Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனின் அடியும் மஹிந்தவின் முடியும் பன்முகப்பட்ட ஜனநாயகம் ஏகத்துவம் மாற்றுக்கருத்து சுதந்திரம் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் அடியும் மஹிந்தவின் முடியும் பன்முகப்பட்ட ஜனநாயகம் ஏகத்துவம் மாற்றுக்கருத்து சுதந்திரம் ஒரு பார்வை:

ராஜா பரமேஸ்வரி:

2009 ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறந்து விட்டது. இந்தப் புத்தாண்டு நீலமாக பிறந்து விட்டதா என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்து ஒடுகின்ற இரத்தத்தின் ஊடாக இலங்கை நீலநிறமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏறத்தாள இரண்டு தசாப்தங்களின் பின் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெருநிலப்பரப்புக்கள் அரச படைகளிடம் வீழ்ந்த நிலையில் இந்தப் புத்தாண்டை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

கடும்போக்குவாத, அடிப்படைவாத, சிங்களவர்கள் மட்டும் அல்ல முற்போக்குவாத, புத்திஜீவித்தனமான சிங்களவர்கள் கூட தமிழர்களை தோற்றுப் போன இனமாக சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதுமட்டும் அல்ல விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலப்பகுதி என ஒரு கால வரையறையை உருவாக்கி அந்தப் புதிய காலத்தின் செயற்பாடுகள் பற்றி தோற்றுப் போன இனத்தின் மீழ் நிர்மானம் பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

மறுபுறம் புலி எதிர்ப்புக் காச்சல் பிடித்தவர்கள் அப்பாடா அதி உத்தம மேன்மை தங்கிய மீட்பர் மஹிந்தராஜபக்ஸவும் அவரது சகோதரர்களும் அரசாங்கப் படைகளும்; புலிப் பாசிசவாதிகளிடம் அல்லது புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து வடகிழக்கை விடுவித்து தமிழ் மக்களுக்கு சுபீட்சத்தையும் நல்வாழ்வையும் வழங்கி விட்டார்கள். இன்னும் வழங்கப் போகிறார்கள். சிறீலங்கா ஜனநாயக சோசலிச சமதர்மக் குடியரசில் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழப் போகிறார்கள அங்கே தேனும் பாலும் ஓடப்போகிறது என்கிறார்கள்.

இவற்றையும் தாண்டி அண்மையில் இலங்கை சென்று வந்த புலம்பெயர் ஜனநாயக ஜாம்பவான்கள் இலங்கையில் பிரச்சனைகளே இல்லை சிறுசிறு பிரச்சனைகள்தான் உண்டு இனரீதியான பெரிய பிரச்சனைகள் இல்லை என்றார்கள். நல்ல வேளை தமிழர்களுக்கு சாப்பாட்டுக்கு மட்டும் தான் பிரச்சனை உண்டு என இன்னும் இவர்கள் கூறவில்லை.

மாண்பு மிகு அமைச்சர் கருணாவேர், 83 இனக்கலவரம் ஒன்றுதான் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பிரச்சினை, அதற்குப் பின்பு சிங்களவர்கள் தமிழர்களைக் கட்டியணைத்து இன்புற்று இருக்கிறார்கள் எனக் கூறுகிறார். இந்த 83 இனக்கலவரம் கூட தனது தலைவர் மகிந்த ராஜபக்ஸ இருந்திருப்பாரானால் ஏற்பட்டிருக்காது எனக் கூறியுள்ளார்.

பழம் பெரும் அரசியல்வாதி என தன்னைப் புகழ் பாடும் விருது பெற்ற வீரர் ஆனந்தசங்கரியும் நேற்று வரை இலங்கையில் இன அழிப்பென்ற ஒன்று இடம்பெறவில்லை என கடிதம் எழுதி வந்தார். ஆனால் என்னவோ தன்னுடைய அரசியல் எதிரி டக்ளஸ் தேவானந்தாவை வடக்கின் முதலமைச்சராக மகிந்த முடி சூட்டப் போகிறாரென்ற செய்திகள் சூடு பிடிக்க திடீரென நித்திரை விட்டெழுந்து மக்களின் கொலைகள் பற்றிப் பேசுகிறார். கடந்த பல மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்த போது மௌனித்திருந்த ஆனந்தசங்கரி பௌர்ணமி தினத்தில் கால்நடைகளைக் கூடக்கொல்லக் கூடாது என்ற நாட்டில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிவிட்டார் என்ன அதிசயம்.

ஆக விடுதலைப் புலிகளே ஏக பிரதிநிதிகள் வேலுப்பிள்ளை பிரபாகரனே ஏக தலைவன் என்ற விடுதலைப் புலிகளின் கோட்பாட்டை நிராகரித்து பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாயக முறைமையினை வலியுறுத்திய இந்த ஆனந்தசங்கரி முதல் தர்மலிங்கம் சித்தார்;த்தன் சுகு என்ற சிறிதரன் உள்ளிட்ட மாற்று அரசியல் தலைமைகளும் வடக்கின் மீட்பர் டக்ளஸ் தேவானந்தாவும் கிழக்கின் மீட்பர்கள் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவர்களும், புலம்பெயர்வாழ் ஜனநாயக நட்சத்திரங்களும், காவலர்களும் இலங்கை ‐ மகிந்த ராஜபக்ஸ என்ற ஏக தலைவனின் கீழ் ஏதேட்சதிகாரப் பாதையில் ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கி செல்வது குறித்து சிந்திக்கத் தெரியாதவர்களாக வாய்திறக்க முடியாதவர்களாக இருப்பது வியப்புக்கு உரியதே.

