கொஸ்ரலில் இருந்து தொலைபேசியில் அழைக்க முகத்தார் தொலைபேசியை எடுக்கிறார்...

அப்பா நண்பர்கள் எல்லாம் சுற்றுலா போகிறார்கள் நானும் போகட்டுமா...???

அதுக்கு முகத்தார் தாராளமாய் போங்கோ அப்பு..

மகன் கேட்கிறார் அப்பா என்னட்டை காசு காணாது கொஞ்சம் அனுப்பிவிடுங்கோவன்..

உடனேயே முகத்தார் அதுக்கென்ன அனுபினால் போச்சு... அதோடு முகத்தா சொன்னார். நீயப்பு போனமுறை வந்துட்டுப் போகேக்க கணக்கியல்ப் புத்தகத்தையும் விட்டுட்டுப் போட்டாய் அதையும் அனுப்பிவிடுறன்...

மகன்: ஓ மறந்திட்டன் அனுப்பிவிடுங்கோ..!

முகத்தாரும் தொலைபேசியை வைச்சிட்டு.. உடனேயே கணக்கியல் புத்தகத்தை பாசல் பண்ணிக்கொண்டு தபால்கந்தோருக்குப் போய் தபாலில் காசும் புத்தகமும் அனுபீட்டு வந்தார்

வீட்டுக்குவந்தால் பொன்னமாக்கா முகத்தாரை எதிர்கொண்டு கேக்கிறா காசு அனுப்பப்போனியள் அப்பா எவ்வளவு அனுப்பினியள்... ???

முகத்தார் சொன்னார் 1000 ரூபாவும் 20 ரூபாவும்...

பொன்னம்மாக்காவுக்கு கோவம் வந்து கத்துறார் என்னப்பா 1020 ரூபா சின்னப்பெடிக்கு குடுத்து கெடுக்கப் போறியளே...???

அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்,......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள 15 வது பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க... :P :P :P

:lol::lol: அப்பாவை போலத்தான் பிள்ளையாக்கும். அது தான் தன்னுடைய அனுபவத்தை வைத்து அப்படி வைத்து இருக்கின்றார்.

வாழ்த்துக்கள் தலா. நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒத்தனம் கொடுக்கும் அளவிற்கு எப்படி நோ வந்தது? முதல் நாள் அடித்த அடியா அப்படி நொந்தது? :wink:

ரிவியைப் போட்டுட்டு இப்பிடி bunny2[1].gifbunny2[1].gif நிண்டு ஆடினனான் அது தான் ஒத்தனம் குடுக்கவேண்டி வந்தது.......... தெரியுதுதானே முகத்தான்ரை நிலமை பிறகும் கேள்வி கேட்டுக் கொண்டு

சுண்ணாகத்தில முகத்தார் ஒரு குருட்டு எருமை மாடு வளத்தார்... எல்லாரும் மாட்டுக்கு குறி சுடுவினம்... முகத்தார் பெயர் வைத்து அதைச் சுட்டு வைத்திருந்தார்...... என்ன கோதாரிப் பெயரோ தெரியேல்லை... "சின்னா" எண்டு வச்சிருந்தார் எண்டு வைப்பம்....

ஒரு குச்சொளுங்கையால போகவேண்டிய முகத்தார் வீட்டுக்கு ஒருவர் காரில் வந்திருந்தார் வந்த போது நல்லமழை... சேறும் சகதியுமாய் இருந்த ஒழுங்கையில கார்ச்சக்கரங்கள் சிக்க வந்தவர் காறை வெளிய எடுக்க அவதிப்பட முகத்தார் உதவ முன் வந்தார்...

தன் எருமை மாடு சின்னாவைக் காறின் முன்னால் கட்டி இழுக்க திட்டம் போட்டுக் சின்னாவை கொண்டு வந்து கட்டினார்... கட்டிய பின்... பவ்லாவாக சின்னாவிடம்...

"ஏய் எருமை இழு" சின்னா அசையவில்லை......

கவலையே இல்லாமல் முகத்தார்... "சனியனே இழு எண்ற" அதுக்கும் சின்னா அசையவில்லை...

பிறகும் முகத்தார் "சின்னா இழு எண்று சொல்ல.." சின்னா மெதுவாக ஆனால் இலகுவாக காறை வெளியே இழுத்து விட்டது...

காரில் வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் முகத்தாரிடம் ஏன் அந்த மாட்டின் பெயரைச் சொல்லாமல் வேற மாதிரி எல்லாம் முதலிலே சொல்லினீங்கள்.

