Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிய விரும்புகின்றனரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிய விரும்புகின்றனரா?

யுத்தநிறுத்தம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனனை சந்திப்பதற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் டெல்லி பயணமாகின்றனர்.

சிவ்சங்கர் மேனனைச் சந்திப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிகள் காணப்படுகின்ற போதிலும் தற்போதைய யுத்த நெருக்குவாரங்கள் குறித்து இந்தியா என்ன கூற விரும்புகிறது என்பதை விடுதலைப் புலிகள் தரப்பு அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திப்பது குறித்து சில தவறான விழங்குதல்கள் இருந்த போதும் பின்னர் அது குறித்த புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பெரும் எதிர்ப்புக்களோ ஆட்சேபனைகளோ விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிய விரும்புவதாக சில முக்கியதரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை நேரடியாக புலிகளின் பேசவல்ல அதிகார தரப்பிடம் உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கை தொடர்பான பிரச்சனைகளில் இந்தியா தமிழ்த் தரப்பிற்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் எனவும் தமிழர்கள் குறித்த இந்திய நிலைப்பாடு குறித்து மீழாய்வு செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தல்கள் வெளிவரும் நிலையில் தற்போது தமிழ்க் கூட்டமைப்பு இந்திய தரப்பை சந்திக்க உள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=8410&cat=1

இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது பகிரங்கமானது. புலிகளை முழுவதுமாக அழிக்கவும் விரும்பாது. இலங்கை இராணுவத்தை வெல்வதற்கும் அனுமதிக்காது. இந்தியாவிற்குத் தேவை இலங்கையரசிற்று எதிரான ஒரு சக்தி இலங்கையில் இருப்பதே. அதற்கு கருணாவோ, டக்களசோ, ஆனந்த சங்கரியோ பொருத்தமானவர்களில்லை. புலிகள் மட்டுமே பொருத்தமானவர்கள். அவர்களை தமது வலைக்குள் இழுத்தெடுப்பதே நோக்கம். புலிகள் அழிந்துவிட்டால் இந்தியாவிற்கு இலங்கையில் வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய , மாநில அரசுகளை சந்திக்க விரும்பி இந்தியா சென்ற போது ......

எத்தனை இழுத்தடிப்பு செய்து அவமானப் படுத்தினார்கள் .

உண்மையான மனம் இருந்திருந்தால் ...... இன்று இவ்வளவு உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கும் நிலைமை ஆரம்பிக்க முன்பே இந்தியா அதனை தவிர்த்திருக்கலாம் . :lol:

ஒரே ஒரு வழி சீனா, பாகிஸ்தானுடன் நல்ல உறவை தமிழமக்கள் பலப்படுத்தவேண்டும்.. இந்தியாவை அடக்க இது தான் வழி..

உலகில் தமிழர்களும் இராஜதந்திர நகர்வுகளை ஏற்றவாறு மாற்றவேண்டும்...பழைய பல்லவி மாறவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு வழி சீனா, பாகிஸ்தானுடன் நல்ல உறவை தமிழமக்கள் பலப்படுத்தவேண்டும்.. இந்தியாவை அடக்க இது தான் வழி..

உலகில் தமிழர்களும் இராஜதந்திர நகர்வுகளை ஏற்றவாறு மாற்றவேண்டும்...பழைய பல்லவி மாறவேண்டும்...

இதுவே என் கருத்தும். இந்தியா ஒரு நாளும் எங்களுக்கு தனி நாடு பெற்றுத் தராது, "நீங்கள் செத்தொழிந்தாலும் பரவாயில்லை, எங்கள் இறையாண்மைக்கு ஆபத்து வராதிருக்க சேர்ந்திருங்கள்" என்று சொல்லும் இந்தியாவை இன்னும் நாங்கள் வால் பிடித்துத் திரிவது என்ன வகையில் புத்தியான செயலோ எனக்கு விளங்கவில்லை. இதற்குள், புலிகள் அறிய விரும்புகிறார்கள் என்ற நொண்டிச் சாட்டு வேறு. இந்தியா த.கூ விடம் என்ன சொல்லும் என்பதை ஒரு சிறு தமிழ்க் குழந்தை கூட அப்படியே சொல்லி விடும் அளவுக்கு இந்தியாவின் நிலைப்பாடு பட்டவர்த்தனமானது. அது இந்த "பழம் தின்று கொட்டை போட்ட"அரசியல் வாதிகளுக்கு தெரியாது என்று சொன்னால் பூச்சுற்றல் தவிர வேறொன்றுமில்லை. புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார வளங்கள் மூலமாவது சீனா போன்ற நாடுகளின் ஆதரவை நீண்ட கால போக்கில் எம்பக்கம் திருப்ப வேண்டும். இந்தியாவுக்கு யார் ஆப்படித்தாலும் ஈழத்தமிழர் அவர்களை ஆதரிக்க வேண்டும். (இது இப்போதே நீக்கப் படும் பாருங்கள், அப்படி இருக்குது எங்கள் இந்திய அடி வருடித் தனம்!)

