Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர் நாடு கடத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத் தமிழர். குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார்.

சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் சந்திரயோகாவை கண்காணித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு சந்திரயோகாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபி என்று தெரிய வந்தது.

இதையடுத்து குடியேற்றப் பிரிவின் உதவியோடு சந்திரயோகாவின் விசா ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திரயோகா திருச்சி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பிரபாகரனை ஒப்படைக்க கோரியுள்ளது இந்தியா-பாஜக:

இந் நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறுகையில்,

தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சினையில் குழப்பத்தில் இருக்கிறது. இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதால் இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து முழுமையாக தோற்கடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் தான் முதல்வர் கருணாநிதி 7 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களை ஏமாற்ற நினைத்தார். ஆனால் அவர் ஏமாந்து போனார். தொடர்ந்து அங்கு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். போர் நிறுத்தம் என்று சொல்லி கொண்டு தமிழ் மக்களை கொலை செய்வதை ராஜபக்சே கைவிடவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. பிரணாப் முகர்ஜி ஒன்று சொல்கிறார். ப.சிதம்பரம் ஒன்று சொல்கிறார்.

விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தற்போது எழுத்துபூர்வமாக இந்திய அரசு, இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரை தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. மற்றொரு நாட்டை பிரிக்க இன்னொரு நாடு வற்புறுத்த முடியாது. நமது நாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரை கொலை செய்த பிறகு விடுதலைப் புலிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் குறைந்து விட்டது என்றாலும் புலிகளின் பெயரைச் சொல்லி இலங்கை தமிழர்களை முழுமையாக அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அதை ஏற்க முடியாது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்கவும், சம உரிமை வழங்கவும் சர்வதேச நிர்பந்தங்களை கொடுத்து அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ ஏற்பாடு செய்வோம் என்றவர்,

தமிழகத்தில் பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள் என்று 'ஜோக்கும்' அடித்தார்.

தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவை பொறுத்தவரை தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. மற்றொரு நாட்டை பிரிக்க இன்னொரு நாடு வற்புறுத்த முடியாது.

அட அவனும் நாமம் போட்டுட்டானா .........

கோவிந்தா ...... கோவிந்தா .......

பிரபாகரனை ஒப்படைக்க கோரியுள்ளது இந்தியா-பாஜக:

அது சரி பா.ஜா.வுக்கு ஏனாம் பிரபாகரன் வேணும் . :rolleyes:

Edited by தமிழ் சிறி

அட அவனும் நாமம் போட்டுட்டானா .........

கோவிந்தா ...... கோவிந்தா .......

தமிழ் சிறி... இந்தியா என்றென்றுக்கும் இலங்கை பிரிவதை சந்தோசத்துடன் பார்க்காது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் வெளியுறவுக் கொள்கை ஈழம் உருவாவதை தடுக்கவே செய்யும்.

இந்தியாவின் ஆதரவை பெற முயல்வதை விட பாகிஸ்தானதும் சீனாவினதும் ஆதரவை பெறுவது இலகு என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி... இந்தியா என்றென்றுக்கும் இலங்கை பிரிவதை சந்தோசத்துடன் பார்க்காது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் வெளியுறவுக் கொள்கை ஈழம் உருவாவதை தடுக்கவே செய்யும்.

இந்தியாவின் ஆதரவை பெற முயல்வதை விட பாகிஸ்தானதும் சீனாவினதும் ஆதரவை பெறுவது இலகு என நினைக்கின்றேன்

நிழலி ,

அதுக்கு தானே ..... சிங்களவன் முந்திக்கொண்டு விட்டானே ......

