Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேனன், நாராயணன் தமிழின அழிப்பில் மகிழ்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வேளையில் தமிழகத்தை சாந்தப்படுத்தும் முயற்சியே மேனன் குழுவின் இலங்கை வருகை?: ரைம்ஸ் ஒவ் இன்டியா

இந்தியாவில் காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவத்தில் (சோனியாகாந்தி) இறுதித் தீர்மானத்தையடுத்தே இந்தியா வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் கொழும்புக்கு அனுப்புவதென நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்புக்கு வருகை தந்த மேனனும் நாராயணனும் மாலையே டில்லிக்கு திரும்பிச் செல்லவிருந்தனர்.

யுத்த நிறுத்தத்திற்கான தேவையை அவர்கள் வலியுறுத்துவார்களென இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி "ரைம்ஸ் ஒவ் இன்டியா" தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளுமாறும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டவட்டமான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்திய அதிகாரிகள் குழுவினர் வலியுறுத்துவார்களென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க.கூட்டணி தமிழ்நாட்டில் 39 ஆசனங்களையும் பெற்றிருந்தது. இந்தமுறை தேர்தலில் இலங்கை நிலவரத்தால் எதிர்பார்ப்புகள் பாதிக்கப்படக்கூடாதென்ற நிலைப்பாட்டில் கொழும்புக்கு தூதுக்குழுவை அனுப்ப காங்கிரஸ் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியிலிருந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கையாலாகாத்தனத்தில் இருப்பதாகவும், அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முடியாமல் இருப்பதாகவும் அ.தி.மு.க. தலைமையினால் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் கொழும்புக்கு இந்தியத் தூதுக்குழு விரைந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்தத் துரிதமான தலையீட்டின் விளைவுகள் வாதத்துக்குரியவையாக இருக்கக்கூடும். ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை தணிக்க இது உதவுமென காங்கிரஸ் தலைமைப்பீடம் நம்புகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையும் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்க விசேட தூதுவரை புதுடில்லிக்கு அனுப்பவுள்ளது. அடுத்தவார இறுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி இந்தியாவுக்கு வருகை தருவாரென எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் "ரைம்ஸ் ஒவ் இன்டியா" க்கு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் புதுடில்லி தனது நிலைப்பாட்டை கடுமையானதாக்கியிருப்பதற்கு சாட்சியமாக இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்த கருத்து காணப்படுகிறது. தற்போதைய நெருக்கடிக்கு இலங்கை அரசு மீதே அதிகளவு குற்றம் சாட்டப்பட வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு இராணுவரீதியில் தீர்வுகாண முடியுமென கொழும்பு நம்புவதாகத் தென்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதேவேளை வன்னி பகுதியிலிருந்து சிவிலியன்களை பாதுகாப்பாக மீட்டமை தொடர்பில் இந்திய தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், இந்தியா வழங்கும் உதவிகளுக்கு இலங்கை நன்றிகளை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் குறிப்பிட்டன.

அத்துடன் மோதல்களின்போது பொது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-----------------------

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அனுர பிரியதர்சன யாபா

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாராயணன் ஆகியோர் ஜனாதிபதியுடன் என்ன விடயங்களைப் பற்றி கலந்துரையாடினார்கள் என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு இந்தியா பூரண ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மீது அரச படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வின்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மீது அரச படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.

சரி சரி நீங்கள் சொன்னசரிதான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு இந்தியா பூரண ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆமாம். ஆமாம் மிகவும் சரியான கருத்து . ஏனெனில் புலிகள் மக்களை கொல்லாததால் இவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமே . காங்கிரஸ் போல சீக்கிய பொதுமக்களையோ அல்லது பாஜக போல முஸ்லிம் பொதுமக்களையோ கொன்றால் அல்லது திமுக போல பெரும்பான்மை மக்களின் பக்தியை கேலி செய்தால் மட்டுமே இந்தியாவில் அரசியல் அங்கீகாரம் கிடைக்கும். புலிகள் கொன்றது அவர்களின் எதிரிகளையும், துரோகிகளையும், மாற்று கருத்தோடு போராட்டத்தை திசை திருப்பியவர்களையும், தேவையின்றி தலையிட்டவர்களையும் தான் மட்டுமே மக்களை அல்ல .

Edited by tamil paithiyam

இலங்கை நிலைவரம் தொடர்பில் நல்லதே நடக்கும்; நல்ல முடிவு விரைவிலே வரும் என்று நம்புகின்றேன்: ப. சிதம்பரம் பேட்டி

வேண்டுகோள், கோரிக்கை என்பதை எல்லாம் தாண்டி, உடனே போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தி கூறியுள்ளது. நல்லதே நடக்கும், நல்ல முடிவு விரைவிலே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

இலங்கைக்கு இரு அதிகாரிகளை அனுப்பி பேச்சுவர்ர்த்தை நடத்தியபின்னர் இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா இலங்கைக்கு அனுப்பிய இரண்டு தூதர்களும் இலங்கையிலே இலங்கை ஜனாதிபதி மற்ற அதிகாரிகளை சந்தித்துவிட்டு டெல்லி திரும்பி இருக்கிறார்கள். டெல்லி திரும்பிய அவர்கள் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்திய அரசின் கவலை, தமிழக மக்களின் கவலையை எல்லாம் இலங்கை அரசிடம் அவர்கள் எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம், திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள். வேண்டுகோள், கோரிக்கை என்பதை எல்லாம் தாண்டி இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி நம்முடைய தூதர்களின் கருத்துகளை எல்லாம் கவனமாக கேட்டார் என்று அதிகார பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நல்லதே நடக்கும் என்று நான் நம்புகிறேன். ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து என்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஆனால், நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். இந்திய தூதர்களோடு நான் தொலைபேசியில் பேசினேன்.

அந்த விவரங்களை எல்லாம் முதலமைச்சர் கருணாநிதியிடம் விவரமாக எடுத்துக் கூறினேன். அங்கு நடந்த பேச்சுவார்த்தை, முடிவுகளை எல்லாம் முதலமைச்சரிடம் நான் எடுத்துச் சொல்லி, அந்தச் செய்திகளை அவரோடு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவரும், நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்று கூறியிருக்கிறார். நல்லதே நடக்கும், நல்ல முடிவு விரைவிலே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

http://www.tamilwin.com/

இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளென எவ்வாறுதான் சரத்பொன்சேகா கண்டு பிடித்தாரோ தெரியாது. இலங்கை இராணுவத் தளபதியாக இல்லாமல் ஒரு சிங்கள இனத்தவரான அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.