சின்னச் சிரிபோடை முகத்தார் சொன்னார்...." சின்னாவுக்கு கண்தெரியாது, தான் தனியத்தான் இழுகிறன் எண்டு தெரிஞ்சா அது இழுக்க முயற்சி கூடச் செய்யாது அதான் வேற எருமைகளும் இழுக்கிறமாதிரி ஒரு பில்டப் குடுத்தனான்...

வந்தவர் கிறுகிறுத்துப் போனார்..... :wink:

தம்பி என்னைப் பற்றி நானே புகழுறது அவ்வளவு நல்லதில்லைதான் இருந்தாலும் இந்த இடத்திலை ஞாபகப்படுத்தி சொன்னீர் அங்கைதான் நிக்கிறீர் எதுக்கும் சின்னப்பு வரேக்கை ஓளிச்சிருக்கிறது உமக்கு நல்லம் அல்லது..........இப்படித்தான் TG2.gif

சுண்ணாகத்தில முகத்தார் ஒரு குருட்டு எருமை மாடு வளத்தார்... எல்லாரும் மாட்டுக்கு குறி சுடுவினம்... முகத்தார் பெயர் வைத்து அதைச் சுட்டு வைத்திருந்தார்...... என்ன கோதாரிப் பெயரோ தெரியேல்லை... "சின்னா" எண்டு வச்சிருந்தார் எண்டு வைப்பம்....

ஒரு குச்சொளுங்கையால போகவேண்டிய முகத்தார் வீட்டுக்கு ஒருவர் காரில் வந்திருந்தார் வந்த போது நல்லமழை... சேறும் சகதியுமாய் இருந்த ஒழுங்கையில கார்ச்சக்கரங்கள் சிக்க வந்தவர் காறை வெளிய எடுக்க அவதிப்பட முகத்தார் உதவ முன் வந்தார்...

தன் எருமை மாடு சின்னாவைக் காறின் முன்னால் கட்டி இழுக்க திட்டம் போட்டுக் சின்னாவை கொண்டு வந்து கட்டினார்... கட்டிய பின்... பவ்லாவாக சின்னாவிடம்...

"ஏய் எருமை இழு" சின்னா அசையவில்லை......

கவலையே இல்லாமல் முகத்தார்... "சனியனே இழு எண்ற" அதுக்கும் சின்னா அசையவில்லை...

பிறகும் முகத்தார் "சின்னா இழு எண்று சொல்ல.." சின்னா மெதுவாக ஆனால் இலகுவாக காறை வெளியே இழுத்து விட்டது...

காரில் வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் முகத்தாரிடம் ஏன் அந்த மாட்டின் பெயரைச் சொல்லாமல் வேற மாதிரி எல்லாம் முதலிலே சொல்லினீங்கள்.

சின்னச் சிரிபோடை முகத்தார் சொன்னார்...." சின்னாவுக்கு கண்தெரியாது, தான் தனியத்தான் இழுகிறன் எண்டு தெரிஞ்சா அது இழுக்க முயற்சி கூடச் செய்யாது அதான் வேற எருமைகளும் இழுக்கிறமாதிரி ஒரு பில்டப் குடுத்தனான்...

வந்தவர் கிறுகிறுத்துப் போனார்..... :wink:[/quote

என்னதான் இருந்தாலும் எங்கட அப்புவில முகத்தார் அங்கிளுக்கு இவ்வளவு கோபமா எருமைக்கு சின்னா எண்டு பெயர் வைக்கிற அளவு :roll:

தல அண்ணா நல்லாயிருக்கு :lol::lol::lol:

பொண்ஸ் பிரண்ட்ஸ்:

எதுக்குடி உன் கணவன் நின்னுகிட்டே சாப்பிடறார். உன் மேல அவ்ளோ மரியாதையா?

பொண்ஸ்:

பொண்டாட்டி சம்பாத்யத்துல உட்கார்ந்து சாப்பிடார்னு யாரும் பேசிடக் கூடாதாம்

*******************************************

பொண்ஸ்:என்னங்க பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் போடறீங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?

முகம்ஸ்:சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.

*****************************************************

முகத்தாரின் மகன்

முகத்தார்

முகத்தாரின் மகன்

முகத்தார்

**************************

சின்னப்பு

முகத்தார்

வினித்துமா..... :(:lol::lol:

பொண்ஸ் பிரண்ட்ஸ்:

எதுக்குடி உன் கணவன் நின்னுகிட்டே சாப்பிடறார். உன் மேல அவ்ளோ மரியாதையா?