இப்ப நாம் யாரைப் பிடிக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கருத்தே எனதும். இப்ப பாருங்கோ ஈழம் உருவானா, தமிழகம் பிரிஞ்சு இந்திய "இறையாண்மை" (இதுக்கு நல்ல வேற சொல் ஒண்டு இருக்கு, இங்க எழுத ஏலாது!) க்குப் பாதிப்பு வரும் எண்டு தானே இந்தியாவின் கவலை? இந்தியாவை உடைக்கிற எந்த வேலைக்கும் சீனா பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும். அதனால தான் இந்த நாடுகள நோக்கி நாங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேணும். எங்களுக்கு உதவி செய்தா அம்பாந்தோட்டை என்ன, காங்கேசந்துறையிலயே சீனா கோபுரம் கட்டிக் குடியிருந்து இந்தியாவுக்கு ஆப்பு மேல ஆப்பாக வைக்க விடுவம் எண்டு சீனாவுக்கு புரியச் செய்தால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கருத்தே எனதும். இப்ப பாருங்கோ ஈழம் உருவானா, தமிழகம் பிரிஞ்சு இந்திய "இறையாண்மை" (இதுக்கு நல்ல வேற சொல் ஒண்டு இருக்கு, இங்க எழுத ஏலாது!) க்குப் பாதிப்பு வரும் எண்டு தானே இந்தியாவின் கவலை? இந்தியாவை உடைக்கிற எந்த வேலைக்கும் சீனா பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும். அதனால தான் இந்த நாடுகள நோக்கி நாங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேணும். எங்களுக்கு உதவி செய்தா அம்பாந்தோட்டை என்ன, காங்கேசந்துறையிலயே சீனா கோபுரம் கட்டிக் குடியிருந்து இந்தியாவுக்கு ஆப்பு மேல ஆப்பாக வைக்க விடுவம் எண்டு சீனாவுக்கு புரியச் செய்தால் சரி!

ஜஸ்ரின் , எங்களால் ஏன் ? இதனை முன்பே ஊகிக்க முடியவில்லை .

உலக அரசியல் வறட்சியா ?

அல்லது இந்தியாவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையா ?

மாநிலச் செய்தி கேட்டு வளர்ந்த பழக்கம்.

ஈழத்தமிழர்களுக்கு பதிலாக தமிழக இளைஞர்களை அப்படியே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறக்கிவிடச் சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன சந்தேகம் சிறி? இந்தியா மீது கொண்ட நம்பிக்கை தான் காரணம். இந்தியா ஈழம் அமைய அனுமதிக்காது என்பது பல காலமாகத் தெரியும். ஆனாலும், எங்கள் மீதான சிங்களவனின் அடக்கு முறையை அறிந்திருப்பதால் ஒரு விதி விலக்குக் காட்டலாம் என்ற நம்பிக்கை எங்கள் ஆட்களுக்கு இருந்தது. எங்கள் தலைமைக்கே இருந்தது. மேலும், சீனா பாகிஸ்தான் எங்களுக்கு தங்கள் சுய லாபத்திற்காக மட்டுமே உதவக் கூடும் என்ற நிலை இருந்த போது , இந்தியா நாங்கள் அவர்களின் உறவுகள் என்ற காரணத்திற்காக உதவலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்போது எல்லாம் தலை கீழ். இந்தியா சொல்லுது:" உங்களை யார் துன்புறுத்தினாலும், இந்திய "இறையாண்மையை" காக்க நீங்கள் அடிப்பவனுடனேயே சேர்ந்து இருங்கள்" என்று. நாங்கள் சொல்ல வேண்டியது: "நாங்கள் இந்தியர் அல்ல, எங்கள் விடுதலையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அதற்காக பேயுடன் கூட்டுச் சேரவும் தயார். அந்தப் பேய் இந்தியா மீது விழுந்து புடுங்கினாலும் நாம் அந்தப் பேயுடன் தான் நிற்போம், சில வேளை இந்தியாவின் நாசம் எங்கள் விடுதலைக்கு விலையென்றால் அதையும் கொடுப்போம்!"

