Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

Friday, 03 April 2009 04:57 TAMILAUSTRALIAN

புலிகளுக்கு "பயங்கரவாதிகள்" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின், புலிகளின் நாமம் அறவே இல்லாத தன் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி, அதன்மூலம் தன் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம்.

ஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதிகுறித்து இறங்கிய சிங்களத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை.

புலிகளை அழிக்கவும், வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அது போட்டிருந்த திட்டம் துளியளவேனும் ஈடேறவில்லை. இது இவ்வாறிருக்க, சர்வதேச நாடுகள் அனைத்தும் தன் பக்கமே இருக்கின்றன என்ற சிறீலங்கா அரசின் நினைப்பிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கின்றார்கள் உலகத் தமிழர்கள்.

உலகம் பூராவும் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சி கொண்டு பொங்கியெழுந்திருக்கும் நிலையில், சர்வதேசம் அவர்களின் குரல்களை செவிமடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

தமிழர்களின் ஒன்றுதிரண்டு ஓங்கியெழுந்த எழுச்சிக் குரலினை தட்டிக்கழிக்க அதனால் முடியவில்லை. சிங்கள அரசு தமிழர்மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும், தமிழர் பக்கமுள்ள நியாயப்பாட்டினையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது சர்வதேசம். வன்னிக்களத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் யாவும் தோல்வியை நோக்கிச் செல்ல ஆரம்பிதிருக்கின்றன.

வெற்றிகள் தன்னை விட்டு தூரத்தள்ளிச் செல்கின்றது என்பதை சகித்துக்கொள்ள முடியாத சிங்களம் தற்போது, தனது பாரம்பரிய ஆயுதமான சூழ்ச்சி வலையை தமிழர்கள் மீது விரித்திருக்கின்றது.

இப்பொழுது சிறீலங்கா அரசிற்கு பெரும் தலைவலியை கொடுத்து வருவது சர்வதேச ரீதியிலான தமிழ்மக்களின் போராட்டங்கள்தான். ஆதலால், தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களை குறிவைத்து தனது சூழ்ச்சி வலையை போட மும்முரமாக முனைந்திருக்கின்றது சிங்களம்.

தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்து அவர்களின் முக்கிய வெளிப்பாடான "தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற நிலைப்பாட்டை மாற்றி, தனக்குச் சாதகமான "மாற்றுத் தலைமைத்துவம்" ஒன்றினை உருவாக்குவதே அதன் சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

அதன் ஆரம்பமாகத்தான், தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பேசுவதற்கு வருமாறு இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். ஆனால். தமிழ்க் கூட்டமைப்பினர் அதை முற்றாக நிராகரித்திருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சிங்கள அரசு, புலிகளை ஓரங்கடுவதற்கும் தமிழர் போராட்டங்களை சீர்குலைப்பதற்கும் வேற்று வழியை தேடியது.

அதன்படி, புலம்பெயர் தமிழர்களில் இருந்தே சில "காக்கை வன்னியர்களை" விலை கொடுத்து வாங்கியிருக்கின்றது சிங்களம். தமிழர் எழுச்சிப் போராட்டங்கள் எங்கெங்கெல்லாம் பேரெழுச்சியோடு நடக்கின்றதோ அங்கெல்லாம் இருந்து இந்த "கறுத்த ஆடுகளை " விலைக்கு வாங்கியிருக்கின்றது மஹிந்த அரசாங்கம்.

இந்த "காக்கை வன்னியர்கள் " கடந்த வாரம் "புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள்" என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு சிறீலங்கா அரசின் சிறப்பு விருந்தினர்களாக சென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் சகோதரர் பசில் ராஐபக்ஸவை சந்தித்து பேசி திட்டமிட்டு திரும்பியிருக்கின்றார்கள்.

போராட்டங்கள் நடத்தப்படுவதை இயன்றவரை தடுக்கவும்,தமிழர் எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பவும்,ஈழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும்,புலிகளையும் மக்களையும் வேறுவேறானவர்கள் என சித்தரிக்கவும், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை பிரச்சாரப் படுத்துவதற்கும் இவர்கள் சிங்கள அரசிடம் உறுதியளித்திருக்கின்றார்கள

காக்கை வன்னியர்களை அறிந்தால் ஆதாரத்துடன் அறியத்தாருங்கள், நவர்களை அம்பலமாக்குவோம்.

இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்... தமிழ் மக்களிடம் உடுருவியுள்ள அசிங்கமானவர்கள் நேர்மையானவர்களையும் தீயவர்களக அடையாளம் காட்டியும் எம்மிடையே பிளவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தலாம். நாம் அவதானமாக இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'ளுழழசயஎயடi' pழளவஸ்ரீ'502623' னயவநஸ்ரீ'யுpச 3 2009இ 10:37 யுஆ'ஸகாக்கை வன்னியர்களை அறிந்தால் ஆதாரத்துடன் அறியத்தாருங்கள்இ நவர்களை அம்பலமாக்குவோம்.

இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்... தமிழ் மக்களிடம் உடுருவியுள்ள அசிங்கமானவர்கள் நேர்மையானவர்களையும் தீயவர்களக அடையாளம் காட்டியும் எம்மிடையே பிளவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தலாம். நாம் அவதானமாக இருப்பது நல்லது.ஜஃஙரழவநஸ

முதலில்......

எம்மிடையே...

அதுதான் யாழ். களத்தில் ஆரம்பிக்கலாமே....

என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது...?

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில்......

எம்மிடையே...

அதுதான் யாழ். களத்தில் ஆரம்பிக்கலாமே....

என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது...?

தாருங்களேன்

தாருங்களேன்

பட்டியல் இட்டால் நல்லம்

எட்டப்பர்கள் தப்பக்கூடாது. பட்டியலை பிரசுரித்தால் நன்மை பயக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாங்கள் உறுதியோடு இருப்போம். தேசிய விடுதலைப் போராட்டமானது காலத்துக்குக் காலம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பதும் கடப்பதுமாகத் தொடர்ந்து சரியான இலக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு இயல்பான பரிணாம வளர்ச்சியாகும். இதனைப் பொறுத்துக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாத சிங்களப் பேரினவாதமும்,காக்கைவன்னியன் கூட்டமும் கைகோர்த்து நிற்கிறது என்பதும் தொடர்கதையாகவே நிகழ்கிறது.

ஆனால், இதனைத் தமிழினம் சரியாக எதிர்கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. நாம் அனைத்து விடயங்களிலும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் இந்தக் கோடரிக் கம்புகளை இனம் காண்பதோடு, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நாம் உரிய முறையிலே எதிர்கொள்ள முடியும்.நாம் துணிவோடு இருப்போம். விழிப்போடு இருப்போம்.

கொலைவெறி அரசின் கருப்பு ஆட்டு மந்தைக் கூட்டத்தை அடையாளம் காட்டுங்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துரோகிகளின் பெயர் விபரங்களை, அவர்களின் படங்களுடன் அட்டவனைப்படுத்தி எல்லாவிதமான ஊடகங்கலும் வெளிப்படுத்துங்கள்.

இவங்களை வெளியிலையே உலாவ அனுமதிக்ககூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.