Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏமாற்றப்பட்ட நோர்வேத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை அடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட இளையோர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழர் தலைமையையும் ஏமாற்றுவதும் தமிழர் தரப்பிலான உண்மைச் செய்திகளை மழுங்கடித்து சிங்கள தேசத்திற்கு வால்பிடிப்பதும் கடந்த காலத்தில் பலமுறை பதிவு செய்யப்பட்டு விட்டது. நேரடியாக யுத்தத்திற்கு என்று நிதி வழங்காது புத்த விகாரைக்கு வெள்ளை அடிக்க, காலி முகத் திடலில் புல்லுப்புடுங்க என்று உப்புச் சப்பில்லாத பல திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சிறீலங்கா அரசுக்கு பெரும் பண உதவிகளை வழங்கி வருவது நோர்வே அரசு. அப்படியிருக்கையில் எவ்வாறு இவர்களின் வாக்குறுதியை நம்பினீர்கள் நோர்வோ வாழ் இளையோரே?

மேலே குறிப்பிட்ட தலைப்பு இப்போது பொருத்தமற்றது. ஆனால் இன்னும் சில நாட்களின் பின்னர் இந்தத் தலைப்பு நோர்வே வாழ் தமிழருக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

Edited by விதுரன்

நம்பிக் கழுத்தறுத்த தமிழ் அரசியல்வாதிகளால் இன்னும் இன்னும் நோர்வே தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

தங்கள் சுயலாபத்திற்காக இந்த அரசியல்வாதிகள் நாட்டையே விற்றுக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணுமெண்டால் தொடர்ந்த போராடுங்கோ. அது உங்கட முடிவு எண்டு சொல்லியும் போராட்டத்தை கைவிட்டிருக்கினம் எங்கட ஆக்கள்.

2நாள் ரைம் குடுத்திருக்கினம். அதுக்குப்பிறகு நடக்கிறதே வேறை எண்ட அர்த்தத்தில சொல்ல... மீடியாக்காரன் நீ என்ன குழப்பத்தை நோர்வேல உண்டுபண்ணப்போறியா எண்டு கேட்டான். அதுக்கு அந்த இளையவன் நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்ல, நமது போராட்ட வடிவம் எல்லாமக்களையும் சென்றடையும் விதத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.

Video: http://www.vgtv.no/?id=21948

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் நோர்வே வாழ் தமிழ் மக்களே அவர்கள் சொன்னதற்காக உங்கள் பொராட்டங்களை கைவிடாதீர் தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் நாம் எத்தனையோ பேரால் ஏமாத்தப்பட்டுள்ளோம் ஏமாத்தப்படப்போகிறோம் எனவே நீங்கள் அனைவரும் சிந்தித்து செயற்படுங்கள்

நோர்வே தொலைக்காட்சிகளில் எழுதியிருக்கின்றார்கள். எந்தவித வாக்குறுதிகளும் வழங்கப்படாமலே இவர்கள் இந்த போராட்டத்தை கைவிட்டதாக. எதுவாகினும் இந்த இளைய சமுதாயத்தின் உணர்ச்சிகளை கைகளை மீளவும் தமிழ் அரசியல்வாதிகள் கட்டியிருக்கின்றார்கள். தங்களை மீறி அவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் மிகமிக கவனமாக இருக்கின்றார்கள்.

நாட்டில் பிரச்சினை தீர்ந்து ஈழம் கிடைத்தாலும் இந்த பொறுக்கி அரசியல்வாதிகளால் அது நிலைக்காமல் போய்விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. 3 ஆயிரம் தமிழ் வாக்குகளை வைத்து புடுங்க முடியுமா என்று தன்வாயாலேயே கேட்ட தமிழ் அரசியல்வாதிகளால் எப்படி தமிழர்களிற்கான விடிவை ஏற்க முடியும்

அவர்களின் வாக்குறுதியை நம்பி, உங்கள் போராட்டங்களைக் கைவிடாதீர்கள். எமக்கென ஒரு முடிவு வரும்வரை நாம் தொடர்ந்து போராடத்தான் வேண்டும். வன்னி நிலைமைகள் மிகமோசமாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாம் வாழும் அரசுகளோடு முரண்படாது, அமைதியான வழியில் எமது போராட்டங்களை எடுத்துச் செல்வோம். நாம் அமைதியாகச் செய்யும் போராட்டங்களை அவர்கள் நிறுத்த முயலமாட்டார்கள். ஆகவே, தொடர்ந்தும் அமைதியாகக் கவனயீர்ப்பில் ஈடுபடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் வாக்குறுதியை நம்பி, உங்கள் போராட்டங்களைக் கைவிடாதீர்கள். எமக்கென ஒரு முடிவு வரும்வரை நாம் தொடர்ந்து போராடத்தான் வேண்டும். வன்னி நிலைமைகள் மிகமோசமாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாம் வாழும் அரசுகளோடு முரண்படாது, அமைதியான வழியில் எமது போராட்டங்களை எடுத்துச் செல்வோம். நாம் அமைதியாகச் செய்யும் போராட்டங்களை அவர்கள் நிறுத்த முயலமாட்டார்கள். ஆகவே, தொடர்ந்தும் அமைதியாகக் கவனயீர்ப்பில் ஈடுபடுங்கள்.

இன்று சிங்கள நாட்டின் நோர்வே தூதுவரை ஹெல உருமய எனும் பிரபல காவியுடை தரித்த பயங்கறவாதிகள் கூட்டத்தின் ஒருவரான உதய கம்மன்வில இரகசியமாக சந்திதிதுள்ளதாக தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சிங்களவனை பாராட்ட வேண்டும் .

சமாதான விடயத்தில் நோர்வே தலை நுழைக்கும் போதே ........ வெள்ளைப்புலி என்று சொல்லி உசாராகி ,

தங்களுடைய விகாரைக்கு நோர்வே காசில் வெள்ளையடித்து விட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களைக் கைவிடாதீர்கள். எமக்கென ஒரு முடிவு வரும்வரை நாம் தொடர்ந்து முன்னேடுத்துச் செல்ல வேண்டும்.

இன்றைய தமிழரின் நிலைக்குநோர்வேயும் ஒரு காரணம். அற்புதம் செய்ய முடியாத ஏரிக் உண்மையை முன் வைத்தால் உலகம் திரும்பி பார்க்கும்.

நோர்வேயின் கள்ளத்தனம் தான் இந்திய தலையீட்டுக்கு காரணம். திறந்த மனதுடன் பேச்சு வார்த்தை நிலைகளை சர்வதேசத்திற்கு தெரிவிக்காமல் கள்ளத்தனமாக இருந்ததன் விளவு தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை.

நோர்வே மூலம் தான் விடுதலைபுலிகள் எத்தனை வகையான நிர்வாக முறைகளை பரிசீலனைக்கு கொடுத்திருந்தார்கள்.

சுனாமி கட்டமைப்பு, இடைக்கால நிர்வாகம்,

இதெல்லாம் அற்புதம் செய்ய முடியாத ஏரிக் அவர்களுக்கு தெரியும் தானே.

நோர்வே தமிழ் மாணவர்கள் லண்டன் தமிழ்மாணவர்கள் வழியில் போராட்டங்களை தொடரவும் மக்கள் பின் நிற்பார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.