சரியாகச் சொன்னீர்கள் குக்கூ பாக்கிஸ்தானுடன் இல்லா விட்டாலும் கட்டாயமா சீனாவுடன் தமிழர் தரப்பிலிருந்து உறவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.இதற்கு சில கேந்திர முக்கியத்துவமான பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.ஏனென்றால் இப்போதைய சூழலில் தமிழன் பலமிழந்தவன்.பலமிழந்தவனை உலகில் எவனும் ஏறெடுத்துப் பாற்க மாட்டான்.இன்றைய சூழலில் எமக்கு இந்தியா வேண்டும் என்கின்ற நிலையை மாற்றி இந்தியாவுக்கு நாம் வேண்டும் என்கின்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.இதற்கான நகர்வுகளை தமிழர் தலமை தொடங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா குறித்த புலிகளின் கொள்கையில் மாற்றம் ஏதாவது வரவேண்டுமானால் அது தேர்தலின் பின்புதான் ஏற்பட்டும்..! அதன்முன் ஏற்படுத்துவ்வது உசிதமானது அல்ல..!

புலிகளுக்கு கம்யூனிஸ்ச நாடுகள் ஆதரவை நாடி ஆதரவு எடுக்கவேண்டும் அல்லது புலிகொடியில் இருக்கும் சிவப்பு வர்ணம் அகற்றப்பட்டு முதாலாளி நாடுகள் இந்த கலர்கண்டு மிரளுவது தவிர்க்க வேண்டும்..

இது இரண்டு பக்க ஒத்துழைப்பும் இல்லாத நிலை மாறவேண்டும்...

இலங்கையை பாருங்கள் இவ்வளவும் செய்து கொண்டு இரசியா, சீனா, இங்கிலாந்து ஜப்பான்,லிபியா, பாகிஸ்தான் எல்லா நாடுகளையும் தன்பக்கம் வைத்து பிச்சாபாத்திரம், ஆதரவு சாதிக்கிறது...

பாதிக்கப்பட்ட இனம் மேலும் பாதிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக சடலங்களாகிறது..

உலகிற்கேற்ற உடன் மாற்றங்கள் தேவை..

சில இரகசியமாக... சில வெளிப்படையாக...இது தான் ராஜதந்திர காய் நகர்த்தல் காலத்திற்கேற்ற...

இந்தியாவை கிட்டு கப்பல் தாக்குதல்... உடனே ஒரம் கட்டி இருக்கவேண்டும்..

இந்தியாவின்சதிகளினால் எவ்வளவு இழப்பு தமிழர்கள் என்ன எடுபிடியா? அடிமைகளா?

இந்திரா அம்மையார்.. பார்த்தசாரதியுடன் இந்தியா கதை சரி.....

தமிழர்கொள்கைகள் வைரஸ் பிடித்துள்ளன....அதனை தொற்று நீக்க முடியுமா? இது பெரும் கேள்வி?

இப்போது இருக்கும் உலகத்தின் பார்வை எம்பக்கம் இருக்கும் போது அதனை சரியாக பயன்படுத்தும் சாணக்கியம் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

போரட்ட வடிவங்களை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் போராட்டத்தையே மாற்றுவது என்பது கீழ்தரமானது. தேசிய கொடியின் சிவப்பு வர்ணம் புரட்சியின் அடையாளமாகவே இருக்கட்டும். இதற்குள் கொம்னிசியத்தை இழுப்பது என்பது சரியான ஒன்றல்ல. நாம் நீதிக்காக போரடுபவர்கள். நீதியோடு நிற்ற வேண்டும் இந்த உலகில் நீதி இறந்து போகுமானால். நீதியோடு சேர்த்து ஈழதமிழனும் இறந்துபோனான் என்பது பெருமை. தவிர வாழ்விற்காக போரை விற்க நினைப்பது அப்பட்டமானது. பிறேமதாஸா தலைவர் பிரபாகனை 1990ம் ஆண்டு கேட்டது ஜனதிபதி பதவியை தவிர இலங்கையில் உனக்கு என்ன வேண்டும் என்பது? அப்போது விற்றிருக்கலாமே?

கம்யுனிச நாடுகளின் ஆதரவு கிடைக்காவிட்டால் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்...

Edited by குக்கூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.