Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-ஏ.கே.கான்

தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, முதல்வர் கருணாநிதியால் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தான் திமுகவும் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக் கூறும் காரணம். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக இம்முறை முதல்வரால் பிரச்சாரத்துக்கே போக முடியாத நிலையில், கூட்டணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சோனியாவாவது வந்து பிரச்சாரம் செய்திருக்கலாமே. அவர் ஏன் வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

இரண்டாவது காரணம், சோனியாவின் பாதுகாப்பு குறித்தது. இலங்கை விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் தமிழகத்தில் சோனியாவுக்கு உரிய பாதுகாப்பு தர முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மத்திய-மாநில உளவுப் பிரிவுகள் தந்த அட்வைசின்படி தனது பிரச்சாரக் கூட்டத்தை சோனியா ரத்து செய்தார் என்கிறார்கள். ஆனால், இது ஏற்கத்தக்க காரணமாக இல்லை.

மூன்றாவது காரணமும் இலங்கை விவகாரத்தை ஒட்டியது தான். இப்போதுள்ள நிலையில் சென்னையில் வந்து பிரச்சாரம் செய்தால் இலங்கை விவகாரம் குறித்த எதிர்க் கட்சிகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் தந்தாக வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த மத்திய அரசின் செயலற்ற போக்குக்கு காங்கிரசிடம் உரிய பதில் இல்லை. சாக்குபோக்கு வேண்டுமானால் கூறலாம். ஆனால், மக்களிடம் இலங்கை விவகாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உணர்வுபூர்வமாக பரவிவிட்டதால் சாக்கு போக்கு சொன்னால் அது காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்குமே தவிர உதவாது. இதனால் தான் தமிழ்நாட்டுப் பக்கமே வர வேண்டாம் என சோனியா முடிவெடுத்தார் என்கிறார்கள்.

நான்காவது காரணம் தான் மிக மிக முக்கியமானது. அதாவது இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்துக்கு பெரும் சரிவு ஏற்படும் என காங்கிரஸ் திடமாக நம்புகிறது. இதனால் தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் அந்தக் கட்சி தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வதை சோனியா தவிர்த்தார் என்கிறார்கள்.

இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என எதிர் தரப்பில் உள்ளவர்களை ராகுல் காந்தி புகழ்ந்தார். இதையடுத்து சோனியாவின் பிரச்சாரக் கூட்டம் ரத்தாகியுள்ளதை கவனிக்க வேண்டும் என்கிறார்கள் நம் அரசியல்வாதிகளை ஆழமாக அறிந்தவர்கள்.

மேலும் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்தும் ராகுலின் கருத்தை ஆதரித்துப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்தச் செயலும் பேச்சும் திமுகவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இப்போதைய நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் திமுக உள்ளது.

திமுகவின் எரிச்சலை உணர்ந்து கொண்டுள்ள காங்கிரஸ் மேலிடம் தேர்தல் நேரத்தில் இது தனது கூட்டணிக்கு மேலும் பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நேற்றிரவு குலாம் நபி ஆசாத் மூலமும் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் குமார் மூலம் பட்டும்படாமல் ஒரு விளக்கத்தைத் தந்துள்ளது.

டெல்லியில் அஸ்வின் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும். ஆட்சி அமைப்பதற்காக தேர்தலுக்கு பிறகு புதிய கட்சிகளின் ஆதரவை பெற தற்போதைய கூட்டணிக் கட்சிகளை கண்டிப்பாக இழக்கமாட்டோம் என்றார்.

அதே போல குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், தேர்தலுக்கு பிறகு அதிமுகவும் கூட்டணிக்கு கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியதாக அவரது பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளது. திமுகவுடனான எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,

முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே சென்னையில் நடக்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இலங்கை பிரச்சினைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க இது போன்று பொய்யான, மோசமான தகவல்களை பரப்புகிறார் ஜெயலலிதா என்றார்.

