Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை வீரனாக நடத்த வேண்டும் - கருணாநிதி.

Featured Replies

நம்பிக்கை தரும் செய்திகள் வரும். தேவையின் நிமிர்த்தமே இந்தத் துயரங்கள் என்பதுதான் என் கருத்து.

எப்ப?தமிழினம் அழிந்த பின்பா?

எப்ப?தமிழினம் அழிந்த பின்பா?

தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

மாவீரர்தின உரையிலிருந்து.

நாங்களும் சில யதார்த்தங்களை பார்க்க வேண்டும் தானே.யாழ்ப்பாணம்,மட்டகளப்பு,

உண்மைதான், இந்திய இராணுவம் தனது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை ஈழத்தில் நிறுத்தியபோது எந்தத் தளப் பிரதேசமும் தமிழரிடம் மிஞ்சியிருக்கவில்லை. அதே போன்றதொரு நிலைதான் இப்போதும். தளப்பிரதேசத்தின் முக்கியத்துவம் உணரப்படுகின்ற காலம் இதுவல்ல. ஏனெனில் அந்தத் தளத்தை இல்லாதொழித்தல் வலுமிக்க நாடுகளுக்கு ஒரு பொருட்டல்ல. இதைப் புரிந்து கொண்டதாலேயே தளமும் இழக்கப்படுகிறது.

தளம் முக்கியமெனக் கருதி போராட்ட வலுவை இழந்துவிடக் கூடாது. நாங்கள் எதிர்பார்ப்பதை எதிரியும் எதிர்பார்க்கின்றான். ஆனால் களம் அதிலிருந்து நழுவுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், இந்திய இராணுவம் தனது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை ஈழத்தில் நிறுத்தியபோது எந்தத் தளப் பிரதேசமும் தமிழரிடம் மிஞ்சியிருக்கவில்லை. அதே போன்றதொரு நிலைதான் இப்போதும். தளப்பிரதேசத்தின் முக்கியத்துவம் உணரப்படுகின்ற காலம் இதுவல்ல. ஏனெனில் அந்தத் தளத்தை இல்லாதொழித்தல் வலுமிக்க நாடுகளுக்கு ஒரு பொருட்டல்ல. இதைப் புரிந்து கொண்டதாலேயே தளமும் இழக்கப்படுகிறது.

தளம் முக்கியமெனக் கருதி போராட்ட வலுவை இழந்துவிடக் கூடாது. நாங்கள் எதிர்பார்ப்பதை எதிரியும் எதிர்பார்க்கின்றான். ஆனால் களம் அதிலிருந்து நழுவுகின்றது.

1987 - 88 இல் இல்லாத ஒரு தளம் இன்றிருக்கிறது. அது புலம்பெயர் தமிழர்களின் கையில் இருக்கிறது.

நேரடியாக ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலை பெற்றவர்களை விட ஆயுதப் போராட்டத்தை வெகுஜனப் போராட்ட வடிவமாக்கி வென்றவர்களாக நெல்சன் மண்டேலா போன்றவர்களைக் காணலாம்.

நாமும் எமது போராட்ட வடிவங்களை எங்களின் எதிரிகளின் அரசியல்.. இராஜதந்திர.. இராணுவ நகர்வுகளுக்கு ஏற்ப எடுத்துச் செல்வது அவசியம். வீம்புக்கு கதை பேசி.. சிங்களவனை உசுப்பி விட்டுக் கொண்டிருந்ததைக் காட்டிலும்.. உருப்படியா ஏதாவது திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி இருப்பின்.. இன்றைய இழப்புக்கள் பலவற்றை தவிர்த்திருக்கலாம். இன்னும் காலம் போய் விடவில்லை. ஆயுதப் போராட்டம் மந்தமானாலும் பறுவாயில்லை.. எமது வெகுஜனப் போராட்டம் முனைப்புப் பெற வேண்டும். இலட்சியம் வெல்லும் வரை நாம் உலகெங்கும் போராட்டங்களை நடத்தி உலகில் எமக்கான உரிமையை பெற்றுத்தர அவர்களை நிற்பந்திக்க வேண்டும். இன்றேல் எமது அடிமை வாழ்வில் இருந்து கடவுளும் எம்மை மீட்க முடியாது..! :D

எமது வெகுஜனப் போராட்டம் முனைப்புப் பெற வேண்டும்.

