Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்போவதில்லை: கோத்தபாய திட்டவட்டமாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 08:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

"போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாகக் கேட்ட போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கோத்தபாயவின் இந்தக் கருத்துக்கள் பிரபல சிங்கள தொலைக்காட்சிச் சேவையான 'தெரண'வின் செய்திச் சேவையில் இன்று திங்கட்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு தாக்குதல்கள் இடைநிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான தாக்குதல்கள் வன்னியில் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டிருக்கின்றது கவனிக்கத்தக்கது.

இதேவேளையில் தாக்குதல்களை இடைநிறுத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்துலக ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும், அனைத்துலக ரீதியான பிரச்சாரங்களுக்காகவுமே இவ்வாறான தாக்குதல் நிறுத்த அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்தது என்பது தற்போது புலனாகின்றது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தமென்பது ..........வெளி உலகுக்கு காட்ட எடுத்த ........போலி வேஷம் .......இதய் பயன் படுத்தி இன்னும் மோசமாகலாம். தற்காலிக போர் தணிப்பு ....

..கூட இல்லாத நிலை .இன்ரும் மக்கள் இறந்தும் காய பட்டும் உள்ளார்கள். இதை எப்படி நம்புவது ........

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் மணிதப் பிறப்பா..நாய் கூட்டங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 08:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

"போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாகக் கேட்ட போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கோத்தபாயவின் இந்தக் கருத்துக்கள் பிரபல சிங்கள தொலைக்காட்சிச் சேவையான 'தெரண'வின் செய்திச் சேவையில் இன்று திங்கட்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு தாக்குதல்கள் இடைநிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான தாக்குதல்கள் வன்னியில் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டிருக்கின்றது கவனிக்கத்தக்கது.

இதேவேளையில் தாக்குதல்களை இடைநிறுத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்துலக ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும், அனைத்துலக ரீதியான பிரச்சாரங்களுக்காகவுமே இவ்வாறான தாக்குதல் நிறுத்த அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்தது என்பது தற்போது புலனாகின்றது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி புதினம்

12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ]

48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்?

மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போர் நிறுத்தம் வரும் இடைவெளியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்குமாறும் அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கும் படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறணையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே அனைத்துலக ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது சிறீலங்கா அரசின் இந்த கபடத்தனமான இச்செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கையை தொடர் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்த அனைத்துலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஜனாதிபதி போர் நிறுத்தம் - தம்பி பாதுகாப்பு செயலாளர் போர் நிறுத்தம் இல்லை!

திகதி: 13.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

"போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாகக் கேட்ட போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கோத்தபாயவின்இந்தக் கருத்துக்கள் பிரபல சிங்கள தொலைக்காட்சிச் சேவையான 'தெரண'வின் செய்திச் சேவையில் இன்று திங்கட்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு தாக்குதல்கள் இடைநிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான தாக்குதல்கள் வன்னியில் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டிருக்கின்றது கவனிக்கத்தக்கது.

இதேவேளையில் தாக்குதல்களை இடைநிறுத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்துலக ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும், அனைத்துலக ரீதியான பிரச்சாரங்களுக்காகவுமே இவ்வாறான தாக்குதல் நிறுத்த அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்தது என்பது தற்போது புலனாகின்றது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த அறிவித்தலைத்தான் இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.