அண்மையில் முக்கிய தலைவர்கள் மட்டத்தில் பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு கட்சிகளே இருக்க முடியும் பல கட்சிகள் இருந்து எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களாக இருந்தால் என்ன முஸ்லிம்களாக இருந்தால் என்ன இந்த இரண்டு கட்சிகளையும் சார்ந்தே இருக்க முடியும் எனக் கூறியிருக்கின்றார். ஆனால் அவ்வாறு இரு கட்சி எனக் கூறியது கூட ஒரு போலித்தனமானது என்பதை உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்

சுதந்திர முன்னணி ஆட்சிப் பீடம் ஏறியதில் இருந்து இலங்கையில் நெடுங்காலமாக இயங்கி வந்த பல்வேறு கட்சிகளுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தது. மிகப் பலமான கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு 17 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே தடவையில் அரசாங்கத்தில் இணைக்கப்பட்டார்கள். இவர்கள் ஆரம்பத்தில் மாற்று அணியாக இயங்க முடியம் என மகிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கியிருந்த போதிலும் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தினைப் பெற்று அக்கட்சியில் இரண்டறக் கலக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்று அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக மாறி விட்டார்கள்.

முஸ்லிம்களின் அடையாளத்தை பேணும் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே தடவையில் ஏழு வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுத்து அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டதன் மூலம் அந்தக் கட்சிக்கும் பாரிய நெருக்கடியை மகிந்த ராஜபக்ஸ கொடுத்திருந்தார். இவர்களும் ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணி என இயங்கி பின்னர் தனிக்கட்சியாகப் பதிவு செய்த போதும் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டறக் கலந்தவர்களாக உள்ளார்கள்.

ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற அத்தாவுல்லா அணியினர் பேரியல் அஷ்ரப் அணியினர் ஆகியோரும் இன்று தமது கட்சிகளின் தனித்துவங்களை இழந்து உதிரிகளாகி அரசாங்கத்துடன் ஒட்டியிருப்பவர்களாக மாறி விட்டார்கள். இன்று முஸ்லிம்களுக்கென முஸ்லிம் காங்கிரசை தவிர அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இரண்டறக் கலந்து ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியில் சங்கமமாகி நிற்கின்றன.

அடுத்து மலையத்தின் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்குள் பிளவை ஏற்படுத்தி அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை உதிரிகளாக அரசாங்கத்துடன் இணைத்து அந்தக் கட்சியும் பலவீனப்படுத்தப்பட்டது. சற்று முரண்டு பிடிக்க முற்பட்ட அமைச்சர் தொண்டமானின் ஊழல் தொடர்பான கோப்புக்களை மகிந்த கையில் எடுத்தவுடன் இலங்கைத்தொழிலாளர் காங்கிரசும் இன்று அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளது. மறு புறம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் விடுதலைப் புலிகளுடன் கொண்டு இருந்த உறவைக் காரணம் காட்டி மிரட்டப்பட்டு அரசாங்கத்திடம் சரணாகதி அடைய வைக்கப்பட்டார். மலையகத்திலும் கடந்த மாகாணசபைத் தேர்தல் வரை அரசிற்கெதிரான கட்சிகள் இல்லை என்ற நிலையில் இருந்து மாகாணசபைத் தேர்தலின் பின் சற்று மாறுபட்டு இலங்கைத் தொழிலாளர் தேசிய சங்கம் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் சேர்ந்து கொண்டன.

கிழக்கை மீட்பதற்கெனப் புறப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக உருவாக்கிக் கொண்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனும் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனும் இன்று தம்முள் முரண்பட்டு கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சங்கமிக்க பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக ஒருசிலருடன் நிற்கிறார். இவர்கள் இருவருக்கிடையிலும் பிளவுகளைத் திட்டமிட்டு உருவாக்கியது தாமே என முன்னாள் ராணுவப் பேச்சாளர் தனிப்பட வகையில் ஊடகவிலாளர் சிலரிடம் கதைக்கும் போது கூறியமை இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இன்று கருணாவின் தலைமையில் கிழக்கின் மட்டக்களப்பில்; 21 வருடங்களின் பின்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு விட்டது. கிராமம் கிராமமாக 60க்கும் மேற்பட்ட கட்சியின் காரியாலயங்களை திறக்கவுள்ளதாக கருணா பெருமிதத்துடன் கூறியுள்ளார். கிழக்கில் புதிதாக அரச உத்தியோகத்தில் சேர்க்கப்படுபவர்கள் அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் கிராம மட்டத்தில் உள்ள வெகுஜன அமைப்புக்களி;ல் உள்ளவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டும் என கருணா அணியினரால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

பிணங்களில் வழியும் ஊன் உண்டு வாழும் ஞமலிகளிடம் போய் இதனைக் கேட்டால், இந்தக் கோட்டான்களுக்கு ஏதாவது விளங்குமோ? எடுத்ததற்கெல்லாம் மாற்றுக் கருத்தென்போர், எங்கே ஒருமுறை மகிந்தவைக் கேட்கட்டும் பார்கலாம.;

  • கருத்துக்கள உறவுகள்

பலகேள்விகளுக்கு விடை காணப்படவேண்டிய ஆராச்சி கட்டுரை .......பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இவங்களுக்கு தெரியுமங்கோ, இருந்தாலும் இதைத்தவிர இவங்களுக்கு வேறுவழியில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.