Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

Featured Replies

தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

சதிவலை விரிக்கும் சிங்களம்

புலிகளுக்கு "பயங்கரவாதிகள்" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின், புலிகளின் நாமம் அறவே இல்லாத, தம் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி, அதன்மூலம் தம் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம். ஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதிகுறித்து இறங்கிய சிங்கள இராணுவத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. புலிகளை அழிக்கவும், வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அது போட்டிருந்த திட்டம் துளியளவேனும் ஈடேறவில்லை. இது இவ்வாறிருக்க, சர்வதேச நாடுகள் அனைத்தும் தன் பக்கமே இருக்கின்றன என்ற சிறீலங்கா அரசின் நினைப்பிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கின்றார்கள் உலகத் தமிழர்கள்.

உலகம் பூராவும் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சி கொண்டு பொங்கியெழுந்திருக்கும் நிலையில், சர்வதேசம் அவர்களின் குரல்களை செவிமடுக்கத் தொடங்கியிருக்கின்றது. தமிழர்களின் ஒன்றுதிரண்டு ஓங்கியெழுந்த எழுச்சிக் குரலினை தட்டிக்கழிக்க அதனால் முடியவில்லை. சிங்கள அரசு தமிழர்மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும், தமிழர் பக்கமுள்ள நியாயப்பாட்டினையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது சர்வதேசம். வன்னிக்களத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் யாவும் தோல்வியை நோக்கிச் செல்ல ஆரம்பிதிருக்கின்றன.

வெற்றிகள் தன்னை விட்டு தூரத்தள்ளிச் செல்கின்றது என்பதை சகித்துக்கொள்ள முடியாத சிங்களம் தற்போது, தனது பாரம்பரிய ஆயுதமான சூழ்ச்சி வலையை தமிழர்கள் மீது விரித்திருக்கின்றது.

இப்பொழுது சிறீலங்கா அரசிற்கு பெரும் தலைவலியை கொடுத்து வருவது சர்வதேச ரீதியிலான தமிழ்மக்களின் போராட்டங்கள்தான். ஆதலால், தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களை குறிவைத்து தனது சூழ்ச்சி வலையை போட மும்முரமாக முனைந்திருக்கின்றது சிங்களம்.

தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்து அவர்களின் முக்கிய வெளிப்பாடான "தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற நிலைப்பாட்டை மாற்றி, தனக்குச் சாதகமான "மாற்றுத் தலைமைத்துவம்" ஒன்றினை உருவாக்குவதே அதன் சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

அதன் ஆரம்பமாகத்தான், தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பேசுவதற்கு வருமாறு இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். ஆனால். தமிழ்க் கூட்டமைப்பினர் அதை முற்றாக நிராகரித்திருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சிங்கள அரசு, புலிகளை ஓரங்கடுவதற்கும் தமிழர் போராட்டங்களை சீர்குலைப்பதற்கும் வேற்று வழியை தேடியது.

அதன்படி, புலம்பெயர் தமிழர்களில் இருந்தே சில "காக்கை வன்னியர்களை" விலை கொடுத்து வாங்கியிருக்கின்றது சிங்களம். தமிழர் எழுச்சிப் போராட்டங்கள் எங்கெங்கெல்லாம் பேரெழுச்சியோடு நடக்கின்றதோ அங்கெல்லாம் இருந்து இந்த "கறுத்த ஆடுகளை " விலைக்கு வாங்கியிருக்கின்றது மஹிந்த அரசாங்கம். இந்த "காக்கை வன்னியர்கள்" கடந்த வாரம் "புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள்" என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு சிறீலங்கா அரசின் சிறப்பு விருந்தினர்களாக சென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் சகோதரர் பசில் ராஐபக்ஸவை சந்தித்து பேசி திட்டமிட்டு திரும்பியிருக்கின்றார்கள்.

போராட்டங்கள் நடத்தப்படுவதை இயன்றவரை தடுக்கவும், தமிழர் எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பவும்,ஈழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும்,புலிகளையும் மக்களையும் வேறுவேறானவர்கள் என சித்தரிக்கவும், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை பிரச்சாரப் படுத்துவதற்கும் இவர்கள் சிங்கள அரசிடம் உறுதியளித்திருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களை ஒழுங்கு படுத்துபவர்களின் வீட்டுக்கு தொலைபேசியில் மிரட்டுதல் ,சிங்களமொழி தெரிந்த தமிழர்கள் சிங்களத்தில் மிரட்டுதல்.......ஊர்வலத்தால் ஒரு நன்மையும் இல்லை நீங்கள் ஏன் கலந்து கொள்வான் என்று அறிவுரை வழங்குதல் போன்ற செயல்களிள் சிலர் இடுபட்டுள்ளனர்.......

யார் எது சொன்னாலும் செய்தாலும் இனி எங்களின் போராட்டங்களை ஒன்றும் செய்ய

முடியாது.......சொரிலங்கா பயங்கர வாத அரசு இப்ப அம்மணமாய் தான் நிண்டு

போர் புரியுது... அது மட்டுமில்லாமல் சோனியா அம்மா காலை வாரிவிட்டால்.......