பொண்ஸ்:

பொண்டாட்டி சம்பாத்யத்துல உட்கார்ந்து சாப்பிடார்னு யாரும் பேசிடக் கூடாதாம்

*******************************************

பொண்ஸ்:என்னங்க பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் போடறீங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?

முகம்ஸ்:சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.

*****************************************************

முகத்தாரின் மகன்

முகத்தார்

முகத்தாரின் மகன்

முகத்தார்

**************************

சின்னப்பு

முகத்தார்

ஆகா .....வாசிக்க ... வாசிக்க.. சிரிப்பு சிரிப்பாத்தான் இருக்கு ... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதி போடுங்க வினித் அண்ணா... :(:lol::lol::lol:

ஆகா .....வாசிக்க ... வாசிக்க.. சிரிப்பு சிரிப்பாத்தான் இருக்கு ... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதி போடுங்க வினித் அண்ணா...

நான் எழுத இல்லை :P ஒரு ஜோக் வெப்சய்ட் ல எடுத்து மாத்தி போட்டு இருக்கேன் :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத இல்லை :P ஒரு ஜோக் வெப்சய்ட் ல எடுத்து மாத்தி போட்டு இருக்கேன் :P :P

நான் பயந்தே போய்விட்டேன். வினித்தா அப்படி என்று? :wink:

இருந்தாலும் வாழ்த்துக்கள் வினித்!! நல்லா எழுதியிருக்கின்றீர்கள்!! :P :)

வினித் அண்ணா நல்லாயிருக்கு

மாத்தி எழுதினாலும் பொருத்தமா மாத்தியிருக்கிறீங்க

வினித் அண்ணா நல்லாயிருக்கு

மாத்தி எழுதினாலும் பொருத்தமா மாத்தியிருக்கிறீங்க

முகத்தார் தான் என்ன சொல்லுவர் எண்டு தெரியவில்லை :wink:

வந்து எதும் கதைக்கட்டும் இராவணன் அண்ணாட சொல்லி ஒரே போடுதான் :P :P

முகத்தார் தான் என்ன சொல்லுவர் எண்டு தெரியவில்லை :wink:

வந்து எதும் கதைக்கட்டும் இராவணன் அண்ணாட சொல்லி ஒரே போடுதான் :P :P

இராவணன் அண்ணா என்ன உங்கட அடியாளோ...??? :evil: :evil: :evil:

இராவணன் அண்ணா என்ன உங்கட அடியாளோ...??? :evil: :evil: :evil:

:):lol::)

முகத்தார் படிக்கிற காலத்தில் ஒருநாள் வகுப்பறைக்கு வந்த முகத்தாருக்கு சொந்தக்காறரான ஆசிரியர்( அவருக்கு என்ன பேர் எண்டு முகத்தார்தான் சொல்லவேணும்) வந்தார். அந்த வகுப்பில்தான் முகத்தாரும் படித்தார்.

மாணவர்கள் வணக்கம் ஐயா எண்றபோது அதையேற்று உள்வந்த ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து கேட்டார்..

"யார் உண்மை சொல்பவர்கள் எண்டு சோதிக்கப்போறன். அதுக்காக நான் இப்ப கேள்வி கேக்கப்போறன்."

"இந்தவகுப்பிலேயே சரியான அடிமுட்டாள் எல்லாம் எழும்பி நில்லுங்கோ...! "

வாத்தியார் சொல்லி நிறைய நேரமாகியும் ஒருத்தரும் எழும்ப இல்லை. அங்க இருந்த முகத்தார் சுத்தி சுத்திப்பாத்தார்... ஒருத்தருக்கும் எழும்புற ஐடியாவே இல்லை. உடனேயே முகத்தார் எழும்பி நிண்று கொண்டார்...

வாத்தியார் முகத்தாரைப்பாத்துக் கேட்டார் நீமட்டும் தானா இந்த வகுப்பிலை அடிமுட்டாள்...???

முகத்தார் சொன்னார்: அப்பிடி இல்லை ஐயா அடி முட்டாள்களை நிக்கச்சொல்லீட்டு நீங்க மட்டும் தனியாக நிறைய நேரமாய் நிக்கிறீங்கள்.... அது தான் உங்களோட சேந்து நானும் நிப்பம் எண்டு..... அதான்...!

சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க

நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...

சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...

அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.

இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..

அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.