ராகுல் காந்தி தனது பேட்டியில் அதிமுக காங்கிரசுடன் கருத்து ஒற்றுமை கொண்ட கட்சி என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அவர் அப்படிச் சொல்லவில்லை. கருத்து ஒற்றுமையுள்ள கட்சி என்றால் தமிழகத்தில் திமுக மட்டும் தான் என்றார்.

இப்படி ஆளாளுக்கு விளக்கம் தர வேண்டிய நிலைமை ஏன் வந்தது?. ஏதோ புகைவதால் தானே?.

www.Thatstamil.oneindia.in

தேர்தலுக்குப்பின் காங்கிரசுடன் கூட்டணியா?: ஜெயலலிதா விளக்கம்

சென்னை, மே.7-: தேர்தலுக்குப்பின் காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுமா? என்பதற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதில் அளித்தார்.

தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து இருந்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தியின் கூட்டணி கருத்து பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, "ராகுல் காந்தி பேட்டி தொடர்பான செய்தியை நான் இன்னும் பார்க்கவில்லை. தற்போது எனது முழுக்கவனமும் தேர்தல் பிரசாரத்திலும், தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதிலும்தான் உள்ளது. தற்போதைய நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை'' என்றார்.

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 நாட்களுக்கு முன்பு "வினவு" வில் வெளியான ஜெயலலிதா பற்றிய கட்டுரை எவ்வளவு உண்மை என உணர்த்துகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால் விடிவு வருகுது அதனால் விடு வருகுது எண்டு காத்து காத்து ஏமாந்து கொண்டே இருக்கிறோம். பாப்பம் என்ன நடக்குது எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அரசியலில் ஜெயலலிதா வென்று காங்கிரசிடம் கூட்டுவைத்தால் என்ன செய்வீங்கள் மீண்டும் திட்டுவீங்கள் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் அரசியலில் ஜெயலலிதா வென்று காங்கிரசிடம் கூட்டுவைத்தால் என்ன செய்வீங்கள் மீண்டும் திட்டுவீங்கள் :unsure:

அதுதான முனி நம்மட மக்களுக்கு கைவந்த கலை (நேக்கும் தான்)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் காங்கிரஸ் பேயோடும் கூட்டணி போடும்.

ஏனெனில் காங்கிரஸுக்கு இது குடும்ப அரசியலின் முக்கிய கட்டம். ராகுல் பிரியங்கா என்று அடுத்த தலைமுறைக்கு குடும்பர அரசியலைக் காவ.. பயிற்சி அளிக்கும் காலம் என்பதால்.. இன்னொரு 5 ஆண்டுகளுக்கு பாரத தேசம் நேரு குடும்பத்தின் சொந்தாக இருப்பத்தையே சோனியா அம்மா விரும்புறா. அதற்காக எத்தனை கோடி மக்களின் வரிப்பணத்தை என்றாலும் அள்ளி வீசி அம்மையார் நேரு குடும்ப மானத்தைக் காக்கவே முனைவார்.

எதற்கும் செல்விகள் தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு புறம் மாயாவதி... இன்னொரு பக்கம் இடதுசாரித் தோழர்கள் என்று பலருக்கு வலைவீசிக்கிட்டுத்தான் தோல்வியை சந்திக்க தயாராகி வருகிறது நேரு குடும்பம். அந்த வழியில் இந்தச் செல்வியும்... அழைக்கப்பட்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.. தூண்டிலில் மீன் மாட்டுதோ என்று. :unsure:

தமிழக மக்கள் காங்கிரசை தோற்கடித்து ஈழ கோரிக்கையை அங்கீ கரித்து ஒரு வலுவான செய்தியை சொன்னார்கள் எண்றால் போதும்...

அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி மத்தியில் யாருக்கு வேண்டும் எண்றாலும் ஆதரவு கொடுக்கட்டும்....

