Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் நிலை - கமல் , ரஜினி ..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும் என நம்பிக்கை தெரித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன்.

தனது அடுத்த படமான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குறித்த அறிமுகவிழாவில் இக் கரத்தினைத் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர்,ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

தமிழன் என்பது ஒரு அடையாளம். ஆனால் அது உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. நான் தமிழன்தான், ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழனுக்கு மட்டுமல்ல வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன் எனத் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து கமலஹாசன் இவ்விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்த போதும் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ஈழத் தமிழர் விவகாரம் குறித்தோ, அல்லது அங்கு நடைபெறும் இனப்படுகொலைகள் குறித்தோ இதுவரையில் எதுவித கருத்துக்களும் தெரிவிக்காது மெளனம் சாதிப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. திரையுலகத்தினர் முன்பு நடத்திய உண்ணாவிரத மேடையில் அவர் கருத்துக் கூறப் போய், அது பின்னர் பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாகியதாலுயே தற்போது மெளனம்ட சாதிக்கின்றார் எனவும், அவருக்க நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுவதாவும் அறியமுடிகிறது.

தேர்தற்காலமாகையால் ரஜினி இதுபற்றி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்க, அதுவே தேர்தற்பிரச்சாரமாக்கப்பட்ட

ரஜினி இதுபற்றி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் தெரிவிப்பார் என எதிர்பார்துள்ளோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில வேளைகளில் அடுத்த படம் வெளியிடும் வேளையில் ரஜனி அறிக்கை விடுவான் ஏனென்றால் அவன் உடலில் ஓடுவது கன்னட இரத்தம் அல்லவா ?

எம் மக்களின் பிச்சைக்காசுகளால் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கும் இவன் போன்ற சனியன்களுக்கு ஆப்பு சரியான நேரத்தில் வைக்க வேண்டும் வெள்ளை சட்டை போட்டு தாடி வளர்த்த இளையராஜா எங்கே மடையனுக்கு சிம்பொனி கேட்கிறதா இவனுக்கு ?ஒரு சின்ன இரங்கல் கூட எம் மக்களுக்கு தெரிவிக்க முடியாத அளவுக்கு இவனுக்கு மமதையா ?

ஒரு சில வேளைகளில் அடுத்த படம் வெளியிடும் வேளையில் ரஜனி அறிக்கை விடுவான் ஏனென்றால் அவன் உடலில் ஓடுவது கன்னட இரத்தம் அல்லவா ?

எம் மக்களின் பிச்சைக்காசுகளால் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கும் இவன் போன்ற சனியன்களுக்கு ஆப்பு சரியான நேரத்தில் வைக்க வேண்டும் வெள்ளை சட்டை போட்டு தாடி வளர்த்த இளையராஜா எங்கே மடையனுக்கு சிம்பொனி கேட்கிறதா இவனுக்கு ?ஒரு சின்ன இரங்கல் கூட எம் மக்களுக்கு தெரிவிக்க முடியாத அளவுக்கு இவனுக்கு மமதையா ?

உங்களுடைய கருத்துக்கள் இன்னும் பகைவர்களைத்தான் எமக்கு உருவாக்கித்தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைப்பிரயோகம்!

ஈழத்தமிழர் விடயத்தில் ரஜினி கொண்டிருந்த கருத்து அவர் அன்று உண்ணாவிரத மேடையில் பேசியபோதே விளங்கியது. அவர் கருத்து நமக்கு ஆதரவானதே.

அவர் இப்போது மெளனம் காப்பது சில தனிப்பட்ட,பல பொதுப்பட்ட காரணங்களுக்காக இருக்கலாம்.

ஆனாலும், ஈழத்தில் தமிழுறவுகள் அநியாயமாய் செத்துமடியும் இச்சந்தர்ப்பத்திலும் கூட மெளனமாய் இருப்பது வருத்தமளிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு உங்கள்ன்ட கதை அவருடைய திரைப்படத்தை புறக்கணிப்போம் ஆனால் அவருட்டை எங்களுக்கு அனுதாபத்தை எதிர்ப்பார்ப்போம் ஆண்டவா வாயாலே கெட்டோம் நாம் :unsure:

அவர் இப்போது மெளனம் காப்பது சில தனிப்பட்ட,பல பொதுப்பட்ட காரணங்களுக்காக இருக்கலாம்.

முனிவர்ஜீ! தயவுசெய்து மன்னிக்கவேண்டும். உங்களுக்கே உபதேசம் செய்கின்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம். நாம் எவ்வளவோ இழந்துகொண்டிருக்கின்றோம். எதற்காக...???

நாம் யாரிடமும் "யாசகம்" கேட்கவில்லை. நமது உரிமையையே நாம் கேட்கின்றோம். அந்த உரிமையை வென்றெடுக்க நாம் போராடிக்கொண்டிருக்கும் இறுதியான உறுதியான இத்தருணத்தில், நமக்கு ஆதரவாக ஒலிக்கக் கூடிய வலிமைமிக்க குரல்களை நாம் பகைத்துக்கொள்ளக் கூடாது. ஏதொவொருவகையில் அவர்கள் நமக்கு உதவுவார்கள். எதிரிகள், துரோகிகள் வேறு. நடுநிலையாய்...அமைதியாய்... இருப்பவர்கள் வேறு.

அதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்

[முக்கிய குறிப்பு: நான் ரஜினி ரசிகன் இல்லை]

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் யாரிடமும் "யாசகம்" கேட்கவில்லை. நமது உரிமையையே நாம் கேட்கின்றோம். அந்த உரிமையை வென்றெடுக்க நாம் போராடிக்கொண்டிருக்கும் இறுதியான உறுதியான இத்தருணத்தில், நமக்கு ஆதரவாக ஒலிக்கக் கூடிய வலிமைமிக்க குரல்களை நாம் பகைத்துக்கொள்ளக் கூடாது. ஏதொவொருவகையில் அவர்கள் நமக்கு உதவுவார்கள். எதிரிகள், துரோகிகள் வேறு. நடுநிலையாய்...அமைதியாய்... இருப்பவர்கள் வேறு.

அதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்

பருத்தியன் சொல்வது சரி. இது அபிமானமல்ல, அவதானம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.