எங்கட பொடியள் 2மணித்தியாலத்தில முழு இலங்கையையும் தமிழீழம் ஆக்கிப் போடுவாங்கள்....

இலங்கையில் தமிழினம் படு கொலை செய்யப்படும் செய்தியை உலகிற்கு சொன்ன எங்கள்

இளையோருக்கு நன்றி சொல்லுவதுடன் இனி என்றாலும் எல்லாத் தமிழனும் அவர்களுக்கு

பக்க பலமாக இருந்து போராட்டத்தை வென்றெடுக்க வேண்டும்.

உலகம் உண்மையை அறிந்து விட்டது...... அதுவே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி.....

எனவே மனம் தளராது தொடர்ந்து போராடுவோம்......

இந்த வேளையில் ஒரு முக்கிய விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்

அதாவது வேற்று மொழி பத்திரிகையாளர் ஒருவர் என்னைக் கேட்டார் புலிகள் தான் மக்கள்

மக்கள் தான் புலிகள் எண்டு சொல்லுறியள் அப்ப ஏன் புலிகள் மக்களை பல வந்தமாக

மறிக்கினம் எண்டார்???

அதற்கு நான் அவரிடம் ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டேன் அதாவது

இந்த வன்னி மக்கள் போர் ஆரம்பிக்கு முன் எங்கே இருந்தார்கள்? வன்னியில்

தானே இருந்தார்கள் அப்போது ஏன் அவர்கள் வெளியில் வர முயற்சிக்கவில்லை???

அதனால் ஒன்றை மட்டும் இந்த சர்வ தேசம் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது

உணவும் மருந்;தும் இல்லாத கொடுமையினால் தான் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறுகிறார்களே தவிர..... போராளிகளை எதிர்த்து அல்ல.

அந்த பத்திரிகையாளர் மௌனம் சம்மதம் என்பது போல என் கருத்தை ஏற்றுக்கொண்டார்

அதன்பின் எதிர் கேள்வி எதுவும் கேட்கவில்லை......

எனவே உண்மைகளை சொல்லி அகிம்சை முறையில் போராடுவோம்.......

வெற்றி நிச்சயம்........நிச்சயம்........

இந்த வேளையில் ஒரு முக்கிய விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்

அதாவது வேற்று மொழி பத்திரிகையாளர் ஒருவர் என்னைக் கேட்டார் புலிகள் தான் மக்கள்

மக்கள் தான் புலிகள் எண்டு சொல்லுறியள் அப்ப ஏன் புலிகள் மக்களை பல வந்தமாக

மறிக்கினம் எண்டார்???

அதற்கு நான் அவரிடம் ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டேன் அதாவது

இந்த வன்னி மக்கள் போர் ஆரம்பிக்கு முன் எங்கே இருந்தார்கள்? வன்னியில்

தானே இருந்தார்கள் அப்போது ஏன் அவர்கள் வெளியில் வர முயற்சிக்கவில்லை???

அதனால் ஒன்றை மட்டும் இந்த சர்வ தேசம் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது

உணவும் மருந்;தும் இல்லாத கொடுமையினால் தான் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறுகிறார்களே தவிர..... போராளிகளை எதிர்த்து அல்ல.

அந்த பத்திரிகையாளர் மௌனம் சம்மதம் என்பது போல என் கருத்தை ஏற்றுக்கொண்டார்

அதன்பின் எதிர் கேள்வி எதுவும் கேட்கவில்லை......

எனவே உண்மைகளை சொல்லி அகிம்சை முறையில் போராடுவோம்.......

வெற்றி நிச்சயம்........நிச்சயம்........

சரியான கேள்வி தமிழ்மாறன்.

உண்மைகளை சில சமயங்களில் இப்படியான "உறைக்கும்" வார்த்தைகளால்தான் புரியவைக்க வேண்டியுள்ளது.

நன்றி பருத்தியன்

நாங்கள் தொடர்ந்து போராடுவோம்

உந்த ஊடகங்கள் தொலைபேசி நிகழ்களை அதிகம் நிகழ்த்தி நேரக்கட்டுபாடு இல்லாமல் அதிகம் நேயர்களை அதிகம் கதைப்பதற்கு தூண்டிவிடுவதும். எல்லோரும் ஆலோசனை சொல்வதாகத்தானே இருக்கின்றது. அடிப்படையில் எல்லோரையும் அரசியல் ஆலோசகர்களாக்கிவிடுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே குறி சொல்கிறார்கள் ஆனால் செயற்பாடுகளில் இப்படிக் குறி சொல்லும் மனிதர்களை பெரிதாகக் காணமுடிவதில்லை.

எல்லோருமே குறி சொல்கிறார்கள் ஆனால் செயற்பாடுகளில் இப்படிக் குறி சொல்லும் மனிதர்களை பெரிதாகக் காணமுடிவதில்லை.

ஊருக்குத்தானடி உபதேசம். உனக்கல்லடி பெண்ணே

முழுமையாக இணைத்தமைக்கு மிக்கநன்றி மோகன் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.