இண்றைய நினையில் தமிழக மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஈழத்தை அமைக்க ஆணை கொடுப்பார்கள் எண்றால் குறைந்தது ஈழ மக்களுக்கு எதிராக கொலைகள் நிகள்த்த ஆயுதம் கொடுக்க மத்திய அரசு பயப்படும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைகின்றர்கள் என்பது எமக்கு மிக முக்கியமானது. அம்மையார் இதுவரை காலமும் எமது வலிகளை உணர்ந்து கொள்ளவில்லை. இப்போது எமது விடுதலைக்கு ஆதரவு அளிப்பது போல பேசுகின்றார். அம்மையார் காங்கிரசுவுடன் கூட்டு வைப்பதாயின் தமிழர் கதி என்னவாகும். பொரிக்கும் எண்ணை சட்டியில் இருந்து தவறி எரியும் நெருப்பில் விழுந்த கதையாகி விடக் கூடாது. இன்று இத்தனை வேதனைகளையும் எமக்கு தந்த காங்கிரஸ் நாளை பதவிக்கு வந்தால் அதுவும் தமிழக அரச ஆதரவோடு வந்தால் எமக்கு தீர்வு கிட்ட பல தடைகள் வருமே?

தமிழக மக்கள் யெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஓட்டு போட்டு ஈழத்தை தமிழக மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்பதை இந்த தேர்தல் மூலம் நிருபணமாக்க வேண்டும்.

அதுவே தமிழகமக்களின் கடமை..

இல்லையேல் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்ற தோற்றப்பாடு உருவாகி விடும்

வென்ற பின் என்ன செய்கிறார்கள் என்ற பிரச்சனை வேண்டாம்.

தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் தான் முக்கியம். இது ஒரு தமிழக மக்களின் வெளிப்படையான உண்மையை சொல்ல போகும் தேர்தல்.

இதற்கான பிரச்சாரங்களை தமிழக மக்களிடம் கிடைக்க கூடிய மாதிரி புலம் பெயர் தமிழர்களும் ஆற்ற வேண்டும்.

தமிழகத்தில் வருகின்ற பத்திரிகைகளில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் விளக்கமான விளம்பரங்களை கொடுக்க முன்வரலாம்.

இதுவும் ஒரு வகையில் தமிழகதமிழர்களின் வட்டுக்கோட்டை தீர்மானம் போன்ற தேர்தல் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்கள் யெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஓட்டு போட்டு ஈழத்தை தமிழக மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்பதை இந்த தேர்தல் மூலம் நிருபணமாக்க வேண்டும்.

அதுவே தமிழகமக்களின் கடமை..

இல்லையேல் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்ற தோற்றப்பாடு உருவாகி விடும்

வென்ற பின் என்ன செய்கிறார்கள் என்ற பிரச்சனை வேண்டாம்.

தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் தான் முக்கியம். இது ஒரு தமிழக மக்களின் வெளிப்படையான உண்மையை சொல்ல போகும் தேர்தல்.

இதற்கான பிரச்சாரங்களை தமிழக மக்களிடம் கிடைக்க கூடிய மாதிரி புலம் பெயர் தமிழர்களும் ஆற்ற வேண்டும்.

தமிழகத்தில் வருகின்ற பத்திரிகைகளில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் விளக்கமான விளம்பரங்களை கொடுக்க முன்வரலாம்.

இதுவும் ஒரு வகையில் தமிழகதமிழர்களின் வட்டுக்கோட்டை தீர்மானம் போன்ற தேர்தல் தான்

மன்னிக்கவேண்டும் நேசன் நான் ஒரு ஆதங்கத்தில்தான் இந்த போஸ்ட் ஐ போட்டேன். நீங்கள் சொல்வதுடன் நான் உடன்படுகிறேன். முதலில் 'ஈழம் அமைத்துக்கொடுப்பேன்' என்ற வாக்குறுதிக்காக ஜெயா அம்மாவை தமிழகம் முழு அதரவை கொடுக்கட்டும் அப்புறம் அவர் நீதிக்கூண்டில் நிப்பார் அதை நிறை வேற்ற தவறினால்.

Edited by இனியவன் கனடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.