களத்தில்( ஈழத்தின் வடக்கு கிழக்கு)வெகுஜன போராட்டம் முனைப்பு பெறவில்லையே ,அதற்க்கு முயற்ச்சியும் செய்யவில்லையே.களத்தி ல் வெகுஜன போராட்டம் நடந்தால் நல்லம்.

1987 - 88 இல் இல்லாத ஒரு தளம் இன்றிருக்கிறது. அது புலம்பெயர் தமிழர்களின் கையில் இருக்கிறது.

நேரடியாக ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலை பெற்றவர்களை விட ஆயுதப் போராட்டத்தை வெகுஜனப் போராட்ட வடிவமாக்கி வென்றவர்களாக நெல்சன் மண்டேலா போன்றவர்களைக் காணலாம்.

நாமும் எமது போராட்ட வடிவங்களை எங்களின் எதிரிகளின் அரசியல்.. இராஜதந்திர.. இராணுவ நகர்வுகளுக்கு ஏற்ப எடுத்துச் செல்வது அவசியம். வீம்புக்கு கதை பேசி.. சிங்களவனை உசுப்பி விட்டுக் கொண்டிருந்ததைக் காட்டிலும்.. உருப்படியா ஏதாவது திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி இருப்பின்.. இன்றைய இழப்புக்கள் பலவற்றை தவிர்த்திருக்கலாம். இன்னும் காலம் போய் விடவில்லை. ஆயுதப் போராட்டம் மந்தமானாலும் பறுவாயில்லை.. எமது வெகுஜனப் போராட்டம் முனைப்புப் பெற வேண்டும். இலட்சியம் வெல்லும் வரை நாம் உலகெங்கும் போராட்டங்களை நடத்தி உலகில் எமக்கான உரிமையை பெற்றுத்தர அவர்களை நிற்பந்திக்க வேண்டும். இன்றேல் எமது அடிமை வாழ்வில் இருந்து கடவுளும் எம்மை மீட்க முடியாது..! :D

களமும் புலமும் சரியாகச் செயற்பட்டால் விடிவு நிச்சயம். அடிமைகளாக்கப்பட்டோமானால் இனியொரு சுதந்திர எழுச்சிக்கு இடமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி முடிவு எப்படியானாலும்.....

இந்த கிழவனின் இறுதி ஊர்வலம் நடக்கும் நாளில் நான் உயிரோடிருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த இழவு வீட்டின் உலக பார்வையை தமதாக்கி தமிழில் பொழிந்து கொட்ட காத்திருக்கும் அரசியல்-சினிமா படம் பார்ப்பதே எனது தற்போதைய ஆசை. அந்த குறித்த ஆண்டின் சிறந்த நகைசுவை படமாக அதுதானட் இருந்தாலும் விருது பெறாது என்பது உறுதியானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமடியன் நம்பர் வண்......

  • கருத்துக்கள உறவுகள்

பிரகரனை வீரனாக நடத்த வேண்டும் என்று கூறுவதால் தான் வீரனாக நினைக்கிறார். காலம் எங்கே வந்துள்ளது என்பதை பற்றி மகிழ்சி கொள்ளுங்கள் நண்பர்களே. கால ஓட்டத்தில் நகல்கள் கரைந்துவிடும் அகல்களே நிலைக்கும். இல்லையே முருகனால் கடவுளாகி இன்றும் வாழ்ந்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரகரனை வீரனாக நடத்த வேண்டும் என்று கூறுவதால் தான் வீரனாக நினைக்கிறார். காலம் எங்கே வந்துள்ளது என்பதை பற்றி மகிழ்சி கொள்ளுங்கள் நண்பர்களே. கால ஓட்டத்தில் நகல்கள் கரைந்துவிடும் அகல்களே நிலைக்கும். இல்லையே முருகனால் கடவுளாகி இன்றும் வாழ்ந்திருக்க முடியாது.

எம் காலத்தில் அது நடந்திட வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.