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன சந்தேகம் சிறி? இந்தியா மீது கொண்ட நம்பிக்கை தான் காரணம். இந்தியா ஈழம் அமைய அனுமதிக்காது என்பது பல காலமாகத் தெரியும். ஆனாலும், எங்கள் மீதான சிங்களவனின் அடக்கு முறையை அறிந்திருப்பதால் ஒரு விதி விலக்குக் காட்டலாம் என்ற நம்பிக்கை எங்கள் ஆட்களுக்கு இருந்தது. எங்கள் தலைமைக்கே இருந்தது. மேலும், சீனா பாகிஸ்தான் எங்களுக்கு தங்கள் சுய லாபத்திற்காக மட்டுமே உதவக் கூடும் என்ற நிலை இருந்த போது , இந்தியா நாங்கள் அவர்களின் உறவுகள் என்ற காரணத்திற்காக உதவலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்போது எல்லாம் தலை கீழ். இந்தியா சொல்லுது:" உங்களை யார் துன்புறுத்தினாலும், இந்திய "இறையாண்மையை" காக்க நீங்கள் அடிப்பவனுடனேயே சேர்ந்து இருங்கள்" என்று. நாங்கள் சொல்ல வேண்டியது: "நாங்கள் இந்தியர் அல்ல, எங்கள் விடுதலையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அதற்காக பேயுடன் கூட்டுச் சேரவும் தயார். அந்தப் பேய் இந்தியா மீது விழுந்து புடுங்கினாலும் நாம் அந்தப் பேயுடன் தான் நிற்போம், சில வேளை இந்தியாவின் நாசம் எங்கள் விடுதலைக்கு விலையென்றால் அதையும் கொடுப்போம்!"

ஜஸ்டின் ,

அப்படியென்றாலும் தாய்த்தமிழகத்தின் , தொப்பிள் கொடி உறவை வெட்ட முடியுமா ?

அதுகளை நினைக்கத்தன் பாவமாயிருக்குது .

நல்ல தலைமை கிடைக்கலையோ .... என்று தோன்றுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை தனிமைப்படுத்த வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ,

அப்படியென்றாலும் தாய்த்தமிழகத்தின் , தொப்பிள் கொடி உறவை வெட்ட முடியுமா ?

அதுகளை நினைக்கத்தன் பாவமாயிருக்குது .

நல்ல தலைமை கிடைக்கலையோ .... என்று தோன்றுகின்றது .

யாரு வெட்டச் சொன்னது? அவையள் எப்பவும் எங்கள் ரத்தம் தான். ஆனா பிரச்சினை என்னண்டா அவையள் இல்லையே இந்தியாவையும் அதன் கொள்கையளயும் ஆள்வது? (அல்லது, அவர்கள் தற்போது ஆண்டாலும் அவர்களின் சாக்கடை அரசியல் வாதிகளால அதன் பலன் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று எண்டும் சொல்லலாம்!) ஆனா நாங்கள் தெளிவா இருக்க வேண்டியது, "நாம் ஈழத் தமிழர், இந்தியர் அல்ல. இந்தியாவிலுள்ள உறவுகள் மனங்கோணுமெண்டு எங்கட 20,000 மாவீரர்களையும் ஒரு லட்சம் மக்களையும் அவர்கள் வெறுமனே நோக்கமின்றிச் செத்தார்கள் எண்டு ஆக்கி விடக் கூடாது. இந்தியாவுக்கு ஆப்பு வைச்சாவது எங்கள் நோக்கம் நிறைவேற வேணும்."

  • கருத்துக்கள உறவுகள்

யாரு வெட்டச் சொன்னது? அவையள் எப்பவும் எங்கள் ரத்தம் தான். ஆனா பிரச்சினை என்னண்டா அவையள் இல்லையே இந்தியாவையும் அதன் கொள்கையளயும் ஆள்வது? (அல்லது, அவர்கள் தற்போது ஆண்டாலும் அவர்களின் சாக்கடை அரசியல் வாதிகளால அதன் பலன் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று எண்டும் சொல்லலாம்!) ஆனா நாங்கள் தெளிவா இருக்க வேண்டியது, "நாம் ஈழத் தமிழர், இந்தியர் அல்ல. இந்தியாவிலுள்ள உறவுகள் மனங்கோணுமெண்டு எங்கட 20,000 மாவீரர்களையும் ஒரு லட்சம் மக்களையும் அவர்கள் வெறுமனே நோக்கமின்றிச் செத்தார்கள் எண்டு ஆக்கி விடக் கூடாது. இந்தியாவுக்கு ஆப்பு வைச்சாவது எங்கள் நோக்கம் நிறைவேற வேணும்."

ஜஸ்ரின் , நீங்கள் கூறிய கருத்துக்கள் சரியாகவும் , சிந்திக்கக் கூடியாதாகவும் உள்ளது . :rolleyes:

ஏன் கஸ்மீரை உடைக்க உதவினால் என்ன?....பாகிஸ்தானின் உதவியுடன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.